என் மலர்
நவராத்திரி ஸ்பெஷல்
- மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான்.
- பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான்.
விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, 'விஜயதசமி' என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.
'விஜய்' என்றால் வெற்றி என்றும், 'தசம்' என்றால் பத்து என்றும் பொருள். அன்னை, மகிஷாசுரனுடன் 9 நாள் போரிட்டு, 10-வது நாள் பெற்ற வெற்றியே விஜயதசமி ஆகும்.
முன்பொரு காலத்தில் தனு என்ற அசுரன் இருந்தான். அவனுக்கு மிகவும் பலசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும், தங்களுக்கு மிக சக்தி வாய்ந்த புத்திரர்கள் வேண்டும் என்பதற்காக கடும் தவம் புரிந்தனர்.
கரம்பன் என்பவன் அன்ன ஆகாரம் இன்றி நீரில் நின்று தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.
ரம்பன் என்பவன் யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான்.
தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.
அவனின் தவத்தில் மகிழ்ந்த அக்னி தேவன், அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.
உடனே ரம்பன், 'எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்' என்றான். அதற்கு அக்னி தேவன், "நீ எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறாயோ, அந்த பெண்ணிடம் உனக்கு புத்திரன் பிறப்பான்" என்று வரம் கொடுத்தார்.
இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையைப் பார்த்த உடன், அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தைப் பிறந்தது.
எருமைத் தலையும், மனித உடலுமாக பிறந்த அந்தப் பிள்ளை 'மகிஷாசுரன்' என்று அழைக்கப்பட்டான். (இது மகிஷாசுரன் பிறப்பு பற்றி புராணங்கள் கூறும் பல கதைகளில் ஒன்று).
மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், "மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். அதனால் வேறு வரம் கேள்" என்றார்.
அதற்கு அவன், "தேவர்களாலும், பூதங்களாலும், ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது" என்றான்.
பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.
மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும், தாம்ரன் என்பவன் தனாதிபதியாகவும் இருந்தனர். அஸிலோமா, பிடாலன், பாஷ்களன், கால பந்தகன், உதர்க்கன், திரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் இருந்தனர். அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் அஞ்சனம் என்ற மலையில் மாஹிஷம் என்ற மிக அழகிய பட்டினத்தை நிர்மாணித்தான். தேவர்களை மிரட்டி, தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.
மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.
புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.
இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள்.
தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து, மகிஷாசுரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த அன்னை, 'மகிஷாசுர மர்த்தினி' என்று அழைக்கப்பட்டாள்.
எந்த இடத்தில் மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் 'தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 9-வது நாளான இன்று நிலக்கடலை சுண்டல், சாம்பார் சாதம், பால் கொழுக்கட்டை செய்து சித்திதாத்ரி தேவிக்கு படைக்கலாம்.
முதலில், நிலக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
நிலக்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை - 1 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
நிலக்கடலையை 1 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரும் வரை அல்லது மென்மையாகும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இப்போது வேகவைத்த நிலக்கடலை, உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
சுவையான நிலக்கடலை சுண்டல் தயார்.
இந்த சுண்டலை நவராத்திரி மட்டுமின்றி, எப்போது வேண்டுமானாலும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு
தேவையான காய்கறிகள் (உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவை)
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
புளி
உப்பு
தாளிப்புக்கான பொருட்கள் (கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்)

செய்முறை
முதலில் துவரம்பருப்பை தேவையான அளவு தண்ணீரில், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு சேர்க்காமல், தேவையான காய்கறிகள் மற்றும் தக்காளி சேர்த்து வேகவைத்து, பிறகு புளி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறி, சாம்பார் கொதிக்கவும்.
பின்னர் தாளிப்புக்கு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
இறுதியில் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.
பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
பால் - 2 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - தேவையான அளவு
தேங்காய் பால் - ½ கப் (விரும்பினால்)
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், திராட்சை) - அலங்கரிக்க

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து மென்மையான மாவாக தயார் செய்து கொள்ளவும்.
தயார் செய்த மாவிலிருந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பால் கொதித்ததும், அதில் சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கவும். இனிப்பு கலவை நன்கு கொதித்ததும், உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை மெதுவாக சேர்த்து நன்கு கிளறவும்.
கொழுக்கட்டைகள் வெந்து, பால் சற்று கெட்டியானதும், உலர் பழங்களால் அலங்கரித்து பரிமாறலாம்.
- 2-ந்தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருந்திருவிழா கடந்த 23-ந்தேதி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது.
இதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள், மதியம் அன்னதானம், மாலை 3 மணிக்கு சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இந்த நிலையில் விரதம் தொடங்கிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடி வலது கையில் காப்புகட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக மற்றும் பஜார் வீதிகளில் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இதனால் திரும்பிய திசைகளில் எல்லாம் தசரா பக்தர்களாக தெரிகிறது.
கடந்த 28-ந்தேதி முதல் தசரா குழுவினர் மேளம், தாரை தப்பட்டை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் டிஸ்கோவுடன் வந்து காப்பு கட்ட தொடங்கினர். மறுநாள் ஊர் பெயரோடு அமைந்த தசரா குழுவினர் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சி நடந்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் தசரா பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் அம்மன் பெயரில் வசூல் செய்த பணத்தை 10-ம் திருநாளான வருகிற 2-ந் தேதி காணிக்கையை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். இதற்கு பக்தர்களுக்கு வசதியாக கோவிலை சுற்றி தற்காலிக உண்டியல்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
விழாவின் முக்கிய நாளான வருகிற 2 மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 500-க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மருத்துவ துறை, மின்சார துறை, வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் 2 நாள் இங்கு முகாமிட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.
2-ந் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு பூஜையூடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஒம்காளி, ஜெய்காளி என ஆக்ரோஷமாக கோஷமிட்டு முத்தாரம்மனை பின்தொடந்து செல்வார்கள். சுமார் 20 லட்சம் பக்தர்கள் கூடும் கடற்கரையில் அம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கு கடற்கரை மேடையிலும் தொடர்ந்து 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
3-ந் தேதிஅதிகாலை பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் வீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழா ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
2-ந் தேதி சூரசம்ஹாரம் நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் திரள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு தேவயைான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் டிரோன் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்ப வசதிகளுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும்.
- சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று அன்னை பராசக்தி சாமுண்டியாக வழிபாடு செய்யப்படுகிறாள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். தர்மத்தை நிலைநாட்டுபவள். நம்மை காத்து அருளக்கூடியவள்.
சாமுண்டியை வழிபட கலர் கோலமாவினால் ஆயுதம் கோலம் போட வேண்டும். 77 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். பஞ்சு திரி 56 போட்டு எள் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். அக்கார வடிசல் நிவேதனம் செய்ய வேண்டும். தாமரை மல்லிகை பூக்கள் மற்றும் மரிக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.
"கௌரி அன்னை மேனியிலே கருவாகி மலர்ந்தவளே! நவராத்திரி ஒன்பதாம் நாள் நலம் கூட்டும் கலைமகளே தாயே நீ அன்பு வைத்தால் பார்முழுதும் எனைப்புகழும் ஏழிசையும் என்பாட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்."
என பாடி துதிக்க வேண்டும்.
சாமுண்டி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் கேது. எனவே சாமுண்டியை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் நிவர்த்தியாகும். உள்ளுணர்வு மேம்படும், மன தைரியத்துடன் பணிகளை மேற்கொள்ளும் திறன் கிடைக்கும். பேச்சுக்கலை மேம்படும். எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் உறுதியான சக்தி தருவாள். மக்களை கவரும் ஆற்றலைத் தருவாள்.
- இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
- வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான நவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை வழிபடுவது அவசியம் என்று நம்பப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடாமல் நவராத்திரி முழுமையடையாது என்றும் கூறப்படுகிறது. பெண் குழந்தைகளை வழிபடுவது என்பது துர்கா தேவியின் ஆசிகளை நேரடியாகப் பெறுவதாகும்.
ஒவ்வொரு நவராத்திரியின் அஷ்டமி மற்றும் நவமி பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. சிலர் அஷ்டமி அன்று கன்னியா பூஜை செய்கிறார்கள், மற்றவர்கள் அதை நவமி அன்று செய்கிறார்கள். இந்த வருடம், அஷ்டமி இன்றும், நவமி நாளை என வருகின்றன.
கன்னியா பூஜையின் போது பல நேரங்களில், மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் ஒன்பது நாள் விரதம் தோல்வியடைகிறது. இதனால் நாம் செய்யும் தவறுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்...
கன்னியா பூஜையின் போது என்ன தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்...
1. கன்னியா பூஜை யின் போது வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நீங்கள் என்ன பரிசு கொடுத்தாலும், கருப்பு நிறத்தைத் தவிர்க்க வேண்டும். கருப்பு நிறப் பொருட்களைப் பரிசளிப்பது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பரிசுகளை வழங்கும்போது நாம் பெரும்பாலும் இதை கவனிக்காமல் விடுகிறோம். இது பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
2. கன்னியா பூஜைக்குப் பிறகு மக்கள் பெரும்பாலும் எஃகு கிண்ணங்கள் அல்லது தட்டுகளை பரிசளிப்பார்கள். மத நம்பிக்கைகளின்படி இதுவும் பொருத்தமானதல்ல. நீங்கள் பரிசளிக்க வேண்டியிருந்தால், எஃகுக்குப் பதிலாக மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களை வழங்க வேண்டும்.
3. இரும்புப் பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கன்னியா பூஜையின் போது அவ்வாறு செய்வது சனி தோஷத்தைத் தரும். பரிசுகளை வாங்கும்போது இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.
4. கன்னியா பூஜைக்குப் பிறகு பரிசுகளை வழங்கும்போது, தவறுதலாக கூட, தோல் கொண்ட எந்தப் பொருளையும் கொடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. வீட்டிற்கு வரும் பெண்கள் முழு உணவை சாப்பிடவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று சித்திதாத்ரி தேவி வணங்கப்படுகிறாள். துர்கா தேவியின் 9வது அம்சமான சித்திதாத்ரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.
மந்திரங்கள்:
ஓம் தேவி ஸித்திதாத்ர்யை நமஃ.
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸித்திதாத்ர்யை நமஃ.
இந்த நாள் பக்தர்களுக்கு வெற்றிகளையும், செல்வத்தையும், செழிப்பையும் தரக்கூடியதாகக் கருதப்படுகிறது.
- சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
- சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 9-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'சித்திதாத்ரி தேவி'. சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும். சித்திதாத்ரி என்பவர் பார்வதி தேவியின் ஒன்பதாவது மற்றும் இறுதி வடிவமான நவதுர்க்கைகளில் ஒருவர்.
"சித்தி" என்றால் சக்தி அல்லது படைப்பு, இருப்பின் இறுதி மூலத்தை உணரும் திறன், "தாத்ரி" என்றால் கொடுப்பவர் அல்லது தருபவர் எனப் பொருள்படும்.
எனவே, சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும். இவர் நவராத்திரியின் இறுதி நாளான நவமி அன்று வணங்கப்படுகிறார்.
சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு அனைத்து தெய்வீக விருப்பங்களையும் பூர்த்தி செய்து, வாழ்வின் வெற்றியை அருள்பவள்.
சித்திதாத்ரி தேவி கதை:
பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்னர் எதுவுமே இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில்தான் சித்திதாத்ரி, இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரை உருவாக்கி, அவர்களுக்கு முறையே படைப்பு, காத்தல் மற்றும் அழித்தல் பணியை வழங்கினார்.
அந்த தெய்வங்களுக்கு தத்தம் கடமைகள் கொடுக்கப்பட்டபோதும், பிரபஞ்ச படைப்பு நடைபெற வேண்டுமெனில் அஷ்டசித்திகள் (அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராக்யம், பிராகாம்யம், ஈஷித்துவம், வசித்துவம்) தேவைப்பட்டது. அந்த சித்திகளை தெய்வங்களுக்கு அருளியதே சித்திதாத்ரி தேவி.
புராணக் கதையின்படி, சித்திதாத்ரி தேவியே சிவபெருமானுக்கே அஷ்டசித்திகளை அருளினாள்.
மூன்று பிரபுக்களும், மகாதேவியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தங்கள் சக்திகளை அடைய ஆழ்ந்த தவம் செய்ய கடலை நோக்கிச் சென்றனர். அவர்களின் அர்ப்பணிப்பால் திருப்தியடைந்த சித்திதாத்ரி, அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு சித்திகளை வழங்கினார். இப்படித்தான் பிரபஞ்சம் மும்மூர்த்தியால் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
சிவபெருமான் மிகுந்த தவம் செய்து தேவியைத் தரிசித்தார். அப்போது சித்திதாத்ரி தேவியே அவருக்கு அஷ்டசித்திகளை அருளினாள். அந்த அருளால்தான் சிவன் அர்த்தநாரீசுவரன் (அரை ஆண் – அரை பெண்) வடிவில் வெளிப்பட்டார். இதனால் பிரபஞ்சத்தில் ஆண் – பெண் சமநிலை உருவானது. இந்த வடிவத்தில், சிவபெருமானின் உடலின் ஒரு பாதியும், சித்திதாத்ரியின் மறுபாதியும் ஒன்றிணைந்து, பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த வடிவத்தை உருவாக்குகின்றன. அதனால் தான், சித்திதாத்ரி தேவியை சகல சித்திகளின் தாயான தேவி என்கிறார்கள்.
சித்திதாத்ரி தேவி நான்கு கரங்கள் உடையவள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை தாங்கியவள். இவரது முகத்தில் எப்போதும் சாந்தமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி சித்திதாத்ரியாயை நமஹ" என்று ஜபிக்க வேண்டும்.
- வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள்.
- தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
நவராத்திரி விழாவில் தேவியை ஒன்பதாவது நாளில் நாம் சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். சித்தி என்றால் வெற்றி என்று பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். தாத்ரி என்றால் தருபவள் என்று பொருள். சித்திதாத்ரி என்றால் அனைத்திலும் வெற்றியை தருபவள் என பொருள்.
நவராத்திரியின் 9 ஆம் நாளில் அம்பிகையை மகேஸ்வரி என்ற ரூபத்திலும், நவதுர்க்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற பெயரிலும் வழிபடுகிறோம். இன்று தாமரை வகை கோலமிட்டு அம்பிகையை வழிபடலாம். தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.
சித்திதாத்ரி தேவியை வழிபடுவதால் வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள். வாழ்க்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்றால், அதற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் வேண்டுவது மன நிம்மதியை தான். அந்த நிறைவான நிம்மதியை இந்த அம்பிகை நமக்கு அருள்வாள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் பக்தர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் அன்றைய நாளில் நம்பிக்கை, எழுச்சி மற்றும் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வரையறுக்கிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது இளஞ்சிவப்பு நிறத்தை அணிவது உங்களை வசீகரமாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதே நேரத்தில் உலகளாவிய அன்பின் அருளையும் உங்களுக்கு வழங்குகிறது.
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஒன்பதாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
ஒன்பதாம் நாள் போற்றி
ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி
ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி
ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி
ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி
ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி
ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி
ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி
ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி
ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி
ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி
ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி
ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி
ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி
ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி
ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி
ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி..!!
- நரசிம்மியை பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
- நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு.
நவராத்திரியின் எட்டாம் நாளன்று அன்னை பராசக்தி, நரசிம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள். சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள். எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.
நரசிம்மியை வழிபட காசு கொண்டு தாமரை கோலம் போட வேண்டும். 18 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும். பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"நாமகளே சரஸ்வதியே நான்முகனின் நாயகியே!
நாடி வந்தோம் சந்நிதியே நம்பி வந்தோம் அம்பிகையே! அம்புடன் வில் சங்கு சக்கரம் மணிசூலம் உடையவளே சும்பன் வதம் புரிந்தவளே சுடர்விழியே மலர்மகளே."
என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு. எனவே நரசிம்மியை வழிபடுவதன் மூலம் ராகு தோஷம் நிவர்த்தியாகும். வெளிநாடு அல்லது வெளிநாட்டுத் துறைகளில் இருந்து தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகளை வழங்குவாள். மனதில் உற்சாகம் பிறக்கும், அரசு வழியில் ஆதரவு கிடைக்கும், எதிர்பாராத திடீர் செல்வத்தையும், புகழையும் தருவாள்.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 8வது நாளான இன்று நவதானிய சுண்டல், மாங்காய் சாதம், அரிசி கீர் செய்து மகாகௌரி தேவிக்கு படைக்கலாம். முதலில், நவதானிய சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
நவதானிய சுண்டல்
தேவையான பொருட்கள்:
நவதானியங்கள் (கொண்டைக்கடலை, பாசிப்பயறு, துவரம்பருப்பு, எள்ளு, மொச்சை, தட்டைப்பயறு, உளுந்து, கடலைப்பருப்பு, காராமணி போன்ற ஒன்பது தானியங்கள்)
தேங்காய் துருவல்
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
சமையல் எண்ணெய்
பெருங்காயத்தூள்
எலுமிச்சை சாறு
உப்பு

செய்முறை:
* நவதானியங்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ, குறைந்தது 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஊறவைத்த தானியங்களை குக்கரில் உப்பு சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
* வெந்த தானியங்களை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
* பின்னர், வேகவைத்த தானியங்களை சேர்த்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
* கடைசியாக, தேங்காய் துருவல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சத்தான நவதானிய சுண்டல் தயார்.
மாங்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம்
பச்சை மாங்காய்
எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
பச்சை மிளகாய்
இஞ்சி
பெருங்காயம்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லி தழை.

செய்முறை:
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
* அதனுடன் வேர்க்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
* மாங்காயின் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்க்கவும்.
* மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மாங்காய் மென்மையாகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.
* வடித்த சாதத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து, மாங்காய் கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்.
* சாதம் கலவையை நன்றாக கலந்த பிறகு, கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.
அரிசி கீர்
தேவையான பொருட்கள்
சாமா அரிசி (பார்ன்யார்ட் மில்லெட்) - 1/4 கப்
பால் - 2 1/2 கப்
குங்குமப்பூ - சில இழைகள்
சர்க்கரை - 1/4 முதல் 1/2 கப் (உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்ப)
நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி - சிறிதளவு
ஏலக்காய் தூள் - 1/4 முதல் 1/2 டீஸ்பூன்

செய்முறை
* சாமா அரிசியை நன்றாக கழுவி, போதுமான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* ஒரு கனமான பாத்திரத்தில் பாலை மிதமான சூட்டில் வைத்து சூடாக்கவும்.
* பால் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
* குங்குமப்பூ இழைகள், நறுக்கிய பாதாம், மற்றும் முந்திரி சேர்த்து கிளறவும்.
* அரிசி நன்கு வெந்து, பால் கெட்டியாகும் வரை மிதமான தீயில் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்.
* அரிசி வெந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
* கீர் சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் எட்டாம் நாளான மகாகௌரி வணங்கப்படுகிறது. துர்கா தேவியின் எட்டாவது அம்சமான மகாகௌரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.
மந்திரம்:
*ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின் மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா.
இந்த மந்திரத்தை உச்சரிப்பது, எதிர்மறைகளை நீக்கி, உள் அமைதியைப்பெறவும், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி போன்ற நன்மைகளைப் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.






