முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்வதாக ஏமாற்றி ரூ.23.5 லட்சம் பறித்த சைபர் குற்றவாளிகள்

அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி மிரட்டியுள்ளனர்.அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.
முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்வதாக ஏமாற்றி ரூ.23.5 லட்சம் பறித்த சைபர் குற்றவாளிகள்
Published on

மகாராஷ்டிராவின் தானேவை சேர்ந்த 68 வயது முதியவர் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ரூ.23.5 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் காவல் துறை அதிகாரிகள் என்றும், அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.

அவரை வீட்டிலேயே 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மிரட்டலால் அச்சமடைந்த முதியவர், அவர்கள் கேட்டபடி பல தவணைகளாக மொத்தம் 23.5 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், இது குறித்து தற்போது கல்யாண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

X

Maalai Malar
www.maalaimalar.com