search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva Puranam"

    • திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல.
    • சுருட்டப்பள்ளியில் சிவன் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

    கடல் நஞ்சினை ஈசன் வாங்கி உண்ட திருப்பதி என்று காவிரிக்கரையின் தென்கரைத் தலமான திருப்புள்ளமங்கை (பசுபதி கோயில், ஆலந்துறை) குறிப்பிடப்படுகிறது.

    திருநீலக்குடி என்னும் தேவாரத் தலத்திறைவரும், அப்பருக்குக் கட்டமுதளித்த திருப்பைஞ்ஞீலி தலத்திறைவரும் `திருநீலகண்டேஸ்வரர்' என வழங்கப் பெறுகின்றனர்.

    அதுபோல இலுப்பை பட்டு என வழங்கும் திருப்பழ மண்ணிப் படிக்கரையில் பஞ்சபாண்டவருள் முதல்வரான தருமனும், துணைவி திரவுபதியும் போற்றி வணங்கிய வடிவம் நீலகண்டேஸ்வரர் என்று கூறப்பெறுகின்றது.

    திரு அம்பர் மாகாளம் என்ற ஊரில் உறை இறைவந் `காள கண்டேஸ்வரர்' எனப் பெறுகின்றார்.

    பள்ளிகொண்ட பரமர்

    திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல. ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் சிவன் சயனக்கோல கதை வடிவச் சிற்பம் காணப்பெறுகின்றது.

    தாயார் மங்களேஸ்வரியின் மடியின் மேல் தலை வைத்து வானோக்கியவாறு சிவன், விஷம் அருந்தியபின் இருந்த சயன வடிவ தோற்றம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தாரமங்கலதக் கோயில்

    பிரதோஷ நாட்களில் மாலை நேரத்தில் சூரிய பூஜையும் நடைபெறும் அற்புதக் திருக்கோயில் தாரமங்கலம் என்னும் ஊரில் அமையப் பெற்றுள்ளது. மேற்கு பார்த்த இத்திருக்கோயிலில் அமைந்துள்ள மூன்று நந்தியின் கொம்புகள் வழியே சூரிய ஒளியானது கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மேல் விழும் வண்ணம் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிரதோஷ பூஜையுடன் சூரிய பூஜையினையும் ஒருங்கே தரிசித்துப் பேறு பெற விரும்புவோர் செல்ல வேண்டிய ஊர் தாரமங்கல்ம் ஆகும்.

    பிற கோயில்கள்

    பிரதோஷ நாயகரான திருநீலகண்டரைப் போற்றும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள காரமடையில் கலைச்சிறப்பு வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பத்மநாபபுரத்தில் `நீலகண்டசுவாமி கோயில்' அமையப் பெற்றுள்ளது.

    திருநீலகண்டப் பதிகம்

    பிரதோஷ காலத்தில் படிக்க வேண்டிய செய்வினை

    கோளாறுகளை நீக்கும் திருஞான சம்பந்தரின் திருநீலகண்டப் பதிகம்

    அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லுமஃதறிவீர்

    உய்வினை நாடாதிருப்பது முந்தமக் கூனமென்றே

    கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடி யோம்

    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    காவினையிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்

    ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென றிருபொழுதும்

    பூவினைக் கொய்து மலரடி போற்றுது நாமடி யோம்

    தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    மூலைத்தட மூழ்கிய போகங் களுமற்றெவையு மெல்லாம்

    விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

    இலைத்தலைத் சூலமுந் தண்டு முழவு மிவை யுடையீர்

    சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

    விண்ணுலக காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்

    புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படம் புண்ணியரே

    கண்ணிம யாதன மூன்றுடை யீரங் கழலடைந்தோம்

    திண்ணிட தீவினை தீண்டப்பெ றாதிருநீலக்கண்டம்

    மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்

    பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

    பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

    சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே

    உருகி மலர்க்கொடு வந்துமை யேந்துதுநாமடியோம்

    செருவி லரக்கனைச் சீரிலடர்த்தருள் செய்தவரே

    திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாது செய்து

    தோற்ற முடைய அடியு முடியும் தொடர்வரியூர்

    தோற்றினுந் தோற்றந் தொழுது வணங்குதும் நாமடியோம்

    சீற்றம தாம்பினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    சாக்கியப் பட்டுஞ்சமணுரு வாகி யுடையழிந்தும்

    பாக்கியமின்றி யிருதலைப் போகமும் பற்றும் விட்டார்

    பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்

    தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

    பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வம் கழலடைவான்

    இறந்த பிறவியுண்டாகி லிமையவர் கோனடிக்கண்

    திறம்பயின் ஞானசம் பந்தன் செந்தமிழ் பத்தும்வல்லார்

    நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

    • உற்சவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
    • நந்திதேவருக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.

    * விடியற்காலை எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து நெற்றியில் சைவச் சின்னங்களை தரித்துக் கொள்ள வேண்டும்.

    * முழு உபாவாசம் இருந்து, படுக்கையில் படுக்காமல், சிவபுராணம், சிவநாமாவளிகளை படித்துக்கொண்டு சிவசிந்தனையோடு இருக்க வேண்டும்.

    * மாலையில் சூரியன் அஸ்தமானமாக நான்கு நாழிகைக்கு முன்பு மீண்டும் குளித்து தூய ஆடையுடுத்தி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.

    * இல்லத்தில் சிவலிங்கமும், நந்தியும் கற்படிமமாகவோ, விக்ரகமாகவோ இருப்பின் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, வில்வ தளத்தால் அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும்.

    * மாலை பிரதோஷ வேளையில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் நடைபெறும் மஹன்யாச ருத்ர ஜபத்துடன் கூடிய அபிஷேகத்தை கண் குளிரக் காண வேண்டும்.

    * நந்திதேவருக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.

    * மாவினால் அகல் செய்து, தூய்மையன பசு நெய்விட்டு விளக்கெரிக்க வேண்டும்.

    கார அரிசியில் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு நிவேதனமாக வைக்க வேண்டும்.

    * தீபாராதனை வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானைக் கண்டு `ஹர ஹர' என்று கூறி வணங்க வேண்டும்.

    * பிரதோஷ நாளில் ஆலயத்தை வலம் வரும் போது அப்ரதட்சிணமாக வரவேண்டும்.

    * பின்னர் சிவபெருமான் உமாதேவியாருடன் ரிஷபாரூடராய், பிரதோஷ நாயகராய், பிரதோஷ காலத்தில் (மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை) ஆலயத்தை வலம் வரும் பொழுது கண்டு தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.

    * சிவ ஆலயங்களில் வேத பாராயணத்துடன் முதலிலும், திருமுறை பாராயணத்துடன் இரண்டாவதும், நாதஸ்வர மங்கல இசையுடன் மூன்றாவதுமான மூன்று முறை ஆலய வலம் நடைபெறும். இரண்டாவது வலம் வரும்போது இறைவனையும், இறைவியையும் ஈசான திக்கில் இருந்தளருச் செய்வார்கள். அப்போது காண்பிக்கப்படும் கற்பூர ஆரத்தியைக் கண்டு தரிசிப்போர்க்கு மிகுந்த பலன் உண்டு என்று கூறப்படுகிறது.

    * சிவ தரிசனம் முடிந்ததும் இருவருக்காவது அன்னமிட்டு, அதன் பிறகு உண்பதே சிறப்பு என்று கூறப்படுகிறது.

    * நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்தபின் அருகம்புல், பூ சாத்திய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்து கொள்வது நமக்கு நன்மை தரும்.

    * உற்சவருக்கு அபிஷேக நேரத்தில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவைகளைக் கொடுக்கலாம். பூஜை நடக்கும் போதும், `சொர்ண அபிஷேகம்' செய்யும்போதும் நம்மிடம் உள்ள தங்க நகைகளைக் கொடுத்து உற்சவருக்கு சாத்தச் சொல்லி தீபாராதனை முடிந்தபின் அந்த நகைகளை வாங்கி அணிவது மிகவும் நல்லது.

    * நந்தீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்யும் போது பச்சரிசியுடன் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு முன் வைத்து நைவேத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

    * நந்தி தேவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு மூலவருக்கு தீபாராதனை நடைபெறும். அப்போது நந்திதேவரின் பின்பக்கத்திலிருந்து இரண்டு கொம்புகளின் இடையில் தீபாரதனையைப் பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும்.

    * மூலவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு நந்தீஸ்வரர் காதில் யாரும் கேட்காதபடி தன்னுடைய குறைகளையும், வேண்டுதலையும் அவரிடத்தில் கூற வேண்டும். இப்படி நந்தி காதில் 12 பிரதோஷ பூஜை அன்று கூறியதையே கூறி வந்தால் 13-வது பிரதோஷ பூஜை அன்று செல்லும் போது அன்று செல்லும் போது கூறிய விஷயம் நிறைவேறிவிடும்.

    நந்தியின் காதில் வேண்டாதவற்றைக் கூறுதல் கொடிய பாவச் செயல் ஆகும். பக்தர்கள் அவ்வாறு செய்வதனைத் தவிர்க்கவும்.

    * நந்தி பகவானைத் தொடாமல் தூரத்தில் நின்று அடுத்தவர் காதில் விழாமல் கூற வேண்டும்.

    * உற்சவருக்கு நைவேத்தியம், தீபாராதனை இவைகள் முடிந்த பின் தான் நம்மிடமுள்ள பால், வெல்லம் கலந்த அரிசி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றைத் தர ரேண்டும். இப்படித் தருவதாலும், அல்லது மற்றவர்கள் கொடுப்பதை வாங்கி உண்பதினாலும் நம்முடைய தோஷம், துன்பம், பாவம் நீங்க நன்மை பெறலாம்.

    * உற்சவர் உள்வீதி உலா வரும்போது ஒவ்வொரு திசைகளிலும் தீபாராதனை செய்யும்போதும் இறைவனை வணங்கி அவருடைய திருநாமங்களையும், சிவபுராண பாடல்களையும் சொல்லிக் கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ வரவேண்டும். இதனால் தோஷம், பாபம், கஷ்டம், நீங்கி நன்மை பெறுவதுடன் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் ஏற்படும்.

    * உற்சவர் உள்வீதி உலா முடிந்து நைவேத்தியம் செய்த பின்பு கோவிலின் உள்சென்று விடுவார். அப்போது நைவேத்தியம் செய்த சுண்டல், பொங்கல் போன்றவற்றைக் கொடுக்கவும் அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதும் நல்லது. அது மட்டுமல்லாமல் உற்சவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

    * பிரதோஷ நாளன்று கூடியவரை உப வாசம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம், மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷ பலன் முழுமையாகக்கிட்டும்.

    ×