என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Ram"

    • பசு பால் கொடுக்கவில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்
    • மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் மத்திய அரசு பல மசோதாக்களை தாக்கல் செய்து, அவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக, 'விபி-ஜி ராம் ஜி' என்னும் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.

    முன்னதாக, இந்த "விபி-ஜி ராம் ஜி மசோதா" நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது உத்தரகண்ட் நைனிடால் மக்களவை உறுப்பினர் அஜய் பட் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மசோதா தொடர்பாக பேசிய அஜய் பாட், "ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், வேலை கிடைக்கவில்லை என்றால், வீட்டில் பிரச்சனை இருந்தால், கணவன் மனைவிக்கு ஒத்துப்போகவில்லை என்றால், ஒரு மகன் வழிதவறிச் சென்றிருந்தால், அல்லது ஒரு பசு பால் கொடுக்கவில்லை என்றால், "ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்" என்று சொன்னால் போதும், அது நிறைவேறும்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன என்றும், மசோதா கொண்டுவரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார். தற்போது இவர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

     

    • `ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம்' என்ற மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.
    • வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியை பாராயணம் செய்யலாம்.

    எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராமத்தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதை விட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும். எனவே, அனுமானைப் பூஜித்து எவ்வளவு தடவை முடியுமோ, அவ்வளவு தடவைகள். `ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம்' என்ற மந்திரத்தை, குரு உபதேசம் பெற்று ஜெபிப்பது நல்லது.

    அனுமானை வழிபடுபவர்கள், பூஜை நேரத்திலும் இதர முக்கிய புண்ணிய தினங்களிலும் கண்டிப்பாக, பிரம்மச்சர்ய விரதம் - புலனடக்கம் அனுஷ்டிக்க வேண்டும். அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள். இதுவும் கண்டிப்பான நிபந்தனை.

    வடை மாலை - வெற்றிலை மாலையை, காரிய சித்திக்காக அனுமானுக்கு சாற்றலாம். தினசரி `ஸ்ரீராமஜெயம்' முடிந்தவரை எழுதலாம். அனுமானின் வாலுக்கு, 1 மண்டலம் (48 நாட்கள்) சந்தனக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டே வந்து இறுதி நாளில், விசேஷ பூஜை செய்து காரிய சித்தி அடையலாம்.

    கண் மூடி தியானித்து, `ராம், ராம்' என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை. தியாகராஜ சுவாமிகள் 96 கோடிகள் இம்மந்திரத்தை ஜெபித்து, ஸ்ரீராம தரிசனம் பெற்றார்!

    ஆஞ்சநேயர் மாலா மந்திரததை தினமும் 3 முறையோ, 9 முறையோ, 28 முறையோ சொல்லி வரலாம். நல்ல ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மனோ வலிமை போன்றவற்றிற்கு இந்த மாலா மந்திரம் கூற அவை கிடைக்கும்.

    கடன்பட்டுக் கலங்கி நிற்பவர்கள் இந்த மாலா மந்திரத்தைச் சொல்லி வந்தால் கடன் நிவர்த்தியடையும். எதிரிகள் பயம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தைச் சொல்லிவர எதிரிகள் வசமாவர்.

    சிறைவாச பயம் நீங்க இந்த மந்திரத்தைச் சொல்லி ஆஞ்சநேயரை வணங்க சிறைவாச பயம் நீங்கும். பிரயாணம் செய்யும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு சென்றால் பிரயாணம் வெற்றிகரமாக முடியும்.

    வீட்டில் வழிபடும் முறைகள்

    ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும். விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில் பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் வரக்கூடாது.

    பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.

    பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும்.அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

    பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்று உதவும்.

    வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியை பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட விவாகம் உள்பட சுபாகரியம் நிறைவேறும்.

    ×