என் மலர்
நவராத்திரி ஸ்பெஷல்

Navratri Special:நவராத்திரியின் 9-ம் நாள் இன்று..! சித்திதாத்ரி தேவிக்கு உச்சரிக்க வேண்டிய மந்திரம்
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று சித்திதாத்ரி தேவி வணங்கப்படுகிறாள். துர்கா தேவியின் 9வது அம்சமான சித்திதாத்ரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.
மந்திரங்கள்:
ஓம் தேவி ஸித்திதாத்ர்யை நமஃ.
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸித்திதாத்ர்யை நமஃ.
இந்த நாள் பக்தர்களுக்கு வெற்றிகளையும், செல்வத்தையும், செழிப்பையும் தரக்கூடியதாகக் கருதப்படுகிறது.






