என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுபடை வீடுகள்"

    • ஐயப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார்.
    • கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

    தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடைவீடுகள் இருப்பதுபோல, ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை "ஐயப்பனின் அறுபடை வீடுகள்" என்றே சொல்லலாம்.

    நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்து உள்ளது. இங்குள்ள கோவிலில் ஐயப்பன் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார்.

    செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ள தலம். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி ஐயப்பன் காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா-புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.

    செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கேரளாவில் அமைந்து உள்ள கோவில். இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

    இங்கு ஐயப்பன் வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

    இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன.

    கேரளாவில் உள்ள இங்கு எழுந்தருளி உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன், தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை:

    மதுரையில் வருகிற 22-ந்தேதி பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாட்டையொட்டி அங்குள்ள திடலில் அறுபடை முருகனின் மாதிரி கண்காட்சி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோவில்களின் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் பிரகாரமும், தனி அறை மூலவர் சன்னதியாகவும் தத்ரூபமாக வடிவமைத்து அங்கு வழிபாடு செய்யப்பட்ட வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று முதல் பொதுமக்கள் வந்து பார்வையிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த கண்காட்சியை புதுக்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து அறுபடை வீடுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலைகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது கண்காட்சியை காண திரண்டு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியானது மாநாடு நடைபெறும் 22-ந்தேதி வரை இருக்கும் என்றும், இதனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதாகவும் முருக பக்தர்கள் மாநாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

    • கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முருப்பெருமானின் கோவில்களில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    6ம் நாளான இன்று அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அறுபடை வீடுகளில் சூரசம்ஹாரம்:

    • முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் இருப்பது திருப்பரங்குன்றம் ஆகும். இங்கு தான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டு நிகழ்வு நடந்ததாக கூறப்படுகிறது.

    திருப்பரங்குன்றத்தில் இன்று சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் அருகே சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிவப்பு நிற பட்டாடை அணிந்து மயில் வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்த சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார்.

    • இரண்டாவது படை வீடு, திருச்செந்தூர் முருகன் கோவில். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

    இங்கு நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வில் சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வர, முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை அழித்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார்.

    • மூன்றாவது வீடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலத்தில் இங்கு தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

    இங்கு, வீரபாகு, நவ வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படைசூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும், சக்திவேல் கொண்டு முருகன் வதம் செய்தார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    • நான்காவது வீடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலை. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் அழைக்கப்படுகிறது.

    இங்கு, சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலைசுவாமி படிச்சட்டத்தில் வீதிஉலா வந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது. பின்னர், மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்காரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் நடைபெற்றது.

    • ஐந்தாவது வீடு திருவள்ளூரில் உள்ள திருத்தணி. கந்த சஷ்டி விரதமும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் அறுபடை வீடுகளில் மிக கோலாகலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கம்.

    ஆனால், முருகனின் 5ம் படை வீடான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் விழா நடைபெறாது. அன்றைய தினம் திருத்தலம் அமைதியாக இருக்கும்.

    அதற்கு காரணம், முருகன் கோபம் தணிந்து வள்ளியை திருமணம் புரிந்து அமைதியாக அமர்ந்திருக்கும் தலம். அதாவது, திரு தணிகை தான் திருத்தணி என்று கூறப்படுகிறது. அதனால், இந்தக் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது.

    • ஆறாவது வீடு மதுரை மாவட்டத்தில் உள்ள பழமுதிர்சோலை. முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம்.

    முருகபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு கோயிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும், வதம் செய்தார். பின்பு நாவல் மரத்தடியில் நின்று பத்மாசூரனை சம்ஹாரம் செய்தார். சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    அறுபடை வீடுகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர்.

    ×