என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heart Attack"

    • 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.
    • மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.

    ரஷியாவின் ஷ்யாவின் ஓரன்பர்க் நகரைச் சேர்ந்த 30 வயதான டிமிட்ரி நுயான்சின், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் சமூக ஊடகங்க பிரபலமாகவும் உள்ளார்.

    தனது எடை இழப்புத் திட்டத்தை விளம்பரப்படுத்த, அவர் 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.

    இதன் ஒரு பகுதியாக, சில வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் 10,000 கலோரிகளுக்கு மேல் ஜங்க் ஃபுட் சாப்பிடத் தொடங்கினார்.

    காலையில் பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள், மதியம் மயோனைஸுடன் பாலாடைக்கட்டிகள், இரவில் ஒரு பர்கர் மற்றும் இரண்டு சிறிய பீட்சாக்கள் சாப்பிடுவார்.

    இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த மாதம் 18 ஆம் தேதி தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.

    இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது நண்பர்களிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தனது பயிற்சி வகுப்புகளை ரத்து செய்வதாகவும் கூறினார். ஆனால் மறுநாள் அவர் தூக்கத்தில் மாரடைப்பால் இறந்தார். 

    • சீத்தாக்குளம்-சத்திரம் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் வந்தபோது மல்லிகார்ஜூன ரெட்டி திடீரென மயங்கி விழுந்தார்.
    • போலீசாரின் முதல் கட்ட அறிக்கையில் மாரடைப்பு காரணமாக மல்லிகார்ஜூன ரெட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன ரெட்டி (வயது 42). இவர் கடந்த 19-ந் தேதி வண்டி பெரியாறு சத்திரத்தில் இருந்து புல்மேட்டு பாதை வழியாக 25 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழுவுடன் சபரிமலை சன்னிதானத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

    சீத்தாக்குளம்-சத்திரம் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் வந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து சத்திரத்தில் உள்ள சுகாதார மையத்தில் மல்லிகார்ஜூன ரெட்டிக்கு முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புல்மேட்டில் இருந்து வந்த மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

    அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அவரது உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட அறிக்கையில் மாரடைப்பு காரணமாக மல்லிகார்ஜூன ரெட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

    • கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
    • அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் சிப்ரி பஜார் பகுதியில் உள்ள நல்கஞ்சில் வசித்து வந்தவர் 30 வயதான ரவீந்திர அஹிர்வார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி.யில் மேம்பாட்டு அதிகாரியாக ரவீந்திரன் பணியில் சேர்ந்தார்.

    கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். நேற்று காலை, உள்ளூரில் அரசுக் கல்லூரி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

    விளையாடும்போது அசௌகரியத்தை உணர்ந்த ரவீந்திரனின் மைதானத்திலிருந்து தண்ணீர் குடிக்க சென்றார். அவர் தண்ணீரை குடித்த உடனே வாந்தி எடுத்து சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சச்சின் மகோர், பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் உணமையான காரணம் புலனாகும் என்று தெரிவித்தார். 

    ரவீந்திரனின் தம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார். விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். 1 மணி நேரதிற்கு பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது" என்று தெரிவித்தார்.  

    • ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார்.
    • வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான்.

    இவர் பஞ்சாபின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் சிறந்த உடற்பயிற்சி நிபுணரும் ஆவார். சொந்தமாக உடற்பயிற்சி கூடம் வைத்து உடற்பயிற்சி நிபுணராக வாழ்க்கையை தொடங்கிய இவர் கடந்த 2009-ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்றார், மிஸ்டர் ஆசியா போட்டியில் 2-ம் இடமும் பிடித்தார்.

    2013-ம் ஆண்டு அர்னால்ட் பாடிபில்டிங் போட்டிக்காக ஸ்பெயின் சென்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்தார். அர்னால்ட் அவர் உடலை பார்த்து வியந்து அவரை பாராட்டி பேசினார். அர்னால்டின் அந்த பாராட்டு வரீந்தர் சிங்கை இந்தியாவின் கொண்டாடப்படும் நட்சத்திரமாக ஆக்கியது. அதன் பிறகு இந்தியாவில் அவருக்கு படவாய்ப்புகள் வரத்தொடங்கின.

    2012-ம் ஆண்டு பஞ்சாபி மொழியில் கபடி ஒன்ஸ் அகைய்ன் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர் 2014-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகமானார். அதன் பிறகே பிரபல நட்சத்திரமானார்.

    ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார். இறுதியாக அவர் சல்மான்கான், கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்த டைகர் 3 படம் 2023-ம் ஆண்டு வெளியானது.

    உடற்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் அசைவ உணவே சாப்பிடுவார்கள். ஆனால் வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார். சைவ உணவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிவந்தார்.

    இந்த நிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரது கையில் (பைசெப்) சிறு காயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அறுவை சிசிச்சை செய்து கொள்ள அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டினர்.
    • மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.

    செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள் மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பெங்களூரு காவல்துறையின் லோகோவைக் காட்டி அவரை மோசடிக்காரர்கள் நம்ப வைத்துள்ளனர்.

    பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டிய மோசடி செய்பவர்கள் அவரது ஓய்வூதியக் கணக்கிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு ரூ.6.6 லட்சத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.

    பணம் செலுத்தப்பட்ட பிறகும், வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது.

    இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளான அவர் ஒரு கட்டத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.

    குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:47 மணிக்கு, சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.
    • புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சங்கர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பதை நம்ப முடியவில்லை.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதுகு வலி காரணமாக மேலதிகாரியிடம் Sick leave கேட்ட ஊழியர் சரியாக பத்து நிமிடங்களுக்குள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த சங்கர் (40) கடந்த 13 ஆம் தேதி தனது மேலதிகாரி கே.வி. ஐயருக்கு காலை 8:37 மணிக்கு, தனது முதுகு வலி காரணமாக அன்றைய தினம் விடுப்பு வேண்டும் என மெசேஜ் அனுப்பினார். மேலதிகாரி கே.வி.ஐயரும் விடுப்பு வழங்கி ஓய்வு எடுக்குமாறு பதிலளித்தார்.

    ஆனால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:47 மணிக்கு, சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.

    இந்த துயரச் செய்தியை ஐயர் காலை 11 மணிக்கு அறிந்தார். காலையில் தன்னிடம் விடுப்பு கேட்ட நபர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார் என்ற செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த சம்பவத்தை ஐயர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

    அவரது பதிவில், "புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சங்கர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது" என்று அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். இந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  

    • சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.
    • டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    திருமண நிகழ்ச்சிகள், விழாக்களில் தற்போது டி.ஜே. சத்தத்துடன் நடனமாடுவது புதிய கலாச்சாரமாக மாறிவிட்டது.

    இதே போன்ற அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பி நடனம் ஆடும் போது திடீரென சிலர் இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    இதேபோல நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுபவர்கள் திடீர் திடீரென இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டி.ஜே. சத்தத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    ஜெர்மனியில் உள்ள மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம், டி.ஜே. ஒலிகளின் விளைவுகள் குறித்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 15,000 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தியது.

    ஒலிபெருக்கிகள் மற்றும் டி.ஜே. ஒலிகள் போன்ற எந்தவொரு இசையும் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், இதயத் துடிப்பு மாறுவது கண்டறியப்பட்டது.

    மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. டி.ஜே.க்கள் போன்ற உரத்த ஒலிகளால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வியத்தகு அளவில் அதிகரிக்கிறது.



    ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதத்தால் இறக்கும் அபாயம் உள்ளது.

    பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம். 100 டெசிபலுக்கு மேல் ஒலிகளை நீண்ட நேரம்கேட்டால் காது கேட்கும் பிரச்சனைகள் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு மெல்லிய உள் அடுக்குகள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படுகிறது.

    டி.ஜே. சத்தங்கள் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஒலி மாசுபாட்டால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.

    நமக்கு இதயத் துடிப்பு ஏற்படுவது போல, கருப்பையில் உள்ள குழந்தைகளும் அவற்றை அனுபவிக்கலாம். கர்ப்பத்தின் 4-வது மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் சத்தங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    டி.ஜே. சத்தம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    நாய்கள், கால்நடைகள், ஆடுகள் மற்றும் கோழிகள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்கின்றன.

    சமீபத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தெலுங்கானா மாநிலம் மொய்னாபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் டிஜே சத்தம் காரணமா அருகிலுள்ள கோழிப் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததாக புகார் வந்தது.

    பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.

    அதிர்வு விளைவு காரணமாக கட்டிடங்களும் அதிர்வுறும். இதன் விளைவாக, பலவீனமான கட்டமைப்புகள் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.

    டி.ஜே. பயன்படுத்தும் இடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஹெட்போன் அல்லது நுரையால் ஆனவற்றை பயன்படுத்தலாம். அவை உரத்த ஒலிகளைத் தடுக்கின்றன. அவை 30 டெசிபல் சத்தத்தைக் குறைக்கின்றன.

    காது செருகிகளை பயன்படுத்தி முழு காதையும் மறைக்காத ஹெட்போன் சந்தையில் வந்துள்ளன. அவை சத்தத்தை முழுமையாகத் தடுக்காமல் தெளிவான ஒலியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    டி.ஜே. ஒலிபரப்பும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • சிக்சர் அடித்த வீரர் தனது சக வீரரிடம் பேசத் தொடங்கினார்.
    • திடீரென்று வீரர் தரையில் மயங்கி விழுந்தார்.

    கிரிக்கெட் விளையாடும் போதும், நடன ஆடும் போதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    அந்த வகையில் ஒரு உள்ளூர் போட்டியில் கிரிக்கெட் விளையாடும் போது சிக்சர் அடித்த வீரர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிக்சர் அடித்த வீரர் தனது சக வீரரிடம் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென்று வீரர் தரையில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த வீரர்கள் உடனடியாக அவரை எழுப்ப முயன்று தண்ணீர் கொடுத்தனர். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. மைதானத்திலேயே அவருக்கு CPR கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு, வீரருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சில வினாடிகளுக்கு முன்பு சிக்சர் அடித்து அனைவரின் இதயங்களையும் வென்ற வீரர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மக்களால் நம்பவே முடியவில்லை.

    விளையாட்டுகளைத் தொடங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்தகுதி குறித்து கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்பதை இதுபோன்ற விபத்துகள் நமக்குக் கற்பிக்கின்றன.

    • இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது
    • இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.

    கொரோனா தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், கோவிட் தொற்று, அது லேசானதாக இருந்தாலும், நமது இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

    ஆண்களை விட பெண்களில் இந்த விளைவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை நடத்தியது.

    செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2022 வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.

    "கோவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக வயதாக்குகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது" என்று பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.

    கோவிட் தொற்று ஏற்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிடால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற நீண்டகால கோவிட் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இரத்த நாளங்கள், தமனிகள் (Arteries) இறுக்கமாக இருந்தன என்பதை ஆய்வு காட்டுகிறது.

    இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு தமனிகள் அவ்வளவு விறைப்பாக இல்லை என்றும், அவர்களின் நிலை சற்று சிறப்பாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    பெண்களில் இந்த அதிக விளைவுக்குக் காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதே என்று பேராசிரியர் புருனோ நம்புகிறார்.

    "பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் வேகமாகவும் வலுவாகவும் செயல்படுகின்றன. இது அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதே வலுவான பதில் தொற்றுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.

    இந்த சூழலில், கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   

    • முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் உடனடியாக நீதிமன்ற ஊழியர்களுக்குத் தெரிவித்தார்.
    • ஊழியர்கள் அவரை நாற்காலிகளில் படுக்க வைத்து முதலுதவி செய்தனர்.

    தெலுங்கானாவின் ஐதராபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் 45 வயதான நாகேஸ்வர ராவ் என்ற வழக்கறிஞர் மாரடைப்பால் இறந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

     நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

    நாகேஸ்வர ராவ் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மார்பில் வலி ஏற்பட்டது. அவரது அசௌகரியத்தைக் கண்டதும், முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் உடனடியாக நீதிமன்ற ஊழியர்களுக்குத் தெரிவித்தார்.

    இதன் பின்னர், ஊழியர்கள் அவரை நாற்காலிகளில் படுக்க வைத்து முதலுதவி செய்தனர். ஆனால் அவரது நிலை மிகவும் மோசமாகியது.

    அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்திற்கு மாரடைப்புதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    • இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 25 வயதான ராகேஷ் என்ற இளைஞர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நன்றாக பேட்மிண்டன் விளையாடி வரும் ராகேஷ் திடீரென சரிந்து கீழே விழுவது பதிவாகியுள்ளது.

    உடனடியாக அவரது நண்பர்கள் ராகேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தற்போதைய காலகட்டத்தில், இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
    • ICMR மற்றும் AIIMS இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.

    தடுப்பூசிகளுக்கு அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது என்ற சித்தராமையாவின் கூற்று உண்மைக்கு மாறானது என்றும், அது சமூகத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான பீக்கன் லிமிடெட் நிர்வாகத் தலைவரும் தொழிலதிபருமான கிரண் மஜும்தார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பதில்களைத் தேடுவதைக் குறை கூறுவதாகக் கருத முடியாது என்று சித்தராமையா கிரண் மஜும்தாருக்கு  பதிலளித்துள்ளார்.

    முதலமைச்சராக, மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வது எனது கடமை. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்பாராத விதமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். ஒரு விஷயத்தில் தெளிவு கோருவது தவறான பிரச்சாரம் அல்ல. தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

    உலகளாவிய சுகாதார அவசரநிலையின் போது இந்த தடுப்பூசி அவசரமாக அங்கீகரிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. ஒரு தொற்றுநோய் காலத்தில் இவ்வளவு அவசரம் தவறு அல்ல. ஆனால் இதன் விளைவுகளைப் புரிந்துகொள்வது நல்லது என்று கூறினார்.

    இதற்கிடையே கோவிட் தடுப்பூசியை திடீர் மரணங்களுடன் இணைக்கும் அறிக்கைகள் தவறானவை என்றும் இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் முன்பே இருக்கும் மருத்துவ நிலைமைகள் முக்கிய காரணிகள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் AIIMS இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    ×