என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anmiga kalanjiyam"

    • நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் “பெரும்வெளிர்’ இனத்தவர் வாழ்ந்தனர்.
    • இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய தலம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்குள்ள முருகனை வணங்கினால் பிறந்த பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

    தல வரலாறு:

    நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் "பெரும்வெளிர்' இனத்தவர் வாழ்ந்தனர். இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர். ஒரு காராம்பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை, ஒரு வேலையாள் கவனித்து பண்ணையாரிடம் கூறினார். மாடு ஒரு குறிப்பிட்ட இடத்தில், மடியில் இருந்த பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டதை பண்ணையார் கவனித்தார். அந்த இடத்தைத் தோண்டியபோது, ஒரு சிலை கிடைத்தது. அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப்போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். "ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்", என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு "தண்டாயுதபாணி" என்ற திருநாமம் இட்டனர்.

    தம்பிக்கு முதல் பூஜை:

    எல்லா கோவில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவுக்கென தனித்தேர் உள்ளது. நொய்யல் ஆறு, சென்னிமலையிலிருந்து 3 கி.மீ., தூரத்தில் ஓடுகிறது. கோவிலின் தென்புறம் உள்ள மாமாங்க தீர்த்தம், கோடையிலும் பொங்கி வழியும். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி மகிழ்வித்து முருகப்பெருமானிடம் படிக்காசு பெற்ற தலம்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்:

    "துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் நிமலன் அருள் கந்தசஷ்டி கவசம் தனை" என்று முருக பக்தர்கள் மனம் உருகி பாடும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள், காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியஸ்தர். கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டிய இடம், சென்னிமலை தான் என்பதை முருகனின் அருளாணையால் உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற புகழ்மிக்க வரியை அதில் எழுதியுள்ளார். "சிரம்" , "சென்னி" என்ற வார்த்தைகள் தலையைக் குறிக்கும். மலைகளில் தலையாயது சென்னிமலை என அவர் போற்றியுள்ளார். அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் கோவில்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

    • சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.
    • காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக இருந்தது

    சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள்.

    ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்க கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது.

    இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது.

    பின்னர் 1640-ல் ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்துவிட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்புசெட்டித் தெருவிற்கு இடம்மாறினாள் இந்த அம்மன். தம்புசெட்டித் தெருவில் உள்ள கோவிலை முத்துமாரி ஆச்சாரி என்பவர் நிர்மாணித்தார். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருந்தனர். இன்றும் அதே நிலை நீடிக்கிறது.

    இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுதல் என்பது கற்பக விருட்சத்திற்கு வேண்டுவது மாதிரி என்கிறார் காளிதாஸ் சிவாச்சாரியார். ''ஒரு முறை வந்து அம்பாளை வழிபட்டாலே வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணரமுடியும்.

    கேட்ட வரம் கிடைப்பதால்தான் கடவுள் இல்லை என்று வெளியே சொல்கிறவர்களும் அம்பாளை வழிபடுகிறார்கள்.

    அம்பாளை வேண்டுவதன் மூலம் திருமணத்தடை நீங்குகிறது. அதனால் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

    புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளை வணங்கிவிட்டு அவள் பாதத்தில் வைத்து எடுத்த மஞ்சளை தினமும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீரில் கலந்து உட்கொண்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது. அப்படி புத்திர பாக்கியம் பெற்றவர்கள் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்'' என்கிறார்.

    இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு கமடேஸ்வரர் என்று பெயர். இப்பெயர் வந்த வரலாறு ஒரு புராணச் செய்தியை உள்ளடக்கியது.

    கைலையில் உமா, மகேஸ்வரன் இருவரில் அழகில் சிறந்தவர் யார் என்று சிவ பெருமான் தெரிந்துகொள்ள விரும்பினார்.

    இக்கேள்விக்கு எந்த விடையை அளித்தாலும் அது இருவரில் ஒருவரை வருத்தப்படுத்தும் என்பதால் கேள்விக்கு விடையளிக்க ஒருவரும் முன்வரவில்லை.

    அதற்கு அவர் தான் ஏற்படுத்தியுள்ள ஒரு தாமரைத் தடாகத்திற்கு சென்று அதன் எழிலைக் கண்டு வருமாறு பின்னர் விடையளிப்பதாகவும் கூறினார். பெருமானும் இறைவியுடன் சென்று பார்த்தபோது அந்த சூழல் தவம் மேற்கொள்ளத் தகுந்த இடமாக தோன்றவே சிவபெருமான் அங்கமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

    இறைவி எழில் மிக்க அந்த சூழலால் கவரப்பட்டு அங்குள்ள மலர்களாலும் மற்றும் பட்டுத் துகிலாலும் தன்னை மேலும் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டாள்.

    இருவரும் புறப்பட்டு வரும் வழியில் பரப்ரம்மத்தால் சிருஷ்டிக்கப்பட்ட பெரியதொரு நிலைக்கண்ணாடியில் அவர்கள் தங்கள் உருவத்தை பார்க்க நேரிட்டது.

    அதில் பாம்பணி, சுடலைப்பொடி, வெள்ளெருக்கு மாலை, புலித்தோல் என்றிந்த விதமான தன் தோற்றத்தைக் கண்டவுடன் பரப்ரும்மம் எவ்வளவு அழகாகத் தம்மை தர்மசங்கடத்தில் இருந்து விடுவித்துக் கொண்டார் என்பது புரிந்தது.

    பரப்ரம்மம் நிலையில்லாத அழகின்மேல் ஆசை கொண்ட மனம் அருவுருவமாக `லிங்க' வடிவில் அமைவதாக என்று கூறினார்.

    கமம் என்றால் நிறைவு (தொல்காப்பியம் கூறும் பொருள்) ஆன்மாக்களுடன் அருவருவாய் லிங்க வடிவில் கலந்திருக்கும் நிலை என்ற பொருளில் கமடேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் கோவில்களுள் ஒன்றாக தற்போது விளங்கி வருகிறது, திருவந்தபுரம் பத்ம சுவாமி கோவில். அதற்குக் காரணம் கோவிலில் இருக்கும் தங்கப் புதையலே ஆகும்.

    இருப்பினும் பத்மநாப சுவாமியின் அளப்பெரிய சக்திக்கு அரசர்களால் கொடுக்கப்பட்ட காணிக்கை தான்இந்தப் பொன்னும் பொருளும் என்றால் அது மிகையாகாது. இந்த ஆலயத்தின் கருவறையில் முதலில் மூல விக்கிரகம் தான் இருந்து வந்தது. அது மரத்திலிருந்து தோன்றிய விக்கிரகம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த விக்கிரகத்திற்கு தான் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    நிர்வாகப் பிரச்சினை காரணமாக 1673 -ம் ஆண்டு முதல் 1677 -ம் ஆண்டு வரை கோவிலில் பூஜை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்தப் பிரச்சினை நடைபெறுவதற்கு முந்தைய நாளில் பூட்டிய அறையில் இருந்து ஒரு பெரிய நாகப் பாம்பு வெளிப்பட்டதாகவும் அதுவே வரப்போகும் சம்பவத்திற்கு எச்சரிக்கையாக அமைந்ததாகவும் தெரிய வருகிறது.

    அதன் பின்னர் 1678 -ம் ஆண்டு கோவில் நடை திறக்கப்பட்டு மீண்டும் பூஜைகள் வழக்கம் போல நடைபெற்றன. இதற்கு இடையே 1680-ம் ஆண்டு இறுதியில் ஆலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கோவில் கர்ப்பகிரகத்தின் மேற்கூரையில் தீ வேகமாக பரவி எரிந்தது.

    இதில் இலுப்ப மரத்தால் செய்யப்பட்ட பத்மநாப சுவாமியின் மூல விக்கிரகத்தின் மீதும் தீ விழுந்தது. இதில் பெருமானின் இடது கையில் உள்ள மூன்று விரல்களும் இடது காலில் உள்ள விரல்கள் முழுவதும் தீக்கரையாகின. அதிர்ஷ்டவசமாக பெருமானின் திருமேனியும் மற்ற பாகங்களும் தீயிலிருந்து தப்பின.

    திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்

    திருவனந்தபுரம் ஆலயம் தீயில் சேதமடைந்ததைத் தொடர்ந்து 1729- ஆம் ஆண்டு விஷ்ணு பக்தரான ராஜா மார்த்தாண்ட வர்மா ஆலயத்தைப் புதுப்பித்து 30 மீட்டர் உயரம் கொண்ட ஏழுநிலை கோபுரத்தைக் கட்டினார். பின்னர் கருவறையில் புதிய விக்கிரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.

    அதன்படி கோவிலில் பாம்பனையில் 18 அடி நீளத்தில் பத்மநாப சுவாமி பள்ளி கொண்டுள்ளது பான்ற அழகுமிக்க சிலை வடிவமைக்கப்பட்டது. நேபாளத்தில் கண்டகி நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 12,000 சாலிக் கிராமம் கற்களால் பத்மநாப சுவாமி சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன் மீது டு சர்க்கரா யோகம் என்ற ஆயுர்வேத ரசாயனமும் பூசப்பட்டுள்ளது. இதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. எனவே அருகில் திசனரி அபிஷேக பூஜைக்காக மற்றொரு தங்க விக்கிரகரத்தை வைத்துள்ளனர்.

    மும்மூர்த்திகள்:- விக்கிரகத்திற்குள் சாலிக்கிராமங்களை நிரப்பி விட்டால் தனியாக சக்தி பிரதிஷ்டை செய்ய வேண்டாம் என்ற மரபு உள்ளது. 12 சாலிக்கிராமங்களை ஒரு சேர பூஜித்தால் ஒரு சேத்திரத்தின் கோவில் மகிமை வந்து சேரும் ஒர விக்கிரகத்தில் 120000 சாலிக் கிராமங்கள் அடங்கி இருப்பதால் ஆயிரம் மஹா சேடத்திரங்கள் மகிமை கொண்டதாகும்.

    பத்மநாப சுவாமியை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் மூன்று வாசல் வழியாகத்தான் பாரக்க் வேண்டும். முதல் வாசல் வழியாக பகவானின் தலையையும் மற்றும் அவரது கரங்கள் சிவலிங்கத்தின் மீது இருப்பதையும் தரிசிக்கிலாம்.

    மகாலட்சுமி, திராகரமுனி, பகவானின் தொப்புளில் புறப்பட்ட தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மா, தினசரி அபிஷேகம் செய்யப்படும் தங்க விக்கிரகம் உற்சவ வேளையில் அருள் பாலிக்கும் வெள்ளி விக்கிரகம் ஆகியவற்றை, இரண்டாவது வாசல் வழியாகவும் பகவானின் பாதக் கமலத்தையும், கவுண்டியன் முனிவரையும் மூன்றாவது வாசல் வழியாகப் பார்த்து தரிசிக்கலாம்.

    ஆதிசேஷனின் ஐந்து தலைகள் உள்முகமாக வளைந்துள்ளன. விஷ்ணுவின் வலது கரம் சிவலிங்கத்தின் மீது உள்ளது. பகவான் இரு தேவியருமான ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருகில் நிற்கின்றனர்.

    பகவான் விஷ்ணு இடது கரத்தில் தங்கியுள்ள தாமரை மலரின் நறுமணத்தை ஆதிசேஷன் நுகர்கின்றார். சிவன், பிரம்மா விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒரு சேர இங்கு அமைந்துள்ளதால்... சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாய் இந்த ஆலயம் விளங்கி வருகிறது.

    பலராமம் தரிசித்த புனித தலம்:& பிரமாண்ட புராணமும் அனந்த சயன மகாத்மியமும், ஸ்ரீமத் பாகவதமும் இந்த பத்மநாப சுவாமி கோவில் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறுகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தில் அனந்தனின் அவதாரமான பலராமர் திரவனந்தபுரம் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி விஷ்ணுவை தரிசித்து விட்டு, பிராமணர்களுக்கு 10 ஆயிரம் பசுக்களை தானம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    கலியுகத்தின் முதல் கோவில்:& இந்தக் கோவில் கலியுகம் பிறந்த முதல் நாளில் அதாவது சுமார் 5000 வருடங்களுக்கு மன்பு ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. அதாவது குமரி மாவட்டம் திரவட்டாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் திரேதாயுகத்தில் கட்டப்பட்டது.

    அந்த கோவில் கட்டப்பட்டு 1084 ஆண்டுகளுக்குப் பிறகு பத்மநாப சுவாமி கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    அதனால்தான் பத்மநாப சுவாமியின் மூத்த சகோதரர் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் என்றும் அடுத்த மூத்த சகோதரர் கேரளத்தில்உ ள்ள வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தனன் சுவாமி என்றும் நம்பப் படுகிறது. 12 ஆழ்வார்கள் எழுதிய நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூலில் இந்த ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியக்களான பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் கூட பத்மநாப சுவாமி கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    அதிசய நிகழ்வுகள்:- திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பாற்காலில் அனந்தசயனத்தில் பள்ளி கொண்டிருப்பது பாற்கடலின் மேல் என்று நம்பப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த காலங்களில் சில அற்புத அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    1563 -ம் ஆண்டு ஆதித்ய வர்மா ஆட்சிக்காலத்தில் கோவில் முன் மண்டபத்தின் பால் வழிந்ததாகவும், அடுத்த ஆண்டு மண்டபத்தின் தெற்கு பாகத்தில் பால் வழிந்ததற்காகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து மண்டபத்திற்கு அருகே தரையில் பால் பொங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது.
    • துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரம் என்பது சித்தர்கள் கண்ட வழி.

    `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது. துர்க்கா என்னும் திருநாமம் அசுரர்-தடங்கல் வியாதி- பாவம் மற்றும் பயத்தை போக்கிடும் சக்தி வாய்ந்த எழுத்துக் கோர்வையாகும்.

    ராகு காலம் என்பதும், எமகண்டம் என்பதும் எந்த காரியமும் செய்யக்கூடாத நேரமென்றும், அந்த நேரங்களில் மேற்கொள்ளப்படும் காரியம் வெற்றி பெறாது என்றும் நம்மிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. எனவேதான், துர்க்கைக்கு ராகு கால பூஜை என்றதுமே பலருக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரமென்பது சித்தர்கள் கண்ட வழி.

    மாபெரும் பிரபஞ்ச சக்தியே துர்க்கை வடிவில் விளங்குகிறது. ராகு என்பதும், கேது என்பதும்கூட மிகச்சக்தி வாய்ந்த அம்சங்கள்தான். கிரகண காலங்களில் சூரியனையும், சந்திரனையும் இவை பிடிப்பதை அறிவோம்.

    இவ்வாறு கிரகண சமயங்களில் மட்டுமின்றி, ஒவ்வொரு கிழமையும், அந்த கிழமைக்குரிய கிரகத்தை குறிப்பிட்ட சில காலம் ராகுவும், கேதுவும் பிடிக்கின்றன. இப்படி பிடிக்கும் காலங்களே தினந்தோறும் ராகு காலம் என்னும் எமகண்டம் என்றும் நிர்ணயிக்கப்படுகின்றன.

    சக்தி வாய்ந்த ராகு, மகாசக்தியான துர்க்கையைப் பூஜித்து பலன் அடைந்ததாக நமது புராணங்களில் சான்றுள்ளது. எனவே ராகு காலத்தில் நாமும் துர்க்கையை வழிபட அதற்கு கைமேல் பலன் கிட்டும்.

    சக்தியில் நல்ல சக்தி, தீயசக்தி என்ற பேதம் இல்லை. எப்படி பயன்படுத்தப்படுகிறதோ, அதைப் பொறுத்தே சக்தியானது நல்ல சக்தியாகவோ, தீய சக்தியாகவோ பரிணாமிக்கிறது.

    ஆகவேதான் ஒவ்வொரு நாளும் மகா சக்தியான துர்க்கையை அந்த நாளுக்குரிய கிரகத்தை ராகு பீடிக்கும் நேரமான ராகு காலத்தில் பூஜை செய்வோமானால் அந்த பூஜைக்கு மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையை விட, அதிக அளவு செயல்வேகம் இருக்கும்.

    மற்ற நாட்களை விட, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜைக்கு உடனடி பலன் கிடைப்பதை சித்தர்களும் உபாசகர்களும் அனுபவப்பூர்வமாக கண்டறிந்து உள்ளனர். ஏனெனில், செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன், துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு பலன் அடைந்தவனாவான்.

    செவ்வாய்க்கிழமைக்கு மங்கள வாரம் என்பது ஒரு பெயராகும். மங்களகரமான மங்கள வாரத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்கஅரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப்பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்துக்கும் பயன்படுத்தி துர்க்கையை பூஜிக்க வேண்டும்.

    பூஜையின்போது சொல்வதற்கு `ஸ்ரீதுர்க்கா சந்திர கலாஸ்துதி' என்ற தோத்திரமாலை அனைவருக்கும் உதவக்கூடியது.

    தமிழில் `துர்க்காஷ்டகம்' ராகு கால துர்க்காஷ்டகம், `துக்க நிவாரண அஷ்டகம்', ரோக நிவாரண அஷ்டகம் ஆகியவை ஏற்றவையாக இருக்கும். தீபத்திலோ, கடத்திலோ, சித்திரத்திலோ, யந்திரத்திலோ அல்லது இதயத்திலோ துர்க்கையை வைத்து பூஜிக்கலாம்.

    நவக்கிரகங்களில் மிக வலிமை பொருந்திய ராகு பகவான், மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையை பூஜித்து, மகிழ்ச்சியான முகத்துடனும், நிறைந்த தனத்துடனும் விளங்குவதால்தான் மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜை செய்ய வேண்டுமென்று சித்தர்கள் சொல்கிறார்கள்.

    குறிப்பாக ராகு காலப் பிரீத்தி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, விவாகப் பிராப்தி, பீடைகள் விலகுதல், பகைகள் நீங்குதல், காரிய சித்தி ஆகிய நோக்கங்களுக்காக இப்பூஜை மேற்கொள்வது நல்லது.

    ராகு காலத்தில் திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள துர்க்காதேவியை வழிபடுவது சிறப்பு. நல்ல மஞ்சள் நிறத்துடன் கூடிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி இரு கிண்ணங்களாளகவும் எதிர்பபுறம் மடக்கி குழியாக்கி அவற்றை திரி விளக்குகளாக பயன்படுத்த வேண்டும்.

    சுத்தமான நல்லெண்ணை, நெய், தேங்காய் எண்ணை ஆகியவற்றைத்தான் தீபத்திற்கு பயன்படுத்த வேண்டும் ஆயுள் பலத்துக்காக செய்யப்படும் பூஜையின்போது வேண்டுமானால் இலுப்பை எண்ணையைப் பயன்படுத்தலாம்.

    ராகு காலத்தில் துர்க்கை சந்நிதியில் சுவாசினியை (முதிய சுமங்கலி பெண்களை) நமஸ்கரிக்கின்றவர்கள், எல்லா நலன்களையும் பெறுவார்கள். அங்கு சுவாசினிகளுக்கு தாம்பூலமம், தட்சிணையும் வழங்குகிறவர்கள் துர்க்கையின் அருளுக்குப் பாத்திரமாவார்கள்.

    துர்க்கை சந்நிதியில் கன்னிப் பெண்களுக்கு கால்களில் நலங்கிட்டு, கைகளில் வளையலிட்டு, பூச்சூட்டி, புத்தாடை வழங்கிய பூஜிப்பவர்கள் மற்றவர்களால் பூஜிக்க தகுந்த வாழ்க்கையை அடைவார்கள்.

    தில்லை அம்பலவாணர் (நடராஜர் சன்னதி)

    வடகிழக்கில் தெற்கு நோக்கி வெள்ளித்தேர் மற்றும் வாகன மண்டபம் அருகில் அறங்காவலர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

    அடுத்து, நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடராஜர் அபிஷேகம் திருவாதிரை உற்சவம்- மாணிக்கவாசகர் விழா சிறப்பு சொற்பொழிவுடன் திருவாசகம் ஓதப்பெற்று நடைபெற்று வருகிறது.

    • காளிகாம்பாள் கோயில் முன்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருந்த இடத்தில் இருந்தது.
    • காஞ்சீபுரம்-திருவண்ணாமலையுமாக இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும்

    சென்னை தம்புச்செட்டி தெருவிர் பிரமாண்டமான கோபுரத்துடன் வீற்றிருக்கிறது ஸ்ரீகாளிகாம்பாள் கமடேஸ்வரர் ஆலயம்.

    முன்பு காளிகாம்பாள் கோயில் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை இருந்த இடத்தில் இருந்தது. அப்போது இது ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு சொந்தமான இடமாக இருந்தது.

    அம்மனை வணங்குவதற்காக அவ்விடத்தில் கூடும் மக்கள் திருவிழா, வேடிக்கை ஆட்டம் பாட்டம் என்று பல்வேறு வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் கோலாகல கொண்டாட்டத்துடன் கொண்டாடி வந்தனர்.

    அதைத்தொடந்து ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அக்கோவிலில் வழிபட்டு வந்த பக்தர்களை அழைத்து இக்கோவிலை வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள் அதற்கான வசதியை நாங்கள் செய்து தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

    அதைத் தொடர்ந்தே காளிகாம்பாளை சென்னை தம்புச்செட்டி தெருவில் நிர்மானித் திருக்கிறார்கள். முதலில் காளிகாம்பாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வீற்றிருந்ததால் இதை கோட்டை அம்மன் என்றும் அழைக்கிறார்கள்.

    2 தலங்களை தரிசித்த பலன்

    முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர் திருவண்ணாமலையை தரிசித்து விட்டு காஞ்சியை தரிசிக்க வேண்டும் என ஆவல் கொண்டார். அதற்காக நைமி சாரண்யத்தில் உள்ள முனிவர்களைச் சந்தித்து காஞ்சீபுரம்-திருவண்ணாமலையுமாக இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்த பலனைத் தரக்கூடிய ஆலயம் எது என்று கேட்டார்.

    அதற்கு முனிவர்களில் ஒருவரான சூதபுராணிகர், மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தம் இரு கண்களாக அமையப் பெற்றவள் ஸ்ரீகாளிகாம்பாள் அந்த சிறப்பு பெற்ற தலம் சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் தான் என்று கூறி அருளியிருக்கிறார்.

    • காளிகாம்பாள் மேற்கு நோக்கி இருந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்து வருகிறாள்.
    • குபேரன் இத்தலத்திற்கு வந்து அம்மனை வணங்கி தனவந்தனாக ஆனான் என்பது வரலாறு

    இந்த கோவிலில் சிறப்பு அம்சங்களில் ஒன்று அம்மன் மேற்கு நோக்கி எழுந்தருளியிருப்பது. பொதுவாக அம்மன்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருப்பதைப் பார்த்து இருப்போம்.

    ஆனால் இங்குள்ள காளிகாம்பாள் மேற்கு நோக்கி இருந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்து வருகிறாள். இவ்வாறான நிலை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

    செல்வத்துக்கு அதிபதியான குபேரன் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீகாளிகாம்பாள் அம்மனை வணங்கிய பிறகு தான் பெரும் தனவந்தனாக ஆனான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    தென்னிந்திய பகுதியில் மராட்டிய வீர சிவாஜி படையெடுத்த போது காளிகாம்பாள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீகாளிகாம்பாள் அர்த்த பத்மாசனத்தில் பாசங்குசத்தை கையில் ஏந்தி கமலத்தில் புன்னகை செய்து வீற்றிருக்கிறாள். அம்பாளின் திருவடியில் திரிசிரனின் மூன்று தலைகள் நன்கு செதுக்கப்பட்டுள்ளன.

    மூலவர் உட்பிரகாரத்தின் மேற்கில் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது. ஸ்ரீஅம்பாள் பெரிய நாயகி (உற்சவர்) மகாதேஜசுடன் மகாலட்சுமியாகவும், மகாசரஸ்வதியாகவும் இரு பக்கங்களிலும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள்.

    உற்சவ மண்டபத்திற்கு கிழக்கில் சிற்ப வேலைபாடுகளுடன் கருங்கல்லிலான பதினாறு கால் மண்டபம் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மண்டபத்தில் அமைந்துள்ள எட்டுத் தண்களில் சிற்சிறு வடிவங்களில் பாலகிருஷ்ணன் வழிபாடும் பெண்தபசி, பெண் சேவார்த்திகள் சிற்பங்கள் கலை வேலைப் பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.

    வடமேற்கு பகுதியில் துணைவிகள் சமேதராக காட்சியளிக்கும் சித்தி-புத்தி விநாயகரும் அருகில் உள்ள அகோர வீரபத்திர சுவாமி, மாகாளியும் மகிமை நிறைந்தவர்கள் என்கிறார்கள்.

    பவுர்ணமி தினத்தன்று அகோர வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தினால் பில்லி,சூனியம் ,பேய், பிசாசு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    தென் மேற்கு மூலையில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மையாருடன் அமர்ந்து அன்னை நெய்தல், நிலக்காமாட்சியாக காட்சி அளிக்கிறாள். வடக்கில் ஸ்ரீ வீரபிரமங்கார் சன்னதி அமைந்துள்ளது.

    எலும்புக்கூடாக பிருங்கி முனிவர்

    காளிகாம்பாள் சந்நிதியில் பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் உடல் இளைத்து எலும்புக்கூடாக நிற்கிறார். அவர் பார்வதிதேவியை அவமதித்து பெற்ற சாபம் காரணமாக பல தலங்களுக்கு சென்று கடைசியாக இங்கு வந்து சேர்ந்தார். சக்தி இன்றி சிவனில்லை என்பதை அவர் உணர்ந்த பிறகே சாபவிமோசனம் பெற்றார்.

    வழிபாட்டின் பயன்

    தஞ்சம் என்று வருவோரின் சஞ்சலம் போக்கி மங்கலம் அருள்வாள். பல மகத்துவங்களை புரிவதன் மூலம் கலியுகத்தில் ஓர் கண்கண்ட தெய்வமாக காட்சி தருகிறாள்.

    அன்னை காளிகாம்பாள் திருத்தலம் திருத்தலம் நோக்கி வருவோர் அம்பாளிடம் சரணடைந்து, அவளைத் தோத்தரித்து ஐந்து வாரங்கள் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை பெற்றுச் செல்கின்றனர். அதனால் குறைபாடு நீங்கப் பெறுகின்றனர். தாய்மைப்பேறு பேறு அடைகின்றனர்.

    தீராத பிணிகள் யாவும் தீர்க்கப் பெற்றுத் திரும்பு-கின்றனர். பேய், பிசாசு, பில்லி சூன்யம் விலகப் பெற்று புத்துணர்ச்சி பெறுகின்றனர். மாங்கலயப் பலம் நிலைக்கப் பெறுகின்றனர்.

    பொதுவாக குறைகள் அத்தனையும் விலகி நிறைவு பெற்றுத் திரும்புகின்றார்கள். இவ்வரிய உண்மையை அறிய ஒருமுறை வடசென்னை தம்புச் செட்டித் தெரு அன்னை காளிகாம்பாள் ஆலயத்திற்கு சென்று வந்தால்தான் தெரியும். அன்னை காளிகாம்பாள் அருளடி சரணே!

    • மஹா மேருவின் மையப் பகுதியில் பிரணவ ரூபத்தில் அம்பிகை உள்ளாள்.
    • 43 முக்கோணத்தில் 64 தத்துவங்கள் அடங்கியுள்ளது.

    அம்பிகையின் அருவுருவ நிலையான மேரு ஸ்ரீசக்ரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

    புருஷ ரூப சக்தி 32-ம் சக்தி ரூப பகுதி 32-ம் ஒன்றேடொன்று இணைவதால் 43 முக்கோணமும், பிந்துவும் வெளியில் தெரிகின்றது. மற்ற கோணங்கள் உள்ளே மறைந்து விடுகின்றது.

    இந்த 43 முக்கோணத்தில் 64 தத்துவங்கள் அடங்கியுள்ளது.

    இதன் அடிப்படையிலேயே பரதக் கலையில் 64 அபிநயமும் இசையில் 64 ராகமும் சிற்ப சாஸ்திரத்தில் 64 பாவமும் தேரின் கால்கள் 64-ம் அம்பிகை அமரும் தாமரை மலரின் 64 இதழ்களும் நம் பெண்டிர் அணியும் திருமாங்கல்யத்தில் 64 துண்டுகள் இணைத்தலும் வழக்கில் உள்ளது.

    ரத்தினத்திலும் 64 பட்டை தீட்டப்பட்டதே இதன் அடிப்படையில் ஆகும்.

    மேருவின் மையப் பகுதியில் பிரணவ ரூபத்தில் அம்பிகை உள்ளாள். மேரு அர்த்த மேரு, மகா மேரு என இரு வகைப்படும்.

    அர்த்த மேரு என்றால் பாதி அல்லது அகலத்தில் பாதி உயரமாகக் கொண்டு அமைப்பதாகும்.

    இதில் இரு வகையுண்டு. ஒன்று அகலத்தில் பாதி உயரம் வரை 43 முக்கோணங்களையும் படிப்படியாக அமைத்தல், மற்றொன்று அகலத்தில் பாதியளவு உயரம் வரை வைத்து பின் மேற் பகுதியில் ஸ்ரீசக்ரத்தினை வரைவதாகும்.

    அகலமும் உயரமும் ஒரே அளவில் அமைந்து விளங்குவது ஸ்ரீமகா மேரு ஆகும். கருணைக் கடலாகிய அன்னையின் அருவுருவமே மேரு ஆகும்.

    இதனை முறைப்படி தயாரித்து வழிபடுவதன் மூலம் சகல நன்மைகளையும் பெறலாம். இகத்தில் சுகமும் பரத்தில் அமைதியும் பெறலாம்.

    இத்தகைய பெருமை வாய்க்கப் பெற்ற ஸ்ரீசக்ரத்தை ஆதிசங்கரர் முக்கிய சக்தி ஆலயங்களில் ஸ்தாபித்தார்.

    காஞ்சி காமாட்சியம்மன் பாதத்தில், குற்றாலத்தில் ஸ்ரீசங்கர மடத்தில், ஆவுடையார் கோவில் மூல ஸ்தானத்தில் சென்னை ஸ்ரீகாளிகாம்பாள ஆலய மூல ஸ்தானத்தில் இன்றும் அவைகளைக் காணலாம்.

    கிண்ணித் தேர் தவிர, ஸ்ரீஅம்பாள் வெளிப் பிரகார மண்டபத்தில் பிரதட்சணம் வர, 125 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகள் பதித்த வெள்ளி ரதம் அமைக்கப்பட்டு 2.3.1995 அன்று வெள்ளோட்ட விழா செய்யப் பெற்றது.

    பக்தர்கள் இன்றளவும் கட்டணம் செலுத்தி, வெள்ளித் தேர் உற்சவம் நடத்தி அம்பாளை வழிபட்டு மகிழ்கின்றனர்.

    சீரோங்கு சென்னையில் பாரோங்கும் பலகோவில்

    சாரோங்கு காளிக்கோட்டம் கதிர்மதி தொழும்கோட்டம்

    ஊரோங்கும் ஒரு கோவில் உயர்விஸ்வகர்மர் கோவில்

    தேரோங்கும் ஸ்ரீசக்ரம்திகழ் திருக்காளிகாம்பாள் திருக்கோவில்.

    காளிகாம்பாளைத் தொழுதால் கன்னியர் மணம்முடிப்பர்

    காளையர் வேலைபெற்று இல்லறம் சிறக்க வாழ்வர்

    நூலையும் கற்பர் சிறுவர் நுண்கலை பயிர்வார் சிற்பி

    காளிதாளையே பற்றினார்கள் தனியரசாள்வர் தாமே

    புவியினில் பிறந்தோர் வாழ புண்ணியச் செயல்கள்தேவை

    தவித்திடும் ஏழைகட்கு தண்ணீரை வார்க்க வேண்டும்

    பசித்திடும் பாமரர்க்கு பாலன்னம் கொடுக்க வேண்டும்

    வலித்திடும் நோயினார்க்கு வளமான வார்த்தை வேண்டும்

    இனித்திடும் காளிகாம்பாள் இவையெல்லாம் ஈவாள் வாழ்க!

    தனித்திரு மனமே நித்தம் தாய்தினம் நம்மைக் காப்பாள்

    பணிந்திடு பரவி வாழ்த்து பதமலர் பற்றிக் கொள்வாய்

    கனிந்திடு கல்நெஞ்சத்தை கரைந்துநில்

    • பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
    • ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும்.

    மஞ்சளும், குங்குமமும் மகத்துவம் நிறைந்தது என்று நமது இந்து மத சாஸ்திரங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டும் இல்லாமல் எந்த மங்கள செய்கைகளும் மகத்துவம் பெற முடியாது.

    கோவிலாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சரி, அவசியம் வழிபாடுகளில் மஞ்சள், குங்குமம் இடம் பெற்றிருக்கும்.

    குறிப்பாக அம்பாள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு குங்குமம் முக்கியமானது.

    திருமணம், வீடு கிரகபிரவேசம் உள்ளிட்ட சடங்குகளில் நாம் உன்னிப்பாக கவனித்தால் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதில் குங்குமமிட்ட பிறகுதான் மற்ற செயல்கள் தொடங்குவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அது போலத்தான் ஒரு பெண்ணை மங்களகரமாக தோன்ற செய்வதும் மஞ்சள்-குங்குமம்தான்.

    ஒரு பெண் தன் நெற்றில் குங்குமம் வைத்துக் கொண்ட பிறகு பாருங்கள், அந்த பெண்ணுக்கும் குங்குமத்துக்கும் தனி மரியாதை உண்டு.

    பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்தில் குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக் கொள்வதுண்டு. இதுதான் சுமங்கலிக்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது.

    இதனால்தான் அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்தை பெண்கள் மிகப்பெரும் பாக்கியமாகக் கருதிப் பெற்றுக் கொள்வதுண்டு. அதிலும் சில அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்துக்கு இரட்டிப்பு சக்தி உண்டு.

    அந்த வகையில் பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் குங்குமத்துக்கு தனித்துவம் உண்டு.

    இத்தலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் குங்குமத்துடன் எலுமிச்சம் பழமும் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

    காளிகாம்பாளை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு, முடிந்தால் அவள் முன் உள்ள சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து அவளை வழிபட்டு தியானிக்கலாம். மனம் நிறைவு பெறும் வரை இந்த தரிசனத்தை மேற்கொள்ளலாம்.

    பிறகு அம்பாளிடம் விடை பெற்று, வலது புறம் உள்ள கமடேஸ்வரர் சன்னதிக்கு வந்து வழிபட வேண்டும். அந்த சன்னதி அருகில்தான் குங்கும பிரசாதம் வழங்குவார்கள்.

    அந்த குங்குமம் உங்கள் திருக்கரங்களில் பட்டதுமே நீங்கள் மெய்சிலிர்த்துப் போவீர்கள். அந்த குங்குமத்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.

    அத்தகைய குங்குமம் உங்கள் பரந்த நெற்றியை அலங்கரிக்கும் போது, மகத்துவம் அதிகரித்து விடும்.

    உங்களை எந்த பார்வையும், திருஷ்டியும், ஏவலும் அண்டவே அண்டாது. இது நிஜம்.

    ஆண்டாள் சன்னதியில் பாருங்கள், அவள் நெற்றிக் குங்குமம் இல்லாமல் இருப்பதே இல்லை. அந்த குங்குமம், அவள் கண்ணன் மீது கொண்டுள்ள அன்பை காட்டும்.

    அதுபோலவே காளிகாம்பாள் தலத்தில் தரும் குங்கும் இட்ட பெண்களைப் பாருங்கள், அவர்கள் அம்பாளின் நல்ல அருளை முழுமையாகப் பெற்றவர்களாகக் காட்சியளிப்பார்கள்.

    • ஓம் அருள்நிறை அம்மையே போற்றி ஓம் அமுத நாயகியே போற்றி
    • ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

    ஓம் அகிலாண்டநாயகியே போற்றி

    ஓம் அருமறையின் வரம்«ப போற்றி

    ஓம் அறம் வளர்க்கும் அம்மையேபோற்றி

    ஓம் அரசிளங் குமரியே போற்றி

    ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி

    ஓம் அமுத நாயகியே போற்றி

    ஓம் அருந்தவ நாயகியே போற்றி

    ஓம் அருள்நிறை அம்மையே போற்றி

    ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி

    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆலால சுந்தரியே போற்றி

    ஓம் ஆனந்த வல்லியே போற்றி

    ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி

    ஓம் இமையத்தரசியே போற்றி

    ஓம் இடபத்தோன் துணையே போற்றி

    ஓம் ஈஸ்வரியே போற்றி

    ஓம் உயிர் ஓவியமே போற்றி

    ஓம் உலகம்மையே போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

    ஓம் எண் திசையும் வென்றாய் போற்றி

    ஓம் ஏகன் துணையே போற்றி

    ஓம்ஐயம் தீர்ப்பாய்போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி

    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி

    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

    ஓம் கனகமணிக் குன்றே போற்றி

    ஓம் கற்பின் அரசியே போற்றி

    ஓம் கருணை யூற்றே போற்றி

    ஓம் கல்விக்கு வித்தே போற்றி

    ஓம் கனகாம்பிகையே போற்றி

    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி

    ஓம் கற்பனைக் கடந்த கற்பமே போற்றி

    ஓம் காட்சிக் கினியோய் போற்றி

    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

    ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி

    ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி

    ஓம் கிளியேந்திய கரத்தோய்போற்றி

    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி

    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி

    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி

    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி

    ஓம் சக்தி வடிவே போற்றி

    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி

    ஓம் சிவகாமி சுந்தரியே போற்றி

    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

    ஓம் சிவயோக நாயகியே போற்றி

    ஓம் சிவானந்த வல்லியே போற்றி

    ஓம் சிங்கார வல்லியே போற்றி

    ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி

    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி

    ஓம் சேனைத் தலைவியே போற்றி

    ஓம் சொக்கர் நாயகியே போற்றி

    ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி

    ஓம் ஞானாம்பிகையே போற்றி

    ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

    ஓம் தமிழ்க் குலச்சுடரே போற்றி

    ஓம் திருவுடையம்மையே போற்றி

    ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருநிலை நாயகியே போற்றி

    ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி

    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

    ஓம் தென்னவன் செல்வியே போற்றி

    ஓம் தேன்மொழி யம்மையே போற்றி

    ஓம் தையல் நாயகியே போற்றி

    ஓம் நற்கனியின் சுவையே போற்றி

    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

    ஓம் நல்ல நாயகியே போற்றி

    ஓம் நீலாம்பிகையே போற்றி

    ஓம் நீதிக்கரசியே போற்றி

    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

    ஓம் பழமையின் குருந்தே போற்றி

    ஓம்பரமானந்தப் பேருக்கே போற்றி

    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி

    ஓம் பசுபதி நாயகியே போற்றி

    ஓம் பாகம் பிரியா அம்மையே போற்றி

    ஓம் பாண்டிமாதேவியின் தேவி போற்றி

    ஓம் பார்வதி அம்மையே போற்றி

    ஓம் பிறவிப்பணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பேரிய நாயகியே போற்றி

    ஓம் போன்மயிலம்மையே போற்றி

    ஓம் போற்கொடி அம்மையே போற்றி

    ஓம் மங்கல நாயகியே போற்றி

    ஓம் மழலைக் கிளியே போற்றி

    ஓம் மனோன்மனித் தாயே போற்றி

    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி

    ஓம் மாயோன் தங்கையேபோற்றி

    ஓம் மாணிக்க வல்லியே போற்றி

    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி

    ஓம் மீனாட்சி யம்மையே போற்றி

    ஓம் முழுஞானப் பேருக்கே போற்றி

    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

    ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி

    ஓம் வடிவழ கம்மையே போற்றி

    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி

    ஓம் வேதநாயகியே போற்றி

    ஓம் சவுந்த ராம்பிகையே போற்றி

    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி

    ஓம் ஸ்ரீகாளிகாம்பாள் அம்பிகையே போற்றி போற்றி

    • ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
    • சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா

    ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, ஏழாம் நாளன்று காலையில் ரதோற்சவம் பூந்தேராகவும் ஒன்பதாம் நாள் இரவில் `கிண்ணித் தேர்' என்னும் அற்புத ஸ்ரீசக்ர ரதம், வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு காளிகாம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்து வந்தது' என்று ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் எச்.டி.லவ் என்பவர் தமது `சென்னை நகர வரலாறு' என்னும் நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த அற்புதக் கிண்ணித் தேர் காலத்தால் பழுதுபட்டு விட்டதால், சுமார் 22 அடி உயரத்தில் புதிதாக ஒரு நூதனக் கிண்ணித் தேர் செய்து முடிக்கப்பட்டு 24.5.1987 அன்று கரிக்கோலம் வெள்ளோட்ட விழாவும், பிரம்மோற்சவம் 7-ம் நாள் 7.6.1987 அன்று காலை பூந்தேராகவும், 9-ம் நாள் 9.6.1987 அன்று இரவு கிண்ணித் தேராகவும் ஸ்ரீஅம்பாள் கொலுவீற்று திருவீதி உலா வருவதைப் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதைப் பக்தர்கள் வந்து நேரில் பார்த்தால்தான், அதன் மகிமையை உணர முடியும்.

    இத்தேரினை காலம் சென்ற திருவண்ணாமலை ஸ்தபதி சண்முகாச்சாரியாரால் மதிப்பீடு வரைப்படங்கள் அமைக்கப்பட்டு, பிறகு சுவாமிமலை ஸ்தபதிகள் பிரம்மஸ்ரீ நடராஜ ஸ்தபதி, பிரம்மஸ்ரீ கே.வேலு ஸ்தபதியின் சீரிய முயற்சியால் நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    கிண்ணித் தேர் விழாவினை முதல் கவர்னர் பிட் நிறுத்தினார். சென்னை இரண்டாம் கவர்னர் சாண்டர்ஸ் காளிகாம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்து 21.9.1790-ல் பக்தர்களோடு தாமும் தேரின் வடத்தைக் கையால் பற்றி இழுத்து பரவசப்பட்டார்.

    ஸ்ரீசக்ரத் திருத்தேர்

    தேர் திருவிழாவில் ஓர் சமுதாய தத்துவம் அடங்கியுள்ளது. தேரை இழுக்க ஒருவரால் முடியாது. எனவே, பலருடைய ஒத்துழைப்பும் முழுமையாக தேவை. சும்மா கையை வைத்து இருந்தால் தேர் நகராது.

    பலரும் முழுமையாக செயல்பட்டாலும் பலரும் பலதிசையில் இழுத்தாலும் தேர் நகராது ஒரு முகப்பட்டு ஒரே திசையில் இழுக்க வேண்டும். ஆக அப்படி இழுத்தாலும் ஒரு நொடிப் போழுதில் நிலையை அடைவதில்லை. காலம் தேவைப்படுகின்றது.

    அதுபோலவே, சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா கொண்டாடினர்.

    சென்னைபுரி ஸ்ரீகாளிகாம்பாள் ஸ்ரீசக்ரத்தேர் மிகவும் அழகும் சக்தியும் வாய்ந்த திருத்தேராக காட்சி அளிக்கின்றது.

    பிரம்மோற்சவத்தில் இரவில் ஒலிக்கும் வெண்கல ஓசை `ஓம் ஓம்' என்ற பிரணவ ஓசையை நம் செவியில் இனிய இசையாக ஒலிக்கும் என்பதை நேரில் கண்டவர் கூறுவர்.

    தேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும், யட்சர்களும் கின்னரர்களும், கந்தருவர்களும் வசிப்பார்கள். உருத்திர கணிகைகளும், ரிஷிகளும் வசிப்பார்கள்.

    இவர்களின் சிற்பகங்கள் தேரின் அடிப்பாகத்தினைச் சுற்றிலும் இருக்கும். மேலும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் இவர்கள் அதிதேவதைகளாக இருப்பர்.

    தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்குச் சமானம்.

    `விராட் விஸ்வ சொரூபமே எட்டு அடுக்காகும்'

    உச்சியிலிருக்கும் கலசம் சோடசாந்தம். அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம். அதற்கு அடுத்த கீழ் அடுக்கு மத்தகஸ்தானம். அடுத்த அடுக்கு புருவ மத்தியஸ்தானம். நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் முன் மூன்று துளைகள் மூன்று கண்கள் பின்புறம் உள்ளது. சிகையும் இட, வலக்காதுகளும் ஆகும்.

    இறைவன் எழுந்தருளும் கேடய பீடம் முகம். குதிரைகள், சூரிய, சந்திர கலைகள் சாரதி அக்னி கனல் இவை நாசி (மூக்கு) ஆகும். அடுத்த கீழ் அடுக்கு கண்ட ஸ்தானம். அதை அடுத்த கீழ் அடுக்கு இருதய ஸ்தானம். அதற்கடுத்த நாபிஸ்தானம். அதை அடுத்து குண்டலி ஸ்தானம்.

    சக்கரங்கள் தசவாயுக்கள்.

    இறைவி இதற்கு கர்த்தா `தான் ஒருத்தியே' என்று உணர்த்தி இவ்வாறு அமைந்த பிண்ட தத்வ சரீரமாகிய ரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி அசைவற்ற மனதை உந்தி குண்டலினியில் இருந்து நாபிக்கும், நாபியில் இருந்து கண்டத்திற்கும் அதில் இருந்து வாயிக்கும் முறையே ரத குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண்கள் வழியாகவும் நடுவழியாகவும் மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவத்திற்கும் ஏற்றி வயப்பட்டு சும்மாயிருந்தபடி இருக்கும் நித்ய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது.

    மேலும் தேரானது திரிபுராதிகளை சிவன் சிரித்து எரித்து ஆன்மகோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கு அறிகுறியாக உள்ளது. இவ்வளவு தத்துவமுள்ள தேரில் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் வருவதை தரிசிப்பது அஷ்டலட்சுமி கடாட்சமும் கோடி புண்ணியங்களும் உண்டு.

    • ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் இளமையிலேயே ஞானம் கைவரப் பெற்று பஞ்சகர்மாக்களை உபதேசம் செய்தார்.
    • மாதா-பிதா மனம் நோகாது அவர்கள் வாழும் வரை பேணி பாதுகாத்து அவர்களுக்கும் இவ்வையகத்திற்கும் புகழ் சேர்ப்பது.

    கி.பி. 1604-ம் ஆண்டு விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு பின் ஆந்திரப் பிரதேசத்தில் பிரம்மஸ்ரீ பரிபூரணாச்சாரியாரின் பிரக்குராம்பா தம்பதியர்கள் செய்த தவப்பயனால் ஈன்றெடுத்த தவப் புதல்வர் ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர்.

    கர்நாடக மாநிலத்தில் நந்தி கொண்டா என்ற கிராமத்தில் ஸ்ரீவீரபோஜாச்சாரியார் வீரபாப்பம்மாள் தம்பதியரால் வளர்க்கப்பட்டவர் `ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவர்' இளமையிலேயே ஞானம் கைவரப் பெற்று பஞ்சகர்மாக்களை உபதேசம் செய்தார்.

    மாதா-பிதா மனம் நோகாது அவர்கள் வாழும் வரை பேணி பாதுகாத்து அவர்களுக்கும் இவ்வையகத்திற்கும் புகழ் சேர்ப்பது.

    இறை வழிபாடு- தெய்வ சிந்தனையின் காரணத்தால் பாப காரியங்களினின்றும் விடுபட்டு அன்பும் அறமும் அருளோடு பெற்று வாழ்வது.

    பிற உயிர்களை கொல்லாமல் (ஜீவ ஹிம்சை) கொல்லாமையை கடைப்பிடிப்பது.

    பித்ரு கடன் இறைவனடி சேர்ந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபடல்.

    பசித்தவர்களுக்கு பசி நீக்குதல் அன்னம் பாலிப்பு.

    இவை ஐந்தும் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டுமென்று எடுத்துக்கூறினார்.

    சென்னை வருகை

    1629-ம் ஆண்டில் சென்னை மாநகரம் வந்தார். சென்னை மாநகரில் சூளை அவதான பாப்பையர் வீதியில் தங்கிருந்த வீரசுப்பையா சுவாமிகள் தன் தத்துவ யோக விளக்கத்தால் மக்களை கவர்ந்தார். கந்தசாமி பிள்ளை, சிவப்பிரகாசம் பிள்ளை இருவரும் சுவாமிகளிடம் அருட்தீட்சைப் பெற்று வீர கந்தையா என்றும் வீர சுப்பையா என்றும் குருவின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டனர்.

    சூளை பகுதியில் ஒரு மடம் வீர சுப்பையா மடமும், வியாசர்பாடியில் வீரகரப்பாத்திர வீரய்யா சுவாமிகளும் சமாதி அடைந்துள்ளனர். இன்றும் அம்மடங்கள் உள்ளன.

    ஸ்ரீவிராட் போத்தலூரி வீரப்பிரம்மேந்திரர் சுவாமிகள் அருளிய காலக்ஞான நூல் உலகம் வாழ வழிகாட்டியாக உள்ளது. ஜீவன் முக்தராக இன்றும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

    • எங்கெல்லாம் குடமுழுக்கு விழாக்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சிவாச்சாரியரை காணலாம்.
    • மேற்கு திசை நோக்கி கமடேஸ்வரராக சேவை சாதிக்கிறார்.

    தேவாசுரர் பாற்கடலை கடைந்தபோது மந்திர மலை பாரம் அதிகமாகிக் கடலுக்குள் செல்ல ஆரம்பித்தது. கடலுக்குள் மலை செல்லாத வண்ணம் திருமால் ஆமை உருவெடுத்து மந்திர மலையைத்தன் முதுகில் சுமந்து கடலைக் கடைய உதவியருளினார்.இது தான் (கமடம்) கூர்ம அவதாரம்.

    வருணன் மேற்கு திசைக்கு அதிபதி இதனால் தான் அவனுக்கு காட்சித் தந்த பெருமாளும் மேற்கு திசை நோக்கி கமடேஸ்வரராக சேவை சாதிக்கிறார்.

    தெய்வத்திரு தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் விஸ்வகர்ம ஜெகத்குருவின் ஆத்ம நண்பரும், அநேக திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவினை செய்தவரும், சிறந்த தேவி உபாசகருமாகிய தெய்வத்திரு தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசாரியார் குமாரர்கள் தேவியின் நித்ய பூஜை சிறப்புற நடைபெற உறுதுணையாகத் திகழ்கின்றனர்.

    சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோவிலின் சைவ ஆகம பூஜை விதிப்படி நடத்த திருமழிசை சிவத்திரு ஈ.ஷண்முக சிவாசாரியார் அவர்களை நியமித்தனர் விஸ்வகர்ம பெருமக்கள்.

    அவர் மிகவும் பாடுபட்டு ஸ்ரீகாளிகாம்பாளின் அருளை உலக மக்கள் அறிய வைத்தார். அவர் 1961 செப்டம்பர் 21-ல் தேகவியோகம் ஆன பின் அவருடைய இளைய குமாரர்கள் தேவியின் நித்ய பூஜை சிறப்புற நடைபெற உறுதுணையாகத் திகழ்கின்றனர்.

    இக்கோவிலின் திருப்பணியிலும் இதன் முன்னேற்றத்திலும் சைவத்திரு. டாக்டர். தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசாரியார் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

    குலபூஷணம் தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் அவர்கள் இந்து தர்மத்தைக் கட்டி காத்து இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்யும் மகத்தான பணியில் திலகமாக விளங்கினார்.

    எங்கெல்லாம் குடமுழுக்கு விழாக்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சிவாசார்யர் அவர்களைக் காணலாம். உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் செய்து வைக்கும் குட முழுக்கு விழாக்கள் பலப்பல, விழாக்கள் மூலம் வரும் தொகையை காளிகாம்பாள் தேவிக்கே திருப்பணிக்கே அளித்து வந்துள்ளார். இது யாம் அறிந்த உண்மை.

    வெள்ளிக்கிழமைகள் தோறும் கன்னி பூஜை நடத்திடவும் கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடந்திடவும் ஏற்பாடு செய்ததும் சிவாசாரியாரின் பெரு முயற்சியே திருக்கோவில் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிவத்திரு டாக்டர் தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் ஆவார்.

    அவர் தேகவியோகம் ஆனபின், அவரது இளைய செல்வராகிய தி.சா.காளிதாஸ் சிவாசாரியார் `தந்தையர் ஒப்பர் மகள்' என்பதற்கிணங்க காளிகாம்பாள் கோவில் வளர்ச்சியில் அறங்காவலர்களும் ஆசார்யர்களும் இணைந்து அற்புதமான மேலைக்கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

    திருக்கோவில் வளர்ச்சிக்கு 1. மூர்த்தம், 2. குருக்கள், 3. அறங்காவலர்கள் மூவரும் இணைவது தான் சக்தி மயம். மூர்த்தம் காளிகாம்பாள், குருக்கள்- குரு வடிவில்- தாயைக் காட்டுவித்தல்.

    அறங்காவலர் அறவழியில் நின்று ஆலயத்திற்கு சேவை நெய்தல், ஆலய பணியே அறப்பணி, அதற்கே தன்னை அற்பணி என்று அருட்பணி செய்தல்.

    இவ்மூவகை அம்சமும் திகழ்வது சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலே ஆகும். உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை...!

    • கடற்கரைப்பட்டினங்களாகிய மும்பையும், கொல்கத்தாவும், சென்னையும் ஸ்ரீதேவியின் பெயரால் உண்டாயின.
    • சென்னம்மன் குப்பத்தின் காளியே இன்று சென்னை காளிகாம்பாளாக காண்கிறோம்.

    கடற்கரைப்பட்டினங்களாகிய மும்பையும், கல்கத்தாவும், சென்னையும் ஸ்ரீதேவியின் பெயரால் உண்டாயின. மும்பாதேவியின் பெயரால் மும்பையும், காளியின் பெயரால் கல்கத்தாவும், சென்னம்மன் பெயரால் சென்னப்பட்டினமும் விளங்குகின்றன.

    கி.பி. 17-ம் நூற்றாண்டில் வழங்கிய `மராட்டா டவுன்' என்பதே இன்றுள்ள முத்தியால்பேட்டையும், பவழக் காரத் தெருவுமாகும். சென்னம்மன் குப்பத்தின் காளியே இன்று சென்னை காளிகாம்பாளாகத் காண்கிறோம்.

    கி.பி. 1639-ல் ஆங்கிலேயர் விலைக்கு வாங்கிய சென்னக் குப்பம், வடவாறு குப்பம், மதராஸ் குப்பம். இவைகளையடுத்த நெய்தல் நிலங்கள் யாவும் யாருமற்ற காடுகளாக இருந்தன. இக்காட்டினுள் சிறு புதர்களை அழித்துக் குறும்பர்கள் பூந்தமல்லி வரையில் களிமண் கோட்டைகள் கட்டி வசித்தனர்.

    இந்நிலப்பகுதியை நோ மேன்ஸ் லேண்ட் என ஆங்கிலேயர் தம் குறிப்பில் கூறியுள்ளனர்.

    கடற்கரைக் குப்பங்களில் பட்டினவர் வசித்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய- கட்டு மரங்களையும், துடுப்புகளையும், படகுகளையும், பாய்மரங்களையும், நங்கூரங்களையும் செய்து தர 5 தொழிலாளர்கள் சென்னம்மன் கோவில் மாட வீதிகளில் வாழ்ந்தனர்.

    5 தொழிலாளர்களை `பஞ்ச புத்திரர்' என்றும் `விசுவகருமர்' என்றும் கூறினர். சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தம் குல தெய்வமாக விசுவ கருமர்கள் தாமே பூசித்துப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள்.

    `சென்ன' - என்னும் சொல்லிற்கு - முருகு, அழகு, இளமை, வலிமை, கம்பீரம் எனப் பல பொருள் உண்டு.

    கடவுள் பெயரையே குழந்தைகளுக்கு இடும் வழக்கம் அன்றும் இன்றும் என்றும் உள்ளது. சென்னப்ப நாய்க் கனுக்கும் அவனது தங்கை சென்னம்மாவுக்கும் பெயரிடக் காரணமாயிருந்தவள் சென்னைக் குப்பத்தின் காளியம்மனே.

    இக்காளியம்மனுக்கு பட்டின வரும், விசுவகர்மர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் அத்தேவி `சென்னம்மன்' ஆயினாள்.

    புராணங்களில் சென்னம்மன் குப்பத்தில் இருந்து காளிகாம்பாளை `நெய்தல் நிலக்காமாட்சி' என்று கூறப்பட்டுள்ளது.

    கேட்ட வரங்கொடுக்கும் தேவியாக விளங்கியதால்- நெய்தல் நிலக் காமாட்சியைச் செல்வரும், வறியவரும், கல்லாரும் கற்றாரும `சென்னம்மனை' வணங்கிச் சென்றார்கள்.

    இக்குப்பத்தின் தேவியருளால் பிறந்த ஒரு செல்விக்கு `சென்னம்மா' என்று பெயர் அச்சென்னம்மா கீழ்த்திருப்பதியில் கோவில் திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகின்றது.

    சென்ன பட்டினம் காவிரிப்புகும் பட்டினம் போன்று சங்க காலப் பட்டினமாகும். பழைய கற்கால ஆயுதங்களும் பொருட்களும் சென்னை கிண்டியருகே அரசினரால் கண்டெடுக்கப்பட்டது.

    சென்னம்மனுக்குச் சார்த்தும் சிவப்பு புடவை திருவிழா காலங்களில் ஊர்வலத்துக்காகக் காளிக்கு கட்டும் ஒரு வகை ஆடையைக் குறிப்பதே சென்னை எனும் சொல்.

    `சென்னை' `கூறை நாடு' வாங்கி வந்தேன் எனில் இடவாகு பெயராக அவ்விடங்களில் குறும்பரால் நெய்த துணி களையே குறிக்கும்.

    `சென்னை' ஆடைகளையும்- புடவைகளையும் நெய்து விற்கவே காஞ்சியில் இருந்தும் வாலாஜாவில் இருந்தும் நெசவாளர்களைச் சிந்தாதிரிப்பேட்டையில் குடியேற்றினர் ஆங்கிலேயர். இன்றும் அன்று வந்த பட்டு நூற்காரர் எனும் இனத்தவரை சிந்தாதிரிப்பேட்டையில் காணலாம்.

    பேரிச் செட்டி மார் தம் சரக்குகளை விற்க பேரிகை (சென்னை) கொட்டி மக்களை அழைப்பர். வேலூரில் பேரிகாளிகாம்பாள் கோவில் பேரிப்பேட்டை விசுவ கருமர் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

    காளி கோவில் விழா வினையும், கோவில் மூர்த்தியின் புறப்பாட்டினையும் அறிவிக்கும் டமாரத்தைச் சென்னை என்றே கூறினார்கள் பக்தர்.

    சென்னம்மன் குப்பத்தில் இருந்து காளிகோவிலை ஆங்கிலேயர்

    1. கல்யாண டெம்பிள்

    2. கவுளியான பகோடா

    3. காரணேஸ்வரி டெம்பிள்

    4. காமீஸ்வரி பகோடா என்றும் அழைத்தனர்.

    சென்னம்மாள்- அழகான அம்மை

    சென்ன புரி- அழகான கோட்டை

    இத்தகைய எடுத்துக் காட்டுகள் மூலம் சென்னை மாநருக்கு பெயர் கொடுத்தது காளிகாம்பாள் என்பது உறுதியாகிறது.

    ×