என் மலர்
நவராத்திரி ஸ்பெஷல்

Navratri Special:நவராத்திரியின் 7-ம் நாள் இன்று..! காலராத்திரி தேவிக்கு உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று, துர்கா தேவியின் காலராத்திரி தேவி வடிவத்தை வழிபடும் நாளாகும்.
காலராத்திரி தேவிக்கு உரிய மந்திரம்:
"ஓம் மஹா மந்த்ராய வித்மஹே வராஹி மனோகராய தீமஹி தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத்"
கலாரத்ரா மந்திரம் என்பது கால பைரவர் அல்லது சிவனின் காலாதீத ரூபத்தைப் போற்றும் மந்திரமாகும். இந்த மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம்.






