என் மலர்
நீங்கள் தேடியது "நைவேத்தியம்"
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 9-வது நாளான இன்று நிலக்கடலை சுண்டல், சாம்பார் சாதம், பால் கொழுக்கட்டை செய்து சித்திதாத்ரி தேவிக்கு படைக்கலாம்.
முதலில், நிலக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
நிலக்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை - 1 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
நிலக்கடலையை 1 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை அல்லது மென்மையாகும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இப்போது வேகவைத்த நிலக்கடலை, உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
சுவையான நிலக்கடலை சுண்டல் தயார்.
இந்த சுண்டலை நவராத்திரி மட்டுமின்றி, எப்போது வேண்டுமானாலும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு
தேவையான காய்கறிகள் (உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை)
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
புளி
உப்பு
தாளிப்புக்கான பொருட்கள் (கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்)

செய்முறை
முதலில் துவரம்பருப்பை தேவையான அளவு தண்ணீரில், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு சேர்க்காமல், தேவையான காய்கறிகள் மற்றும் தக்காளி சேர்த்து வேகவைத்து, பிறகு புளி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறி, சாம்பார் கொதிக்கவும்.
பின்னர் தாளிப்புக்கு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
இறுதியில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.
பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
பால் - 2 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு
தேங்காய் பால் - ½ கப் (விரும்பினால்)
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், திராட்சை) - அலங்கரிக்க

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து மென்மையான மாவாக தயார் செய்து கொள்ளவும்.
தயார் செய்த மாவிலிருந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பால் கொதித்ததும், அதில் சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கவும். இனிப்பு கலவை நன்கு கொதித்ததும், உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை மெதுவாக சேர்த்து நன்கு கிளறவும்.
கொழுக்கட்டைகள் வெந்து, பால் சற்று கெட்டியானதும், உலர் பழங்களால் அலங்கரித்து பரிமாறலாம்.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 4வது நாளான இன்று பாசிப்பயறு சுண்டல், குங்குமப்பூ சாதம் மற்றும் அன்னாசிப்பழ கேசரி செய்து கூஷ்மாண்டா தேவிக்கு படைக்கலாம்.
முதலில், பாசிப்பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..
பாசிப்பயறு சுண்டல்
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1 கப்
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
காய்ந்த மிளகாய் - 1-2 (கிள்ளியது)
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
இஞ்சி (துருவியது) - ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
மஞ்சள் தூள் - ⅛ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2-3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பயறை ஊறவைத்து வேகவைத்தல்: பாசிப்பயறை நன்கு கழுவி, சுமார் 2-3 மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
பிறகு, அதை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, பிறகு வேகவைத்த பாசிப்பயறை கடாயில் சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக, தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கி, சுவையான பாசிப்பயறு சுண்டலை பரிமாறவும்.
இந்த சத்து நிறைந்த பாசிப்பயறு சுண்டலை நவராத்திரி நாட்களில் பிரசாதமாக வழங்கலாம்.
குங்குமப்பூ சாதம்
நவராத்திரி குங்குமப்பூ சாதம் என்பது குங்குமப்பூவின் வாசனை மற்றும் நிறத்துடன் செய்யப்படும் இனிப்பு சாதம் ஆகும், இது நவராத்திரி பண்டிகையின் போது பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி: 3/4 முதல் 1 கப் வரை
குங்குமப்பூ: ½ டீஸ்பூன்
பால்: 1 கப் (குங்குமப்பூவை ஊற வைக்க)
நெய்: 1 டேபிள்ஸ்பூன்
சீரகம்: ½ டீஸ்பூன்
ஏலக்காய்: 3
முந்திரி: 10
சாதம்: 1 கப் (சமைப்பதற்கு)
உப்பு: தேவையான அளவு
கொத்தமல்லி: அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)
செய்முறை
பாஸ்மதி அரிசியைக் கழுவி, 10-15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் சூடான பால் சேர்த்து, அதில் குங்குமப்பூ இழைகளை ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் நெய் விட்டு, சீரகம் மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.
சாதம் தயாரானதும், குங்குமப்பூ பால், உப்பு சேர்த்து கலக்கவும்.
அலங்கரிக்க கொத்தமல்லியை மேலே தூவவும்.
நவராத்திரி குங்குமப்பூ சாதம் என்பது குங்குமப்பூவின் வாசனை மற்றும் நிறத்துடன் செய்யப்படும்சாதம் ஆகும், இது நவராத்திரி பண்டிகையின் போது பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.
அன்னாசிப்பழ கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை (சூஜி): 1 கப்
நெய்: ¼ முதல் ⅓ கப்
சர்க்கரை: ¾ முதல் 1 கப்
அன்னாசிப்பழத் துண்டுகள்: 1 கப் (அல்லது அன்னாசிப்பழ கூழ்)
தண்ணீர்: 2½ கப்
முந்திரி, உலர் திராட்சை: தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்: ¼ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
குங்குமப்பூ (சற்று): விருப்பப்பட்டால்
செய்முறை
ரவையை வறுத்தல்: ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில் ரவையை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அன்னாசிப்பழத்தை சேர்த்தல்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், அன்னாசிப்பழ துண்டுகள் அல்லது கூழைச் சேர்த்து கொதிக்க விடவும்.
வறுத்த ரவையில் கொதிக்கும் அன்னாசிப்பழக் கலவையைச் சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.
ரவை வெந்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரையைச் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
ஏலக்காய்த்தூள் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து, சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.
- நாளை கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
- நாளை தீபம் ஏற்றும் போது என்ன நைவேத்தியம் படைக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே மிகச் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது.
அருட்பெருஞ்ஜோதியாகிய ஈசன், தனிப்பெருஞ்கருணையோடு நமக்கருள் புரியும் நாள் திருக்கார்த்திகை. இறைவனுக்கு நைவேத்தியம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை.
திருக்கார்த்திகையன்று சிவனுக்கும், முருகனுக்கும் வெல்லம் சேர்த்த பாயாசம், பிடி கொழுக்கட்டை ஆகியவை நைவேத்தியம் செய்யப்படும்.
- கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.
- விநாயகருக்கு உரிய திசை கிழக்கு
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத் தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்பார்கள். எனவே, பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் போது கொழுக்கட்டை படைக்க வேண்டும். இருபத்தோரு கொழுக்கட்டைகள் படைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கணபதிக்கு உகந்த நைவேத்தியம்
கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம் போன்றவற்றுடன் கரும்புத்துண்டு தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.
பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேக வைத்தது. இட்லி, தோசை. பாயாசம், அவல்,பொரியில் நாட்டுச்சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.
எப்படி வணங்க வேண்டும்?
முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடது பக்கத்திலும், இடது கையால் வலது பக்கத்திலும் மூன்று முறை குட்டி, காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.
தூங்க வேண்டிய திசை
விநாயகருக்கு உரிய திசை கிழக்கு சொந்த வீட்டில் வசிப்பவர்கள் கிழக்கே தலை வைத்து படுக்க வேண்டும். இடது புறம் உடல் கீழே படும்படியோ, மல்லாந்தோ படுக்கலாம்.
மாமனார் வீட்டிற்குச் சென்றால் தெற்கே தலை வைத்துப் படுக்க வேண்டும். முகம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அப்போது வடக்குத் திசையில் உள்ள குபேரனின் பார்வை மருமகனுக்குக் கிடைக்கும். மாமனார் வீட்டிலும் செல்வம் பெருகும்.
வடக்கே தலை வைத்துப்படுத்தால் ஊரில் இருப்பவர்கள் நம்மை விரட்டியடிக்கும் நிலைமை ஏற்படும். இதனால்தான் இறந்து போனவர்களின் தலையை வடபுறமும் காலைத் தென்புறமும் வைத்து இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். இந்த தகவல்களை சொல்லியிருப்பவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள்.
விக்னமில்லாத சுகவாழ்வுக்கு இரவில் படுக்கப்போகும் முன் விநாயகரை மனதால் வணங்கியபடி கிழக்கே தலை வைத்துப் படுப்பதே மிக நல்லது.






