search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high-speed trains"

    • 2050ல் காற்று மாசுபடுதலை முழுவதும் கட்டுப்படுத்த ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது
    • குறுகிய தூர விமான சேவைகளும் அவசியம் என விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன

    கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக, சுற்றுச்சூழல் மாசடைவதால் பருவநிலை மாற்றங்கள் அதிகரிப்பதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் உலகெங்கும் பிரசாரம் செய்து வந்தனர்.

    சமீப சில வருடங்களாக வானிலை தட்ப-வெப்பத்தில் கடும் ஏற்ற இறக்கங்களும், அதிக வெப்பம், பனிப்பொழிவு, மழை, வெள்ளம் என எதிர்பாராத மாற்றங்களும் உலகின் பல நாடுகளில் ஏற்படுவதால், இத்தகைய கோரிக்கைகள் மேலும் வலுப்பெற்று வருகின்றன.

    இதனால், பல உலக நாடுகள் சுற்றுச்சூழல் மாசுபடுதலை குறைக்கும் விதமாக மாற்று எரிசக்தி வழிமுறைகளை உள்ளடக்கிய அனைத்து சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்து வருகின்றன.

    ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் விமான சேவைகளினால் அதிகரிக்கும் கரியமில வாயு (carbon-di-oxide) சுற்றுச்சூழலை பாதிப்பதை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.


    இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் (Spain), ரெயில் மூலம் கடக்கக்கூடிய தூரங்களுக்கும் பொதுமக்கள் விமான சேவையை பயன்படுத்துவதை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால், பல தனியார் ஜெட் விமான சேவைகளும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

    2050 வருட இறுதிக்குள் ஸ்பெயினில் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் வெளிப்பாடுகளை பூஜ்ய (zero) நிலைக்கு கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளது.

    கடந்த சில தசாப்தங்களாக, அதிநவீன ரெயில் இருப்புப்பாதை கட்டமைப்பில் ஸ்பெயின் பெருமளவு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, பிற நாடுகளை விட 3 மணி நேர ரெயில் பயணத்தில் ஸ்பெயினில் அதிக இடங்கள் செல்ல முடியும்.


    இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் 21,000 விமான சேவைகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அதே நேரத்தில், ஆண்டிற்கு 3 லட்சம் டன்கள் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும்.

    குறுகிய தூர உள்ளூர் விமான சேவைகள் இல்லாமல் நீண்ட தூர விமான சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த இயலாது என விமான போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த வருடம், மற்றோரு ஐரோப்பிய நாடான பிரான்ஸ், இத்திட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    நீண்ட தூரம் பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் புகார்கள், குறைகளை கேட்க கேப்டன்கள் என்ற புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். #Train #traincaptain

    சென்னை:

    நீண்ட தூரம் பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் புகார்கள், குறைகளை தீர்க்க தென்னக ரெயில்வே புதிய திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் ‘கேப்டன்’கள் என்ற புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியை டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    பயணத்தின் போது ஏற்படும் குறைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ‘கேப்டன்’களை நேரடியாக தொடர்பு கொண்டு பயணிகள் புகார் செய்யலாம். புகார்களை ரெயில்வே அதிகாரிகளிடம் இவர்கள் எடுத்துக்கூறி நிவர்த்தி செய்வார்கள்.

    பெண் பயணிகள் தங்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ‘கேப்டன்’ கள் மட்டுமின்றி ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    கடந்த ஆண்டு சென்னை -மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- சென்னை மெயில், திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூரு சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் மெயில் ஆகிய 4 ரெயில்களில் ‘கேப்டன்’கள் என்ற புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களில் இது அமல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டம் அடுத்த ஆண்டு (2019) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தொடக்கத்தில் அனைத்து ரெயில்களிலும் சீனியர் டிக்கெட் பரிசோதகர்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட உள்ளதாக ரெயில்வே உயர் அதிகாரிகள் நிராஜ் சாகே தெரிவித்தார்.

    டிக்கெட் பரிசோதகர்கள் தங்களது சீருடையில் கேப்டன் என்ற பேட்ஜ் அணிந்து இருப்பர். மேலும் அவரது பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் செல் நம்பர் தகவல்களும் பயணிகளின் முன்பதிவு அட்டவணையில் இடம் பெற்று இருக்கும். மேலும் ரெயில் பெட்டியில் ஓடும் அறிவிப்பு பலகையில் இத்தகவல் இடம் பெறும். அதை படித்து பயணிகள் அறிந்து கொள்ள முடியும்.

    ஆனால் கேப்டன் பதவி தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை என டிக்கெட் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். தென்னக ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பற்றாக் குறை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக 1 அல்லது 2 ரெயில் பெட்டிகளில் மட்டுமே பரிசோதகர்கள் டிக்கெட்டை பரிசோதித்து வந்தனர்.

    தற்போது பற்றாக்குறை காரணமாக 4 முதல் 5 ரெயில் பெட்டிகளில் பரிசோதித்து வருகின்றனர். இது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கூடுதலாக நியமித்தால் மட்டுமே கேப்டன் பணியை திறம்பட செய்ய முடியும் என டிக்கெட் பரிசோதகர்கள் தெரிவித்தனர். #Train #traincaptain

    ×