என் மலர்
நீங்கள் தேடியது "train passenger"
- மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
- ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
ஆலந்தூர்:
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பரங்கிமலை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.இதில் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். படித்த மற்றும் தொழில் திறன் உள்ள திருநங்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக வேலை கிடைக்க ரெயில்வே போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 21), திருநெல்வேலியை சேர்ந்த மதன் (23), ராமநாதபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் (23) என்பதும், ஓடும் ரெயிலில் பயணிகளிடம் செல்போன்கள் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை:
நீண்ட தூரம் பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் புகார்கள், குறைகளை தீர்க்க தென்னக ரெயில்வே புதிய திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் ‘கேப்டன்’கள் என்ற புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியை டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
பயணத்தின் போது ஏற்படும் குறைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ‘கேப்டன்’களை நேரடியாக தொடர்பு கொண்டு பயணிகள் புகார் செய்யலாம். புகார்களை ரெயில்வே அதிகாரிகளிடம் இவர்கள் எடுத்துக்கூறி நிவர்த்தி செய்வார்கள்.
பெண் பயணிகள் தங்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ‘கேப்டன்’ கள் மட்டுமின்றி ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சென்னை -மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- சென்னை மெயில், திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூரு சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் மெயில் ஆகிய 4 ரெயில்களில் ‘கேப்டன்’கள் என்ற புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் இது அமல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் அடுத்த ஆண்டு (2019) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தொடக்கத்தில் அனைத்து ரெயில்களிலும் சீனியர் டிக்கெட் பரிசோதகர்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட உள்ளதாக ரெயில்வே உயர் அதிகாரிகள் நிராஜ் சாகே தெரிவித்தார்.
டிக்கெட் பரிசோதகர்கள் தங்களது சீருடையில் கேப்டன் என்ற பேட்ஜ் அணிந்து இருப்பர். மேலும் அவரது பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் செல் நம்பர் தகவல்களும் பயணிகளின் முன்பதிவு அட்டவணையில் இடம் பெற்று இருக்கும். மேலும் ரெயில் பெட்டியில் ஓடும் அறிவிப்பு பலகையில் இத்தகவல் இடம் பெறும். அதை படித்து பயணிகள் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் கேப்டன் பதவி தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை என டிக்கெட் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தென்னக ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பற்றாக் குறை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக 1 அல்லது 2 ரெயில் பெட்டிகளில் மட்டுமே பரிசோதகர்கள் டிக்கெட்டை பரிசோதித்து வந்தனர்.
தற்போது பற்றாக்குறை காரணமாக 4 முதல் 5 ரெயில் பெட்டிகளில் பரிசோதித்து வருகின்றனர். இது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கூடுதலாக நியமித்தால் மட்டுமே கேப்டன் பணியை திறம்பட செய்ய முடியும் என டிக்கெட் பரிசோதகர்கள் தெரிவித்தனர். #Train #traincaptain
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகளிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டார். அந்த ரெயிலில் பயணம் செய்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த சோனா சந்துரு என்பவரிடம் அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.
இதனால் அவருக்கு சோனா சந்துரு பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை, அவரிடம் இருந்த பணப்பையை நூதன முறையில் திருடிக்கொண்டு கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கிவிட்டார்.
திருவொற்றியூர் அருகே ரெயில் சென்றபோது பணப்பை காணாமல் போனதை கண்டு சோனா சந்துரு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ரெயிலில் இருந்து இறங்கிய அவர் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் வைத்திருந்த கைப்பையை திருநங்கை திருடிச்சென்றதாக கூறி இருந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் திருநங்கையை தேடி வந்தனர். இந்தநிலையில், சோனா சந்துருவிடம் பணப்பையை திருடிச்சென்றது திருவொற்றியூர் மாட்டு மந்தையை சேர்ந்த திருநங்கை பிரீத்தி என்ற முனிசா (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ரெயில்களில் பயணத்தின் போது இறக்கும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது பற்றியும் விசாரித்தனர்.
1984-ம் ஆண்டு ரெயில்வே சட்டம் 124ஏ பிரிவின்படி ரெயில் முன் பாய்ந்து உயிர் இழந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது கிடையாது. ஆனால் சில ஐகோர்ட்டுகள் இதற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டன.
இந்த முரண்பாடுகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. 124-வது பிரிவின் படியும், 124-ஏ பிரிவின் படியும் உயிரிழக்கும் ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது ரெயில்வேயின் கடமையாகும்.

எனவே ரெயில் பயணத்தின்போதோ அல்லது ரெயிலில் இருந்து இறங்கும் போதோ தவறி விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது ரெயில்வேயின் கடமை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
தற்போது ரெயில்வே சார்பில் இழப்பீடு தொகையாக ஆண்டுதோறும் ரூ.350 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீடு கேட்டு 38,000 மனுக்கள் நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.