என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navarathri Festival"

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 4வது நாளான இன்று பாசிப்பயறு சுண்டல், குங்குமப்பூ சாதம் மற்றும் அன்னாசிப்பழ கேசரி செய்து கூஷ்மாண்டா தேவிக்கு படைக்கலாம்.

    முதலில், பாசிப்பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..

    பாசிப்பயறு சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பயறு - 1 கப்

    எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்

    கடுகு - ½ டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

    காய்ந்த மிளகாய் - 1-2 (கிள்ளியது)

    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

    இஞ்சி (துருவியது) - ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

    மஞ்சள் தூள் - ⅛ டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் துருவல் - 2-3 டேபிள்ஸ்பூன் 

    செய்முறை:

    பயறை ஊறவைத்து வேகவைத்தல்: பாசிப்பயறை நன்கு கழுவி, சுமார் 2-3 மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    பிறகு, அதை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, பிறகு வேகவைத்த பாசிப்பயறை கடாயில் சேர்த்து நன்கு கிளறவும்.

    இறுதியாக, தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கி, சுவையான பாசிப்பயறு சுண்டலை பரிமாறவும்.

    இந்த சத்து நிறைந்த பாசிப்பயறு சுண்டலை நவராத்திரி நாட்களில் பிரசாதமாக வழங்கலாம்.

    குங்குமப்பூ சாதம்

    நவராத்திரி குங்குமப்பூ சாதம் என்பது குங்குமப்பூவின் வாசனை மற்றும் நிறத்துடன் செய்யப்படும் இனிப்பு சாதம் ஆகும், இது நவராத்திரி பண்டிகையின் போது பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    பாஸ்மதி அரிசி: 3/4 முதல் 1 கப் வரை

    குங்குமப்பூ: ½ டீஸ்பூன்

    பால்: 1 கப் (குங்குமப்பூவை ஊற வைக்க)

    நெய்: 1 டேபிள்ஸ்பூன்

    சீரகம்: ½ டீஸ்பூன்

    ஏலக்காய்: 3

    முந்திரி: 10

    சாதம்: 1 கப் (சமைப்பதற்கு)

    உப்பு: தேவையான அளவு

    கொத்தமல்லி: அலங்கரிக்க (விருப்பப்பட்டால்) 

    செய்முறை

    பாஸ்மதி அரிசியைக் கழுவி, 10-15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் சூடான பால் சேர்த்து, அதில் குங்குமப்பூ இழைகளை ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் நெய் விட்டு, சீரகம் மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.

    முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.

    சாதம் தயாரானதும், குங்குமப்பூ பால், உப்பு சேர்த்து கலக்கவும்.

    அலங்கரிக்க கொத்தமல்லியை மேலே தூவவும்.

    நவராத்திரி குங்குமப்பூ சாதம் என்பது குங்குமப்பூவின் வாசனை மற்றும் நிறத்துடன் செய்யப்படும்சாதம் ஆகும், இது நவராத்திரி பண்டிகையின் போது பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

    அன்னாசிப்பழ கேசரி

    தேவையான பொருட்கள்:

    ரவை (சூஜி): 1 கப்

    நெய்: ¼ முதல் ⅓ கப்

    சர்க்கரை: ¾ முதல் 1 கப்

    அன்னாசிப்பழத் துண்டுகள்: 1 கப் (அல்லது அன்னாசிப்பழ கூழ்)

    தண்ணீர்: 2½ கப்

    முந்திரி, உலர் திராட்சை: தேவையான அளவு

    ஏலக்காய்த்தூள்: ¼ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

    குங்குமப்பூ (சற்று): விருப்பப்பட்டால் 

    செய்முறை

    ரவையை வறுத்தல்: ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அதே நெய்யில் ரவையை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அன்னாசிப்பழத்தை சேர்த்தல்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், அன்னாசிப்பழ துண்டுகள் அல்லது கூழைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    வறுத்த ரவையில் கொதிக்கும் அன்னாசிப்பழக் கலவையைச் சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.

    ரவை வெந்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரையைச் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.

    ஏலக்காய்த்தூள் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து, சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் நான்காவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    நான்காவது நாள் போற்றி

    ஓம் கருணை வடிவேபோற்றி

    ஓம் கற்பகத் தருவேபோற்றி

    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி

    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி

    ஓம் கரும்பின் சுவையேபோற்றி

    ஓம் கார்முகில் மழையேபோற்றி

    ஓம் வீரத்திருமகளே போற்றி

    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி

    ஓம் பகைக்குப் பகையேபோற்றி

    ஓம் ஆவேசத் திருவேபோற்றி

    ஓம் தீமைக்குத் தீயேபோற்றி

    ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி

    ஓம் நாரணன் தங்கையேபோற்றி

    ஓம் அற்புதக் கோலமேபோற்றி

    ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி

    ஓம் புகழின் காரணியேபோற்றி

    ஓம் காக்கும் கவசமேபோற்றி

    ஓம் ரோகிணி தேவியேபோற்றி

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் நான்காம் நாள், துர்கா தேவியின் கூஷ்மாண்டா வடிவத்தை வழிபடும் நாளாகும்.

    கூஷ்மாண்டா தேவிக்கான முக்கிய மந்திரம்:

    ஸ்ரீ தேவி கூஷ்மாண்டாயை நமஹ.

    இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்தால் சக்தி, படைப்பாற்றல் மற்றும் நிறைவான வாழ்வு கிட்டும் என்று நம்பப்படுகிறது.

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    அதன்படி, நவராத்திரியின் 3ம் நாளான இன்று சந்திரகாந்தா தேவியை வழிப்படுகிறது.

    சந்திரகாந்தா மந்திரம் என்பது நவதுர்கைகளில் மூன்றாவதான சந்திரகாந்தா தேவியை துதிக்கும் சக்திவாய்ந்த மந்திரங்களாகும்.

    சந்திரகாந்தா தேவிக்கு உகந்த மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்..

    மந்திரங்கள்:

    *ஓம் தேவி சந்திரகாந்தாயை நமஹ.

    * பிண்டஜ ப்ரவராரூடா சண்டகோபாஸ்த்ரகைர்யுதா பிரசாதம் தனுதே மஹ்யம் சந்திரகந்தேதி விஸ்ருதா

    * யா தேவி சர்வபூதேஷு மாம் சந்திரகண்ட ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

    விளக்கம்:

    இந்த மந்திரம், துர்காதேவியின் ஒரு வடிவமான சந்திரகாந்தா தேவியை சரணடைவதாகவும், அவளுடைய அருள், தைரியம், பாதுகாப்பு, மற்றும் தடைகளை நீக்கும் வலிமையைக் கோருவதாகவும் பொருள்படும்.

    இந்த மந்திரங்கள் தேவியின் அருளைப் பெறவும், தடைகளை நீக்கவும், ஞானம் மற்றும் பலத்தை பெறவும் உச்சரிக்கப்படுகின்றன.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் இரண்டாவது நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவிக்கு படைக்க வேண்டிய சிவப்பு பட்டாணி சுண்டல், தக்காளி சாதம் மற்றும் கேரட் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    சிவப்பு பட்டாணி சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    * சிவப்பு பட்டாணி - 1 கப்

    * சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

    * கடுகு - 1/2 டீஸ்பூன்

    * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    * பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    * கறிவேப்பிலை - சிறிது

    * பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2

    * துருவிய தேங்காய் - 1/4 கப்

    * உப்பு - சுவைக்கு ஏற்ப.

    செய்முறை:

    சிவப்பு பட்டாணியை சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஊறவைத்த பட்டாணியை உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

    வேகவைத்த பட்டாணியை தாளித்ததில் சேர்த்து கிளறவும்.

    கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்த்து இறக்கவும்.

    தக்காளி சாதம்:

    நவராத்திரியின் போது படைப்பதற்கான தக்காளி சாதம் என்பது ஒரு சுலபமான கலப்பு சாதமாகும். தெய்வங்களுக்கு நைவேத்தியமாக வழங்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    *சமைத்த சாதம்

    *தக்காளி

    *நெய் அல்லது எண்ணெய்

    *கடுகு

    *உளுந்து

    *கடலைப்பருப்பு

    *சீரகம்

    *மிளகு

    *பச்சை மிளகாய்

    *இஞ்சி

    *பூண்டு

    *மஞ்சள் தூள்

    *மிளகாய் தூள்,

    *கொத்தமல்லி தூள்

    *கரம் மசாலா அல்லது சாம்பார் மசாலா

    *கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள்

    செய்முறை:

    ஒரு கடாயில் எண்ணெயில் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    நறுக்கிய அல்லது அரைத்த தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் மசாலாப் பொடிகளை சேர்க்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும். சமைத்த சாதத்தை சேர்த்து, நெய் ஊற்றி நன்றாக கலக்கவும்.

    தக்காளி சாதத்தை நன்றாக கிளறி, நவராத்திரி நிவேதனமாக படைக்கவும்.

    கேரட் அல்வா:

    தேவையான பொருட்கள்:

    காரட் – ½ கிலோ (துருவியது)

    பால் – ½ லிட்டர்

    சர்க்கரை – 1 கப் (தேவைக்கேற்ப)

    நெய் – 3 டேபிள்ஸ்பூன்

    முந்திரி – 8-10 (நறுக்கியது)

    ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

     செய்முறை:

    * காரட்டை நன்றாக கழுவி தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * ஒரு கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    * துருவிய காரட்டை பாலில் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

    * காரட் மெலிந்து பால் சுருங்கும் வரை நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

    * இப்போது சர்க்கரை சேர்த்து, கலந்து, கெட்டியான நிலைக்கு வரும் வரை சமைக்கவும்.

    * தனியே ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி வறுத்து சேர்க்கவும்.

    * ஏலக்காய் பொடி தூவி நன்றாகக் கலக்கவும். நெய் ஒட்டும் தன்மை வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    நவராத்திரி ஸ்பெஷல் கேரட் அல்வா தயார்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கும் அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது. 

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது. அதன்படி, நவராத்திரியின் முதல் நாளான இன்று பிரசாதமாக கொண்டைக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை அல்லது கருப்பு கொண்டைக்கடலை

    தேங்காய் துருவல்

    வெங்காயம் (விருப்பப்பட்டால்)

    மிளகாய் (விருப்பப்பட்டால்)

    கடுகு

    உளுத்தம் பருப்பு

    கறிவேப்பிலை

    எண்ணெய்

    உப்பு.

     

    செய்முறை:

    கொண்டைக்கடலை சுண்டல் செய்ய, முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    பின்னர், ஊறவைத்த கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

    வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து, கலவையை நன்கு கிளறி, உப்பு சரிபார்த்து இறக்கவும். கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

    வெண்ணெய் தயிர் சாதம்

    தேவையான பொருட்கள்:

    அரிசி

    தயிர்

    பால்

    வெண்ணெய்

    தாளிக்க :

    கடுகு

    உளுத்தம் பருப்பு

    கறிவேப்பிலை

    பெருங்காயம்

    பச்சை மிளகாய்

    இஞ்சி

    கேரட் (துருவியது)

    கொத்தமல்லி தழை

    எண்ணெய் அல்லது நெய்

     

    செய்முறை

    அரிசியை நன்கு கழுவி, போதுமான தண்ணீருடன் குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    பின்னர், வேகவைத்த சாதத்தை சற்று ஆறவிட்டு, வெண்ணெய் சேர்த்து நன்கு மசிக்கவும்.

    மசித்த சாதத்துடன் பால் சேர்த்து கிளறி, சற்று க்ரீமியாகவும், மிருதுவாகவும் ஆக்கவும். பின், தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின் பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த தாளிப்பை தயிர் சாத கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும்.

    இனிப்பு: தேங்காய் பர்பி

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 2 கப்

    சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

    தண்ணீர் - தேவைப்பட்டால்.

     

    செய்முறை:

    ஒரு தட்டில் நெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை காத்திருக்கவும்.

    சர்க்கரைப் பாகுடன் துருவிய தேங்காயை சேர்த்து, நீர் வற்றி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும்.

    கலவை கெட்டியானதும், ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி சமன் செய்யவும். கலவை சற்று ஆறியதும், உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகளாக வெட்டவும்.

    முழுமையாக ஆறியதும், பர்பியை தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும். முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்து, மேலும் சுவையான பர்பி செய்யலாம்.

    • எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
    • ஒவ்வொரு நாளும் தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும். 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    அதன்படி, 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் முதல் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    -இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    • உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
    • பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான்.

    மகிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.

    தேவர்களும் & முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.

    பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள்.

    அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள்.

    தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.

    ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று.

    இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தாள்.

    உடனே பார்வதிதேவி, லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள்.

    ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.

    மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான்.

    உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.

    அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள்.

    பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்தான்.

    ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள்.

    இதனைக் கண்ட தேவர்களும் & முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றி துதித்தனர்.

    இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.

    • பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்துள்ளாள்.
    • எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, முதன்மை வழிபாடாக பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    பராசக்தியை வழிபட்டால் எல்லா கடவுள் அவதாரங்களையும் வழிபடும்போது என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அத்தனை பலன்களும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பராசக்தியான அம்பிகை ஒருத்திதான்.

    ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள்.

    அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு.

    ஒன்பது நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.

    • முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.
    • இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.

    முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.

    அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும்.

    பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    இனி வரும் பதிவுகளில் இந்த 9 நாட்களும் அன்னையை எப்படி வழிபட வேண்டும் என்பதை காணலாம்....

    • மகேஸ்வரியை “குமாரி” வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
    • குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.


    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    மகேஸ்வரி அலங்காரம்

    நவராத்திரி முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும்.

    மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் "குமாரி" வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.

    இந்த "குமாரி" தேவிக்கு, மல்லிகை விசேஷம்.

    எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது.

    அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.

    முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம்.

    குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.

    பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது.

    தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

    பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள்.

    குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால் தான் இறைவனை நாம் அடைய முடியும்.

    மகேஸ்வரி சிவனின் சக்தி. வெள்ளை நிறம் கொண்டவள்.

    இவளுக்கு ஐந்து முகம் உண்டு.

    • நவராத்திரி அன்று அர்ச்சனை செய்ய வேண்டிய மந்திரம்
    • ஓம் மங்கள நாயகியே போற்றி!

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    ×