search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
    X

    ஊஞ்சலில் எழுந்தருளிய மனோன்மணி சமேத சந்திரசேகர்.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

    • சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்து முடிந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மனோன்மணி சமேத சந்திரசேகர் வண்ண மலர்களாலும், மின் விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது தேவார பாடலி லும், நாதஸ்வரத்திலும் நலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்டது.

    பின்னர், சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் இளையவர் சபேசன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், தேவார வார வழிபாட்டு மன்றத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×