search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமன் பண்டிகை கொண்டாட்டம்
    X

    மேடையில் காமனை தீ மூட்டி எரித்தனர்.

    காமன் பண்டிகை கொண்டாட்டம்

    • காமன் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் 160 ஆண்டுகளுக்கு மேலாக காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவ பெருமான் தவத்தில் இருந்தார். தேவ லோகத்தில் தலைவனானவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் பலரை நாடினர். சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    அப்போது மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்துவிடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான்.

    தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார். இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதிதேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுத லாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர்மீது எந்த தவறுமில்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று முறையிட்டாள்.

    ரதிதேவியின் வேண்டு தலை ஏற்ற சிவபெருமான், ரதிதேவியிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார். இந்த புராண சம்பவத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி மாதத்தில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டும் காமன் பண்டிகையையொட்டி காமன் மேடையில் காப்பு கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படிதாரர்களால் பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காம தகனம் நடந்தது. அப்போது பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர்.

    குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தர மூர்த்தி, உறுப்பி னர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராமமூர்த்தி, நாகராஜ், ராஜராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×