search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • ஸ்ரீ சக்கரத்தை வழி படும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும்.
    • நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர்.

    ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் மஹாசாம்ராஜ்யம்.

    இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு.

    ஸ்ரீ சக்கரத்தை வழி படும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும்.

    சௌந்தர்ய லஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கரர் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங் களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர் லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல்லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மகாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் படைத்தார் என்கிறார்.

    ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.

    ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து "த்ரியம்பக" மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.

    பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.

    தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீகணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .

    ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.

    நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர்.

    இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ர மஹாமேரு.

    ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.

    குலதெய்வம் தெரியாதவர் களுக்கு ஸ்ரீ சக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.

    ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.

    • தினமும் மூன்று முறை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஸ்ரீசக்கரத்தை வணங்கலாம்.
    • மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்கு செய்தல் வேண்டும்.

    தினமும் மூன்று முறை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஸ்ரீசக்கரத்தை வணங்கலாம்.

    அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!

    துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து

    நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு

    உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!

    மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்கு செய்தல் வேண்டும்.

    சிவசக்கரம் நான்கும் வடதிசையை நோக்க தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க பவமான உடலுலகமாக

    பரிகார பிண்டாண்ட யோனியதுவாக சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக சேர்ந்தகலை ஈரெட்டு மேல்

    தளங்களாக நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய் நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய் வாசனை மலர்களை இட்டு

    ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும்,

    நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பிறகே மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும்.

    ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்கள் அதிகரிக்கும்.

    • நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர்.
    • மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார்

    நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர்.

    இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.

    'ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்' என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள்.

    குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.

    மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும்,

    விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான்

    அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.

    • இச்சக்கரத்தில் சிவசக்கரங்கள் நான்கு.
    • ஸ்ரீசக்கரத்தை வெள்ளைப்பூக்களால் அர்ச்சனை செய்பவரது நாவில் சரஸ்வதி நடனம் புரிவாள்.

    'பிந்து முக்கோணம், எட்டுக்கோணம், இரண்டு பத்துக்கோணங்கள், பதினாறுகோணம், எட்டு தளம், பதினாறுதளம், மூன்று வட்டம், மூன்று கோட்டுபூபுரம் என்று அனைத்தும் அடங்கிய அமைப்பே ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ சக்கரம் எனப்படும்.

    இச்சக்கரத்தில் சிவசக்கரங்கள் நான்கு.

    சக்தி சக்ரங்கள் ஐந்து என ஒன்பது சக்ரங்கள் அமைந்துள்ளன. இது சிவசக்தியாகிய இருவருடைய வடிவத்தையும் குறிக்கும்.

    இவற்றுள் முக்கோணம், எட்டுக்கோணம், இரண்டு பத்துக்கோணங்கள், பதினான்கு கோணங்கள் என்ற ஐந்தும் சக்திசக்கரங்கள் எனப்படும்.

    பிந்து, எட்டிதழ் கமலம், பதினாறிதழ் கமலம், நான்கு கோட்டம் என்ற இந்த நான்கும் சிவசக்கரங்கள் எனப்படும்.

    சக்தி கோணங்கள் ஐந்தும் கீழ்நோக்கியும் சிவசக்ரங்கள் நான்கும் மேல் நோக்கியும் உள்ளன.

    ஸ்ரீசக்கரத்தை வெள்ளைப்பூக்களால் அர்ச்சனை செய்பவரது நாவில் சரஸ்வதி நடனம் புரிவாள்.

    சிவப்பு, வெள்ளை கலந்த மலர்களால் அர்ச்சனை செய்தால் ராஜவசியம் உண்டாகும்.

    மஞ்சள் நிறப்பூக்களால் அர்ச்சனை செய்தால் திருமகளின் திருவருள் உண்டாகும்.

    இத்தகைய ஸ்ரீசக்கர வழிபாட்டினால் மகாவிஷ்ணு மோகினி வடிவம் கொண்டார் என்றும் பிரம்மன், படைக்கும் தொழிலுக்கு உரியவன் ஆனான் என்றும் சிவபெருமான் 'சர்வ வித்யோஸ்வரர்' என்ற பெருமையைப் பெற்றார் என்றும் மன்மதன் மயக்கும் சக்தியைப் பெற்றான் என்றும் ஹயக்ரீவர் கூறி உள்ளார்.

    ஸ்ரீசக்கரம் அம்பாளின் சொரூபம் . ஸ்ரீசக்கரத்தில் ஆவரண தேவதைகளுடன் பராசக்தி பிரகாசிக்கிறாள்.

    ஸ்ரீ சக்கரத்தின் 64 கோடி தேவதைகளும் வசிக்கிறார்கள். 9 சக்கரங்கள் உள்ளதால் இதற்கு 'நவசக்கரம்' என்ற பெயர் உண்டு.

    மேலும் ஐம்பதோரு கணேசர்கள், சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள், அசுவினி முதலான இருபத்தேழு நட்சத்திரங்கள், ஏழு யோகினிகள், பன்னிரண்டு ராசிகள், ஐம்பத்தொரு பீடதேவதைகள் என 157 தேவதைகள் ரூபமாக அம்பாள், ஸ்ரீசக்கரத்தில் பூஜிக்கப்படுகிறாள்.

    • முதலில் வட்டமும், சதுரமும், முக்கோணமும் தோன்றி, பின்னர் ஸ்ரீ சக்கரமாகத் தெளிவுபட தெரிய ஆரம்பித்தது.
    • ஒவ்வொரு ஒலிக்கும் அதாவது சப்தத்திற்கும் ஒரு "உருவம்" உண்டு.

    ஓங்காரம் என்ற பிரணவ மந்திரம் தான் இந்த உலகத்தை இயக்குகின்றது என்று நமது வேதங்கள் தெளிவுற எடுத்து உரைக்கின்றன.

    அதாவது மூலச் சப்தமான "ஓம்" என்ற ஒலிதான் பல்வேறு வடிவங்களை பெற்று இயங்குகிறது.

    மந்திரம் என்பது உச்சரிப்பின் அடிப்படையாக இருந்தாலும், பின்னர் உருவ வடிவம் பெறுகிறது என்பது உண்மையாகும்.

    முதலில் எழுப்புகின்ற ஒலியை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்ய, அவை எதிரொலித்த வண்ணமுள்ளன என்றும், இந்த எதிரொலியானது மந்திர சக்தியின் அலைவீச்சுக்களாகின்றது என்றும் நம் முன்னோர்கள் தமது ஆழ்ந்த அனுபவத்தின் மூலம் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஒலிக்கும் அதாவது சப்தத்திற்கும் ஒரு "உருவம்" உண்டு.

    எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப்படுத்தி சீராக்கி வடிவமாக "ஓம்" என்பது தான் ஸ்ரீ சக்கரமானது என்று கூறிய போது நம்ப மறுத்த நமது நாட்டு விஞ்ஞானிகள், ஜெர்மானிய நாட்டு விஞ்ஞானியான எர்னஸ்ட் சால்திரி என்பவர் கூறிய பின் தான் ஏற்றுக் கொண்டனர்.

    இவருடைய சீடர்களில் ஒருவர், "டோனோஸ் கேட்" என்ற கருவியின் மூலம் "ஓம்" என்ற மந்திரத்தை பலமுறை ஒலி பெருக்கிய போது, அந்தக் கருவியின் முன் வைக்கப்பட்டிருந்த வெண்திரையில் முதலில் வட்டமும், சதுரமும், முக்கோணமும் தோன்றி, பின்னர் ஸ்ரீ சக்கரமாகத் தெளிவுபட தெரிய ஆரம்பித்தது.

    எனவே ஸ்ரீ சக்கரம் என்பது கற்பனையால் வரையப்பட்டதல்ல. "ஓம்", "ஓம்" என்று உச்சரித்துக் கொண்டிருந்தால் ஸ்ரீ சக்கரத்தை திரையில் கண்டு களிக்கலாம்.

    பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும்

    சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர் ஸ்ரீசக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார்.

    மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்து சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார்.

    இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப் பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று தகவல் வெளியிட அனைவரும் இதன் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர்.

    முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோவில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

    பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.

    • மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.
    • ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்கள் அதிகரிக்கும்.

    தினமும் மூன்று முறை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஸ்ரீசக்கரத்தை வணங்கலாம்.

    அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!

    துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து

    நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு

    உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!

    மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.

    சிவசக்கரம் நான்கும் வடதிசையை நோக்க தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய் நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய் வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

    பிறகே மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும்.

    ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்கள் அதிகரிக்கும்.

    நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர்.

    இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.

    'ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்' என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள்.

    குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.

    மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும்,

    விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும்,

    ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர் தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.

    • 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.
    • இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

    பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.

    9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

    இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

    நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும்.

    நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்.

    அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பது ஐதீகம்.

    அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

    எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.

    இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கியசாலி தான்.

    எனவே காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி தினத்தன்று நடக்கும் பூஜையை தவறவிடாதீர்கள்.

    • அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள்.
    • அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர்.

    காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள்.

    பார்வதியின் இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

    எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

    சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

    அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

    அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர்.

    இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

    காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீ சக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.

    இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

    அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள்.

    இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.

    ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

    • வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
    • ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.

    ஒவ்வொரு வீட்டிலும் முற்றத்தில் துளசி மாடம் இருந்தால் நல்லது.

    ஆனால், பெரும்பாலும் புறா கூண்டுகளைப் போல அபார்ட்மெண்ட் வாழ்க்கையாகி விட்ட மாநகரத்தில்

    முற்றங்களை எல்லாம் கனவுகளிலும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

    அப்படிப்பட்டவர்கள் முற்றங்கள் இல்லையென்றாலும், துளசி செடியை கிழக்கு திசையில்,

    தரைமட்டத்தில் வைத்தால் நல்லது.

    இப்படி கிழக்கு திசையில் துளசி செடியை வைத்து வழிபட்டு வணங்கி வருவது

    பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நல்ல பலன்களே கிடைக்கும்.

    அதே சமயம் துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக் கூடாது.

    ஆண்டு முழுவ தும் பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும்.

    இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவு தான் நற்பலனை கொடுக்கும்.

    சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது.

    பொதுவாக மற்ற அனைத்து செடிகளையும்விட துளசி, அதிகளவில் ஆக்சிஜனை வெளியேற்றும் சக்தி கொண்டது.

    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்து, துளசியை வழிபட்டு வந்தால்,

    ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் தானாய் வந்து சேரும்.

    உங்களால் வலம் வர முடியாவிட்டாலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் துளசி செடியின் அருகே அமருங்கள்.

    • பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
    • எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.

    பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.

    எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.

    அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு

    வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள்.

    துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.

    குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது.

    இதைக் குணமாக்க துளசியை சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.

    ×