ஐயப்பனின் அறுபடை வீடுகள்

ஐயப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார்.கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.
ஐயப்பனின் அறுபடை வீடுகள்
Published on

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடைவீடுகள் இருப்பதுபோல, ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை "ஐயப்பனின் அறுபடை வீடுகள்" என்றே சொல்லலாம்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்து உள்ளது. இங்குள்ள கோவிலில் ஐயப்பன் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார்.

செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ள தலம். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி ஐயப்பன் காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா-புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.

செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கேரளாவில் அமைந்து உள்ள கோவில். இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.

இங்கு ஐயப்பன் வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.

இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன.

கேரளாவில் உள்ள இங்கு எழுந்தருளி உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன், தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

X

Maalai Malar
www.maalaimalar.com