என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன் மாநாடு"

    • தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதிக்கான 2026 தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சுரஜ் எம்.என்.ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கினர்.

    விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பாசிச சக்திகளை விரட்டுவதற்கும், பா.ஜ.க.வை ஒருபோதும் தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பதற்கான முதல் தேர்தல் பிரகடனத்தை கோவையில் எடுத்திருக்கிறோம்.

    தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்ற முடியுமா என்பதற்காகவே அவர்கள் முருகன் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

    ஆதிகாலத்திலிருந்தே பா.ஜ.க.வின் செயல் அதுவாகத்தான் இருந்துள்ளது. முதலில் ரத யாத்திரை என தொடங்கினார். தற்போது முருகனைக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

    கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் இஸ்லாமிய கடவுளை வணங்கி கொண்டு தான் பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்கிறார்கள்.

    அமித்ஷா, மற்ற மாநில முதல்வர்கள் மீது வழக்கு தொடுத்தது போல, எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது குடும்பத்தின் மீதும் வழக்கு தொடுப்போம் என்று கூறிய பிறகே அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளது.

    அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இந்தக் கூட்டணி பிடிக்கவில்லை. ஜெயலலிதா இருந்தபோது, பா.ஜ.க.வின் தலைவர், ஊழல் குற்றவாளியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று தெரிவித்தார். அதற்கு அமித்ஷாவும் மோடியும் ஒன்றும் கூறவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் தான் அ.தி.மு.க. கூட்டணி வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முருகன் என்பவர் நெருப்பைப் போன்றவர். சக்தி வாய்ந்த தமிழ் கடவுள். அவருடன் பாஜக தேர்தல் விளையாட்டு விளையாடினால், அவர் பா.ஜ.க.வை சூரசம்ஹாரம் செய்வார்.

    2026-ம் ஆண்டு நடக்ககூடிய தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சூரசம்ஹாரம் தான் என்பது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரகடனம்.

    தமிழகம் முழுவதும் டிஜிட்டல் ஐ.டி கார்டு கொடுக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கோவையில் தொடங்கியுள்ளோம்.

    பா.ம.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். பாசிச பா.ஜ.க.வின் பக்கம் போகாமல் இருப்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. மாறி சென்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த பா.ம.க.வின் நிலைப்பாடு அடிபட்டுப் போகும்.

    தலைமுறையை பாழாக்குவதற்கு பா.ஜ.க தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள கடவுள்களை தொட்டுக்கொண்டு இருந்துவிட்டு, தற்போது தமிழ்நாட்டிற்கு 'முருகா' என்ற கோஷத்துடன் வந்துள்ளார்கள். முருகன் தமிழ் கடவுள், மிகுந்த சக்தி வாய்ந்தவர். எனவே, அவர்களை முருகர் சூரசம்ஹாரம் செய்வார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சேலத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
    • முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

    மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு 'வேல்' பரிசளிக்கப்பட்டது.

    இதனையடுத்து, பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "முருகன் மாநாடு அன்னைக்கே வேல் வந்துடுச்சி..." என்று தெரிவித்தார்.

    • மாநாட்டிற்கு இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வரலாம்.
    • மாநாட்டிற்கு உத்திர பிரதேச முதல்வரும் ஆந்திர துணை முதல்வரும் வரக் கூடாது என்பது முறையா?

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி பெருகி வரும் நிலையில் "மாண்புமிகு உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் மாண்புமிகு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.

    பார் முழுவதும் அருள்பாளிக்கும் கடவுள் முருகப்பெருமான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆறுமுகனின் பக்தர்கள் உலகெங்குமுள்ள மூலை முடுக்கெல்லாம் இருப்பர். ஆக, ஜூன் 22-ஆம் தேதி நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பக்தர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வரலாம்.

    பழனியில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஜப்பானில் இருந்து சிலர் கலந்து கொண்டதாக திமுக அரசால் பெருமை பேசப்பட்ட நிலையில், மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உத்திர பிரதேச முதல்வரும் ஆந்திர துணை முதல்வரும் வரக் கூடாது என்பது முறையா?

    உண்மையில், மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் வரக் கூடாது என்பது அமைச்சரின் நிலைப்பாடா? அல்லது, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தி மிக்கவர்கள், யாருமே தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சொல்கிறாரா எனும் சந்தேகம் எழுகிறது.

    அரசியலைத் தாண்டி ஆன்மிக ரீதியாக நடத்தப்படும் மாநாட்டில் கூட மாநில அடிப்படையில் பிளவுவாதத்தை தூண்டுவது தவறு. எனவே, பக்திக்கு எந்தவொரு எல்லையும் இல்லை என்பதை உணர்ந்து, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கலியுகத்தில் இப்போது முருகன் அவதாரம் எடுத்துள்ளார். 2026-ல் அதற்கான பதில் கிடைக்கும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை வடபழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து அவர் தியானம் மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 22-ந்தேதி மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டுக்காக கடந்த 15 நாட்களாக நாங்கள் அனைவரும் விரதம் இருந்து வருகிறோம். அதன் காரணமாக வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டோம்.

    ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். அவரும் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து வருகிறார்.

    22-ந்தேதி தான் மாநாடு நடைபெறுகிறது. ஆனால் இன்றைக்கே மக்கள் மாநாடு நடைபெறும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதனை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். அவர் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினார். தற்போது நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம். அவரைப் போலவே நிறைய பேர் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

    பொதுமக்களுடைய ஆதரவு எங்களுக்கு நிறைய இருக்கிறது. பொதுமக்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



    நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை முருகரை பற்றி தான் பேசி வருகிறோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு பயங்கரவாதம் வரும், மத வெறி வரும் என்றெல்லாம் கூறுகிறார். மதம் குறித்து தொடர்ச்சியாக அமைச்சர்தான் பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழ் கடவுள் முருகனை அவர்கள் ஆராதனை செய்தார்கள். தற்போது நாங்கள் ஆராதனை செய்கிறோம். இதில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து எது உண்மையான முருகன் மாநாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

    இப்பொழுது தி.மு.க. தோல்வி பயத்தில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 தொகுதியாவது வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். இது தி.மு.க.வுக்கு நெருக்கடியாகவே இருக்கும். அதன் காரணமாகவே அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    பவன் கல்யாண் முருக பக்தர். அறுபடை வீடுகளுக்கு அவர் ஏற்கனவே வந்து விட்டு சென்றிருக்கிறார். இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொள்ளக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? சாமி தரிசனம் செய்யக்கூடாதா?

    வேலை எடுத்து சுற்றியதின் விளைவாக சூரசம்காரம் நடைபெற்றது ஜெயிக்க வேண்டும் என்றால் இறைவன் பல அவதாரங்களை எடுப்பார். எடுக்கப்பட்டிருக்கிறது அதற்கான முடிவுகள் வெளியாகும். இந்த ஆட்சி நீட்டிக்கப்படுமா என்பதை முருகன் தான் முடிவு செய்ய வேண்டும்

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லையே 20,000 ஆசிரியர்கள் இல்லையே முதலமைச்சரை நோக்கி ஏன் கேள்வி எழுப்பத் தயங்குகிறீர்கள்.

    டி.ஆர்.பி. தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு என்ன சொல்ல போகிறீர்கள். மத்திய அரசின் நிதி தேவையில்லை நாங்கள் அரசாங்கத்தை நடத்துவோம் என்று கூறுகிறார்கள். மத்திய அரசை பகைத்துக் கொண்டே இருந்தால் எப்படி நிதி கொடுக்க முடியும்.

    தர்மங்கள் ஜெயிக்க வேண்டும். அதற்கு இறைவன் சிலர் அவதாரங்கள் எடுப்பார். அந்த வகையில் கலியுகத்தில் இப்போது முருகன் அவதாரம் எடுத்துள்ளார். 2026-ல் அதற்கான பதில் கிடைக்கும்.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    • விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
    • முருகனுக்கு தமிழகத்தில் தான் விழா எடுக்க முடியும்.

    சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

    * திருப்பரங்குன்றத்தில் எப்போது பதற்றமான சூழல் ஏற்பட்டதில்லை.

    * முருகன் மாநாடு அரசியல் மாநாடு அல்ல. பக்தர்களுக்கான மாநாடு.

    * முருகனுக்கு தமிழகத்தில் தான் விழா எடுக்க முடியும்.

    * உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருவதாக உள்ளது. ஆந்திர துணை முதலமைச்சர் பவண் கல்யாண் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    * மேடையில் தலைவர்கள் மட்டும் இருப்பார்கள். அரசியல் கருத்துக்கள் இருக்காது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு. முருகர் பக்தர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் கலந்து கொள்ளலாம்.

    * நாங்கள் இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம். 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை:

    மதுரையில் வருகிற 22-ந்தேதி பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பாண்டி கோவில் வண்டியூர் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாட்டையொட்டி அங்குள்ள திடலில் அறுபடை முருகனின் மாதிரி கண்காட்சி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோவில்களின் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் பிரகாரமும், தனி அறை மூலவர் சன்னதியாகவும் தத்ரூபமாக வடிவமைத்து அங்கு வழிபாடு செய்யப்பட்ட வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று முதல் பொதுமக்கள் வந்து பார்வையிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த கண்காட்சியை புதுக்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து அறுபடை வீடுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலைகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது கண்காட்சியை காண திரண்டு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியானது மாநாடு நடைபெறும் 22-ந்தேதி வரை இருக்கும் என்றும், இதனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதாகவும் முருக பக்தர்கள் மாநாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

    • மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.
    • ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டு மத்திய அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடித்து 11 ஆண்டுகளை முடித்து 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் முடிவு எடுக்கும் தைரியமற்றவர்களாக இருந்தனர். அதோடு 2-ஜி, காமன்வெல்த் என அனைத்து துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் தலைவிரித்தாடியது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளின் நலன் ஆகியவற்றை முன்வைத்து நாட்டை சீரான வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.

    நாடு சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை 2047-ல் அடியெடுத்து வைக்கும்போது வல்லரசாக்க திட்டமிட்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரியிலும் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட இலவச ரேஷன் அரிசியானது தற்போது ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

    சேதராப்பட்டில் கிடப்பில் கிடந்த 750 ஏக்கர் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4000-ம் பேருக்கு அரசு வேலை தரப்பட்டுள்ளது. பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றும் பணி தொடர்கிறது.

    ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். அவர் கண்ணை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். உலகத்துக்கும் ஒரு செய்தி சொல்லியுள்ளோம்.

    மணிப்பூரில் அமைதி நிலவ பிரதமர் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார். 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. கூட்டணி கலகலத்து போயுள்ளது.

    இதனால் அந்த தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள்.

    தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் சந்தித்து கணிச ன வாக்கு பெற்றுள்ளோம். தற்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலம் பெற்றுள்ளோம். இதனால் தி.மு.க.வினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.

    புதுவையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கருத்துகளை முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரிடம் தெரிவித்து வருகிறார். புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது.

    திராவிடர் கழகம் என்றாலே கலவரம்தான். அவர்கள் தங்களை போலவே பிறரையும் நினைத்து கலவரம் ஏற்படுத்த வருவதாக கூறுகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் மாநாடு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு திருப்பரங்குன்றத் தில் நடந்த சம்பவத்தில் காயம் அடைந்த முருக பக்தர்களுக்கு மருந்தாக அமையும். கூட்டணி பற்றி கட்சி தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். தமிழகம் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
    • பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பி வருகிறார்.

    தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் தி.மு.க அரசில் நடந்துள்ளது. இந்த தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.

    ஏற்கனவே பீகார், தெலுங்கானாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித மனதும் இல்லை.

    ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.

    பிரதமர் மோடி தெளிவாக கூறி விட்டார். யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்து விட்டார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் இது குறித்து தெளிவுபடுத்தி விட்டார்.

    ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செயலை தமிழக முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.

    தமிழக முதலமைச்சர் இதுபோன்ற விஷயங்களில் மக்களை திசை திருப்புவதை விட்டு விட்டு அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும்.

    தி.மு.க அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதனை கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக மதுரை முருகன் மாநாட்டை முன்னெடுத்து உள்ளனர்.

    தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் ஆன முருகன் மாநாட்டினை மதுரையில் நடத்துவது தான் சரியானது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.
    • தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.

    சென்னை :

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்த பாஜக, ஒடிசாவில் ராமருக்கு பதிலாக ஜெய் ஜெகநாத் என முழங்கி பிழைப்புவாதம் செய்தது.

    கேரளாவில் நாராயண குருவிடம் மண்டியிட்ட பாஜக தமிழ்நாட்டில் முருகனிடம் சரணாகதி அடைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.

    அதனால் தான் முருக பக்தர்கள் மாநாட்டை பாஜக ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.

    தமிழ்நாட்டு மக்கள் முருகனை வணங்குவார்கள். ஆனால், பாஜகவின் மதவாதத்துக்கு தலைவணங்க மாட்டார்கள். முருகனே பாஜகவில் சேர்ந்தாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது.

    முருகன் மீது பாஜகவுக்கு உண்மையலேயே பக்தி இருந்தால், முருகன் சாதி மறுப்பு திருமணம் செய்தது போல,

    சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து தீர்மானம் இயற்ற தயாரா?

    சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோரை ஆணவப்படுகொலை செய்யும் பயங்கரவாதத்தை கண்டிக்கத்தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.



    • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.
    • இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வருகிற ஆகஸ்டு மாதம் 24 மற்றும் 25 -ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.

    இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்டு உள்ள இணையதளம் https://muthamizhmuruganmaanadu2024.com இன்று இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

    • மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • முருக பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டிற்காக வரும் சிறப்பு அழைப்பாளர்கள் வெளிநாட்டு பக்தர்களை தங்க வைப்பதற்காக பழனி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆகஸ்ட் 23ந் தேதி முதல் 26ந் தேதி வரை முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க பிரத்தியேக இணையதளம் கடந்த மே 28ந் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பதிவு செய்த பங்கேற்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தவிர மாநாட்டை காண வரும் முருக பக்தர்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழனி கோவிலின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி மலை, படிப்பாதை, யானைப்பாதை, மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோவில்கள், மலைக்கோவிலின் உள் மற்றும் வெளி பிரகாரம், தங்க கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட சன்னதிகளை முப்பரிமாண காட்சிகளில் பார்க்கும்போது நேரில் கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்கும் உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×