என் மலர்
நீங்கள் தேடியது "ஐயப்பன் கோவில்"
- கோவிலில், முருகப்பெருமானின் சன்னிதி வாசற்படிகள் கலை நயத்துடன் காணப்படுகின்றன.
- மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார்.
சுவாமி ஐயப்பனுக்கு நாடெங்கிலும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. ஆனால் சாஸ்தா எனும் சுவாமி ஐயப்பன், சுயம்புவாகத் தோன்றிய ஆலயத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்நியர்களின் படையெடுப்பையும் தாக்குப்பிடித்த சுவாமி ஐயப்பன், இன்றும் அதே இடத்தில் எளிமையாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி குறைகளைத் தீர்த்து வருகின்றார். இவருக்கு துணையாக இடது பின்புறம் பெரிய ஆலயத்தில் முருகப்பெருமான் தம் கரங்களில் ஞானப்பழமும், தண்டமும் தாங்கி அருள் வழங்குகின்றார்.
தொன்மைச் சிறப்பு
மூவேந்தர்கள் காலத்தில் சேர மன்னர்களின் ஆட்சியிலும், பின்பு பல்லவர்கள் ஆட்சியிலும் பாலக்காடு பகுதி இருந்துள்ளது. பல்லவர்கள், சேர மன்னர்களுக்கு பிறகு வேறு சமூகத்தினர் சிலர் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இவர்கள் ஆண்ட பகுதி வள்ளுவ நாடு, கொல்லங்கோடு, பாலக்காடு என மூன்று பிரிவுகளாக இருந்தது. இதில் பாலக்காட்டை சேகரி வர்மா என்ற அரசன் ஆட்சி செய்தான். அதன் பின், இப்பகுதி கி.பி.1757-ல் கோழிக்கோடு அரசனான சாமூத்திரி, ஐதர் அலி, திப்பு சுல்தானை அடுத்து ஆங்கிலேயர் வசமானது.
அந்நியர் ஆட்சியில் சிதைக்கப்பட்ட எண்ணற்ற ஆலயங்களில் ஒன்றாக முடப்பக்காடு ஆலயமும் இருந்தது. ஆனால் இந்த ஆலய வளாகத்தில் எளிய ஆலயமாக இருந்த சாஸ்தா சுயம்புத் திருமேனி ஆலயம் பாதிக்கப்படவில்லை. அதன்பிறகு இந்த ஆலய வளாகம் பல நூறு ஆண்டுகள் கவனிப்பாரற்றுக் கிடந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் வாழ்ந்த அடியார் பெருமக்கள் இந்த ஆலயத்தின் உண்மை நிலையை அறிய, தேவப் பிரசன்னம் மற்றும் தாம்பூலப் பிரசன்னம் ஆகியவற்றை பார்த்தனர். அதில், இங்கு பழமையான இரண்டு ஆலயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி பெரிய ஆலயம் சுப்பிரமணியர் ஆலயம் என்றும், சிறிய ஆலயம் சாஸ்தாவின் சுயம்பு வடிவம் என்றும் தெரியவந்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த இவ்வூர் மக்கள், 2017-ம் ஆண்டு ஆலயம் எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். ஆலயத் திருப்பணியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அடியவர் ஒருவர் இந்த ஆலயத்தின் புனரமைப்பிற்கு பெரிதும் உதவினார். அதன் பயனால் இவ்வாலயம் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்திருந்த சுப்பிரமணியர் சிலையும் அதே கலைநயத்தோடு வடிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்துள்ளது.
கோவில் அமைப்பு
இவ்வாலயம் பாரதப்புழா ஆற்றின் வடகரையில் மேடான பகுதியில் அமைந்துள்ளது. எளிய சுயம்பு சாஸ்தா ஆலயம், பெரிய வடிவிலான சுப்பிரமணியர் ஆலயம், வலது பின்புறம் நாகர்கள் சன்னிதி என அனைத்தும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தென் கிழக்கில் மருத்துவ குணம் கொண்ட தீர்த்தக்கிணறும், சீரமைப்பை எதிர்நோக்கும் ஒளஷதத் திருக்குளமும் உள்ளன. இத்தலம் மேற்புறம் பிரம்மாண்ட ஆறு, கீழ் புறம் வயலும் மலைகளும் சூழ்ந்து பசுமையான சூழலில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் தொன்மைக்குச் சான்றுகளாக, இதன் கட்டிட அமைப்பும், சுயம்பு ஐயப்பனின் திருமேனியும் காட்சி அளிக்கின்றன. இந்த ஆலயம் 'வெட்டுக்கல்' எனப்படும் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பல்வேறு பழங்கால ஆலயங்களில் இதே அமைப்பு காணப்படுகின்றது. இதற்கு மற்றொரு சான்றாக, இந்திய தொல்லியல் துறையின் நிர்வாகத்தில் உள்ள பட்டாம்பி நகரின் கைத்தளி மகாதேவர் ஆலய வளாகத்தில் உள்ள நரசிம்மர் மற்றும் அனுமன் சன்னிதிகள் உள்ளன.
கோவிலில், முருகப்பெருமானின் சன்னிதி வாசற்படிகள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. ஒருபுறம் கைலாய வாசலும், மறுபுறம் வைகுண்ட வாசலும் உள்ளது. இவற்றில் சிங்கமும், யானையும் சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன. இதே வடிவம் கைத்தளி மகாதேவர் வளாகத்தில் நரசிம்மர் கருவறையில் காணப்படுகின்றது.
முருகனின் சிலா வடிவம் மிகவும் கலைநயத்தோடு உள்ளது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் வலது கையில் ஞானப்பழம் தாங்கியும், இடது கையை இடுப்பில் தாங்கியும் கூடவே தண்டத்தையும் தாங்கியபடி புன்னகை பூத்த முகத்துடன் அருள் காட்சி வழங்குகின்றார்.

ஐயப்பன் சன்னிதி
முருகன் ஆலயத்தின் வலது முன்புறத்தில் எளிய சன்னிதியாக சுயம்பு ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. ஸ்ரீ கோவில் எனும் கருவறையில் உள்ள ஐயப்பன் திருமேனி, பழமையானது மற்றும் சுயம்பு என்பதை உறுதி செய்கின்றது. இவர் திருமேனியை சுற்றி கேரள பாணி கூரை அமைந்திருந்தாலும், இவரின் மேல் பகுதி மூடப்படாமல் வானம் பார்த்த பூமியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார். இவரின் திருமேனி லிங்க திருமேனி வடிவமாக அமைந்துள்ளது. இதே அமைப்பு கேதார்நாத் சிவபெருமானுக்கும், சிங்னாப்பூர் சனி பகவானுக்கும் அமைந்துள்ளது இங்கே நினைவுகூரத்தக்கது. அந்த வகையில் சுவாமி ஐயப்பனின் அபூர்வக்கோலம் இப்புண்ணிய பூமியில் அமைந்துள்ளது.
இங்குள்ள பழமையான ஒரு கல் விளக்கு, அடியார் ஒருவரால் வழங்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக விளக்கின் பாதத்தில் 'திருப்பாததாச கண்ணப்பட்டர்' என்ற மலையாள வரிகள் காணப்படுகின்றது. இக்கோவில், சுவாமி ஐயப்பன் கோவில்தான் என்பதை (16-ம் நூற்றாண்டு) இந்திய அரசின் சென்சஸ் இயக்ககத்தின் பாலக்காடு மாவட்ட கோவில்கள் வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது. என்றாலும் கட்டிட அமைப்பு பல்லவர் காலத்தை உணர்த்துகின்றது.
விழாக்கள்
தைப்பூசத்தை மையமாக வைத்து பதினைந்து நாட்கள் பிரம்மோற்சவம், பூரம் விழா எளிமையாக நடத்தப்படுகின்றன. ஆலய பூஜைகளை நரிபட்ட மனா கேசவ பட்டத்திரி பரம்பரையினர் செய்து வருகின்றனர்.
இங்குள்ள இறைவன் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றார். கேரள மாநிலத்தில் அமர்ந்த கோல ஐயப்பன் ஆலயங்கள் நிறைந்திருந்தாலும் சுயம்பு ஐயப்பன் இவர் ஒருவரே என்பது தனிச்சிறப்பு ஆகும்.
தினமும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். என்றாலும் சுயம்பு ஐயப்பனை எப்போதும் தரிசிக்க ஏதுவாக கருவறைக் கதவுகள் அமைந்துள்ளன. ஆலயப் பணியாளர் வீடும் ஆலயத்தின் அருகில் உள்ளது.
அமைவிடம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி வட்டத்தில் முடப்பக்காடு திருத்தலம் அமைந்துள்ளது. பள்ளிப்புரம் - பட்டாம்பி நெடுஞ்சாலையில், பட்டாம்பியில் இருந்து கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில், தமிழ்நாட்டின் ஆனைமலையில் உருவாகி கேரளத்தின் இரண்டாவது பெரிய நதியாக விளங்கும் பாரதப்புழா ஆற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. பட்டாம்பி வழியே குருவாயூர் செல்லும் அன்பர்கள் அபூர்வ சுயம்பு ஐயப்பனையும் தரிசித்து அருள் பெறலாம்.
- ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார்.
- யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான்.
ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார். அப்போது குலதெய்வமாகிய சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக் கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை வழங்கினார்.
அவரும் அப்படியே செய்தார். அதே பழக்கத்தை தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைபிடித்து வருகிறார்கள்.
இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்கு தேவையான பொருட்கள், யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான். ஆண்டவனின் பதினெட்டு படிகளை கடக்கிறான். ஆண்டவனை நெருங்கும்வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை, எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகி விடகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.
- ஐயப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார்.
- கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடைவீடுகள் இருப்பதுபோல, ஐயப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை "ஐயப்பனின் அறுபடை வீடுகள்" என்றே சொல்லலாம்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்து உள்ளது. இங்குள்ள கோவிலில் ஐயப்பன் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சி தருகிறார்.
செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ள தலம். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி ஐயப்பன் காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா-புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.
செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கேரளாவில் அமைந்து உள்ள கோவில். இங்கு ஐயப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.
இங்கு ஐயப்பன் வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திருஆபரணங்கள் உள்ளன.
கேரளாவில் உள்ள இங்கு எழுந்தருளி உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன், தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- வழிபாடு செய்வதற்கு உங்களிடம் ஐயப்பன் திருவுருவப்படம் இருந்தால் அதை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்.
- நாம் வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் அவரை இப்படி வணங்கி அவருடைய அருளை பெறலாம்.
கார்த்திகை மாதம் பல தெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்பட்டாலும், கார்த்திகை என்றால் பெரிய அளவில் பேசப்படுவது சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது தான். அப்படியான ஐயப்பனை 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி அவருடைய தரிசனத்தை காணுவதே பெரும் பாக்கியம் என்று சொல்லலாம். இந்த ஐயப்பனை மட்டும் நாம் நினைத்த போதெல்லாம் தரிசனம் செய்ய முடியாது. அவரை தரிசனம் செய்வதற்கென கடுமையான விதிமுறைகளும் நேரமும் உண்டு.
இந்த இருமுடி வழிபாட்டை அனைவராலும் செய்ய முடியாது அல்லவா? ஆகையால் ஐயப்பனை வீட்டிலிருந்தபடியே கார்த்திகை மாதத்தில் ஐயப்பனை எப்படி வழிபட்டால் நம்முடைய வறுமை நிலை மாறி செல்வ நிலை எட்டலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை கார்த்திகை மாதத்தின் கடைசி நாளில் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாடு செய்வதற்கான காலம் காலை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யலாம்.
இந்த வழிபாடு செய்வதற்கு உங்களிடம் ஐயப்பன் திருவுருவப்படம் இருந்தால் அதை வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள். படம் இல்லை என்றால் பரவாயில்லை தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தையே ஐயப்பனாக பாவித்து வணங்கலாம். அடுத்து ஒரு வாழை இலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழுவதுமாக பச்சரிசியை மஞ்சள் கலந்து பரப்பி விடுங்கள். அடுத்து ஏழு மண் அகல் விளக்கை எடுத்து பஞ்சு திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு அடுத்து மூன்று சிறிய கிண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிண்ணத்தில் நெய், மற்றொரு கிண்ணத்தில் மூன்று பழங்கள் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். அது உங்களுக்கு விருப்பமான எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னொரு கிண்ணத்தில் நைவேத்தியமாக தேங்காய் சாதம் செய்து வைத்து விடுங்கள்.
இப்போது வாழை இலையில் பரப்பி வைத்திருக்கும் அரிசியை பூஜை அறையில் வைத்து அதை சுற்றி நைவேத்தியத்தை வைத்து விடுங்கள். அதன் பிறகு ஏழு அகல் விளக்கை பச்சரிசியை பார்த்தவாறு சுற்றி வைத்து ஏற்றுங்கள். இந்த விளக்குகளை ஏற்றிய பிறகு நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஐயப்பனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த நேரத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா என்று இந்த வார்த்தையை 108 முறை ஐயப்பனை நினைத்து சொல்லிய பிறகு தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை நிறைவு செய்த பிறகு நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு முதலில் கொடுங்கள். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் நைவேத்தியங்களை உண்ணலாம்.
ஐயப்பனை நினைத்து செய்யப்படும் இந்த எளிய வழிபாடு நம்முடைய வாழ்க்கையை மாற்றக் கூடிய அற்புத சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஐயப்பனை காணவும் அவருடைய தரிசனத்தை பெறவும் கோடான கோடி மக்கள் அவரை நாடி சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் அவரை இப்படி வணங்கி அவருடைய அருளை பெறலாம்.
- அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.
சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு சுமந்து செல்வது வழக்கம். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நாளை (திங்கட்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி கார்த்திகை முதல் தேதியான நாளை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரையில் நாளை அதிகாலையில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி கோவில்களுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.
இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நாளை காலையில் மாலை அணிவதற்காக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நாளை முதல் எங்கு பார்த்தாலும் சரண கோஷம் ஒலிக்கும். ஐயயப்ப பக்தர்கள் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து வருவார்கள்.
இதில் சிலர் மண்டல பூஜை தரிசனத்துக்காகவும் மற்றும் சிலர் மகர விளக்கு தரிசனத்திற்காகவும் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர நாளை முதல் வீடுகள் தோறும் கார்த்திகை தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.
- வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.
- இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.
* சபரிமலையையும், அங்கே வீற்றிருக்கும் ஐயப்பனையும் நினைத்தால், உடனே நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம் இருமுடி.
* ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், ஐயப்பனின் திருமேனி அபிஷேகத்துக்குரிய நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்லும் பையைத்தான் 'இருமுடி' என்கிறோம்.
* இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம், வீடுகளில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.
* இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து, படத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
* இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள்.
* இருமுடி கட்டிக்கொள்ளும் ஐயப்ப பக்தர், குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய் நிரப்பத் தொடங்கும் போது, நமது பிரார்த்தனைகளோடு 'சாமியே சரணம்' என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும். வீட்டில் யாராவது நெய் நிரப்ப விரும்பினால் அவர்களும் தேங்காயில் நெய் நிரப்பலாம்.
* நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கற்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம்பழம், வெற்றிலை - பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
* முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.
* வசதி வாய்ப்புகள் இல்லாத முன் காலத்தில், இருமுடியின் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.
* இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.
* தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
* இதனால் ஆண்டுதோறும் வீடுகளில் சகல ஐஸ்வர்யமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது.
- சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் வழியாக அனுமதிக்கப்படுவர்.
- ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொரு தெய்ம் வசிப்பதாக கருதப்படுகிறது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் வழியாக அனுமதிக்கப்படுவர். அந்த 18 படிகளிலும் 18 தெய்வங்கள் வசிப்பதாக கருதப்படுகிறது.
ஒன்றாம் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - ஆறுமுகப் பெருமான்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகாவிஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினோறாம் படி - சுக்ரன்
பன்னிரெண்டாம் படி- திருவரங்கன்
பதின்மூன்றாம் படி - சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமதர்மன்
பதினைந்தாம் படி - ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி - விநாயகர்
- எந்த குளறுபடியும் நிகழவில்லை என்று தேவசம் போர்டு தெரிவித்தது.
- அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் கேரள அரசியலிலும் எதிரொலித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியால் கடந்த வாரம் சட்டமன்றம் தொடர்ந்து முடங்கியது.
இந்நிலையில் தனது செலவில் தங்கக் திருட்டு முலாம் பூசுவதற்காக எடுத்துச்சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி என்ற தொழிலதிபர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் சிறப்பு விசாரணை குழுவால் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
நேற்று அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து அவரின் கைது நடந்துள்ளனது.
திருவனந்தபுர பொது மருத்துவமனையில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று மதியம் ரன்னி நீதிமன்றத்தில் ஆவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் அவகாசம் கோரும் என்று தெரிகிறது.
- ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
- சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கேரள பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த ஒரு சில ஆவணங்கள் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2019 ஜூலை 19 அன்று அகற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பலகைகளின் எடை 42.8 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டது.
மறுநாள் (ஜூலை 20, 2019) பலகைகள் உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி என்பவரின் பொறுப்பில், முலாம் பூசும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இவை 39 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
சென்னை நிறுவனத்தில் பலகைகள் பதிவு செய்யப்பட்டபோது, அவற்றின் எடை 38.25 கிலோகிராம் எனப் பதிவாகியிருந்தது. இதன் மூலம், பயணத்தின் போது சுமார் 4.54 கிலோகிராம் தங்கம் அல்லது தங்க முலாம் பூசிய செம்பு குறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
பலகைகள் சென்னைக்குச் செல்லும் வழியில் நேரடியாக கொண்டு செல்லப்படாமல் வழியில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பலகைகள் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் கோயில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில்கள், பெங்களூருவில் உள்ள அய்யப்பா ஆலயம் மற்றும் கேரள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கு ஒரு தனியார் பூஜைக்காகவும் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும், இந்த கவசங்களுக்கு நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டில் வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி 2019 இல் அனுப்பிய மின்னஞ்சலில், தங்கத்தை ஒரு திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?. திரும்பக் கொண்டுவரப்பட்ட பலகைகள் அசல் துண்டுகள்தானா, அல்லது அதுபோன்ற பிரதிகள் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கேரள அரசு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு வாரங்களுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதன் பின்னர் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கத்தை விஜய் மல்லையா வழங்கினார்.
- விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் பணிகளுக்காக 27 ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.3 கிலோ தங்கம் மாயமானதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 4, 1998 அன்று, சபரிமலையில் உள்ள கருவறை, கூரை மற்றும் துவாரபாலக சிற்பங்கள் ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கம் மற்றும் 1,900 கிலோ செம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.. இந்த தங்கத்தை தொழிலதிபர் விஜய் மல்லையாவால் பரிசாக அப்போது வழங்கினார்.
இந்நிலையில், சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 2 துவார பாலகர் சிலைகளில் இருந்த தகடுகளில் தங்கம் எதுவும் இல்லை, அவை செம்புத் தகடுகள் என பழுது பார்க்கும் நிறுவனம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.
- மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம் :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பம்பையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சீசனை முன்னிட்டு நிலக்கல்- பம்பை இடையே தினசரி 200 பஸ்கள் இயக்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
மகரவிளக்கு தினத்தன்று ஆயிரம் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பிறமாநிலங்களில் இருந்து குழுவாக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனி பஸ்வசதி செய்து கொடுக்கப்படும். ஆனால் குறைந்தது 40 நபர்களாவது இருக்க வேண்டும். வயதான ஐயப்ப பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படும்.
- மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ந் தேதி நடைபெறும்.
சபரிமலை :
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை திறக்கப்படும். அன்று மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பூஜைக்காக டிசம்பர் மாதம் 27-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அதன் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். ஜனவரி 20-ந் தேதி வரை நடை திறந்திருக்கும்.
சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு அவசியம். ஆன்லைன் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்காக உடனடி முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிலக்கல் மையத்தில் மட்டும் 10 உடனடி முன்பதிவு கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை மகா கணபதி கோவில், பத்தனம் திட்டா மாவட்டம் பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயம் மாவட்டம் எருமேலி கோவில், எட்டமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர், கீழ்இல்லம், இடுக்கி மாவட்டத்தில் குமுளி, மூழிக்கல், வண்டிபெரியார் என 12 இடங்களில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆன்லைன் முன்பதிவு செய்ய ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கையில் வைத்திருந்தால் போதும்.
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பெருவழி பாதையான எருமேலியில் இருந்து கரிமலை வழியாக செல்லும் கானக பாதையும், புல்மேடு வழி ஆகியவையும் திறக்கப்பட உள்ளது.
அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பஸ் வசதிக்கான ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் இருந்து மட்டும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலையில் ரெயில் பாதைக்காகவும், எருமேலியில் விமான நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






