search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "potri"

    • கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
    • கோனி எனில் அரசர்கரசி அல்லது அரசிக்கரசி எனவும் பொருள் கொள்ளலாம்.

    கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். கோனி அம்மன் என்றால் அரசர்களால் வழிபடப்படும் தெய்வம் எனவும் தெய்வங்களுக்கு எல்லாம் அரசி எனவும் பொருள்படும். தமிழில் கோ என்றால் மன்னர் மன்னர் என்றும் வடமொழியில் ராஜாதிராஜன் எனவும் கூறுவர். இவ்வாறு கோன் திரியும்போது கோனி எனில் அரசர்கரசி அல்லது அரசிக்கரசி எனவும் பொருள் கொள்ளலாம்.

    கோவையைப் போலிதழ் வாயினைக் கொண்ட குலப்பிடிபூக்

    கோவையைப் பூண்டருள் கோமதி ஸ்ரீமதி குண்டலியென்

    கோவையைப் பூணணி கொற்றவை நற்றவர் கூட்டுறவால்

    கோவையைக் காத்தருள் கோமகளாகிய கோனம்மையே

    சீர்வளரும் கல்வியோடு செல்வநிறை ஆயுள்புகழ்

    ஏர்வளரும் மக்கட்பே றெய்துங்கான் - பார்மிசை நல்

    வாழ்வு வரும் வன்கோவைக் கோனியம்மன்மாணடிகள்

    தாழ்ந்து தொழும் அன்பர்க்கே தான்

    • ஓம் அருள்நிறை அம்மையே போற்றி ஓம் அமுத நாயகியே போற்றி
    • ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

    ஓம் அகிலாண்டநாயகியே போற்றி

    ஓம் அருமறையின் வரம்«ப போற்றி

    ஓம் அறம் வளர்க்கும் அம்மையேபோற்றி

    ஓம் அரசிளங் குமரியே போற்றி

    ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி

    ஓம் அமுத நாயகியே போற்றி

    ஓம் அருந்தவ நாயகியே போற்றி

    ஓம் அருள்நிறை அம்மையே போற்றி

    ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி

    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆலால சுந்தரியே போற்றி

    ஓம் ஆனந்த வல்லியே போற்றி

    ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி

    ஓம் இமையத்தரசியே போற்றி

    ஓம் இடபத்தோன் துணையே போற்றி

    ஓம் ஈஸ்வரியே போற்றி

    ஓம் உயிர் ஓவியமே போற்றி

    ஓம் உலகம்மையே போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

    ஓம் எண் திசையும் வென்றாய் போற்றி

    ஓம் ஏகன் துணையே போற்றி

    ஓம்ஐயம் தீர்ப்பாய்போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி

    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி

    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

    ஓம் கனகமணிக் குன்றே போற்றி

    ஓம் கற்பின் அரசியே போற்றி

    ஓம் கருணை யூற்றே போற்றி

    ஓம் கல்விக்கு வித்தே போற்றி

    ஓம் கனகாம்பிகையே போற்றி

    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி

    ஓம் கற்பனைக் கடந்த கற்பமே போற்றி

    ஓம் காட்சிக் கினியோய் போற்றி

    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

    ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி

    ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி

    ஓம் கிளியேந்திய கரத்தோய்போற்றி

    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி

    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி

    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி

    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி

    ஓம் சக்தி வடிவே போற்றி

    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி

    ஓம் சிவகாமி சுந்தரியே போற்றி

    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

    ஓம் சிவயோக நாயகியே போற்றி

    ஓம் சிவானந்த வல்லியே போற்றி

    ஓம் சிங்கார வல்லியே போற்றி

    ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி

    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி

    ஓம் சேனைத் தலைவியே போற்றி

    ஓம் சொக்கர் நாயகியே போற்றி

    ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி

    ஓம் ஞானாம்பிகையே போற்றி

    ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

    ஓம் தமிழ்க் குலச்சுடரே போற்றி

    ஓம் திருவுடையம்மையே போற்றி

    ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருநிலை நாயகியே போற்றி

    ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி

    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

    ஓம் தென்னவன் செல்வியே போற்றி

    ஓம் தேன்மொழி யம்மையே போற்றி

    ஓம் தையல் நாயகியே போற்றி

    ஓம் நற்கனியின் சுவையே போற்றி

    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

    ஓம் நல்ல நாயகியே போற்றி

    ஓம் நீலாம்பிகையே போற்றி

    ஓம் நீதிக்கரசியே போற்றி

    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

    ஓம் பழமையின் குருந்தே போற்றி

    ஓம்பரமானந்தப் பேருக்கே போற்றி

    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி

    ஓம் பசுபதி நாயகியே போற்றி

    ஓம் பாகம் பிரியா அம்மையே போற்றி

    ஓம் பாண்டிமாதேவியின் தேவி போற்றி

    ஓம் பார்வதி அம்மையே போற்றி

    ஓம் பிறவிப்பணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பேரிய நாயகியே போற்றி

    ஓம் போன்மயிலம்மையே போற்றி

    ஓம் போற்கொடி அம்மையே போற்றி

    ஓம் மங்கல நாயகியே போற்றி

    ஓம் மழலைக் கிளியே போற்றி

    ஓம் மனோன்மனித் தாயே போற்றி

    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி

    ஓம் மாயோன் தங்கையேபோற்றி

    ஓம் மாணிக்க வல்லியே போற்றி

    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி

    ஓம் மீனாட்சி யம்மையே போற்றி

    ஓம் முழுஞானப் பேருக்கே போற்றி

    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

    ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி

    ஓம் வடிவழ கம்மையே போற்றி

    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி

    ஓம் வேதநாயகியே போற்றி

    ஓம் சவுந்த ராம்பிகையே போற்றி

    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி

    ஓம் ஸ்ரீகாளிகாம்பாள் அம்பிகையே போற்றி போற்றி

    பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் சொல்லி வழிபடும் போது அவரை போற்றும் வகையிலான பாடலைப் பாடி வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.
    பொங்கல் தினத்தன்று சூரியனைப் பார்த்து நாம் சொல்லி வழிபடும் போது அவரை போற்றும் வகையிலான பாடலைப் பாடி வழிபடுவது நன்மைகளை வாரி வழங்கும்.

    சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி!
    செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி!
    பயிர்களை வளர்க்கும் பகலவா போற்றி!
    உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி!
    நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
    குலம் தழைக்க வைக்கும் கோவே போற்றி!
    ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
    நவக்கிரகத்தின் நாயகா போற்றி!
    நாளும் வரம் தரும் கதிரவா போற்றி!
    ஒளியைக் கொடுக்கும் உத்தமா போற்றி!
    ஏழு குதிரை பூட்டிய தேரில்
    எழிலாய் வலம்வரும் இறைவா போற்றி!
    பொங்கல் நாளில் போற்றித் துதித்தோம்!
    மங்கல நிகழ்ச்சி மனையில் நடக்கவும்
    எங்கும் மகிழ்ச்சி பொங்கிப் பெருகவும்
    செல்வச் செழிப்புடன் சிறப்பாய் வாழ்ந்திட
    சூரிய தேவே! துதித்தோம் அருள்க!
    காரிய வெற்றியைக் கதிரவா தருக!

    என்று துதிப்பாடல்களைப் பாடினால் மதிப்பும், மரியாதையும் உயரும். பிரகாசமான எதிர்காலமும் அமையும். இந்த பாடலைப் பொங்கல் தினம் மட்டுமல்லாது, மற்ற கிழமைகளிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது அந்த பாடலைப் படிக்கலாம்.
    ×