என் மலர்
நீங்கள் தேடியது "சைபர் மோசடி"
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
- மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும்
கடந்த ஒரு வருடத்தில் மோசடியில்(Spam) ஈடுபட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி செய்திகளை அனுப்பிய ஒரு லட்சம் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
குடிமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று TRAI வலியுறுத்தியுள்ளது. இந்தப் பயன்பாடு மூலம் புகார் அளிக்கப்படும்போது, TRAI மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த எண்ணைக் கண்டறிந்து, சரிபார்த்து, நிரந்தரமாகத் துண்டிக்க முடியும் என்று TRAI தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் மக்களின் புகார்கள் மிகவும் முக்கியமானவை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.
- வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.
நாடு முழுவதும் அரங்கேறி வரும் 'டிஜிட்டல் கைது' என்ற புதிய வகையான சைபர் மோசடி குறித்து நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) பொதுமக்களை எச்சரித்துள்ளது. மோசடி அழைப்பு வரும்போது செய்யவேண்டிய வழிகாட்டுதலைகளை NPCI வெளியிட்டுள்ளது.
அதன் அறிக்கையில், இந்த 'டிஜிட்டல் கைது' மோசடியில், குற்றவாளிகள் முதலில் ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பின்னர் உங்களை நம்ப வைக்க வீடியோ அழைப்புக்கு மாறுவார்கள்.
அவர்கள் தங்களை காவல்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, சுங்கத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் அல்லது வரி ஏய்ப்பு போன்ற கடுமையான வழக்குகள் உங்கள்மீது அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுறுத்துவார்கள்.
கைது செய்வதாக எச்சரித்து உங்களுக்கு அச்சத்தை உருவாக்குகிறார்கள். வீடியோ அழைப்புகளின் போது, உங்களை முழுமையாக நம்ப வைக்க போலி சீருடைகள், அரசாங்க லோகோக்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற போலி பின்னணியை உருவாக்குவார்கள்.
அவர்கள் உண்மையைச் சொல்வது போல் தோன்ற பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் கேட்கக்கூடிய ஒலிகளையும் ஒலிக்கச் செய்வார்கள்.
வழக்கு விசாரிக்கப்படும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கிற்கு மாற்றுமாறு உங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.
"வழக்கில் இருந்து உங்கள் பெயரை நீக்க", "விசாரணைக்கு ஒத்துழைக்க" அல்லது "திருப்பித் தரக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த" உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லி அவர்கள் மோசடியாக பணத்தை கொருவர்.
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அழைப்புகளைப் பெற்றால் கவலைப்பட வேண்டாம். அரசாங்க புலனாய்வு நிறுவனங்கள் ஒருபோதும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்துவதில்லை, பணம் கோருவதில்லை.
தெரியாத நபர்கள் அழைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொன்னால், உடனடியாக அழைப்பைத் துண்டித்து விவரங்களை சரிபார்க்கவும். தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது தொலைத்தொடர்புத் துறையின் 'சஞ்சார் சாத்தி' போர்ட்டலுக்கு புகார் அளிக்கவும்.
அவர்களுடனான உரையாடல்களின் மெசேஜ்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களைச் சேமித்தால் புகார் அளிக்கும்போது அதிகாரிகளால் அவை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட உதவும்" என்று NPCI தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.
முன்னதாக அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த வயதான தம்பதியிடமிருந்து போலியான நீதிமன்ற உத்தரவை காட்டி, உங்களை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டிய மர்ம நபர்கள், அவர்களிடம் இருந்து ரூ.1.05 கோடி பணத்தை பறித்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட அந்த வயதான பெண் நேரடியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தானாகவே வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
நேற்று நடந்த இதன் விசாரணையின்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "நாடு முழுவதும் டிஜிட்டல் கைது வழியாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரிடம் ரூ.3,000 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதை கடுமையாக கையாளாவிட்டால் நிலைமை மோசமடையும். நமது விசாரணை அமைப்புகளின் திறனை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் வலுப்படுத்த வேண்டும். இந்த குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டை விட 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை இருமடங்காகி 4,439 வழக்குகள் பதிவாகி உள்ளன.
- 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தது போல போலியாகத் தயாரிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த 73 வயது பெண்மணி ஒருவரை 'டிஜிட்டல் கைது செய்வதாக ஏமாற்றி சைபர் மோசடி கும்பல் ஒன்று ரூ.1 பணம் பறிக்க முயற்சித்துள்ளது.
இதுதொடர்பாக அப்பெண்மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு புகார் கடிதம் ஒன்றை எழுதினார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மோசடிக்காரர்கள் போலி செய்திருப்பது நீதிபதிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
"போலி ஆவணங்கள் மூலம் டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.
இந்த மோசடிகளைச் சமாளிக்க மாநில காவல்துறையால் முடியுமா அல்லது நாடு தழுவிய விசாரணைக்கு மத்திய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த அமர்வு முடிவு செய்யும்.
தேசிய சைபர் குற்றப் புகாரளிக்கும் இணையதளத்தில் (NCRP), 2024 இல் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 2,746 'டிஜிட்டல் கைது' வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட இருமடங்காகி 4,439 வழக்குகளாக உயர்ந்துள்ளது.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.
- ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது.
- அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் மாநிலங்களவை எம்.பியுமான சுதா மூர்த்தியிடம் அரங்கேறிய சைபர் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த மாதம் 5 ஆம் தேதி காலை 9:40 மணிக்கு, சுதா மூர்த்திக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
மறுபுறம் பேசிய நபர் தன்னை மத்திய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சுதா மூர்த்தியின் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அந்த எண்ணிலிருந்து சுதா மூர்த்தியின் ஆட்சேபணைக்குரிய விடியோக்கள் சில இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, தனிப்பட்ட தகவல்களை கேட்டும் தொலைத்தொடர்புத்துறை சுதாவின் செல்போன் எண்ணுக்கு அனைத்து வித சேவைகளையும் நிறுத்தப்போவதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.
ட்ரூகாலரில் போன் செய்தவர் என்னை எண்ணைச் சரிபார்த்தபோது, அது 'தொலைத்தொடர்புத் துறை' என்று தோன்றியுள்ளது. இருப்பினும் அந்த நபரின் பேச்சு குறித்து சந்தேகம் அடைந்த சுதா மூர்த்தி சந்தேகம் அடைந்தார்.
இந்த மோசடி முயற்சி தொடர்பாக சுதாமூர்த்தி சார்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டினர்.
- மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.
செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள் மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பெங்களூரு காவல்துறையின் லோகோவைக் காட்டி அவரை மோசடிக்காரர்கள் நம்ப வைத்துள்ளனர்.
பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டிய மோசடி செய்பவர்கள் அவரது ஓய்வூதியக் கணக்கிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு ரூ.6.6 லட்சத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.
பணம் செலுத்தப்பட்ட பிறகும், வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளான அவர் ஒரு கட்டத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- மறுமுனையில் பேசிய பெண் தான் ஜோதி விஸ்வநாத், தொலைதொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
- நகைகள், சொத்துக்களை விற்று, ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மூத்த பெண் மருத்துவர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் மூன்று மாதங்களில் (102 நாட்களில்) ரூ.19 கோடிக்கும் மேல் இழந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் மருத்துவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய பெண் தான் ஜோதி விஸ்வநாத், தொலைதொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்கள் மற்றும் நோட்டரி அதிகாரிகள் கூறி பலர் பேசியுள்ளார்.
மருத்துவர் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக நம்பவைத்துள்ளனர். போலி அமலாக்கத்துறை நோட்டீஸ்களை அனுப்பி, கைது செய்வோம் என தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.
மருத்துவரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்ட அவர்கள் கேட்ட விவரங்களை கொடுத்த பின்னர், பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை டெப்பாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர்.
விசாரணை முடிந்த பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று அவர்கள் கூறியதை நம்பி மருத்துவரும் தனது நிலையான வைப்பு நிதிகளை உடைத்து, நகைகள், சொத்துக்களை விற்று, ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை திருப்பித் தராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரின் புகாரின் அடிப்படையில் , சந்தேகத்தின் பேரில் லால்ஜி ஜெயந்திபாய் பல்தானியா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்போடியா நாட்டை சேர்ந்த சைபர் கிரைம் கும்பலுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர்.
- பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது.
2025 இன் முதல் ஐந்து மாதங்களில், இந்தியர்கள் ஆன்லைன் மோசடியால் ரூ.7,000 கோடியை இழந்துள்ளனர்.
அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நிகழ்ந்துள்ளது. சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் மோசடி மற்றும் மேலாண்மை அமைப்பின் ஆய்வில் இது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை நாட்டில் பதிவு செய்யப்பட்ட சைபர் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. புகார் அளிக்கப்படாத வழக்குகளையும் சேர்த்தால், தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்தப் பணத்தில் பாதிக்கும் மேற்பட்டவை கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட மோசடி மூலம் பறிக்கப்பட்டுள்ளது.
சீன ஆபரேட்டர்களால் கட்டுப்படுத்தப்படும் மிகவும் பாதுகாப்பான மையங்களில் மோசடிக்காரர்களின் நடவடிக்கைகள் மேற்கொள்படுகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மோசடி செய்பவர்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.1,192 கோடியை இந்தியர்களிடம் மோசடி செய்து பறித்துள்ளனர். பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச்சில் ரூ.1,000 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடந்துள்ளது.
இது தொடர்பாக கம்போடியாவைச் சேர்ந்த அதிகாரிகள் சமீபத்தில் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். கம்போடியாவில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் 45 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. லாவோஸில் 5, மியான்மரில் 1 மையம் கண்டறியப்பட்டது . இந்த மோசடிகாரர்கள் முக்கியமாக பங்கு வர்த்தகம், முதலீட்டு மோசடி, டிஜிட்டல் கைதுகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியர்களை வைக்காதே இந்த மோசடிகளை அரங்கேற்றும் கும்பல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்னதாக, கம்போடியாவில் சுமார் 5,000 இந்தியர்கள் சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
- இந்திய பக்தத்ர்களிடம் ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 வசூலிக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோவிலை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் சைபர் மோசடி நடந்துள்ளது. ராமரின் பிரசாதம் என்று கூறி பக்தர்களிடம் இருந்து ரூ.3.85 கோடி மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனவரி 2024 இல் கருவறையில் ராமர் சிலை பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பதாக காட்டிக் கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இருந்து தெய்வீக பிரசாதத்தை அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதாக உறுதியளித்து ஒரு போலி வலைத்தளம் மூலம் லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றியுள்ளார். அந்த நபர் காஜியாபாத்தை சேர்ந்த ஆஷிஷ் சிங் என்று தெரியவந்தது.
ஆஷிஷ் சிங் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். பிராண பிரதிஷ்டை விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் 'khadiorganic.com' என்ற போலி போர்ட்டலைத் தொடங்கினார். அதில் ராமர் கோவில் பிரசாதம், கோயிலின் புகைப்படங்கள் மற்றும் நினைவு நாணயங்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்.
இருப்பினும், அவர் இந்திய பயனர்களிடமிருந்து ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 "வசதி கட்டணம்" வசூலித்தார்.
இதில் டிசம்பர் 19, 2023 முதல் ஜனவரி 12, 2024 வரை 6.3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களிடமிருந்து ஆர்டர்கள் பெறப்பட்டன.
வலைத்தளம் உள்ளே செல்ல, டிஜிட்டல் முறையில் பல நுழைவு கட்டணங்கள் மூலம் அவர் பணம் பெற்றார். இவ்வாறு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ரூ.10.49 கோடி, அதில் ரூ.3.85 கோடி பிரசாத விநியோகத்திற்காக மட்டும் வசூலிக்கப்பட்டது.
இந்த மோசடி வழக்கில், போலீசார் ஐபிசி பிரிவுகள் 420, ஐடி சட்டத்தின் பிரிவு 66D மற்றும் பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் பிரிவு 12(3) ஆகியவற்றின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் தொடங்கியது.
- விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியாக தைரியத்தை வரவழைத்து போலீசிடம் புகார் அளித்தார்.
மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவரிடம் நூதன முறையில் ஆன்லைனில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்திரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த அந்த முதியவர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி காலை குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் தொடங்கியது.
அப்போது அவரது மொபைலுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்தவுடன், ஒரு இளம் பெண் நிர்வாண நிலையில் அவர் முன் தோன்றினார். அந்த நேரத்தில் அந்த முதியவரும் அரை நிர்வாண நிலையில் இருந்தார். அந்தப் பெண் அந்த வீடியோ அழைப்பைப் பதிவு செய்தார்.
சிறிது நேரம் கழித்து அந்த முதியவருக்கு மற்றொரு அழைப்பு வந்தது, இந்த முறை அழைத்தவரின் பெயர் ஹேமந்த் மல்ஹோத்ரா.
அவர் அந்த முதியவரிடம் அவரது ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டதாகக் கூறினார். இதன் பிறகு அழைத்த பிரமோத் ரத்தோட் என்ற மற்றொரு நபர், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு, முதியவருக்கு அடிக்கடி போன் செய்து, சமரசத்திற்கு உடன்படவில்லை என்றால், சிறையில் அடைப்பேன் என்று மிரட்டினார்.
முதியவரை தொடர்ந்து மிரட்டி, கொஞ்சம் கொஞ்சமாக இந்த கும்பல் ரூ.14 லட்சத்து 66 ஆயிரம் பணம் கரைந்துள்ளது. இந்த முழு சம்பவமும் மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரை நடந்தது.
பணத்தை கொடுத்த பிறகும் மிரட்டல் நின்றபாடில்லை. அவர்கள் மேலும் பணம் கேட்கத் தொடங்கினர். இதனால் விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியாக தைரியத்தை வரவழைத்து போலீசிடம் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், மோனி பாட்டீல், ஹேமந்த் மல்ஹோத்ரா, பிரமோத் ரத்தோட், அரவிந்த் சிங் மற்றும் அடையாள தெரியாத 2 நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதுபோல பல பேரிடம் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.
- சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.50 கோடியை இழந்த வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் (82) மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா (79) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசாரை கண்டுபிடித்தனர்.
அக்கடிதத்தில் "இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள்ள யாரும் தேவையில்லை. யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை, அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய போலீசார், "சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் டியோக்ஜெரோனை தொடர்பு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவரது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். ஆனாலும் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார்.
- சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றார்.
தென் மேற்கு டெல்லியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் சவிதா சர்மா. இவர் வங்கியில் மூத்த நிர்வாகியா பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று சவிதா பேஸ்புக் பக்கம் மூலம் ஒரு தாலி (உணவுத் தட்டு) வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையால் ஈர்க்கப்பட்டார். இந்த சலுகை பற்றி அறிந்துக் கொள்வதற்காக அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்புக் கொண்டார்.
ஆனால் அவர்கள் போன் எடுக்கவில்லை. என்றாலும் சில மணி நேரத்திற்கு பிறகு சவிதாவிற்கு அழைப்பு வந்துள்ளது. சாகர் ரத்னா என்கிற பிரபல உணவகத்தில் இருந்து இலவச உணவுத் தட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த சலுகையை பெற லிங்க் உள்ளே நுழைந்து பதிவு செய்யவும் கூறியுள்ளனர்.

அதன்படி சவிதா கடவுச் சொல் பதிவிட்ட அடுத்த தருணத்தில் தொலைபேசியின் கட்டுப்பாட்டை அவர் இழந்தார். செல்போன் ஹேக் செய்யப்பட்டு அவரது கணக்கில் இருந்து முதலில் ரூ.40 ஆயிரமும், இன்னும் சில வினாடிகளில் மீண்டும் ரூ.50 ஆயிரம் எடுத்ததாக குறுச்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக தனது கிரெடிட் கார்டு பயன்பாட்டை புகார் மூலம் ரத்து செய்துள்ளார்.
இதையடுத்து மே 2ம் தேதி அன்று, சவிதா சர்மா இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற மோசடி சலுகைகளின் வலை இணைப்புகள் வாட்ஸ்அப் மூலம் இன்னும் மக்களிடையே பரவி வருவதாகவும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பலர் அதற்கு இரையாகக்கூடும் என்றும் சர்மா கூறியுள்ளார்.
- அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்.
- தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது.
புதுடெல்லி :
மத்திய தொலைதொடர்பு மந்திரி அஷ்விணி வைஷ்ணவ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் செல்போனுக்கு வருகிற 'ஸ்பாம்' அழைப்பு (திரளானோருக்கு வணிக நோக்கில் விடுக்கிற அழைப்பு) 'சைபர்' மோசடி (இணையதள குற்றம்) தொடர்பாக ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால் ஒருபோதும் அந்த அழைப்பை ஏற்றுப் பேசக்கூடாது. தங்களுக்கு தெரிந்த, அறிமுகம் ஆன எண்களில் இருந்து வருகிற அழைப்பை மட்டும்தான் ஏற்றுப் பேச வேண்டும்" என கூறினார்.
மேலும் அவர், 'ஸ்பாம்' அழைப்புகள், 'சைபர்' மோசடிகள் போன்றவற்றைத் தடுப்பதற்காக தனது அமைச்சகம் 'சஞ்சார் சாதி' என்ற தளத்தை தொடங்கி இருப்பதாகவும், 40 லட்சத்துக்கும் மேலான தவறான 'சிம்' கார்டுகளும், 41 ஆயிரம் தவறான விற்பனை மைய ஏஜெண்டுகளும் கருப்பு பட்டியலிட்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.






