search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prasadam"

    • சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு திருமண விருந்து.
    • கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதி விட்டு சென்றனர்.

    சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வழங்குவதற்காக சேதுபதி பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.நேற்று இரவு மாப்பிள்ளை விருந்து நடந்தது.

    திருக்கல்யாணம் முடிந்ததும் இன்று காலை மற்றும் மதியம் கல்யாண விருந்து நடந்தது. இந்த விருந்தில் கல்கண்டு சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெண்பொங்கல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், பச்சடி, வடை ஆகியவை இடம் பெற்றிருந்தன.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர். திருக்கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் திருமண மொய் எழுதி விட்டு சென்றனர்.

    10 டன் எடையில் வண்ண மலர்கள்

    மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக திருமணம் நடைபெற்ற திருக்கல்யாண மண்டபம் மற்றும் சுவாமிகள் எழுந்தருளும் பழைய திருமண மண்டபம் நறுமண மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரூ.30 லட்சம் செலவில் மொத்தம் 10 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊட்டி மற்றும் பெங்களூருரில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருக்கல்யாணத்திற்காக பிரத்யேகமாக வரழைக்கப்பட்டிருந்த அரியவகை மலர்களும் இடம் பெற்றிருந்தன.

    ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம்

    சுவாமி திருக்கல்யாணத்தை காண சித்திரை வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அங்கேயே அமர்ந்து எல்.இ.டி. திரையில் ஒளி பரபரப்பப்பட்ட திருக்கல்யாணத்தை பார்த்தனர். திருக்கல்யா ணத்தை காண வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.

    5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. 11 சூப்பிரண்டுகள், 17 கூடுதல் சூப்பிரண்டுகள், 35 டி.எஸ்.பி.க்கள், 96 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுரை மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்த சித்திரை வீதிகளில் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் அசம்பாவி தங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

    மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் தயார் நிலையில் ஆம்புலன்சு வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இவை தவிர சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. அதற்காக ஏராளமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருக்கல் யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு வசதியாக 70 குடி நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    சுகாதாரத்துறை சார்பில் 22 துப்புரவு மேற்பார்வையாளர்கள் தலைமையில் 2 ஆயிரம் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

    • சர்க்கரை பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
    • பெருமாளுக்கு அக்கார அடிசல் செய்து வணங்கினால் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    ''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரசஅடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...'' திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள். அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.

    ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரஅடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?

    நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்கார அடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.

    இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.

    அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரை பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

    புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார அடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    • நாச்சியம்மன்-விநாயகர்-காமாட்சி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அரிபுரம் கிராமத்தில் நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அரிபுரம், காலாங்கரைப்பட்டி, வைரவபுரம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் காரையூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரி சையாக நடந்தது. குன்றக் குடி பொன்னம்பல அடி களார் தலைமையில் உமாபதி சிவாச்சாரியார்கள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி னர்.

    விழா குழு பணிகளில் குமாரசாமி, தர்மசீலன், கண்ணன், துர்வாசன், கனகரத்தினம், சண்முகம், உமாபாலன், சடையாண்டி, சாந்ததேவன், செல்வ ராஜ்,யசோதரன், ஜெக நாதன், சிவபெருமாள் மாரி யம்மாள் மற்றும் வளர்பிறை விளையாட்டு குழுவினர் ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் கண்டவராயன் பட்டி காவல் ஆய்வாளர் அய்ய னார் தலைமையில் காவ லர்கள் ஈடுபட்டனர்.

    வேலங்குடியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகள், லட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டது. நேற்று கணேஷ், குருசாமி குருக்கள் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பா பிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வீரணமு டையார் மகரிஷி கோத்திர பங்காளி வகையறாக்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.
    • கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலி க்கிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ப. சிதம்பரம் வருகை புரிந்தார்.

    தொடர்ந்து அவர் தையல்நாயகி அம்மன், வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமா ரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமி சன்னதிகள் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமி பிரசாதங்களை வழங்கினார்.

    அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர் சரச்சந்திரன் உடன் இருந்தனர். 

    • மதுரை வாடிப்பட்டி அருகே துர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • 2-ம் நாள் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 7 மணிக்கு பெண்கள்முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் ஆற்றங்கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் 23-ந் ஆண்டு உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது. இந்த விழாவிற்கு முதல் நாள் பாலன் நகர் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து துர்க்கை அம்மன் சிவப்பு பச்சை பட்டு உடுத்தி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். 2-ம் நாள் மாலை 4 மணிக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், 7 மணிக்கு பெண்கள்முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பூஞ்சோலையை அடைந்தது. மூன்றாம் நாள் பல்லையம் பிறித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி நிர்வாக்குழு நிர்வாகிகள் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.

    • குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
    • தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருக்கானூர் ஸ்ரீ கரும்பீஸ்வர சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதன் பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திராளாக பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ வெற்றிவேல் முருகன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    ஸ்ரீ சொர்ண பைரவர் சன்னதியின் முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

    அதன் பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மனோன்மணி சமேத சந்திரசேகர் வண்ண மலர்களாலும், மின் விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது தேவார பாடலி லும், நாதஸ்வரத்திலும் நலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்டது.

    பின்னர், சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் இளையவர் சபேசன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், தேவார வார வழிபாட்டு மன்றத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காமன் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் 160 ஆண்டுகளுக்கு மேலாக காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவ பெருமான் தவத்தில் இருந்தார். தேவ லோகத்தில் தலைவனானவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் பலரை நாடினர். சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    அப்போது மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்துவிடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான்.

    தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார். இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதிதேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுத லாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர்மீது எந்த தவறுமில்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று முறையிட்டாள்.

    ரதிதேவியின் வேண்டு தலை ஏற்ற சிவபெருமான், ரதிதேவியிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார். இந்த புராண சம்பவத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி மாதத்தில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டும் காமன் பண்டிகையையொட்டி காமன் மேடையில் காப்பு கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படிதாரர்களால் பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காம தகனம் நடந்தது. அப்போது பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.

    குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தர மூர்த்தி, உறுப்பி னர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராமமூர்த்தி, நாகராஜ், ராஜராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருவாசக பதிகங்களுடனும் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்பிகை சமேத திருக்கோட்டீஸ்வரர் கோயிலில் ஆழ்வார்களுக்கு திருப்பதி பெருமாளாக அம்பாள் காட்சி தரும் சிறப்பு நிகழ்வு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் .

    அதன்படி நேற்று கோயிலின் மூலவர் அம்பா ளான திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து திருப்பதி வெங்கடாஜலபதி பெருமா ளாக சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு சிவா ச்சாரியா பெருமக்களின் வேத மந்திரங்களுடன் ஓதுவா மூர்த்திகளின் தேவார திருவாசக பதிகங்களுடனும் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    திருப்பதி வெங்கடா ஜலபதியை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இக்கோயிலில் வந்து ஆழ்வார்களுக்கு பெருமாளாக காட்சி தந்த அம்மனை மனம் உருகி வேண்டினர்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்ப ட்டது.

    • விநாயகரை நன்றியுடன் போற்றும் விதமாக வீடுகள்தோறும் களிமண் விநாயகரை பூஜையறையில் வைத்து வழிபடுவது.
    • நீர் கொழுக்கட்டை, இனிப்பு வகை கொழுக்கட்டை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    திருவையாறு:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31 ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு திருவையாறு மற்றும் சுற்று வட்டாரங்களிலுள்ள விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது. கிராமங்களில் பொது இடங்களில் களிமண் முதலிய எளிதில் கரையும் பொருள்களால் தயாரிக்கப்பட்டபல்வேறு வடிவங்களில் பிரம்மா ண்டமான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

    பின்னர் அச்சிலைகள் ஆறுகளில் கரைக்கப்பட உள்ளது.

    அகத்திய முனிவர் சினம் கொண்டு கமண்டலத்தில் அடைத்து வைத்த காவிரியை, இரக்க மனம் கொண்டு காக்கை உருவெடுத்து வந்து விடுவித்து, விவசாயம் செழிக்கச் செய்து,குடிநீர் மற்றும் உணவுப்பொருள் விளைச்சலுக்கு வகை செய்த விநாயகரை நன்றியுடன் போற்றும் விதமாக, வீடுகள்தோறும் களிமண் பிள்ளையாரை பூஜையறையில் வைத் வழிபாடு செய்வது வழங்கம்..

    மேலும், விநாயகருக்கு பிடித்தமான வாழைப்பழம், சுண்டல், மோதகம் எனும் பிடி கொலுக்கட்டை, பூர்ணக் கொழுக்கட்டை, நீர்க் கொழுக்கட்டை முதலிய இனிப்பு வகைக் கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    பொதுமக்கள் வீடுகளில் பூஜையறையில் வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகள் திருவையாறில் பானை வனையும் தொழிலா ளிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக கடைவீதி களில் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

    ×