என் மலர்
நீங்கள் தேடியது "கோரக்கர் வழிபாடு"
- மச்சமுனிக்கு மீண்டும் வடை தின்னும் ஆசை தோன்றிவிட்டது.
- சீடன் கோரக்கரிடம் எனக்கு மேலும் வடை வேண்டும் என கேட்டார்.
கோரக்கர், மச்சமுனியின் சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குரு சேவையே தன் வாழ்வாக கொண்டார். குருபக்திக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிச்சை கேட்க சென்றபோது, ஒரு பெண் நெய்யில் பொரித்த வடையை பிச்சையாக இட்டாள்.
அந்த வடையை கோரக்கர் மச்சமுனியிடம் கொடுக்கவே, அவரோ, அதனை உண்டு விட்டு வடையின் ருசியில் மயங்கி விட்டார். மச்சமுனிக்கு மீண்டும் வடை தின்னும் ஆசை தோன்றிவிட்டது. எனவே, சீடன் கோரக்கரிடம் எனக்கு மேலும் வடை வேண்டும் என கேட்டார். குருவே வடை கேட்டுவிட்டாரே.. என்பதற்காக கோரக்கரோ உடனடியாக அந்த பெண்ணிடம் சென்று எனக்கு இன்னும் வடை வேண்டும் என்றார். அந்த பெண்ணோ வடை அனைத்தும் தீர்ந்து விட்டது என்றாள்.
இது எனது குருவின் விருப்பம். 'உயிரை தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்' சுட்டுத்தாருங்கள் தாயே என்றார் கோரக்கர். 'இயலாதப்பா...! எனக்கு முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில் பட்டு விட்டது. நல்ல வேளையாக தப்பித்தேன். இனி ஒருமுறை வடை பொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ உன் கண்களை பிடுங்கியா தருவாய் என கேட்டாள், அந்த பெண்.
அதற்கென்ன தந்தால் போச்சு என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்த பெண்மணி செய்வதறியாது திகைத்தாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட வடை பொரித்து தந்தாள்.
கோரக்கரும், முகத்தை மூடியபடியே வந்து வடையை மச்சமுனியிடம் கொடுத்தார். மச்சமுனியோ வடையை உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மூடியதன் காரணம் அறிய, கோரக்கா.. நான் கேட்ட வடைக்காக உன் கண்களையா தந்தாய் என்று கேட்டு, கோரக்கரை ஆரத்தழுவினார். பின், தனது மகிமையால் மீண்டும் கோரக்கருக்கு கண்களை வரவழைத்து கொடுத்தார்.
- இரு சித்தர்களுமே சதுரகிரிக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் உள்ளது.
- அக்னி குண்டத்தில் போட்ட பொருட்கள் 2 பெண்களாக மாறி 2 முனிவர்களையும் சுற்றிச்சுற்றி வந்தது.
குப்பை மேட்டில் போட்ட விபூதியின் மகத்துவத்தால் 9 வயது நிறைந்த சிறுவனாக, அதுவும் தியானம் செய்த கோலத்தில் இருந்த சிறுவன் தான் 'கோரக்கர்'. கோரக்கர் மூலிகையால் பிறந்த இவரை தான் 'கோரக்க சித்தர்' என அழைப்பதாக பழமையான தமிழ் நூல் கூறுகிறது.
மேலும், தனது தாயே தன்னை குப்பை தொட்டியில் போட்டு விட்டதால், இத்தனை நாட்களில் அந்த குப்பை தொட்டியில் நாற்றத்தோடு கஷ்டப்பட்ட நான் இனி உன்னோடு இருக்க இஷ்டமில்லை. எனவே, இந்த சித்தருடன் என்னை அனுப்பிவிடு என்று கூறிய மகனின் பேச்சை கேட்டு அந்த சித்தருடன் கோரக்கரை அனுப்பி வைத்தார்.
நாலா திசைகளிலும் தன்னை மறந்து சென்ற கோரக்கர் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மனின் தொழிலை தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஆழ்ந்த சக்தியை பெறுவதற்காக பிரம்ம முனியுடன் இணைந்து யாகத்தை தொடங்கினார்.
இதனையடுத்து படைக்கும் தொழில் சித்தர்களின் கைக்கு போய்விட்டால், தமக்கு மதிப்பு இருக்காது என அஞ்சிய தேவர்கள் அக்னியையும், வருணனையும் அனுப்பி யாகத்தை அழிக்க வேலை செய்தனர். இதனை அடுத்து அக்னி குண்டத்தில் போட்ட பொருட்கள் 2 பெண்களாக மாறி 2 முனிவர்களையும் சுற்றிச்சுற்றி வந்தது. இருந்தாலும் பிரம்ம முனியும், கோரக்கரும் எங்கள் யாகத்தை அழிப்பதற்காக நீங்கள் பெண்களாக வந்தீர்களா? என்று கூறி நீரை தெளித்து அவர்களை செடிகளாக மாற்றி விட்டார்கள்.
அந்த செடிகள் தான் காயகல்ப செடிகள் என அழைக்கப்படுகிறது. மேலும், அதிகளவு கோபம் கொண்ட சித்தர்கள் தங்கள் பலத்தை இழந்த காரணத்தால் படைக்கும் தொழிலை செய்யக்கூடிய வித்தையை கற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனை அடுத்து சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க காயகல்பத்தை கொண்டு உலக உயிர்கள் நோய்நொடி இல்லாமல் வாழ்வதற்கான மருந்தை தயாரிக்க கூடிய பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.
அந்த வகையில், இந்த இரு சித்தர்களுமே சதுரகிரிக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் உள்ளது. மேலும், சித்து வேலைகள் செய்து பல மக்களுக்கு வாழ்வளித்த கோரக்கர், பேரூரில் சித்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இவர் எழுதிய நூல்களில் மிக சிறப்பானதாக கோரக்கர் சந்திர ரேகை, கோரக்கர் நம நாச திறவுகோல், ரச மணிமேகலை போன்றவை முக்கியமான நூல்களாக கருதப்படுகிறது.
- 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.
வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாட்களிலும் சென்று வழிபடலாம். இங்கு ஒவ்வொரு நாளும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது சிறப்பாகும்.
வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோவில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி கோரக்கரை வழிபட்டு திரும்பினால் மனக்கவலைகள் அகலும்.
மேலும், பவுர்ணமி அன்று வழிபட்டால் ஒரு மாதம் வழிபட்ட பலன் கிடைக்கும். அதிலும், ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று கோரக்கரை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பரணி தினத்தன்று வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து, 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதுமட்டுமின்றி, கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். மன வளர்ச்சி குன்றியோர் இங்கு வந்து சென்றால் மனநலம் பெறுகிறார்கள்.
களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கின்றன. தொலை தூர பயணம் மேற்கொள்ளும் போது இவரை வணங்கி புறப்பட்டால் சிறப்பான பயணமாக அமைவதோடு செல்வ வளமும் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.
கருவறையில் உள்ள சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்ப பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்ற துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.
கோரக்கர் படத்தை வீடுகளில் வைத்து பூஜிப்பதும், பயண நேரங்களில் சட்டை பையில் வைத்து கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இவரை இயல், இசை, நாடக கலை வல்லுநர்கள் வழிபட்டு புதிய வாய்ப்புகளை பெற்று உயர்கிறார்கள். சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர். அதனால் அவரை தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்கு சமமாகும்.
- உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ‘கோரக்நாத் மந்திர்’ என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது.
- மற்ற சித்தர்களை போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களை எழுதியுள்ளார்.
பதினெண் சித்தர்களுள் புகழ்பெற்ற சித்தராக விளங்குபவர் "கோரக்கர்". இவர் அகத்தியர் மற்றும் போகரிடம் சீடராக இருந்தவர். பதினெண் சித்தர்களில் 16-வது இடத்தில் உள்ள இவர், கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன.
'இறப்பில்லா மர்மயோகி'
இவர் தமது இளம் வயதை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இது இவரது பிறப்பிடமாக கருதப்படுகிறது. இவர் இறப்பில்லா மர்மயோகி என்று சொல்லப்படுகிறது. மேலும், சிவபெருமானிடம் உபதேசம் பெற்று, நாதசைவத்தை தோற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் 880 வருடம், 11 நாள் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் தென், வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் இவரின் வரலாறு அறியப்பட்டுள்ளது.
சித்தரின் ஜீவசமாதிகள்
இவரின் ஜீவசமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்குபொய்கை நல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது. வடக்குபொய்கை நல்லூரில் சமாதி கூடிய காலம் கி.பி. 1233-ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்கு பின்னும் வாழ்ந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பொதிகை மலை, ஆனை மலை, கோரக் நாத்திடல் (மானாமதுரை), பரூரப்பட்டி (தென் ஆற்காடு), கோரக்கர் குண்டா (சதுரகிரி), பத்மாசுரன் மலை (கர்நாடகம்), கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் இவரது ஜீவசமாதிகள் உள்ளன.
கோரக்நாத் மந்திர்
இவற்றில் வடக்குபொய்கைநல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிகை மலை, ஆனை மலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக் நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் எனும் இடத்தில் உள்ளது. அங்குள்ள ஜீவசமாதிக்கு சித்ரா பவுர்ணமி அன்று பொங்கலிட்டு படையல் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதேபோல், உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட 'கோரக்நாத் மந்திர்' என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது.
வரங்கள் அருளும் 'கோரக்கர்'
இவருடன் தொடர்புடைய பிற மடங்களாக பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திரிகோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களை போலவே, கோரக்கரும் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களை எழுதியுள்ளார்.
ஐப்பசி பவுர்ணமி நாளில் ஜீவசமாதி அடைந்த இவரை வடக்குபொய்கை நல்லூரில் சென்று வழிபடுபவர்களுக்கு வரங்கள் பல அருள்வதாக இன்றும் பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.
- தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி கோவிலில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே.
- கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு.
ஒரு இடத்தில் ஒரு சித்தர் ஜீவசமாதி அடைந்து இருந்தாலே அந்த இடம் அருள் அலைகள் நிரம்பிய இடமாக திகழும். சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் அடங்கி இருப்பார்கள். அத்தகைய இடங்களில் சித்தர்களின் அருள் பொங்கி வழியும்.
அதே சமயத்தில், ஒரே இடத்தில் அதிக அளவில் சித்தர்கள் முக்தி அடைந்து இருக்கிறார்கள் என்றால் அந்த இடம் எத்தகைய மகிமை வாய்ந்த புண்ணிய தலமாக இருக்கக்கூடும். சித்தர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த மகிமை புரியும். அந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு பொய்கை நல்லூர் எனும் ஊர் ஆகும். இங்கு கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி பீடம் அமைந்துள்ளது.
இந்த ஜீவசமாதிக்கு நாம் எப்போது சென்றாலும் முன்பகுதியில் காவி உடை அணிந்த சிவனடியார்கள் நூற்றுக்கணக்கில் நிறைந்துள்ளதை பார்க்கலாம். தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி கோவிலில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே.
அந்த துறவிகளில் பலர் நிரந்தரமாகவே கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் தங்கி உள்ளனர். ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போதே ஏதோ ஓர் இனம்புரியாத அமைதி நமக்குள் ஊடுருவி விடுவதை நம்மால் உணர முடியும். அதிக அளவில் சித்தர்கள் முக்தி அடைந்த இடம் என்பதால் மனதுக்குள் வேறு சிந்தனைகளே வருவது இல்லை.
மனம் முழுக்க 'கோரக்கர் சித்தர்' நிறைந்து விடுகிறார். அங்கு அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தால் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு.
ஒவ்வொரு வியாழக்கிழமை, பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கோரக்கரை தரிசனம் செய்து இரவில் தங்கி செல்கின்றனர்.
- ஆதிசிவசைலம் எனப்படும் அத்திரி மலைக்கோவில் உள்ளது.
- ஆறுபட்டை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின் நாமமும் அத்திரி பரமேஸ்வரி என்பதே ஆகும்.
கோரக்கரின் பூர்வ ஜென்மத்தில், அத்திரி என்ற முனிவருக்கு 8 சீடர்கள் இருந்தனர். அவர்களில் கோரக்கரும் ஒருவர். கோரக்கரின் குருபக்திக்காக அத்திரி மகரிஷி தாம் தவம் செய்ய அத்தி மரத்தடியில் தண்டத்தால் தட்டி, தம் கமண்டலத்தில் உள்ள நீரை தெளித்து அங்கேயே கங்கையை உற்பத்தி செய்து அதில் கோரக்கரை நீராட செய்தார்.
அத்திரி கங்கை
இன்றும், அது அத்திரி கங்கை என்றே அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் ஆதிசிவசைலம் எனப்படும் அத்திரி மலைக்கோவில் உள்ளது.
இங்குள்ள ஆதி சிவசைல நாதரை அத்திரி முனிவர் வழிபட்டதால் 'அத்திரி பரமேஸ்வரர்' என்றும் கோரக்கரால் வழிபடப்பட்டதால் 'கோரக்க நாதர்' என்றும் பெயர்கள் கொண்டுள்ளார். இங்குள்ள ஆறுபட்டை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின் நாமமும் அத்திரி பரமேஸ்வரி என்பதே ஆகும்.
- கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.
- சிவசக்தியின் திருவருளும், கோரக்கரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.
நவபாஷண முருகன் சிலையை போகரும், கோரக்கரும் செய்து, அதனை தைப்பூச பவுர்ணமி நாளில் பழனியில் நிறுவினர். அதன் பின், ஆசிரமத்தையும், கோவிலையும் பராமரிக்கும் வேலையை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, போகர், கோரக்கரை அழைத்து என்னை பழனியில் சமாதி வைத்த பின், நீ வடக்கு பொய்கைநல்லூர் சென்று அங்கேயே தவம் செய்து கொண்டிரு, நான் என் சமாதியில் இருந்து வெளிப்பட்டு அங்கு வந்து உன்னை சமாதியில் அடக்கம் செய்கிறேன் என்றார்.
ஐப்பசி பரணியில் சமாதி அடைவேன்
அதன்படி கோரக்கர், போகரை சமாதியில் அடக்கம் செய்துவிட்டு வடக்கு பொய்கைநல்லூர் வந்தார். அப்போது அவரது சீடர்கள் அனைவரும் மக்கள் பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருந்தனர். அதைக்கண்டு மகிழ்ந்த கோரக்கர், தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சமாதி அடைந்து விடுவேன் எனக்கூறி விட்டு ஈசனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது போகர் பழனியில் உள்ள தன்னுடைய சமாதியில் இருந்து வெளிப்பட்டு தன் சீடர்களுக்கு தெரியாத வண்ணம் வடக்கு பொய்கைநல்லூர் வந்து சேர்ந்தார். அந்நாளில் கோரக்கரின் ஆசிரமம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோரக்கர் சமாதி நிலை அடைவதை காண சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், அடியார்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் அங்கு கூடி இருந்தனர். அப்போது கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.
அம்மை-அப்பன் காட்சி
அப்போது போகர், கோரக்கரை பார்த்து கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருந்து உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும், எதிர்காலத்தில் நடக்க போகும் பல அதிசயங்களை பற்றியும் எடுத்துரைத்தார். அதன்பின், கோரக்கர் அன்னை பராசக்தி- ஈசன் திருவடிகளை தியானித்த வண்ணம் சமாதியில் இறங்கினார்.
அப்போது வானவர்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் கோரக்கருக்கு வாழ்த்துக்கள் கூறி பூமாரி பொழிந்தனர். அப்போது அம்மை- அப்பன் கோரக்கருக்கு நேரில் காட்சி அளித்தனர். போகர் கோரக்கரை சமாதியில் அடக்கம் செய்தார். அதன்பின், இருவரும் வெட்டவெளியில் சங்கமம் ஆனார்கள். எனவே, தான் இந்த இடத்தில் ஈசன் திருவடிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும், அந்த இடத்தில் சிவசக்தியின் திருவருளும், கோரக்கரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.
- 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர்.
வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாட்களிலும் சென்று வழிபடலாம். இங்கு ஒவ்வொரு நாளும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது சிறப்பாகும்.
வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோவில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி கோரக்கரை வழிபட்டு திரும்பினால் மனக்கவலைகள் அகலும்.
மேலும், பவுர்ணமி அன்று வழிபட்டால் ஒரு மாதம் வழிபட்ட பலன் கிடைக்கும். அதிலும், ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று கோரக்கரை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பரணி தினத்தன்று வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து, 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதுமட்டுமின்றி, கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். மன வளர்ச்சி குன்றியோர் இங்கு வந்து சென்றால் மனநலம் பெறுகிறார்கள்.

களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கின்றன. தொலை தூர பயணம் மேற்கொள்ளும் போது இவரை வணங்கி புறப்பட்டால் சிறப்பான பயணமாக அமைவதோடு செல்வ வளமும் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.
கருவறையில் உள்ள சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்ப பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்ற துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.
கோரக்கர் படத்தை வீடுகளில் வைத்து பூஜிப்பதும், பயண நேரங்களில் சட்டை பையில் வைத்து கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இவரை இயல், இசை, நாடக கலை வல்லுநர்கள் வழிபட்டு புதிய வாய்ப்புகளை பெற்று உயர்கிறார்கள்.
சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர். அதனால் அவரை தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்கு சமமாகும்.
- கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாள்களிலும் சென்று வழிபடலாம்.
- தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாள்களிலும் சென்று வழிபடலாம். இங்கு ஒவ்வொரு நாளும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது சிறப்பாகும். வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோவில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி கோரக்கரை வழிபட்டு திரும்பினால் மனக்கவலைகள் அகலும்.
மேலும், பவுர்ணமி அன்று வழிபட்டால் ஒரு மாதம் வழிபட்ட பயன் கிடைக்கும். ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று கோரக்கரை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பரணி தினத்தன்று வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து, 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். மன வளர்ச்சி குன்றியோர் இங்கு வந்து சென்றால் மனநலம் பெறுகிறார்கள். களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கின்றன. தொலை தூர பயணம் மேற்கொள்ளும் போது இவரை வணங்கி புறப்பட்டால் சிறப்பான பயணமாக அமைவதோடு செல்வ வளமும் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.
கருவறையில் உள்ள சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்ப பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்ற துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.
ஆசிரம வளாகத்தில் வட சுற்றில் வளர்ந்துள்ள நாகலிங்க மரத்தை 3 முறை வலம் வந்தால் சிவனருளும், குருவருளும் ஒருசேர வாய்க்கின்றன. கோரக்கர் படத்தை வீடுகளில் வைத்து பூஜிப்பதும், பயண நேரங்களில் சட்டை பையில் வைத்து கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இவரை இயல், இசை, நாடக கலை வல்லுநர்கள் வழிபட்டு புதிய வாய்ப்புகளை பெற்று உயர்கிறார்கள்.
சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர். அதனால் அவரை தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்கு சமமாகும்.






