search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanchi Ekambaram"

    • ராகு, கேது தோஷங்களையும் நீக்கும் திருத்தலமாகும்.
    • வாயுலிங்கப் பரம்பொருளின் மீது ஏணிப்படிகள் போன்று ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன.

    நான்கு அடி உயரமுள்ள வாயுலிங்கத்தின் கீழே சிலந்தி பாம்பு, யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன. காளான் என்ற பாம்பு மட்டுமன்று ராகு, கேது போன்ற பாம்புகளும் காளத்தீஸ்வரரை பூஜை செய்து நலம் பெற்றுள்ளன. இதனால் இத்திருத்தலம் நாகதோஷங்களையும் ராகு, கேது தோஷங்களையும் நீக்கும் திருத்தலமாக உள்ளது.

    சனிதோஷம் போக்கும் திருநள்ளாற்றுப் தர்பாரண்யேஸ்வரர் போன்று காளத்தீஸ்வரர் ராகு, கேதுதோஷங்களை நீக்குகின்றனர். ராகு, கேது, மட்டுமின்று சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது கிரகங்களும் வாயுநாதனை வழிபட்டு நலமடைந்துள்ளன. வாயுலிங்கப் பரம்பொருளின் மீது ஏணிப்படிகள் போன்று ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன.

    உச்சியில் ஐந்து தலை நாகம் உள்ளது. நவக்கிரகங்களும் சிவபூஜை செய்து வழிபட்ட காரணத்தால் திருக்காளத்தியும் சப்த விடங்கத் தலங்கள் போன்று நவக்கிரக தோஷங்களை நீக்கும் திருத்தலமாக உள்ளது.

    எந்த கிரக தோஷத்திற்கு எந்த கோவிலுக்கு சென்று என்ன பரிகரம் செய்வது என்ற குழப்பம் இல்லாமல் அனைத்து கிரக தோஷங்களையும் நீக்குகின்ற திருவாரூர், திருக்காறைவாசல் (திருக்காறாயில்), திருக்குவளை (திருக்கோளிலி), திருநாகைக் காரோணம், திருநள்ளாறு வேதாரண்யம் (திருமறைக்காடு), திருவாய்மூர் ஆகிய சப்த இடங்கலங்களுக்கும் திருக்காளஸ்திக்கும் சென்று தர்வேஸ்வனையும், விடங்கப் பெருமானையும் வழிபடலாம்.

    பொருள் உடல் வசதியில்லாதவர்கள் அருகே உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று தியாகராஜர் எனப்படும் விடங்கப் பெருமானையும், ஈஸ்வரனையும் வழிபடலாம்.

    காஞ்சி ஏகாம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை போன்று திருக்காளத்தியும், பராசக்தி சிவபூஜை புரிந்து சுகமடைந்த திருத்தலமாகும்.

    சித்தம் சிவமாக்கிக் தவமும் பூஜைய-ம் புரிந்ததால் உப்பு நீரோடு கலந்து நீராவது போன்று சிவத்துடன் கலந்து சிவமான பராசக்தி என்னும் பெண் தெய்வம் அவ்வப்போது நான் எனது என்ற ஆணவ மலத்தால் போற்றப்படுவதால் தூய்மையான சிவத்துடன் கலந்திருக்க முடியாமல் செம்பொருளைப் பிரிந்து பூவுலகில் வாசம் செய்ய நேரிடுகின்றது.

    ×