என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரக்கோணம் ரெயில் நிலையம்"

    • ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றது.
    • உடனடியாக பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

    அரக்கோணம்:

    சென்னை, கொரட்டூர் அடுத்த பள்ளத்தெரு, கோபாலகிருஷ்ண நகரைச் சேர்ந்தவர் முத்துக்கு மாரசாமி. இவருடைய மனைவி பாலசரஸ்வதி (வயது 60).

    கணவன், மனைவி இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். கடந்த 2-ந் தேதி அங்கிருந்து சென்னை செல்வதற்காக திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர்.

    ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றது. பயணிகள் இறங்கியதும் ரெயில் புறப்பட்டு மெதுவாக சென்றது.

    அப்போது அதில் பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பாலசரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5¾ பவுன் செயினைப் பறித்தார். உடனே ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பால சரஸ்வதி அலறி கூச்சலிட்டார். உடனடியாக பயணிகள் வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

    ஆனால் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து பால சரஸ்வதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    அதில் மெரூன் கலர் நிறமுடைய டீ சர்ட், பேண்ட், கருப்பு பைகள் வைத்திருந்த வாலிபர், பால சரஸ்வதியிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணத்தில் காலதாமதமாக வந்ததை கண்டித்து சென்னை ரெயிலை மறித்து பெண் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #ArakkonamRailwayStation
    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு தினமும் பெண்களுக்கான சிறப்பு ரெயில் இயக்கபடுகிறது.

    இதில் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்வோர் என 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சிறப்பு ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த பெண்கள் சிறப்பு ரெயில் கடந்த சில மாதங்களாக தினமும் 20 நிமிடம் காலதாமதமாக வருவதாகவும் இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை 6.45-க்கு வர வேண்டிய இந்த சிறப்பு ரெயில் 7.25 மணிக்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணிகள் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டம் செய்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் நாட்களில் குறித்த நேரத்தில் ரெயிலை இயக்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ArakkonamRailwayStation
    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 21), திருநெல்வேலியை சேர்ந்த மதன் (23), ராமநாதபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் (23) என்பதும், ஓடும் ரெயிலில் பயணிகளிடம் செல்போன்கள் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    ×