என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாதம்"

    • 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    • 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    மதுரை:

    உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு, அதிரசம் ஆகியவற்றின் விலை கடந்த 2011-ம் வருடத்தில் இருந்து ரூ.10லிருந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்ட இந்த விலையேற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக 175 கிராம் சர்க்கரை பொங்கல், 150 கிராம் புளியோதரை, 140 கிராம் வடை, 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு இவை யாவும் தற்போது 15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2011 முதல் 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த பிரசாதங்கள் தற்போது 50 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலையேற்றம் உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 கிராம் குங்குமம் 3 ரூபாய்க்கும், 40 கிராம் குங்குமம் 15 ரூபாய்க்கும், 100 கிராம் குங்குமம் 35 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கோவில் வளாகத்திற்குள் பொற்றாமரை குளம் பகுதியில் 2 பிரசாத கடைகளும், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர் ஆலயம், கொடிமரம் அருகே என மொத்தம் 6 பிரசாத ஸ்டால்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே கிழக்கு கோபுரம் அருகில் ஒரு பிரசாத ஸ்டால் என 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    பக்தர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய இந்த பிரசாதங்களின் விலை ஏற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மஞ்சள் பை 21 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது மட்டும் ரூபாய் 15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 9-வது நாளான இன்று நிலக்கடலை சுண்டல், சாம்பார் சாதம், பால் கொழுக்கட்டை செய்து சித்திதாத்ரி தேவிக்கு படைக்கலாம்.

    முதலில், நிலக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    நிலக்கடலை சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    நிலக்கடலை - 1 கப்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிதளவு

    பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

    தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு 

    செய்முறை:

    நிலக்கடலையை 1 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை அல்லது மென்மையாகும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இப்போது வேகவைத்த நிலக்கடலை, உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

    சுவையான நிலக்கடலை சுண்டல் தயார்.

    இந்த சுண்டலை நவராத்திரி மட்டுமின்றி, எப்போது வேண்டுமானாலும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

    சாம்பார் சாதம்

    தேவையான பொருட்கள்

    துவரம்பருப்பு

    தேவையான காய்கறிகள் (உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை)

    மஞ்சள் தூள்

    மிளகாய் தூள்

    புளி

    உப்பு

    தாளிப்புக்கான பொருட்கள் (கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்) 

    செய்முறை

    முதலில் துவரம்பருப்பை தேவையான அளவு தண்ணீரில், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டு சேர்க்காமல், தேவையான காய்கறிகள் மற்றும் தக்காளி சேர்த்து வேகவைத்து, பிறகு புளி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறி, சாம்பார் கொதிக்கவும்.

    பின்னர் தாளிப்புக்கு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.

    இறுதியில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.

    பால் கொழுக்கட்டை

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 1 கப்

    தண்ணீர் - 1 கப்

    உப்பு - தேவையான அளவு

    பால் - 2 கப்

    சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு

    தேங்காய் பால் - ½ கப் (விரும்பினால்)

    ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி

    உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், திராட்சை) - அலங்கரிக்க 

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து மென்மையான மாவாக தயார் செய்து கொள்ளவும்.

    தயார் செய்த மாவிலிருந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பால் கொதித்ததும், அதில் சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கவும். இனிப்பு கலவை நன்கு கொதித்ததும், உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை மெதுவாக சேர்த்து நன்கு கிளறவும்.

    கொழுக்கட்டைகள் வெந்து, பால் சற்று கெட்டியானதும், உலர் பழங்களால் அலங்கரித்து பரிமாறலாம்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 8வது நாளான இன்று நவதானிய சுண்டல், மாங்காய் சாதம், அரிசி கீர் செய்து மகாகௌரி தேவிக்கு படைக்கலாம். முதலில், நவதானிய சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    நவதானிய சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    நவதானியங்கள் (கொண்டைக்கடலை, பாசிப்பயறு, துவரம்பருப்பு, எள்ளு, மொச்சை, தட்டைப்பயறு, உளுந்து, கடலைப்பருப்பு, காராமணி போன்ற ஒன்பது தானியங்கள்)

    தேங்காய் துருவல்

    கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை

    சமையல் எண்ணெய்

    பெருங்காயத்தூள்

    எலுமிச்சை சாறு

    உப்பு

     செய்முறை:

    * நவதானியங்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ, குறைந்தது 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * ஊறவைத்த தானியங்களை குக்கரில் உப்பு சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.

    * வெந்த தானியங்களை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    * பின்னர், வேகவைத்த தானியங்களை சேர்த்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

    * கடைசியாக, தேங்காய் துருவல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சத்தான நவதானிய சுண்டல் தயார்.

    மாங்காய் சாதம்

    தேவையான பொருட்கள்:

    வடித்த சாதம்

    பச்சை மாங்காய்

    எண்ணெய்

    கடுகு

    உளுத்தம்பருப்பு

    கடலைப்பருப்பு

    வேர்க்கடலை

    பச்சை மிளகாய்

    இஞ்சி

    பெருங்காயம்

    கறிவேப்பிலை

    மஞ்சள் தூள்

    உப்பு

    கொத்தமல்லி தழை.

     செய்முறை:

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    * அதனுடன் வேர்க்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * மாங்காயின் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்க்கவும்.

    * மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மாங்காய் மென்மையாகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

    * வடித்த சாதத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து, மாங்காய் கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

    * சாதம் கலவையை நன்றாக கலந்த பிறகு, கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

    அரிசி கீர்

    தேவையான பொருட்கள்

    சாமா அரிசி (பார்ன்யார்ட் மில்லெட்) - 1/4 கப்

    பால் - 2 1/2 கப்

    குங்குமப்பூ - சில இழைகள்

    சர்க்கரை - 1/4 முதல் 1/2 கப் (உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்ப)

    நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி - சிறிதளவு

    ஏலக்காய் தூள் - 1/4 முதல் 1/2 டீஸ்பூன்

     

    செய்முறை

    * சாமா அரிசியை நன்றாக கழுவி, போதுமான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * ஒரு கனமான பாத்திரத்தில் பாலை மிதமான சூட்டில் வைத்து சூடாக்கவும்.

    * பால் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * குங்குமப்பூ இழைகள், நறுக்கிய பாதாம், மற்றும் முந்திரி சேர்த்து கிளறவும்.

    * அரிசி நன்கு வெந்து, பால் கெட்டியாகும் வரை மிதமான தீயில் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * அரிசி வெந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.

    * கீர் சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும். 

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 7வது நாளான இன்று காராமணி சுண்டல், வெஜிடபிள் சாதம், இனிப்பு பொங்கல் செய்து காலராத்திரி தேவிக்கு படைக்கலாம்.

    முதலில், காராமணி சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    தேவையான பொருட்கள்:

    காராமணி (கறுப்பு கண் பட்டாணி) - 1 கப்

    எண்ணெய் - 1-2 தேக்கரண்டி

    கடுகு - 1/4 தேக்கரண்டி

    உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

    கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

    கறிவேப்பிலை - 1 கொத்து

    காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2 (காரத்திற்கு ஏற்ப)

    பெருங்காயம் - ஒரு சிட்டிகை

    பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)

    இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

    துருவிய தேங்காய் - 2-3 மேசைக்கரண்டி

    எலுமிச்சை சாறு - சிறிது (விருப்பப்பட்டால்)

    உப்பு - தேவையான அளவு 

    செய்முறை:

    * காராமணியை இரவில் அல்லது குறைந்தது 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    * பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, காராமணியுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 2-3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    * காராமணி குழையாமல், உதிரியாக இருப்பது முக்கியம். வெந்ததும் நீரை வடிக்கட்டி தனியே வைக்கவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

    * பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு (சேர்ப்பதாக இருந்தால்), காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும்.

    * விருப்பப்பட்டால், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கலாம்.

    * இப்போது வேகவைத்து வைத்துள்ள காராமணியை கடாயில் சேர்த்து, தாளிப்புடன் நன்கு கலக்கவும்.

    * காராமணியுடன் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 1-2 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறவும்.

    * கடைசியாக, சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து (விருப்பப்பட்டால்), நன்கு கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.

    * சுவையான காராமணி சுண்டலை சூடாக அல்லது வெதுவெதுப்பாக மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம்.

    இந்த சுண்டலை நவராத்திரி காலத்தில் நிவேதனமாகவும் படைக்கலாம்.

    வெஜிடபிள் சாதம்

    தேவையான பொருட்கள்:

    அரிசி - 1 கப்

    கலப்பு காய்கறிகள் (பீன்ஸ், கேரட், பட்டாணி, குடைமிளகாய்) - 1 கப்

    வெங்காயம் - 1 (நறுக்கியது)

    தக்காளி - 1 (நறுக்கியது)

    பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

    எண்ணெய் - 2-3 டீஸ்பூன்

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் (விரும்பினால்)

    பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 2 கப்

    கொத்தமல்லி தழை - சிறிது 

    செய்முறை:

    * முதலில், குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

    * பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * அதனுடன் பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்கவும்.

    * இப்போது நீங்கள் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    * ஊறவைத்து, கழுவிய அரிசியை சேர்த்து 2 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.

    * தேவையான அளவு உப்பு மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.

    * 2 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

    * குக்கரின் ஆவி அடங்கியதும், திறந்து சாதத்தை மெதுவாக கிளறவும்.

    * இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, ரய்தா அல்லது குழம்புடன் பரிமாறவும்.

    இனிப்பு பொங்கல்:

    நவராத்திரியின் போது பிரசாதமாக படைக்கப்படும் இனிப்பு பொங்கல் என்பது சர்க்கரைப் பொங்கல் ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 1 கப்

    பாசிப்பருப்பு - கால் கப் முதல் அரை கப் வரை

    வெல்லம் - 2 கப் அல்லது தேவைக்கேற்ப

    நெய் - கால் கப் முதல் 3 டேபிள் ஸ்பூன் வரை

    முந்திரி - ஒரு கைப்பிடி அளவு

    திராட்சை - ஒரு கைப்பிடி அளவு

    ஏலக்காய் - ஒரு ஸ்பூன் அல்லது தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    * ஒரு குக்கரில், லேசாக வறுக்கப்பட்ட பாசிப்பருப்பு, கழுவிய அரிசி, தேவையான அளவு தண்ணீர், மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவிடவும்.

    * ஒரு கடாயில் வெல்லத்தை எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.

    * வெல்லப் பாகை வடிகட்டி, குக்கரில் உள்ள அரிசி-பருப்பு கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

    * மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு, முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

    * வெந்த அரிசி-பருப்பு கலவையில் நெய், வறுத்த முந்திரி, திராட்சை, மற்றும் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து நன்கு கிளறி, 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    *நவராத்திரி ஸ்பெஷல் இனிப்புப் பொங்கல் தயார்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 6வது நாளான இன்று கடலை பருப்பு சுண்டல், வெண்பொங்கல் மற்றும் கோதுமை அல்வா செய்து காத்யாயனி தேவிக்கு படைக்கலாம்.

    முதலில், கடலை பருப்பு சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    தேவையான பொருட்கள்

    கடலைப்பருப்பு - 1 கப்

    தண்ணீர் - வேகவைக்க

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    கடுகு - ½ டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 1

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    துருவிய தேங்காய் - ¼ கப் 

    செய்முறை

    * 1 கப் கடலைப்பருப்பை எடுத்து நன்றாகக் கழுவி, 1 ½ கப் தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    * ஊறவைத்த பருப்புடன் போதுமான தண்ணீர் மற்றும் ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து, குக்கரில் 2-3 விசில் வரும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். பருப்பு குழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    * நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

    * வேகவைத்த கடலைப்பருப்பை கடாயில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    * கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் தயார்.

    வெண்பொங்கல்

    தேவையான பொருட்கள்

    அரிசி – 1/2 கப்

    பாசிப்பருப்பு – 1/2 கப்

    தண்ணீர் – 3 ¾ கப்

    உப்பு – தேவையான அளவு

    நெய் – 1/2 கப்

    சீரகம் – 1 டீஸ்பூன்

    மிளகு – 2 டீஸ்பூன்

    இஞ்சி – 1 அங்குலம் (நறுக்கியது)

    பச்சைமிளகாய் – 2 (நறுக்கியது)

    முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்

    பெருங்காயம் – ஒரு சிட்டிகை

    கறிவேப்பிலை – சிறிது 

    செய்முறை

    * ஒரு குக்கரில் 1/2 கப் பாசிப்பருப்பை எடுத்து, வாசனை வரும் வரை குறைந்த தீயில் நெய் சேர்த்து வறுக்கவும்.

    * அதனுடன் 1/2 கப் அரிசி, 3 ¾ கப் தண்ணீர், மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    * குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேகவிடவும்.

    * குக்கரின் அழுத்தம் குறைந்ததும், வெந்த அரிசி-பருப்பு கலவையை சரிபார்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கலவையை சரிசெய்யவும்.

    * ஒரு வாணலியில் 1/2 கப் நெய் விட்டு, சீரகம் மற்றும் மிளகை சேர்த்து பொரிய விடவும்.

    * பின்னர் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மற்றும் முந்திரியை சேர்த்து முந்திரி பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    * கடைசியாக பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து, இந்த தாளிப்பை வெந்த அரிசி-பருப்பு கலவையின் மீது ஊற்றவும். எல்லாவற்றையும் மெதுவாகக் கலந்து பரிமாறவும்.

    * வெண்பொங்கலை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.

    கோதுமை அல்வா

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்

    சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப் முதல் 1.5 கப் வரை

    நெய் - 1 கப்

    தண்ணீர் - 2 கப் (அல்லது சர்க்கரைக்கு ஏற்ப)

    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

    முந்திரி, பாதாம் - நறுக்கியது. 

    செய்முறை:

    * ஒரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கோதுமை மாவைச் சேர்த்து, குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும்.

    * மாவை வறுக்கும்போதே, மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து சர்க்கரை கரையும் வரை பாகு தயார் செய்யவும் (அடுப்பை அணைத்துவிடவும்).

    * வறுத்த கோதுமை மாவுடன் இந்த சர்க்கரை பாகை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

    * மாவில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நெய் பிரியும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * கோதுமை மாவு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி, இறக்கவும்.

    * இறுதியாக, நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து அலங்கரித்து, சூடாகப் பரிமாறலாம்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 4வது நாளான இன்று பாசிப்பயறு சுண்டல், குங்குமப்பூ சாதம் மற்றும் அன்னாசிப்பழ கேசரி செய்து கூஷ்மாண்டா தேவிக்கு படைக்கலாம்.

    முதலில், பாசிப்பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..

    பாசிப்பயறு சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பயறு - 1 கப்

    எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்

    கடுகு - ½ டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

    காய்ந்த மிளகாய் - 1-2 (கிள்ளியது)

    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

    இஞ்சி (துருவியது) - ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

    மஞ்சள் தூள் - ⅛ டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் துருவல் - 2-3 டேபிள்ஸ்பூன் 

    செய்முறை:

    பயறை ஊறவைத்து வேகவைத்தல்: பாசிப்பயறை நன்கு கழுவி, சுமார் 2-3 மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    பிறகு, அதை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, பிறகு வேகவைத்த பாசிப்பயறை கடாயில் சேர்த்து நன்கு கிளறவும்.

    இறுதியாக, தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கி, சுவையான பாசிப்பயறு சுண்டலை பரிமாறவும்.

    இந்த சத்து நிறைந்த பாசிப்பயறு சுண்டலை நவராத்திரி நாட்களில் பிரசாதமாக வழங்கலாம்.

    குங்குமப்பூ சாதம்

    நவராத்திரி குங்குமப்பூ சாதம் என்பது குங்குமப்பூவின் வாசனை மற்றும் நிறத்துடன் செய்யப்படும் இனிப்பு சாதம் ஆகும், இது நவராத்திரி பண்டிகையின் போது பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    பாஸ்மதி அரிசி: 3/4 முதல் 1 கப் வரை

    குங்குமப்பூ: ½ டீஸ்பூன்

    பால்: 1 கப் (குங்குமப்பூவை ஊற வைக்க)

    நெய்: 1 டேபிள்ஸ்பூன்

    சீரகம்: ½ டீஸ்பூன்

    ஏலக்காய்: 3

    முந்திரி: 10

    சாதம்: 1 கப் (சமைப்பதற்கு)

    உப்பு: தேவையான அளவு

    கொத்தமல்லி: அலங்கரிக்க (விருப்பப்பட்டால்) 

    செய்முறை

    பாஸ்மதி அரிசியைக் கழுவி, 10-15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் சூடான பால் சேர்த்து, அதில் குங்குமப்பூ இழைகளை ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் நெய் விட்டு, சீரகம் மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.

    முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.

    சாதம் தயாரானதும், குங்குமப்பூ பால், உப்பு சேர்த்து கலக்கவும்.

    அலங்கரிக்க கொத்தமல்லியை மேலே தூவவும்.

    நவராத்திரி குங்குமப்பூ சாதம் என்பது குங்குமப்பூவின் வாசனை மற்றும் நிறத்துடன் செய்யப்படும்சாதம் ஆகும், இது நவராத்திரி பண்டிகையின் போது பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

    அன்னாசிப்பழ கேசரி

    தேவையான பொருட்கள்:

    ரவை (சூஜி): 1 கப்

    நெய்: ¼ முதல் ⅓ கப்

    சர்க்கரை: ¾ முதல் 1 கப்

    அன்னாசிப்பழத் துண்டுகள்: 1 கப் (அல்லது அன்னாசிப்பழ கூழ்)

    தண்ணீர்: 2½ கப்

    முந்திரி, உலர் திராட்சை: தேவையான அளவு

    ஏலக்காய்த்தூள்: ¼ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

    குங்குமப்பூ (சற்று): விருப்பப்பட்டால் 

    செய்முறை

    ரவையை வறுத்தல்: ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அதே நெய்யில் ரவையை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அன்னாசிப்பழத்தை சேர்த்தல்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், அன்னாசிப்பழ துண்டுகள் அல்லது கூழைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    வறுத்த ரவையில் கொதிக்கும் அன்னாசிப்பழக் கலவையைச் சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.

    ரவை வெந்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரையைச் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.

    ஏலக்காய்த்தூள் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து, சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் இரண்டாவது நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவிக்கு படைக்க வேண்டிய சிவப்பு பட்டாணி சுண்டல், தக்காளி சாதம் மற்றும் கேரட் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    சிவப்பு பட்டாணி சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    * சிவப்பு பட்டாணி - 1 கப்

    * சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

    * கடுகு - 1/2 டீஸ்பூன்

    * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    * பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    * கறிவேப்பிலை - சிறிது

    * பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2

    * துருவிய தேங்காய் - 1/4 கப்

    * உப்பு - சுவைக்கு ஏற்ப.

    செய்முறை:

    சிவப்பு பட்டாணியை சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஊறவைத்த பட்டாணியை உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

    வேகவைத்த பட்டாணியை தாளித்ததில் சேர்த்து கிளறவும்.

    கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்த்து இறக்கவும்.

    தக்காளி சாதம்:

    நவராத்திரியின் போது படைப்பதற்கான தக்காளி சாதம் என்பது ஒரு சுலபமான கலப்பு சாதமாகும். தெய்வங்களுக்கு நைவேத்தியமாக வழங்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    *சமைத்த சாதம்

    *தக்காளி

    *நெய் அல்லது எண்ணெய்

    *கடுகு

    *உளுந்து

    *கடலைப்பருப்பு

    *சீரகம்

    *மிளகு

    *பச்சை மிளகாய்

    *இஞ்சி

    *பூண்டு

    *மஞ்சள் தூள்

    *மிளகாய் தூள்,

    *கொத்தமல்லி தூள்

    *கரம் மசாலா அல்லது சாம்பார் மசாலா

    *கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள்

    செய்முறை:

    ஒரு கடாயில் எண்ணெயில் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    நறுக்கிய அல்லது அரைத்த தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் மசாலாப் பொடிகளை சேர்க்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும். சமைத்த சாதத்தை சேர்த்து, நெய் ஊற்றி நன்றாக கலக்கவும்.

    தக்காளி சாதத்தை நன்றாக கிளறி, நவராத்திரி நிவேதனமாக படைக்கவும்.

    கேரட் அல்வா:

    தேவையான பொருட்கள்:

    காரட் – ½ கிலோ (துருவியது)

    பால் – ½ லிட்டர்

    சர்க்கரை – 1 கப் (தேவைக்கேற்ப)

    நெய் – 3 டேபிள்ஸ்பூன்

    முந்திரி – 8-10 (நறுக்கியது)

    ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

     செய்முறை:

    * காரட்டை நன்றாக கழுவி தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * ஒரு கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    * துருவிய காரட்டை பாலில் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

    * காரட் மெலிந்து பால் சுருங்கும் வரை நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

    * இப்போது சர்க்கரை சேர்த்து, கலந்து, கெட்டியான நிலைக்கு வரும் வரை சமைக்கவும்.

    * தனியே ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி வறுத்து சேர்க்கவும்.

    * ஏலக்காய் பொடி தூவி நன்றாகக் கலக்கவும். நெய் ஒட்டும் தன்மை வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    நவராத்திரி ஸ்பெஷல் கேரட் அல்வா தயார்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கும் அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது. 

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது. அதன்படி, நவராத்திரியின் முதல் நாளான இன்று பிரசாதமாக கொண்டைக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை அல்லது கருப்பு கொண்டைக்கடலை

    தேங்காய் துருவல்

    வெங்காயம் (விருப்பப்பட்டால்)

    மிளகாய் (விருப்பப்பட்டால்)

    கடுகு

    உளுத்தம் பருப்பு

    கறிவேப்பிலை

    எண்ணெய்

    உப்பு.

     

    செய்முறை:

    கொண்டைக்கடலை சுண்டல் செய்ய, முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    பின்னர், ஊறவைத்த கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

    வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து, கலவையை நன்கு கிளறி, உப்பு சரிபார்த்து இறக்கவும். கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

    வெண்ணெய் தயிர் சாதம்

    தேவையான பொருட்கள்:

    அரிசி

    தயிர்

    பால்

    வெண்ணெய்

    தாளிக்க :

    கடுகு

    உளுத்தம் பருப்பு

    கறிவேப்பிலை

    பெருங்காயம்

    பச்சை மிளகாய்

    இஞ்சி

    கேரட் (துருவியது)

    கொத்தமல்லி தழை

    எண்ணெய் அல்லது நெய்

     

    செய்முறை

    அரிசியை நன்கு கழுவி, போதுமான தண்ணீருடன் குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    பின்னர், வேகவைத்த சாதத்தை சற்று ஆறவிட்டு, வெண்ணெய் சேர்த்து நன்கு மசிக்கவும்.

    மசித்த சாதத்துடன் பால் சேர்த்து கிளறி, சற்று க்ரீமியாகவும், மிருதுவாகவும் ஆக்கவும். பின், தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின் பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த தாளிப்பை தயிர் சாத கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும்.

    இனிப்பு: தேங்காய் பர்பி

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 2 கப்

    சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

    தண்ணீர் - தேவைப்பட்டால்.

     

    செய்முறை:

    ஒரு தட்டில் நெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை காத்திருக்கவும்.

    சர்க்கரைப் பாகுடன் துருவிய தேங்காயை சேர்த்து, நீர் வற்றி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும்.

    கலவை கெட்டியானதும், ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி சமன் செய்யவும். கலவை சற்று ஆறியதும், உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகளாக வெட்டவும்.

    முழுமையாக ஆறியதும், பர்பியை தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும். முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்து, மேலும் சுவையான பர்பி செய்யலாம்.

    • விரத நாட்களில் கோவில் பிரசாதம் சாப்பிடும் நோக்கத்திற்காகவே சிலர் கோவிலுக்கு செல்வதுண்டு.
    • சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவக்கிரக வழிபாடு செய்யலாம்.

    விரதம் இருக்கும் போது கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிடலாமா என்பது அனேக பக்தர்களின் சந்தேகமாக உள்ளது. சிலர், கடவுளுக்கு தானே விரதம் இருக்கிறோம் அதனால் பிரசாதத்தை சாப்பிடலாம் என்பார்கள். பசியைக் கட்டுப்படுத்தி இறை சிந்தனையோடு விரதம் இருக்க வேண்டும். எனவே , தாங்கள் கடுமையான விரதம் இருப்பதாகவும் அதனால் இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது என்றும் சிலர் சொல்வார்கள். இதில் எது சரி என்று பார்க்கலாம்.

    விரதம் இருக்கும் போது எந்த தெய்வத்தை நினைத்து விரதம் இருக்கிறோமோ, அன்றைய நாள் அந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். அப்படி கோவிலுக்கு செல்லும் போது அந்த கோவிலில் பிரசாதம் கொடுத்தால் தாராளமாக வாங்கி கடவுளின் பெயரைச்சொல்லி சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை.

    எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பிரசாதம் கிடைத்துவிடாது. கோவில் பிரசாதம் கிடைப்பது கடவுளின் அருள் கிடைப்பது போன்றதுதான். அதுமட்டுமில்லாமல் பிரசாதம் சிறிய அளவில் தான் வழங்கப்படும். அதனால் உங்கள் விரதம் ஒருபோதும் தடைபடாது.

    விரதம் இருக்கும் போது நீங்கள் கோவிலுக்கே செல்லவில்லை. ஆனாலும் அக்கம் பக்கத்தினர் கோவில் பிரசாதம் என்று உங்களுக்கு கொடுக்கும் போது சற்றும் தயங்காமல் அந்த பிரசாதத்தை சாப்பிடலாம். எந்த வித தயக்கமும் தேவை இல்லை.

    விரத நாட்களில் கோவில் பிரசாதம் சாப்பிடும் நோக்கத்திற்காகவே சிலர் கோவிலுக்கு செல்வதுண்டு. அப்படிதான் செல்லக் கூடாது. ஏனென்றால் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை இரண்டு மூன்றுமுறை வாங்கி சாப்பிட்டு விட்டு நானும் விரதம் இருக்கிறேன் என்று சொல்வதில் எந்தவித பலனும் இல்லை.

    சிலர் ஒரு பொழுது விரதம் இருப்பார்கள். சிலர் நீராகாரம் மட்டும் அருந்துவார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் முழுவதும் உண்ணா நோன்பிருப்பார்கள். அதிலும் சிலர் விரதம் இருக்கிறேன் என்று நீர் கூட அருந்தாமல் இருப்பார்கள். அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலை பொருத்து தான் விரதம் இருக்க வேண்டும்.

    எந்தெந்த கடவுளுக்கு எந்தெந்த நாட்களில் விரதம் இருக்கலாம் என்று பார்க்கலாம்...

    ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும், திங்கட்கிழமை சிவனையும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானையும் வணங்கி விரதமிருந்து வழிபடலாம். புதன்கிழமை பெருமாள், வியாழன்கிழமை நவக்கிரக வழிபாடு, வெள்ளிக்கிழமை அம்மனை விரதமிருந்து வணங்கலாம். சனிக்கிழமை சனி பகவான், பெருமாள் மற்றும் நவக்கிரக வழிபாடு செய்யலாம்.

    • பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
    • இந்திய பக்தத்ர்களிடம் ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 வசூலிக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவிலை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் சைபர் மோசடி நடந்துள்ளது. ராமரின் பிரசாதம் என்று கூறி பக்தர்களிடம் இருந்து ரூ.3.85 கோடி மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஜனவரி 2024 இல் கருவறையில் ராமர் சிலை பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.

    அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பதாக காட்டிக் கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இருந்து தெய்வீக பிரசாதத்தை அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதாக உறுதியளித்து ஒரு போலி வலைத்தளம் மூலம் லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றியுள்ளார். அந்த நபர் காஜியாபாத்தை சேர்ந்த ஆஷிஷ் சிங் என்று தெரியவந்தது.

    ஆஷிஷ் சிங் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். பிராண பிரதிஷ்டை விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் 'khadiorganic.com' என்ற போலி போர்ட்டலைத் தொடங்கினார். அதில் ராமர் கோவில் பிரசாதம், கோயிலின் புகைப்படங்கள் மற்றும் நினைவு நாணயங்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்.

    இருப்பினும், அவர் இந்திய பயனர்களிடமிருந்து ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 "வசதி கட்டணம்" வசூலித்தார்.

    இதில் டிசம்பர் 19, 2023 முதல் ஜனவரி 12, 2024 வரை 6.3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களிடமிருந்து ஆர்டர்கள் பெறப்பட்டன.

    வலைத்தளம் உள்ளே செல்ல, டிஜிட்டல் முறையில் பல நுழைவு கட்டணங்கள் மூலம் அவர் பணம் பெற்றார். இவ்வாறு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ரூ.10.49 கோடி, அதில் ரூ.3.85 கோடி பிரசாத விநியோகத்திற்காக மட்டும் வசூலிக்கப்பட்டது.

    இந்த மோசடி வழக்கில், போலீசார் ஐபிசி பிரிவுகள் 420, ஐடி சட்டத்தின் பிரிவு 66D மற்றும் பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் பிரிவு 12(3) ஆகியவற்றின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • காலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி 6 மணியளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.
    • 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சுந்தர வளநாடு வாளமர் கோட்டை மாதவமணி தவத்திரு காத்தையா சுவாமிகளின் 26 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் வாண்டையார் இருப்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜன் வரவேற்புரை ஆற்றினர்.

    மேலும் வாளமர் கோட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் மேடை மட்டும் பந்தல் அலங்காரம் செய்து கொடுத்தார்.

    ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் தவமணி அன்னதானம் வழங்கினார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பிஜேபி மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் கலந்து கொண்டனர்.

    சித்தர் வழி தோன்றல் மாதவமணி தவத்தில் காத்யதையா சுவாமிகள் என்ற தலைப்பில் கரந்தை தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் குருநாதன் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

    முன்னாள் அரசு வழக்கறிஞர் நமச்சிவாயம் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

    இந்த விழா காலை 5 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கி 6 மணி அளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.

    மேலும் 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    மேலும் இந்த விழாவில் பக்தர்கள் திரளானோர் பங்கு பெற்று தரிசனம் செய்தனர்.

    இறுதியில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது.
    • சங்காபிஷேகம் செய்த புனிதநீர் பிரசாதம் அருந்தியும் சாமி அருள் பெற்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கோவில் பிரசங்க மண்டபத்தில் புனித நீர் மகா கலசம் மற்றும் புனித நீர் நிறைந்த சங்குகளை நான்கு மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டு யாக வேள்வியும் வேதபாராயணமும் ஆராதனையும் நடந்தது.

    நேற்று பிரதோஷமும் சோம வாரமும் இணைந்த நாளில் நந்தியெம்பெருமானுக்கும் ஐயாறப்பருக்கும் பிரதோஷம் மற்றும் சோமவார அபிஷேக ஆராதனை ஒரே நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தும், சங்காபிஷேகம் செய்த புனித நீர் பிரசாதம் அருந்தியும் சுவாமி அருள் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×