என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
    • சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது.

    மேல்மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூறையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூறையை சாப்பிட்டது. அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    சிவபெருமானை விட்டு கீழே இறங்கி சூறையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது. இதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள். இந்த நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மனின் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டார்.

    சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது. அது சிவ சுயம்பு உருவமானது. அப்புற்றுக்குள் கோவில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது. இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டிலிருக்கும் மிருககணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன.

    அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை. இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர். அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை. இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர். அப்போது கலியுகம் பிறந்தது.

    கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது. அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும். நம் எல்லோருக்கும் அருளும் அம்பிகை அங்காளம்மனாக அந்த புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    • பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார்.
    • சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.

    மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இங்குள்ள அக்னி குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் இந்த அக்னி குளத்தின் சிறப்பும் புராணமும் தெரிந்திருப்பதில்லை.

    பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. இந்த கபாலம் சிவனுக்கு படைக்கும் உணவை உண்டு விடுவதால் பசியால் வாடிய சிவபெருமானுக்கு பித்து பிடித்து காடு மலைகளில் சுற்றி திரிந்தார்.

    இதை பார்த்த பார்வதி தேவி மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார். மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது சிவபொருமானுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என மகா விஷ்ணு கூறியதுடன் சாப விமோசனத்திற்கான வழியையும் கூறுகிறார்.

    இதன்படி பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார். பார்வதி தேவி திருமண வயதை அடைந்திருந்த நேரத்தில் காடுமலைகளில் சுற்றி திரியும் சிவபெருமான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.

    சிவபெருமான் வந்து இருப்பதை அறிந்து கொள்ளும் பார்வதி தேவி மறுநாள் நடக்கும் மயான கொள்ளையில் சிவனுக்கு படைக்க சுவையான உணவை கொண்டு வருகிறார். கடும் பசியில் இருக்கும் சிவனுக்கு பார்வதி தேவி கொடுக்கும் உணவை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரம்மன் கபாலம் உண்டு விடுகிறது. உணவை எடுக்க சிவபெருமானின் கரத்தில் இருந்துவிடுபட்டு கீழே இறங்கும் பிரம்மன் கபாலத்தை பார்வதி தேவி விஸ்வரூபம் எடுத்து தனது காலால் பூமியில் மிதித்து ஆட்கொள்கின்றார்.

    இதன் பிறகு சிவபெருமானுக்கு சாப விமோசனம் ஏற்படுகிறது. கோபத்தினால் அக்னி பிழம்பாக மாறும் பார்வதி தேவி இங்குள்ள அக்னி குளத்தில் குளித்ததாக புராணம் கூறுகிறது. இதன் பிறகும் தனியாத பார்வதி தேவியின் கோபத்தை தணிக்க தேவர்கள் ஒன்றுகூடி தேர் திருவிழா நடத்தினர். இதில் தேவர்களே தேரின் பாகங்களாக இருப்பதாக விழா எடுக்கின்றனர். இந்த விழாவே இன்றுவரை மேல்மலையனூரில் மாசி திருவிழாவாக நடந்து வருகிறது.

    • சூரவேல் குருமூர்த்தி, சுகிர்தன்பவன், கந்தசாமி, ஆறுமுகவேலன்,
    • பெண்குழந்தைகளுக்கான பெயர்கள்.

    ஆண்குழந்தைகளுக்கான பெயர்கள்:

    சக்திபாலன், சரவணன், சுப்ரமண்யன், குருபரன், கார்த்திகேயன், சுவாமிநாதன், தண்டபாணி, குகஅமுதன், பாலசுப்ரமணியம், நிமலன், உதயகுமாரன், பரமகுரு, உமைபாலன், தமிழ்ச்செல்வன், சுதாகரன், சற்குணசீலன், சந்திரமுகன், அமரேசன், மயூரவாஹனன், செந்தில்குமார், தணிகைவேலன், குகானந்தன், பழனிநாதன், தேவசேனாபதி, தீஷிதன் சிவகுமார், ரத்னதீபன், லோகநாதன், தீனரீசன், சண்முகலிங்கம், குமரகுரு, முத்துக்குமரன், அழகப்பன், தமிழ்வேல், மருதமலை, சுசிகரன், குமரன், தயாகரன், ஞானவேல், சிவகார்த்திக், குஞ்சரிமணாளன், முருகவேல், குணாதரன், அமுதன், செங்கதிர்ச்செல்வன், பவன்கந்தன், திருமுகம், கதிர்காமன், வெற்றிவேல், ஸ்கந்தகுரு. பாலமுருகன், மனோதீதன், சிஷிவாகனன், இந்திரமுருகன். செவ்வேல், மயில்வீரா, குருநாதன், பழனிச்சாமி, திருச்செந்தில், சங்கர்குமார், சூரவேல் குருமூர்த்தி, சுகிர்தன்பவன், கந்தசாமி, ஆறுமுகவேலன், வைரவேல், அன்பழகன், முத்தப்பன், சரவணபவன், செல்வவேல், கிரிசலன், குலிசாயுதன், அழகன், தண்ணீர்மலயன்.

    பெண்குழந்தைகளுக்கான பெயர்கள்:

    கார்த்திகா, கார்த்திகாயினி, கிருத்திகா, பழனியம்மாள், விசாகா, சண்முகப்பிரியா, சண்முகி, சரவணப் பிரியா, தமிழ்ச்செல்வி, வெற்றிச்செல்வி, முருகம்மாள், வேலம்மாள், வேலாயி, ஜெயந்தி, செண்பகம், செண்பகப் பிரியா, மருதம்மாள், மருதாயி, வள்ளி, தெய்வானை.சக்திதாரா, எழில் வெண்பா, மயிலினி, விசாலினி, நித்ரா, மகிழ்வதனா, எழில் நேத்ரா, சென்னியம்மாள், அமராவதி, கந்தம்மாள், இனியா, கந்தாயி, சோலையம்மாள், தங்கமயில், சண்முகலட்சுமி, வெண்பா, செந்தூரதேவி, இளமயிலி, கந்தவி, தணிகைவேதா.

    • குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள்.
    • தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு.

    அமாவாசை அன்று கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு. இதில் அமாவாசை விரத சமையலிலும் சரி, அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போது வேதியருக்கு கொடுக்கும் பொருட்களிலும் சரி வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள். வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள். அதே போல் அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு புராணத்தில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    ஒருமுறை வசிஷ்ட முனிவர், விஸ்வாமித்திரரை சந்தித்து, தனது வீட்டிற்கு உணவு அருந்த வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். வசிஷ்டர், விஸ்வாமித்ரர் இருவருமே பயங்கர கோபக்கார முனிவர்கள். வசிஷ்டரின் இந்த அழைப்பை ஏற்ற விஸ்வாமித்ரர், தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்க வேண்டும் என கூறினார்.

    இதை கேட்ட வசிஷ்டர் திகைத்து போனார். "1008 காய்கறிகளா? அத்தனை வகை காய்கறிகளை எப்படி தேடி பிடிப்பது? எப்படி சமைப்பது?" என குழப்பமடைகிறார். ஆனால் அருகில் இருந்த வசிஷ்டரின் மனைவியும், தீவிர பதி விரதையுமான அருந்ததி, விஸ்வா மித்ரரின் வார்த்தைகளை ஏற்று, நீங்கள் கூறிய படி 1008 காய்கறிகளை சமைத்து பரிமாறுகிறேன் சுவாமி என பணிவுடன் பதிலளித்தாள்.

    சிரார்த்தம் கொடுக்கும் நாளும் வந்தது. ரிஷிகளில் பிரம்மரிஷி பட்டம் வாங்கிய விஸ்வாமித்ரரும் உணவு சாப்பிட வந்தார். வாழை இலை போட்டு உணவுகளை பரிமாற துவங்கினாள் அருந்ததி. முதலில் எட்டு வாழைக்காய்களை வைத்தாள்.

    பிறகு பாகற்காய், பிரண்டை, பலாக்காய் என பரிமாறி முடித்து விட்டு, 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது. உணவு அருந்துங்கள் சுவாமி என பணிவுடன் விஸ்வாமித்ரரிடம் வேண்டினாள். ஆனால் ஆத்திரமடைந்த விஸ்வாமித்ரர், என்ன இது? நான் 1008 காய்கறிகள் சமைத்து பரிமாறச் சொல்லி கேட்டால், நீ நான்கு காய்களை மட்டும் பரிமாறி விட்டு 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது என சொல்லி என்னை அவமானப் படுத்துகிறாய் என கோபமடைந்தார்.

    அதற்கு அமைதியாக பதிலளித்த அருந்ததி, "சுவாமி, தாங்கள் அறியாதது இல்லை. அனைத்தும் அறிந்த நீங்களே இப்படி கோபப்படலாமா? அதாவது பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டை 300 காய்களுக்கும், பலாக்காய் 600 காய்கறிக்கும் சமம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவை ஆயிரம் காய்கறிகள் ஆகி விட்டது. இதோ எட்டு வாழைக்காய்களை வைத்துள்ளேன். மொத்தம் 1008 காய்கறிகள் ஆகி விட்டது" என கூறினாள்.

    இதைக் கேட்டு சாந்தமடைந்த விஸ்வாமித்ரர், அருந்ததியின் புத்திகூர்மையையும், சாஸ்திர முறைப்படி நடக்கும் குணத்தையும் கண்டு வியந்து, அருந்ததியையும், வசிஷ்டரையும் ஆசிர்வதித்து சென்றார். சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டுள்ளதன் காரணமாகவே உயர்வான இந்த 4 காய்கறிகள் மட்டும் அமாவாசை சமையலில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

    • நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார்.
    • சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.

    ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்சிினை ஏற்பட்டது. அவர்களது சண்டையை தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

    தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சிவ பெருமானுக்கு மிகப்பெரிய நெருப்பு பிழம்பமாக தோன்றினார். அந்த நெருப்பு பிழம்பு விண்ணிற்கும், மண்ணிற்கும் பரவி மிகப் பெரிய வடிவமாக காட்சி அளித்தது. அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண விஷ்ணுவும், முடியை காண பிரம்மாவும் புறப்பட்டனர்.

    அடியையும், முடியையும் முதலில் கண்டறிந்த வருபவரே உலகில் பெரியவர் என்றார் சிவபெருமான். அன்னப்பறவையாக மாறி பல யுகங்கள் பிரயாணம் செய்த பிரம்மாவின் அகந்தை குறையாததால் ஒரு தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல அழைத்து வந்தார். அதன் படி தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. நெருப்பு பிழம்பாக இருந்த சிவ பெருமானுக்கு கோபம் வந்தது.

    அந்த நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு பூவுலகில் வழிபாடுகளே இருக்காது என்றும், தாழம்பூ எந்த பூஜைக்கு பயன்படாமல் கொடிய நாகங்கள் குடியிருக்கும் இடமாக மாறும் என்றும் சாபம் அளித்தார். அதே சமயம் சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.

    இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் தான். மகாசிவராத்திரி மட்டுமல்ல லிங்க வழிபாடும், உலகில் முதன் முதலில் அக்னி தோன்றியதும் திருவண்ணாமலை திருத்தலத்தில் தான். இந்த அக்னியில் இருந்த தான் சூரியன், சந்திரனின் பிரகாசங்களும், தீப ஒளியும் தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன.

    அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி அளித்தார். இந்த நிகழ்வு மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் நடைபெற்றதாலேயே இந்த நாள் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை தலத்தில் இருந்து தான் லிங்க வழிபாடும், மகாசிவராத்திரி வழிபாடும் மற்ற பகுதிகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.

    • திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.
    • திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.

    வெற்றிவேலாயுதசுவாமி கோவிலுக்குப் பின்புறம் மேற்கே சற்றுத்தள்ளி தனிக் கோவிலாக வள்ளி-தெய்வானை கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை போருக்கு சென்று வதம் செய்த பிறகு தனிமையில் இருந்தார்.

    அவரை மணம் முடிக்க விரும்பிய வள்ளி- தெய்வானை இருவரும் இம்மலைக்கு வந்து, முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரன் மகளாகத் தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இது திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.

    எனவே இங்கு திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.

    • கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு.
    • சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    காலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவ நாமத்தை சொல்லிய படி இருக்க வேண்டும். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்யலாம்.

    நாள் முழுவதும் உபவாசமாக இருந்து, மாலையில் சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது கோவிலில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டாம்.

    கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டிலேயே பிரதோஷ விரதம் இருந்து, சிவ வழிபாட்டினை செய்யலாம். தொடர்ந்து பிரதோஷ விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை சிவபெருமான் அருளுவார் என புராணங்கள் சொல்கின்றன.

    • கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தின் கடற்கரையை ஓட்டி மந்தர் மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கு குளத்தில் பாஞ்சஜன்ய சங்கு என்று அழைக்கப்படும் சங்கு உள்ளது.

    இந்த சங்கானது வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும். ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும் மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறி வருகின்றனர்.

    புராணக் கதையின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுகிறது. பீகார் கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மலைக்குச் செல்ல வனத்துறையிடம் பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

    • மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.
    • சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    மலையே சிவன். சிவனே மலை. ''வானனை, மதி சூடிய மைந்தனை, தேனனை, திருவண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த ஆனனை, அடியேன்மறந்து உய்வனோ?" என்று உருகுகிறார் நாவுக்கரசர். நெருப்பு தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.

    மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

    மகா சிவராத்திரியின் போது, கோவில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலையைச் சுற்றி வருகிறார்கள். சிவராத்திரி விழா உருவானதும் இங்கு தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    • கோவில் விளங்கக் குடி விளங்கும் என்பர் சான்றோர்.
    • "குன்று தோராடும் குமரனின்" திருத்தலங்களில் கதித்தமலையும் ஒன்று.

    "ஆலயம் தொழுவது சாலவும் நன்று " என்பார் ஒளவையார்.

    "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் " என்கிறது பழமொழி.

    "கோவில் விளங்கக் குடி விளங்கும்" என்பர் சான்றோர்.

    அதேபோல் "பிறவா யாக்கை பெரியோன் கோவில்" எனச் சிவன் கோவிலையும், "நீலமேனி நெடியோன் கோவில்" எனத் திருமால் கோவிலையும்,

    "பாய் கலைப்பாவை கோவில்" எனச் சக்தி கோவிலையும்

    "வேல் கோட்டம்" என முருகன் கோவிலையும், வகைப்படுத்துவர் நம் முன்னோர்.

    அத்தகைய வரிசையில், "குன்று தோராடும் குமரனின்" திருத்தலங்களில் கதித்தமலையும் ஒன்று.

    "கதித்தமலைக்கு எதுத்த மலை இல்லை" என்ற கூற்று கதித்தமலையின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் கூறவும், பாரோர்க்குப் படம் பிடித்துக்காட்டவும் அப்பகுதி மக்களால் உச்சரிக்கப்பட்ட ஒரு சொல்லே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    "பாடப்பாட வாய் மணக்கும்" தெய்வீகத் திருப்புகழை இவ்வுலகிற்கு தந்த அருளாளர் அருணகிரியார் தம் பழனி மலைத் திருப்புகழில் "பதியினில் மங்கை கதித்த மாமலையோடு சிலை குன்றில் தரித்து" என்ற வரிகள் மூலம் கதித்தமலையின் புகழை-பெருமையை இமயத்தின் உச்சிக்கே ஏற்றி வைத்திருக்கிறார் என்பது நாம் பெற்ற பெரும் பேறாகும்.

    • போர் படைகளோடு முருகன்.
    • முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் நவவீரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

    "முருகா இந்த சக்திவேல், பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி படைத்தது. சகல உயிரினங்களையும் ஒன்று சேர தோற்கடிக்க வல்லது. பகைவரது வலிமைகளையும் அவர்கள் பெற்ற வரங்களையும் சிதைத்து உயிர்களை கவரும் ஆற்றல் கொண்டது. அனைத்து படைக்கலங்களையும் வெல்லும் ஒப்பற்ற சக்தி வாய்ந்தது".

    -கந்த புராணம்

    திருமுருக வேல்கள்

    அபய வேல், உக்கிர வேல், இலை வேல், எரி வேல், ஓங்கார வேல், கூர் வேல், கொடு வேல், சதுர் வேல், சின வேல், சுடர் வேல், சூர வேல், நல் வேல், நெடு வேல், படை வேல், புஷ்ப வேல், மந்திர வேல், முக்தி வேல், ருத்திர வேல், வஜ்ர வேல், வீர வேல், வளர் வேல், புனித வேல், துணை வேல், சீறும் வேல், சமர் வேல், கம்பீர வேல், எதிர் வேல், ஈர்க்கும் வேல், அன்பு வேல், நுண் வேல்.

    போர் படைகளோடு முருகன்

    சிவபெருமான் முருகனை அழைத்து ஒரு போர் படை அமைத்து தலைமை தாங்கி அசுரர்களை முற்றிலும் அழிக்கவும், தேவர்களை காக்கவும், கட்டளையிட்டார். முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் நவவீரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

    - கந்த புராணம்.

    திருமுருகனின் படைக்கலங்கள்

    அங்குசம், வில், சூலம், சங்கம், கலப்பை, தாமரை, தண்டம், குலிசம், ஜபமாலை, கேடயம், வச்சிரம், கமண்டலம், கோழி (குக்குடம்), அம்பு, கொடி, சக்கரம், கதை, மணி, உளி (டங்கம்), கரும்புவில், உலக்கை, நீலோத் பலம், மலரம்பு (வல்லி), பாசம், கத்தி.

    • அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
    • நாகதோஷம், ராகு-கேது தோஷம் ஆகியன நீங்க சிறப்பு வழிபாடும் செய்கின்றார்கள்.

    வெற்றி வேலாயுத சுவாமி கோவிலின் கீழ் தென் கிழக்குப்பக்கம் பாம்பு புற்றுக்குத் தனிக்கோவில் அமைந்துள்ளது. பல புற்றுக்கண்களை உள்ளடக்கிய அப்புற்றில் தெய்வீக நாகம் குடிகொண்டுள்ளது. உத்திராயண காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தில் அப்புற்று வளர்வதும், தட்சிணாயன காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தில் அப்புற்று தேய்வதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் அதிசயம் ஆகும்.

    அப்புற்றை சுப்பராயர் என்று அழைக்கின்றனர். அப்பாம்பு புற்று மயில் போலக்காட்சி அளிக்கிறது. அப்புற்றின் மேற்புறம் இரண்டு நாகச்சிற்பங்கள் உள்ளன. வெளியில் நாகர் சிற்பமும், வேலும் உள்ளன. இது மயூரகிரிச் சித்தரின் ஜீவசமாதியாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கதித்தமலையானை வழிபடும் முன்பு சுப்பராயர் சன்னதியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். நாகதோஷம், ராகு-கேது தோஷம் ஆகியன நீங்க சிறப்பு வழிபாடும் செய்கின்றார்கள்.

    ×