என் மலர்
நீங்கள் தேடியது "Heart Attack"
- ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும்.
- இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும்.
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கரை (பேஸ்மேக்கர் என்பது இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும் ஒரு மருத்துவ மின்சாதனம்) கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும். இந்த பேஸ்மேக்கர் தற்காலிகமாக தேவைப்படுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரிசியை விட சிறியதாக இருக்கும் இந்த சாதனம், 1.8 மி.மீ. அகலம், 3.5 மி.மீ. நீளம் மற்றும் 1 மி.மீ. தடிமன் மட்டுமே கொண்டது. மேலும் தேவைப்படாதபோது உடலில் கரையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதை உடலில் இருந்து வெளியே எடுக்க வேண்டியதில்லை. இதனால் பேஸ்மேக்கரை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை.

நிரந்தர பேஸ்மேக்கர் இதயத்தில் உள்ள மின் அமைப்பை (இதய மின் அமைப்பு என்பது, இதயம் துடிக்கவும், ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்யவும் உதவும் அமைப்பு) ஆதரிக்க அறுவை சிகிச்சை மூலம் உடலில் வைக்கக்கூடிய ஒரு சாதனமாகும். இது அசாதாரண இதய துடிப்புகளை சரிப்படுத்தி, உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.
இதேபோல சில நேரங்களில், இதய செயல்பாட்டை ஆதரிப்பதற்கு குறுகிய காலத்திற்கு பேஸ்மேக்கர் தேவைப்படுகிறது. குறிப்பாக திறந்த இதய அறுவை சிகிச்சை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக இதயத் துடிப்பு மாறும்போது இந்த வகையான தற்காலிக பேஸ்மேக்கர் பயன்படும்.
இது இதயத் துடிப்பு நிலைப்படுத்தப்படும் வரை, ஒரு சில நாட்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும். தற்போது உள்ள தற்காலிக பேஸ்மேக்கரை அறுவை சிகிச்சை மூலம் இதய தசைகளில் வைக்க வேண்டியுள்ளது.
அந்த சாதனம் இனி தேவைப்படாதபோது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதால் சில நேரங்களில் சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பேஸ்மேக்கர் தேவைப்படாதபோது உடலில் கரைந்து போகும் என்பதால் அதனை வெளியே எடுக்க வேண்டியதில்லை.

இந்த பேஸ்மேக்கர் ஒரு கால்வனிக் கலத்தால் (கால்வனிக் கலம் என்பது ஒரு மின்வேதியியல் கலமாகும், இதில் ரசாயன ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது) இயக்கப்படுகிறது. இது வேதியியல் ஆற்றலை இதயத்தை ஒழுங்குபடுத்தும் மின் துடிப்புகளாக மாற்ற உடலின் திரவங்களைப் பயன்படுத்துகிறது.
ஒரு சதவீத குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அக்குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையின்போது தற்காலிக பேஸ்மேக் கருக்கான தேவை உள்ளது. அவர்களுக்கு இந்த சிறிய அளவிலான பேஸ்மேக்கர் சிறந்தது.
அதன் சிறிய அளவு காரணமாக, வயது வந்தோருக்கான இதய சிகிச்சைகளிலும் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தர பேஸ்மேக்கரை போலவே அதிக தூண்டுதலை இதனால் வழங்க முடியும்.
பாதிக்கப்பட்ட நோயாளியின் மார்பில் சிறிய நெகிழ்வான, வயர்லெஸ் முறையில் இயங்கும் சாதனத்துடன் பேஸ்மேக்கர் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகளை கண்டறியும்போது, பேஸ்மேக்கருக்கு ஒளி சமிக்ஞையை அனுப்பி, அதை செயல்படுத்துகிறது.

ரேடியோ சிக்னல்களை பயன்படுத்தும் முந்தைய பேஸ்மேக்கரை போல் அல்லாமல், இந்த புதிய சாதனம் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்த ஒளியைப் பயன்படுத்துகிறது.
ஆய்வகத்தில் எலிகள், பன்றிகள், நாய்கள் மற்றும் மனித இதய திசுக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பேஸ்மேக்கர் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது.
மனிதர்களிடத்தில் இந்த பேஸ்மேக்கரை பரிசோதிக்க சில ஆண்டுகள் ஆகும் என்றாலும், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
- நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
- நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும்.
'இடதுபக்க நெஞ்சுவலி என்றதுமே, நாம் முதலில் நினைத்து மிகவும் பயப்படுவது 'மாரடைப்பு' அதாவது 'ஹார்ட் அட்டாக்' தான். கொஞ்சமாக நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
நெஞ்சின் இடதுபக்கம் கனமாக, பாரமாக, இறுக்கமாக இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை: இதயம், நுரையீரல், நெஞ்சிலுள்ள தசைப்பிரச்சினைகள், ஜீரணக்கோளாறு, மன நல பிரச்சினைகள், விலா எலும்பு நோய், அதிக அளவில் வாயு சேருதல், ஆஸ்துமா, நிமோனியா போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றால், நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும். இடது தோள்பட்டை வலிக்கும், இடது கை, இடது கைவிரல்கள் வரை வலி பரவும், உடம்பெல்லாம் மிக அதிகமாக வியர்த்துக் கொட்டும். தலை லேசாக வலிக்கும், வாந்தி வருவது போன்று இருக்கும், இதயத் துடிப்பு மிக அதிகமாக துடிக்கும்.
மூச்சு வாங்கும், இதயத்துக்கு நேராக பின்பக்க முதுகில் வலி, நெஞ்சைச் சுற்றி கயிற்றைக் கட்டி இறுக்குவது போன்றதொரு உணர்வு ஏற்படும். இதுபோன்ற மாரடைப்புக்கான அறிகுறிகளில் சில உங்களுக்கு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.

வாய்வுக்கோளாறு தான் நெஞ்சுவலியை ஏற்படுத்துகிறது என்று முடிவுசெய்து அதற்குண்டான வீட்டு வைத்தியம், மருந்துக் கடையில் நீங்களே மருந்தை வாங்கி சாப்பிடுவது போன்றவை மிகப்பெரிய தவறாகும்.
மேலும், அதிக காரம், கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது நெஞ்செரிச்சலை உண்டுபண்ணும். இதுவே நெஞ்சு வலி வந்துவிட்டதோ என்ற பயத்தை உண்டாக்கும். எனவே இவைகளை குறையுங்கள்.
மது, புகைப்பழக்கம் கூடாது. ஆஸ்துமா இருப்பவர்கள் அதை தூண்டிவிடும் பொருட்கள், உணவுகளிடமிருந்து விலகி இருங்கள்.
உங்களுக்கு இதயப் பிரச்சனையைவிட, மனப்பயம் தான் அதிகமாக இருக்கிறது. வீடு, அலுவலகம், தொழில் போன்ற பிரச்சனைகளால் டென்ஷனாகும் போது சிலருக்கு நெஞ்சுவலி வரலாம். முதலில் மன தைரியம் வேண்டும். நெஞ்சுவலி வந்தால், உடனே அருகிலுள்ள இதய நோய் சிகிச்சை நிபுணரை சந்திக்க வேண்டும்.
- உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர் அதிகாலையில் தெருவில் பயிற்சி செய்து கொண்டுருந்தார்.
- அதிகாலை என்பதால் அந்நேரம் அங்கு யாரும் இல்லை.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் பகுதியை சேர்ந்த இளைஞர் பிரமோத் பிஞ்சோலா. உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அதிகாலை தெருவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
அந்த வீடியோவில் பிரமோத் அதிகாலையில் தெருவில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சோர்வடைந்து அருகில் உள்ள பலகையில் அமர்கிறார். சற்று நேரத்தில் அவர் பலகையில் இருந்து சரிந்து விழுகிறார்.
அதிகாலை என்பதால் அந்நேரம் அங்கு யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தாக மருத்துவர்கள் அறிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது பெண் வர்ஷா, நேற்று பிரியாவிடை நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
- வர்ஷா புன்னகையுடன் தனது பேச்சைத் தொடங்கினார்.
மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது பெண் வர்ஷா, நேற்று பிரியாவிடை நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
வர்ஷா புன்னகையுடன் தனது பேச்சைத் தொடங்கினார், ஆனால் திடீரென்று அவரது முகம் வெளிறிப்போய், மயக்கமுற்று கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். வர்ஷா மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, வர்ஷாவுக்கு எட்டு வயதில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், கடந்த 12 ஆண்டுகளாக அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தார் என்று தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
- சஹானா ஸ்ரீதர் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல குணச்சித்திர நடிகர் சஹானா ஸ்ரீதர் (62 வயது) உடல்நலக்குறைவால் காலமானார். அழியாத கோலங்கள்', 'வி.ஐ.பி', 'ராஜ வம்சம்' உள்பட பல படங்களில் நடித்த சஹானா ஸ்ரீதர், வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
'வள்ளி வேலன்', 'தாமரை', 'சித்தி-2' உள்ளிட்ட பல தொடர்களில் அவர் நடித்துள்ளார். 'சஹானா' என்ற தொடரில் நடித்து பிரபலம் அடைந்ததால் 'சஹானா' ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார்.
சென்னை தி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த 'சஹானா' ஸ்ரீதருக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். சஹானா ஸ்ரீதர் மறைவு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும்.
- 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.
ஒவ்வொரு மனிதனும் 100 ஆண்டுகள் முழுமையாக வாழ விரும்புகிறான். ஆனால் பலர் பல்வேறு நோய்களால் 70 வயதிற்கு முன்பே இறக்கின்றனர். சுகாதார அமைப்பான லான்செட் கமிஷன் தனது உலக சுகாதாரம்-2050 அறிக்கையில், தற்போதைய அகால மரணங்களின் எண்ணிக்கையை 2050-ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க முடியும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
இது சாத்தியமாக, அந்தந்த நாடுகள் சுகாதாரப் பராமரிப்புக்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
அனைவரையும் சுகாதார விழிப்புணர்வுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல முறையான மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அகால மரணங்களைக் கணிசமாகக் குறைக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

2001 முதல் 2018 வரை இந்தியாவில் சுமார் 37 மில்லியன் மக்கள் அகால மரணமடைந்துள்ளனர். இந்த இறப்புகளுக்கு 4 தொற்றா நோய்கள் முக்கிய காரணமாகும்.
அதிக எண்ணிக்கை யிலான இறப்புகள் இதய நோய் (58.3 சதவீதம்), புற்றுநோய் (18.6 சதவீதம்), நாள்பட்ட சுவாச நோய்கள் (15.5 சதவீதம்) மற்றும் நீரிழிவு நோய் (5.6 சதவீதம்) ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதற்குக் காரணங்களாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவற்றுடன் சாலை விபத்துகளும் நாட்டில் அகால மரணங்களுக்கு வழிவகுக்கும். தற்கொலைகளும் அதிக அளவில் உள்ளன.
எச்.ஐ.வி., காசநோய் நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் சாலை விபத்துகள் கடுமையான சுவாச நோய்கள் மற்றும் குழந்தை இறப்பு போன்ற 15 காரணிகள் சராசரி ஆயுட்காலத்தைக் குறைக்கின்றன.
8 வகையான தொற்றுகள் தாய்வழி சிக்கல்கள் மற்றும் 7 தொற்றாத நோய்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக நிதி செலவிடப்பட வேண்டும்.
புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்களை விட்டுவிடுங்கள்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும். உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் மன அழுத்தத்தைக் குறைக்கவும். குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.

கார்போஹைட்ரே ட்டுகள் அதிகமாகவும் புரதம் அதிகமாகவும் உள்ள உணவை உண்ணுங்கள் பருவகால பழங்கள். கீரைகள் மற்றும் காய்கறிகள் உணவில் அதிகமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்
பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- காயம் மிகவும் மோசமாக இருந்ததால் பாதல் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
- ஒரு கனமான பொருள் மார்பில் அதிக அழுத்தத்துடன் மோதுவதால் இதயதிற்கு சேதம் ஏற்படும்.
குஜராத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டிலால் 14 வயது சிறுவன் மார்பில் காயமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2:45 மணியளவில் வேராவல்-பாந்த்ரா ரெயில் ராஜ்கோட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
ராஜ்கோட்டில் வசிக்கும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாதல் என்ற அந்த 14 வயது சிறுவன் அன்றைய தினம், ரெயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதி அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் இருந்த அடையாளம் தெரியாத பயணி ஒருவர் தண்ணீர் பாட்டிலை வெளியே எறிந்தார். அது பாதலின் மார்பில் நேரடியாகத் தாக்கியது. காயம் மிகவும் மோசமாக இருந்ததால் பாதல் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ஆரம்பத்தில் மாரடைப்புதான் மரணத்திற்குக் காரணம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, ரெயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்தான் மரணத்திற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு கனமான பொருள் மார்பில் அதிக அழுத்தத்துடன் மோதுவதால் இதயத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டு, உடனடி மரணத்திற்கு வழிவகுக்கும்.
அலட்சியமாக செயல்பட்ட ரெயில் பயணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- பில்டிங் செய்து கொண்டிருந்த தமீம் இக்பால், திடீரென்று களத்தில் நிற்க முடியாமல் அமர்ந்துவிட்டார்.
- அவருக்கு இதயத்தில் சில பிரச்சனை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
டாக்கா:
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் களத்தில் சுருண்டு விழுந்தார். 36 வயதான தமீம் இக்பால், அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தமீம் இக்பால் விளையாடினார். முஹம்மதின் ஸ்போட்டிங் கிளப் அணிக்கு தலைமை தாங்கிய தமீம் இக்பால் சைன்புகூர் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிராக விளையாடினார்.
அப்போது பில்டிங் செய்து கொண்டிருந்த தமீம் இக்பால், திடீரென்று களத்தில் நிற்க முடியாமல் அமர்ந்துவிட்டார். இதனையடுத்து அங்கிருந்து மருத்துவர்கள் தமீம் இக்பாலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதனையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ நிபுணர் டெபாசிஸ் சவுத்ரி, தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இசிஜி எடுக்கப்பட்டது. அவருக்கு இதயத்தில் சில பிரச்சனை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அவருடைய உடல் நலம் தற்போது எப்படி இருக்கிறது என்று இனி தான் தெரியவரும். முதலில் அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தமக்கு உடல்நலம் சரியில்லை என்றும் டாக்காவுக்கு செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
- கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும்.
- உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.
'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' என்பது இதயத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் கரோனரி ரத்த நாளங்கள் குறுகுவதால் ஏற்படும் இதய பாதிப்பாகும். இதை உடனடியாக கவனிக்காவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும்.

உலகளவில் ஏற்படும் மாரடைப்புகளில் 22 முதல் 60 சதவிகிதம் சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சுவலி அல்லது இடது தோள்பட்டை, கழுத்து, முதுகு, தாடை போன்ற இடங்களில் வலியையும், வயிறு எரிச்சல், குமட்டல், வாந்தி, வியர்த்தல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.
ஆனால் மேற்கூறிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலோ அல்லது மிக குறைவான அறிகுறிகளுடன் மாரடைப்பு ஏற்படுவது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வேறு காரணங்களுக்காக சில நாட்கள் கழித்து மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகள் செய்யும் போது தான் தற்செயலாக கண்டறியப்படுகிறது.
இது ஏற்பட ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, உடல் பருமன், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், அதிக தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, மன அழுத்தம், பரம்பரை இதய நோய்கள் போன்றவை முக்கிய காரணிகளாகும்.

சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட முதன்மைக் காரணம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் கரோனரி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் கட்டிகளால் ஏற்படும் அடைப்பு.
சில சமயங்களில் கரோனரி ரத்த நாளங்களின் இறுக்கத்தால் கூட சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக இதயம் மற்றும் மார்பு பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சில சமயங்களில் மாரடைப்பின் அறிகுறிகளை அவர்களால் உணர முடியாமல் போகிறது. இவர்களுக்கு சோர்வு, வயிறு எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் அப்போது ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளின் அலட்சியத்தால் சில சமயங்களில் கண்டறிய தவறிய சைலன்ட் ஹார்ட் அட்டாக் தீவிர சிக்கலாக மாறி பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.
- அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
- வேல்முருகன் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
- காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக போக்குவரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 50) இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று பணி முடிந்து இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வேல்முருகனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்காமல் வேலுமுருகன் அலறினார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர்.
- உடலை பிரரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (வயது66). இவர் புனித பயணமாக மெக்காவிற்கு தனது குழுவினருடன் சென்று இருந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை பக்ரைனில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து விமான பணிப்பெண்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ராஜா முகமதுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதனால் அவருடன் வந்திருந்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்து போன ராஜாமுகமதுவின் உடலை விமான நிலைய போலீசார் மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த விமானம் மீண்டும் அதிகாலை 4.10 மணிக்கு சென்னையில் இருந்து பக்ரைனுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். இதில் பயணம் செய்ய 192 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.
பயணி இறந்ததை தொடர்ந்து அந்த விமானத்தை ஊழியர்கள் கிருமிநாசினிகள் தெளித்து முழுமையாக சுத்தப்படுத்தினர். இதனால் விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக காலை 6.40 மணிக்கு பக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.