search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train passengers"

    • கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.
    • ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்போம்.

    தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் ரெயிலில் சுமார் 500 பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்றிரவு 8.40 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் ரெயில் கிளம்பியது.

    சுமார் 21 மணி நேரத்தை கடந்தும் நகர முடியாத நிலையில் ரெயிலுக்குள் பயணிகள் தவித்து வருகின்றனர்.

    தண்டவாளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் மீட்க முயற்சி நடந்து வந்தாலும் வானிலை காரணமாக பயணிகளை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சென்றிருந்தார். அங்கு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறியதாவது:-

    கனமழையால் 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளுக்கு அருகில் பொது மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

    தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட இடங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்வார்கள்.நெல்லையில் தூர்வாரப்பட்ட கால்வாய்கள், அதிக மழையால் நிரம்பி உள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பது தவறான தகவல்.

    மழை வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அதன் பிறகு, நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயிலில் சிக்கியுள்ள பயணிகளை விமான படை உதவியுடன் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.
    • ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர்.

    திருப்பதி:

    நிஜாமுதீனிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுவர்ண் ஜெயந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வடமாநிலங்களில் இருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. நிஜாமுதீனிலிருந்து நேற்று புறப்பட்டு வந்தது.

    ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில் தெலுங்கான மாநிலம் குன்றத்திமடுகு அருகே வந்தபோது, பி-2 ஏசி பெட்டியில் திடீரென புகை வந்தது. இதனை கண்ட பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.

    ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தீயை அணைத்து தற்கலிகமாக சரி செய்யப்பட்டது. பின்னர் ராம்புரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோர்னக்கல் ரெயில் நிலையத்தில் 40 நிமிடம் ரெயில் நிறுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரெயிலிலிருந்து கழட்டிய பின், ரெயில் புறப்பட்டு சென்றது.

    ரெயில் பெட்டியில் புகை வந்தவுடன் பயணி அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    • ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும்.

    மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து போதிய ரெயில்கள் இல்லை. ஒரு சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர், ராக்போர்ட் ரெயில்கள் நிற்க வேண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை வரும் யூனிட் ரெயிலை மேல்மருவத்தூர் வரை காலை மாலை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையம் அருகே திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    • இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு இங்குமாக திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாளவந்தி நாட்டை சேர்ந்த மதியழகன்(40) என்பது தெரிய வந்தது. மதியழகன் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன்களை திருடி வந்தது தெரிய வந்தது.

    அவர் அளித்த தகவலின் பேரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சங்கரன் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த–ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கடந்த ஜனவரி 2020 முதல் ஜூலை 2022 வரை பயணிகள் மறதியால் விட்டுச் சென்ற நகை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதில் பெரும்பாலான பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது
    • 2021-ல் 60 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், 75 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் 71 இதர பொருட்கள் என மொத்தம் ரூ.15 லட்சத்தில் 59 ஆயிரத்து 831 மதிப்புள்ள பொருட்களை தவற விட்டு சென்றிருக்கிறார்கள்.

    திருச்சி

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்டு 150 ெரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ெரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகள் மற்றும் ெரயில்களில் செல்போன்கள் மற்றும் உடமைகளை தொலைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ெரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி 2020 முதல் ஜூலை 2022 வரை பயணிகள் மறதியால் விட்டுச் சென்ற நகை மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். இதில் பெரும்பாலான பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    எலக்ட்ரானிக் பொருட்களை பொருத்தமட்டில் குறிப்பாக செல்போன்கள், சார்ஜர்கள் அதிகமாக உள்ளன. பயணிகள் ெரயில் பெட்டிக்கு உள்ளேயும், ெரயில் நிலையங்களிலும் சார்ஜ் ஏற்றிவிட்டு பின்னர் மறந்து ெரயிலில் ஏறி சென்று விடுகிறார்கள்.

    இவ்வாறு செல்போன்களை தவறவிடுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2020-ல் 17 செல்போன்கள், இரண்டு மடிக்கணினிகள், ரூ.6 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 768 மதிப்பெண் பொருட்களை பயணிகள் ெரயில்கள் மற்றும் ெரயில் நிலையங்களில் தொலைத்தனர். குறிப்பாக இந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் 2021-ல் 60 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், 75 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் 71 இதர பொருட்கள் என மொத்தம் ரூ.15 லட்சத்தில் 59 ஆயிரத்து 831 மதிப்புள்ள பொருட்களை தவற விட்டு சென்றிருக்கிறார்கள்.

    நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே 61 செல்போன்களை தொலைத்திருக்கிறார்கள். மேலும் 13 மடிக்கணினிகள், ரூ.2 லட்சத்தி 31 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் 68, இதர பொருட்கள் என மொத்தம் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 725 மதிப்புள்ள பொருட்களை பயணிகள் தொலைத்துள்ளனர்.

    உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் வராத பட்சத்தில் அந்த பொருட்கள் கமர்சியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இதுபற்றி ெரயில்வே அலுவலர் ஒருவர் கூறுகையில், ெரயிலில் ஏறும் பயணிகள் தங்களது உடமைகளை இருக்கைக்கு அடியில் தள்ளி விடுகிறார்கள். பின்னர் இறங்கும்போது அவசரத்தில் ஏதாவது ஒரு லக்கேஜை தவறவிட்டு இறங்கி செல்கிறார்கள். சில நேரங்களில் தவறவிடும் பையில் நகைகள் கூட இருக்கும்.

    இதில் உரிய ஆவணங்கள், சரியான தகவல்கள் இருந்தால் மட்டுமே நகைகளை ெரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைப்பார்கள். பயணிகள் தங்களது லக்கேஜ்களின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் முகவரியை எழுதி வைத்திருந்தால் எளிதாக அவர்களின் பொருள்களை திரும்ப பெற்றுச் செல்லலாம்.

    இருப்பினும் 99 சதவீத பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ெரயில் நிலையங்களில் தங்கள் உடமைகளை தவறவிடும் நபர்கள் உடனடியாக 139 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால் ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என ெரயில்வே பாதுகாப்பு படை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு கொரோனா காலத்தில் ரயில்வே துறையில் ரயில்களின் எண்ணிக்கை, பயணிகளுக்கான சலுகை ஆகியவற்றில் எடுத்த நடவடிக்கைகளில் தற்போது கொரோனா நோய் பரவல் பெருமளவு குறைந்திருப்பதால் மீண்டும் அனைத்து ரெயில்களை இயக்குவது, சலுகைகளை தொடர்வது ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்

    இந்திய ரெயில்வே துறையால் பல காலமாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்வோர், போர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பில் உயிரிழந்த ராணுவ மற்றும் காவல் துறையினரின் விதவை மனைவிமார்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வோர், திரைத்துறையினர், மாநில மற்றும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 53 பிரிவினருக்கான பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

    ரெயில் பயணிகள்

    ஆனால் இந்த கொரோனா காலத்தில் ஆண்டுக்கணக்கில் மேற்குறிப்பிட்ட அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக 60 வயது மூத்த குடிமக்கள் உட்பட பலரும் வருமானம் இன்றி அவதிப்படுகிறார்கள்.

    கொரோனா நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கொரோனா இல்லாத நிலை ஏற்படுத்துவதற்காக முழு முயற்சியில் ஈடுபட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். அதே சமயம் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக தற்போது கொரோனா நோய் பரவல் பெருமளவு குறைந்து இருப்பதால் சிறப்பு ரெயில்களை ரத்து செய்து, வழக்கமான ரெயில்களை இயக்க அனுமதித்து, ரெயில் பயணிகளுக்கான அனைத்து சலுகைகளையும் உடனைடியாக மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று ரெயில்வே துறைக்கும், மத்திய அரசுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ரெயில்வே காவல்துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீசுகளை பயணிகளுக்கு வழங்கினார்கள்.
    கோவை:

    ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப் செயலி’யை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவையில் அறிமுகம் செய்தார். இந்த செயலியை ஆன்ட்ராய்டு செல்போனில் பதிவு செய்து, ரெயில் பயணிகளுக்கு பிரச்சினை மற்றும் ஆபத்து ஏற்படும்போது ரெயில்வே போலீசை தொடர்பு கொள்ள முடியும். இந்த செயலி தொடர்பான தகவல்களை என்.சி.சி. மாணவர்கள் கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ரெயில்வே காவல்துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீசுகளையும் வழங்கினார்கள்.

    அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெண்களுக்கான ரெயில் பெட்டியில் சந்தேக நபர்களோ, ஆண்களோ இருந்தால் ரெயில்வே கட்டுப்பாட்டு அறை எண் 1512, மற்றும் 99625 00500 என்ற செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள், ஜன்னல் பக்கம் தலைவைத்து தூங்கும் பெண் பயணிகள் தங்களின் நகைகளை வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் பயணம் செய்வோர் ரெயில் பெட்டியின் கதவுகளை மூடி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும். கழிவறை கதவுகள் நீண்டநேரமாக உட்புறமாக மூடப்பட்டு இருந்தால் போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானத்தையோ, தின்பண்டங்களையோ வாங்கி சாப்பிடக் கூடாது. பயணிகள் தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நந்தியம் பாக்கம் அருகே ரெயில் பெட்டியின் வாசலில் நின்று பேசி கொண்டிருந்த பயணியின் செல்போனை பறிக்க சிறுவர்கள் கம்பால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
    பொன்னேரி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் சித்தீஸ் வரதாஸ் (வயது 44). இவர் கடந்த வாரம் சென்னையில் வேலை தேடுவதற்காக ‘கொரமண்டல் எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் வந்து கொண்டு இருந்தார்.

    கடந்த 9-ந் தேதி மாலை மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. சித்தீஸ்வரதாஸ் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டு செல்போனில் பேசினார்.

    அந்த நேரத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள் செல்போனை பறிப்பதற்காக நீண்ட கம்பால் சித்தீஸ் வரதாசை தாக்கினர்.

    இதில் நிலைதடுமாறிய சித்தீஸ்வரதாஸ் செல்போனோடு ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். உடனே 2 சிறுவர்களும் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    தலையில் பலத்த காயம் அடைந்த சித்தீஸ்வரதாசுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்தீஸ்வரதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து பயணியை தாக்கி செல்போன் பறித்ததாக நந்தியம்பாக்கம், பொன்னேரி பகுதியை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்து இருந்தனர்.

    தற்போது சித்தீஸ்வரதாஸ் இறந்ததையடுத்து கைதான 2 சிறுவர்கள் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு உள்ளது. #tamilnews
    ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க 90 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு இன்று வந்தார்.

    அவரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாத்துரை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வரவேற்றனர்.

    ரெயில்வே போலீஸ் நிலையத்தில் உள்ள ரெக்கார்டுகளை ஆய்வு செய்த ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீசாரிடம் குறைகள் கேட்டார்.

    ரெயில் பயணிகளிடம் நல்லுறவுடன் நடந்து கொள்வது எப்படி? அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறை குறித்து ஆலோசனை வழங்கினார்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனும் அங்கு வந்து ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக ரெயில்வே போலீசார் ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    ரெயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க 90 பெண் போலீசார், 120 ஆண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் ரெயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    மற்ற ரெயில் நிலையங்களிலும் சி.சி.டிவி. கேமிரா பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் அந்த கேமிராக்களும் நடைமுறைக்கு வரும்.

    ரெயில்களில் கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது. ஆனால் செல்போன் திருட்டுகள் அதிகரித்து உள்ளன. அதையும் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    செல்போன் திருட்டுகளை தடுக்க ரெயில் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். சார்ஜர் போட்டுவிட்டு கழிவறைக்கு செல்வது, தூங்கி விடுவது, சட்டை பையில் செல்போனை வைத்து விட்டு ஜன்னல் ஓரத்தில் அஜாக்கிரதையாக இருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    பொன்னேரி:

    ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரெயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பொதுமக்களுடன் அவர் சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டார்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் சைலேந்திரபாபு இறங்கினார். அவருடன் ரெயில்வே அதிகாரிகளும் வந்து இருந்தனர்.

    அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகள் பற்றி கேட்டு அறிந்தார். சைலேந்திரபாபுவிடம் பொதுமக்கள் கூறும்போது, “மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்” என்றனர்.

    இதையடுத்து சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேட்டு வருகிறோம். அந்தந்த துறைக்கு குறைகள் பற்றி தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்.

    மீஞ்சூரில் ரெயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் தொல்லையை தடுக்க அவர்களது அமைப்பில் தெரிவித்து மாற்று தொழில் செய்ய அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சைலேந்திரபாபுவும், அதிகாரிகளும் மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் மீண்டும் பயணம் செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திலும் அவர்கள் பயணிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். #Tamilnews
    பயணிகள் குறிப்பிட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ் எடுத்து வந்தால் அந்த கூடுதல் எடைக்கு கட்டணம் வசூலிக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    ரெயிலில் பயணம் செய்யும்போது பயணிகள் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்வதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    குறிப்பாக குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிக லக்கேஜ் கொண்டு செல்வதால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்பட்டது.

    இதையடுத்து தென்னக ரெயில்வே ரெயில் பயணிகளுக்கு உடமைகளை எடுத்துச் செல்லும் வி‌ஷயத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் குறிப்பிட்ட அளவு லக்கேஜ் தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி 3-ம் வகுப்பு குளிர்சாதன ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் தலா 50 கிலோ எடை கொண்ட லக்கேஜ்களை மட்டுமே எடுத்துச் செல்ல பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதுபோல முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் தலா 85 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

    பயணிகள் குறிப்பிட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ் எடுத்து வந்தால் அந்த கூடுதல் எடைக்கு கட்டணம் வசூலிக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதாவது 6 மடங்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


    இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு பயணிகளிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது. வருகிற 8-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இதுபற்றி பயணிகளிடம் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் கூடுதல் லக்கேஜ் எடுத்து வந்தால் அதற்கு கட்டணம் செலுத்துவதற்கு ரெயில் நிலையங்களில் தனி கவுண்டர்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திய பிறகு அதிகபட்சமாக ஒரு பயணி 150 கிலோ எடை வரை லக்கேஜ் கொண்டு செல்ல முடியும்.

    படுக்கை வசதி மற்றும் 2-ம் வகுப்பு பயணிகள் தலா 50 கிலோ, 45 கிலோ எடை உள்ள லக்கேஜுகளை வழக்கம் போல் இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதிகபட்சமாக இந்த வகுப்பு பயணிகள் 80 கிலோ எடை வரை பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். #Train
    அரக்கோணத்தில் ரெயிலில் பயணிகளிடம் பணம் பறித்த திருநங்கைககள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இருந்து சென்னை, காட்பாடி, ரேணிகுண்டா ஆகிய மார்க்கங்களில் தினமும் ஏராளமான மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகிறது.

    ரெயில்களில் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டு தொல்லை கொடுத்து பணம் பறித்து வருகின்றனர். இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வந்தது.

    அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார்ரஜாக் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அசீஸ்குமார், ஏட்டு மகேந்திரன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அரக்கோணம் அருகே ரெயில்களில் சோதனை செய்தனர்.

    அப்போது பயணிகளிடம் பணம் கேட்டு இடையூறு செய்த காட்பாடி, வாலாஜா, சென்னை பகுதியை சேர்ந்த 8 திருநங்கைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் கூறி ஜாமீனில் விடுவித்தனர்.

    வேலூர் ஆற்காடு ரோட்டில் ஆஸ்பத்திரிக்கு வரும் வெளிமாநில பயணிகளிடமும் திருநங்கைகள் சிலர் பணம் பறித்து வருகின்றனர். தினமும் இதுதொடர்ந்து நடக்கிறது. திருநங்கைகள் என்பதால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் புகார் கொடுப்பதில்லை.

    போலீசார் திருநங்கைகள் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


    ×