search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுநீரக மாற்று ஆபரேஷனுக்கு பிறகு நலமுடன் உள்ளார் - தேஜஸ்வி யாதவ்
    X

    லாலுபிரசாத் யாதவ்

    சிறுநீரக மாற்று ஆபரேஷனுக்கு பிறகு நலமுடன் உள்ளார் - தேஜஸ்வி யாதவ்

    • ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
    • சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.

    பாட்னா:

    ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    இதற்கிடையே, கடந்த வாரம் லாலுவும், அவருடைய குடும்பத்தினரும் சிங்கப்பூர் சென்றனர்.

    இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. இத்தகவலை லாலுவின் மகனும், பீகார் மாநில துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

    லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவின் ஒரு சிறுநீரகம், லாலுவுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.

    Next Story
    ×