search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heart attack"

    • நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி.நகரைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார். இதனால் வேனில் இருந்த குழந்தைகள் பத்திரமாக இருந்தனர்.

    இறந்து போன மலையப்பனுக்கு மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இச்சம்பவம் பற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    இறக்கும் தருவாயிலும், இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.
    • இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    சமீப காலங்களில் இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. பல இளம் வயது நபர்கள் இதில் பலியாகின்றனர். இக்கால வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும், மன அழுத்தம், சமூதாய சூழல் மற்றும் பல காரணங்கள் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

    பெரும்பாலும் ஒருவரின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள், அவர்களுக்கு முதலில் செய்யும் ஒரு சிகிச்சை ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி. இதில் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் எந்த இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதில் ஸ்டெண்ட் வைத்து அந்த அடைப்பை அகற்றுவர். இதில் இரத்த குழாயில் எந்தளவுக்கு அடைப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் சதவீத அளவை கணக்கிடுவர்.

    இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பொதுவாக 100 சதவீத அடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர்பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த நிலையை புரட்டிப் போடும் வகையில், மருத்துவர்கள் ஒரு மனம் நெகிழும் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

    இதயத்தின் பெரிய இரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட 58 வயதான வழக்கறிஞர் எம்.ஸ்டாலின் மணி என்பவரை மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளனர். இதற்காக அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரத்தக்குழாயில் "ஸ்டென்ட்" பொருத்தி அடைப்பை சரி செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.

    பூரண குணமடைந்ததிற்கு பின் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் , மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியை சந்தித்து சால்வை அணிந்து நன்றி தெரிவித்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூட செய்யத் தயங்கும் அறுவை சிகிச்சையை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து நடத்தி வெற்றி பெற்று இருப்பது பாராட்டை குவித்து வருகிறது.

    மேலும், இதுபோன்ற செயல்கள் நடக்கும் போது அரசு மருத்துவனை மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    • சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், மஹோபா நகரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க மேலாளர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தனியார் வங்கியின் கிளை மேலாளர் ராஜேஷ் குமார் ஷிண்டே கடந்த 19ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.

    அங்கு சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நாற்காலியில் சரிந்து கண்கள் மேலே சென்றவாரு மூச்சு பேச்சின்றி ஆனார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ராஜேஷ் குமாரை காப்பாற்ற முயன்றனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும், சிபிஆர் கொடுத்து காப்பாற்றவும் முயன்றனர்.

    பிறகு, அவரது உடல்நலம் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ராஜேஷ் குமார் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அவர் திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 30 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம், இளம் இந்தியர்களிடையே இதய நோய்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

    • சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார்.

    சிங்கப்பூரில் உள்ள கேசினோ ஒன்றில் 4 மில்லயன் டாலர்களை [33 கோடி ரூபாய்] வென்ற நபர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே கேசினோவில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் விளையாடிய அந்த நபர் 4 மில்லியன் டாலர்களை வென்றுள்ளார்.

    இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார். பதறிய கேசினோ ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாடற்ற முடியவில்லை. அவரது இறப்புக்கு அதீத அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்ப்பட்டதே காரணம் என்று பின்னர் தெரியவந்துள்ளது.

    அந்த நபர் சுருண்டு விழுந்ததும் அவரைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் பதறும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டம் எப்போதாவது சிலருக்கு மட்டுமே வரும் நிலையில் அப்படி ஏற்பட்ட அதிர்ஷ்டமே அந்த நபருக்கு எமனாக முடிந்தது என்பது அபத்தமான உண்மையாக மாறியுள்ளது. 

    • மும்பையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே மீரா ரோடு பகுதியில் தனியார் நிறுவனத்தின் தலைமையில் ஊழியர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் ராம் கணேஷ் தேவார் என்ற (42) நபர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ராம் கணேஷ் பேட்டிங் செய்கிறார். அப்போது அவர் எதிர்கொண்ட பந்தை இறங்கி வந்து விளாசி சிக்சராக மாற்றினார். பின்னர், அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில், அப்படியே மயங்கி விழுகிறார். இதைப் பார்த்த சக வீரர்கள் உடனே ஓடிச் சென்று முதலுதவி செய்ய முயல்கின்றனர். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அவர், எந்த அசைவுமின்றி அப்படியே கிடக்கிறார்.

    உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. போலீசார் திடீர் மரணம் என வழக்கு பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

    அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • பல்வீர் சிங் கையில் தேசிய கொடி ஏந்திய படி நடனம் ஆடினார்.
    • முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்தவர் 73 வயதான பல்வீர் சிங் சப்ரா. இவர் குழு ஒன்றுடன் இணைந்து யோகா பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்தூரில் உள்ள பூட்டி கோட்டி என்ற பகுதியில் பல்வீர் சிங் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ளார்.

    பயிற்சிக்கு இடையில், பல்வீர் சிங் தனது கையில் தேசிய கொடி ஏந்திய படி தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். நடனம் ஆடிக் கொண்டிருந்த போது, பல்வீர் சிங் மேடையிலேயே கீழே விழுந்தார். முதலில், அவர் நடனத்தின் அங்கமாக கீழே விழுந்திருப்பார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.

    கீழே விழுந்த பல்வீர் சிங் சில நிமிடங்கள் ஆகியும் எழாமல் படுத்த நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது குழுவினர் அவரை எழுப்ப முற்பட்டனர். அப்போது அவர் சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர். மருத்துவமனையில் பல்வீர் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பேசிய பல்வீர் சிங் சப்ராவின் மகன் ஜக்ஜீத் சிங், "எனது தந்தை பல ஆண்டு காலமாக தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். அவர் இதுதவிர சமூக சேவை சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்," என்று தெரிவித்தார்.

    உயிரிழந்த பல்வீர் சிங் சப்ராவின் கண்கள் மற்றும் சருமத்தை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    • நடிகர் ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்', சரத்குமார் நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ்.
    • இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த 'அதிபர்' என்ற படத்தை இயக்கினார்.

    நடிகர் ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்', சரத்குமார் நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ். இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த 'அதிபர்' என்ற படத்தை இயக்கினார். பின்பு, இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வருசநாடு' திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'எனது நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

    நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

    • ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும்.

    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது, குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிக்காமல் இருப்பது, தேவை இல்லாத விஷயங்களுக்கு கோபப்படுவது, மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வது, மன அழுத்தம், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் கோபமாக பேசுவது போன்றவற்றை குறைத்துக்கொள்ளும் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

    ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது யோகா செய்வதன் மூலமாகவும், உடல் எடையை குறைப்பதன் மூலமாகவும், உணவுப்பழக்க வழக்கம் மூலமாகவும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

    எல்லோருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. எனவே ரத்த அழுத்தத்தை கவனிக்க ஒவ்வொருத்தரும் வீடுகளில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் கருவையை வைத்திருப்பது அவசியம். இப்பொழுதெல்லாம் ரத்த அழுத்தத்தை சோதிக்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும். காலையில் செய்யப்படும் பரிசோதனை தான் சரியான ரத்த அழுத்த பரிசோதனையாக இருக்கும்.

    மேலும், நாம் வருடா வருடம் பிறந்தாள் கொண்டாடுவது போன்று 30 வயதை கடந்தவுடன் ஒவ்வொரு வருடமும் உடல் முழுவதையும் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    • உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் ஆளாகி உள்ளனர்.
    • இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

    உலக அளவில் உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் ஆளாகி உள்ளனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை, இதயம், சிறுநீரகம், கண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு வெளிப்பட்டு சிகிச்சைக்கு சென்ற பிறகே நோய் பாதிப்பின் தீவிரத்தை அறிய முடியும். ஆகவே வேறு நோய் பாதிப்புக்கு சிகிச்சைக்கு செல்லும் போது டாக்டரிடம் ரத்த அழுத்த பரிசோதனையையும் மேற்கொள்வது அவசியம்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பது என்பதை நாம் கவனிக்காமல் விட்டால் முக்கியமான உறுப்புகளை பாதிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாது உயர்ரத்த அழுத்தத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழப்பதற்கு கூட வித்திடலாம். கண்கள் பாதிக்கப்படலாம்.

    ஆனாலும் 50 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் இருப்பது வெளியே தெரிவது இல்லை. அதிலும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் தான் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இருப்பினும் இந்த 50 சதவீதம் பேர் கூட முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்வதில்லை.

    வேறு எந்த பாதிப்புகளினால் ரத்த அழுத்தம் வந்தாலும் அது சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகத்தை பொறுத்தவரை ரத்த அழுத்தத்தினை சரியாக கவனிக்கவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரகத்தின் வழியாக உடலில் உள்ள புரதச்சத்துக்குள் குறைய ஆரம்பிக்கும். சிறுநீரகம் சுருங்கத்தொடங்கும். பின்னர் நிரந்தரமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

    தற்போதுள்ள காலக்கட்டத்தில் நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகமாக சிறுநீரக செயலிழப்பு என்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

    • மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபடலாம்.
    • திடீர் மாரடைப்பு அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல் ஏற்படுகிறது.

    மாரடைப்பில் என்ன நடக்கும்?

    உங்கள் இதயம் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜனின் காரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது. கொலஸ்ட்ரால், கொழுப்பு மற்றும் பிற பொருட்களின் கலவையான பிளேக் அடுக்கு, இதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் மூலம் பரவும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது மாரடைப்பு ஏற்படலாம்.

    என்ன அறிகுறிகள் மாரடைப்பைக் குறிக்கின்றன?

    வழக்கமாக, மாரடைப்பு அறிகுறிகள் படிப்படியாக சில மணிநேரங்கள், நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே உருவாகத் தொடங்கி சில காலம் நீடிக்கும். மேலும், மாரடைப்பின் போது இரத்த விநியோகம் தடைபட்ட பின்னரும் இதயம் துடிப்பதை நிறுத்தாது. மேலும், மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபடலாம்.

    மாரடைப்பின் போது சில குறிப்பிடத்தக்க அறிகுறிகள்:

    உங்கள் மார்பு அல்லது கைகளில் அழுத்தம், இறுக்கம், வலி, அழுத்துதல் அல்லது வலி உணர்வுகள், இது உங்கள் கழுத்து, தாடை அல்லது முதுகில் பரவக்கூடும்

    குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்

    மூச்சு விடுவதில் சிரமம், குளிர் வியர்வை, சோர்வு, திடீரென ஏற்படும் லேசான தலைச்சுற்றல்.


    மாரடைப்புக்குப் பிறகு உங்கள் இதயம் பாதிக்கப்படுகிறதா?

    இதயம் மிகவும் உறுதியான உறுப்பு. எனவே, தாக்குதலுக்கு ஆளான பிறகு, அதில் சில சேதம் அடைந்தாலும், மற்ற பாதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், உங்கள் இதயம் பலவீனமான நிலைக்கு வரலாம், அதற்குப் பிறகு அதிக கவனிப்பு தேவைப்படலாம்.

    கார்டியாக் அரெஸ்டில் என்ன நடக்கும்?

    திடீரென இதய செயலிழப்பு ஏற்படும் போது திடீர் கார்டியாக் அரெஸ்ட் (SCA) ஏற்படலாம். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (அரித்மியா) காரணமாக, பம்ப் செய்யும் செயல் தொந்தரவு செய்யப்படுகிறது, மேலும் இதயத்தால் மூளை, நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை வழங்க முடியவில்லை. சில நொடிகளில், அந்த நபர் துடிப்பு இல்லாமல் மயக்கமடைந்தார். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அத்தகைய நிலை மோசமடைந்து மரணத்திற்கு வழிவகுக்கிறது.

    இது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், இருப்பினும் இது பெரும்பாலும் வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களிடமோ அல்லது இதய நோய் உள்ளவர்களிடமோ அடிக்கடி நிகழ்கிறது. இதயத் தடுப்புக்கு மிகவும் பொதுவான காரணம் வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் ஆகும், இது மின் தூண்டுதல்கள் உங்கள் இதயத்தைத் துடிக்கச் சொல்லும்போது நிகழ்கிறது.

    கார்டியாக் அரெஸ்ட் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டும் மேலும் SCA அறிகுறிகள்:

    திடீர் இதயத் தடுப்பு அறிகுறிகள் உடனடி மற்றும் கடுமையானவை, உட்பட:


    எதிர்பாராத சரிவு, துடிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, சுவாசம் இல்லை, மயக்கம், திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு வேறு சில அறிகுறிகளும் அறிகுறிகளும் தோன்றக்கூடும். இவை அடங்கும்:

    நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் காரணமாக பலவீனம்,

    படபடப்பு என்பது வேகமாக துடிக்கும், படபடக்கும் அல்லது இதயம் துடிக்கும் அறிகுறிகளாகும். இருப்பினும், திடீர் மாரடைப்பு அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல் ஏற்படுகிறது.

    SCAக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா?

    மருத்துவ ரீதியாக, கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகியவற்றுக்கு இடையே பரந்த வேறுபாடு இருந்தாலும் , இந்த இரண்டு நிபந்தனைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. அடிப்படையில், மாரடைப்பு என்பது மாரடைப்பின் தொடக்கமாக மாறக்கூடும், ஏனெனில் SCA மாரடைப்பிற்குப் பிறகு அல்லது ஒன்றிலிருந்து மீண்டு வரும்போது ஏற்படலாம். மாரடைப்பு என்பது மாரடைப்புக்கு ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம் என்றும் நாம் கூறலாம்.

    மாரடைப்பு தவிர, தடித்த இதய தசை, அரித்மியா, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் மற்றும் நீண்ட க்யூடி சிண்ட்ரோம் ஆகியவை திடீர் கார்டியாக் அரெஸ்ட்க்கான காரணங்களாக இருக்கலாம்.

    மாரடைப்பு அல்லது மாரடைப்பின் போது நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

    கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருந்தாலும் , அவசர சிகிச்சை நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம்:


    • அருகிலுள்ள மருத்துவ அவசரநிலையை அழைக்கவும்.

    • CPR ஐ உடனடியாக தொடங்கவும்.

    • நபருக்கு அருகில் படுக்க இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • நபரின் மார்பின் நடுவில் உங்கள் கைகளை வைக்கவும்.

    • குறைந்தது 100 முறை கீழ்நோக்கிய இயக்கத்தில் கடினமாகவும் வேகமாகவும் தள்ளுங்கள்.

    • பின்னர், மற்றொரு 100 சுருக்கங்களுக்கு கடினமாகவும் வேகமாகவும் அழுத்தவும்.

    • நீங்கள் தரையில் இருந்தால், அந்த நபரின் தலையை பின்னால் சாய்க்க அவரது தோளில் உங்கள் கைகளை வைக்கவும்.

    • தொழில்முறை அவசரநிலை வரும் வரை CPR செயல்முறையைத் தொடரவும்.

    வாழ்க்கை முறை மாற்றம், உணவு மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் மூலம், நோயாளிகள் நீண்ட காலமாக ஆரோக்கியமாக வாழலாம்.

    • மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    • கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

    வேலையில் ஏற்படும் சிரமங்கள், குடும்பத்தில் ஏற்படும் ஒரு சில மனக்கசப்புகள், படிப்பிலும் மற்ற நண்பர்களிடம் ஏற்படும் சிறு - சிறு சண்டைகள், தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் என கூறி கொண்டே போகலாம். இந்த மாதிரியான காரணங்களால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோபம் என்பது சாதாரணமாக வந்து விடுகிறது.

    சில நேரங்களில் கோபம் வந்தால், என்ன செய்கிறோம் என்பதை மறந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு மாரடைப்பு வருகிறது. அதில், சிலர் மரணமும் அடைகின்றனர்.

    இதுபோன்ற உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


    கொலம்பியா பல்கலைக்கழகம், யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, சில நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமான, உணர்ச்சிகரமான அனுபவங்கள், இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை என்பது குறித்து ஆய்வுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கின.

    இந்த ஆய்வில் கோபத்தின் காரணமாக பதட்டமான நிலை, சோகமான உணர்வுகளால் இதய நோய் அதிகமாக உருவாகும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.


    அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் கோபத்தின் சிறிய வெடிப்புகள் கூட இருதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தூண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, 8 நிமிட கோபம் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது தான். எனவே, கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

    • உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • சகோதரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தில் இந்த சோகம் ஏற்பட்டது

    சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது இந்த காலக்கட்டத்தில் அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. சமீபகாலமாக 'மாரடைப்பு' காரணமாக வாலிபர்கள், சிறுவர்கள், பெண்கள் என அனைத்து வயது தரப்பிரனரும் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏராளம் அரங்கேறி வருகிறது.

    முன்னதாக, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். பல பிரபலங்களும் சமீபத்தில் மாரடைப்பால் இறந்தனர்.

    இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் தனது சகோதரியின் ஹல்டி விழாவில் நடனமாடும்போது ரிம்ஷா என்ற 18 வயது சிறுமி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    சகோதரியின் ஹல்டி நிகழ்ச்சியில் ரிம்ஷா தனது சக தோழிகள் மற்றும் சிறுவர்களுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. சற்று தடுமாறி பிறகு மீண்டும் நடனத்தில் ஈடுப்பட்டார். பின்னர் நெஞ்சை பிடித்தவாரு தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ரிம்ஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரிம்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    சகோதரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் குடும்பத்தில் இந்த சோகம் ஏற்பட்டது அந்த பகுதியில் உள்ள அனைவனையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஹல்டி நிகழ்ச்சியில் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சிறுமியின் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

    ×