என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyber Scam"

    • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
    • மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும்

    கடந்த ஒரு வருடத்தில் மோசடியில்(Spam) ஈடுபட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி செய்திகளை அனுப்பிய ஒரு லட்சம் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.

    குடிமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று TRAI வலியுறுத்தியுள்ளது. இந்தப் பயன்பாடு மூலம் புகார் அளிக்கப்படும்போது, TRAI மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த எண்ணைக் கண்டறிந்து, சரிபார்த்து, நிரந்தரமாகத் துண்டிக்க முடியும் என்று TRAI தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் தொலைத்தொடர்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் மக்களின் புகார்கள் மிகவும் முக்கியமானவை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது.
    • மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    கொழும்பு:

    இலங்கையில் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மூலமாக பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது. இதில் அந்த மோசடி கும்பல் 'வாட்ஸ்-அப்' குழுவில் ஆட்களை சேர்த்து அதிக லாபம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து முதலீடு செய்ய வைத்தும், சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தியும் பணம் சுருட்டி வந்தது தெரியவந்தது. மேலும் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான மடிவெலா, பத்தரமுல்லை மற்றும் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து மோசடி கும்பல் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் குற்றப் புலனாய்வு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மோசடி கும்பலை சேர்ந்த 156 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 137 பேர் இந்தியர்கள் ஆவர். மற்ற 19 பேரும் ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அந்த மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட நபர்களிடம் குற்றப் புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×