ரெயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் திருநங்கைகள் மீது நடவடிக்கை

மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
ரெயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் திருநங்கைகள் மீது நடவடிக்கை
Published on

ஆலந்தூர்:

சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் பணம் கேட்டு திருநங்கைகள் அதிகஅளவு தொந்தரவு செய்வதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பரங்கிமலை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ரெயில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.இதில் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். படித்த மற்றும் தொழில் திறன் உள்ள திருநங்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக வேலை கிடைக்க ரெயில்வே போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com