search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway ministry"

    இந்திய ரெயில்வேயில் சுமார் 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. #IndianRailwaysVacancies
    புதுடெல்லி:

    பொதுமக்கள் தங்களின் வெளியூர் பயணத்துக்கு ரெயில்களையே தேர்வு செய்து வருகின்றனர். இதனால் அதிக தொழிலாளர்களை கொண்ட நிறுவனமாக இந்தியன் ரெயில்வே இயங்கி வருகிறது. அவ்வப்போது இந்தியன் ரெயில்வேயில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாவது வழக்கம்.

    இந்நிலையில், இந்தியன் ரெயில்வேயில் சுமார் 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ரெயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரெயில்வேயின் பல்வேறு துறைகளில் உள்ள 1.3 லட்சம் காலி பணியிடங்களுக்கு நாளை அறிவிப்பு வெளியாகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 28ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். 
     
    ஜூனியர் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், டைப்பிஸ்ட், டிராபிக் அசிஸ்டெண்ட், கூட்ஸ் கார்ட், சீனியர் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.

    மேலும், மார்ச் மாதத்திலும் தொடர்ந்து காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது என தெரிவித்துள்ளது. #IndianRailwaysVacancies
    ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. #PambanBridge
    புதுடெல்லி:

    ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம், 1914–ம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006–ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

    சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.
    இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழையதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன.

    தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும்.
    புதிய பாலத்தின் நீளம் இரண்டரை கி.மீ. ஆக இருக்கும். இரட்டை ரெயில் பாதையாக இப்பாலம் அமையும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும்வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும்.

    இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ஸ்லீப்பர் கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படும். இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும்.

    இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#PambanBridge
    கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயில்களில் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaCycloneReliefMaterials #EdappadiPalaniswami #RailwayMinistry
    புதுடெல்லி:

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்  மூலம் நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர். சிலர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றனர்.

    இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பினார்.  அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 10-ம் தேதி வரை கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயில்களில் தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaCycloneReliefMaterials #EdappadiPalaniswami #RailwayMinistry
    ×