என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
- முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது.
புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11-ந்தேதிகளில் 4 புரட்டாசி சனி வருகிறது. இந்த 4 சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. என்றாலும் பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது. மகாளய பட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும். இப்படி தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதை உணர்ந்து, புரட்டாசியில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால் உரிய பலன்களை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.
புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகா லட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்....'' என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா-சின்னம்மை தம்பதிக்கு 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ந்தேதி மகனாகப் பிறந்தார்.
புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
- மேஷம்- முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்
- ரிஷபம்- வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும்.
மேஷம்
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். தனஸ்தான அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும்.சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும்.
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். 30.8.2025 அன்று காலை 7.53-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எந்த செயலையும் பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். விநாயகருக்கு அவல், பொரி படைத்து வழிபடவும்.
ரிஷபம்
திருமண விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் சுக்கிர பகவானை சேரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும். மேலதிகாரிகள் அதிகப் பணிச்சுமையை தரலாம்.
சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு கேதுவின் மையப்புள்ளியில் ராசியும் 7ம்மிடமும் இருப்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது. சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். குங்கும விநாயகர் செய்து வழிபடவும்.
மிதுனம்
எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வார இறுதி நாளில் வெற்றி ஸ்தானம் செல்கிறார். வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.
அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். வில்வ அர்ச்சனை செய்து விநாயகரை வழிபடவும்.
கடகம்
செல்வாக்கு சொல்வாக்கு உயரும் வாரம். ராசி அதிபதி சந்திரன் ராசிக்கு 2,3.4-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். வருமானம் உயர்வதால் உங்கள் செல்வாக்கு சொல்வாக்கிற்கு மதிப்பு இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும். அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தடைபட்டிருந்த தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும்.
வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும். வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும் பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்தி ருப்பது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.
சிம்மம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று கேது உடன் இணைகிறார். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடுமனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும்.
சேமிப்பு கரையும். பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். அஷ்டமச் சனி மற்றும் ஜென்ம கேதுவின் தாக்கம் இருப்பதால் பார்க்கும் வேலையை மாற்ற செய்ய வேண்டாம். குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப் படும். விநாயகருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.
கன்னி
காரிய தடைகள் நீங்கும் வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதி நாள் வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியினருக்கு மிகச் சாதகமாக உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும்.
நோய் பாதிப்புகள் குறைய துவங்கும்.இழுபறியான பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். விநாயகருக்கு பால் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
துலாம்
மேன்மையான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெறுகிறார். இது மதன கோபால யோமாகும்.இது உங்கள் தோற்றத்தால் பிறரை ஈர்க்கும் சக்தியை கொடுக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும். பெண்கள் ஆவணி மாத வளர்பிறை கால கட்டத்தில் மாங்கல்யம் மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.லாப கேதுவின் காலம் என்பதால் விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.
விருச்சிகம்
எண்ணியது ஈடேறும் வாரம். 10-ம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார்.
பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப. விசேஷங்கள் நடக்கும். தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.
தனுசு
நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ஆட்சி. உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். இளமையாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும்.இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசே ஷங்கள் நடக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.தொழி லில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம்.
தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.மாணவர்கள் அக்கரையாக படிப்பார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று வெள்ளருக்கு மாலை அணிவித்து விநாய கரை வழிபடவும்.
மகரம்
தடைகள் தகர்த்து வெற்றி நடைபோடும் வாரம்.ராசிக்கு புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.உங்களை அலங்கரித்துக் கொள்வதி லும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கு வதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனிபோல் விலகும்.துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் 25.8.2025 அன்று காலை 8.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். உத்தி யோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னே ற்றத்துக்கு உதவும் விநாயகர் சதுர்த்தி அன்று பால் கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபடவும்.
கும்பம்
எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உண்டாகும் வாரம்.ராசியில் ராகு ஏழில் சூரியன் கேது சேர்க்கை உள்ளது.எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும். பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும்.
அதிக வேலை பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடி யாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 25.8.2025 அன்று காலை 8.29 முதல் 27.8.2025 அன்று இரவு 7.21 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எல்லா விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். விநாய கருக்கு கடலை உருண்டை வைத்து வழிபடவும்.
மீனம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியில் வக்ர சனி பகவான் சஞ்சாரம். ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும்.
வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். அரசியல்வாதிகள் மனவுமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும்.விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். 27.8.2025 அன்று இரவு 7.21 முதல் 30.8.2025 காலை 7.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது.காலத்தின் அருமை அறிந்து செயல்பட வேண்டும்.மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
- கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார்.
- தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.
திருச்செந்தூர் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட புலவர்களில் ஒருவர் படிக்காசுப் புலவர். ஆதிகாலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் வட பகுதியில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் என்ற ஊரில் பிறந்தார். ஆதிகாலத்தில் இந்த ஊர் பொற்களந்தை என்று அழைக்கப்பட்டது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியம் கற்று தமிழில் மிகச்சிறந்த புலமை மிக்கவராக மாறினார். அவர் இயற்றிய "தொண்டை மண்டல சதகம்" மற்றும் "தண்டலையார் சதகம்" ஆகிய நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இளம் வயதில் இவர் ஊர் ஊராக போய் ஆலயங்களை தொழுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதோடு கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். சிலர் ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் அவரை கிண்டல் செய்தனர். என்றாலும் படிக்காசுப் புலவர் மனம் தளர்ந்தது இல்லை.
"ஒளி வீசும் விளக்கை அணைத்து விட்டு இவர்கள் வெளிச்சத்தை தேடி அலைகிறார்கள்" என்று பதில் அளித்து விட்டு அடுத்த ஊருக்கு சென்று விடுவார். அப்படி ஊர் ஊராக சென்ற அவர் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றார். அங்கு தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.
அப்போது அருகில் இருந்த அன்னை சிவகாம சுந்தரியிடமும் தனது ஏழ்மை நிலையை சொல்லி வருந்தி வேண்டுகோள் விடுத்தார். முருகருக்கு வேல் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தாய். மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். ஆனால் எனக்கு மட்டும் எதுவும் தரவில்லையே ஏன்? என்று உரிமையோடு அன்னையிடம் பாடல்களில் கேள்வி கேட்டார்.
அவர் பாடி முடித்த அடுத்த நிமிடம் சிதம்பரம் பஞ்சாட்சரப் படிகளில் 5 தங்க காசுகளை அன்னை சிவகாம சுந்தரி எடுத்து போட்டாள். இதை கண்டதும் புலவர் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகுதான் அவருக்கு படிகாசுப் புலவர் என்ற பெயர் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தில் உள்ள மற்ற தலங்களுக்கும் யாத்திரை சென்றார். அங்குள்ள மக்களுக்கு தனது அருட்கவியால் மகிழ்ச்சி அடைய செய்தார். அவரது பாடல்களையும் வாக்குகளையும் மக்கள் தெய்வ வாக்காக கருதி வரவேற்றனர்.
- விழாவில் முதல் நாள் மாலை சுவாமி வீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடைபெறும்.
- ஈசான மூலையில் சுவாமி அம்பாளை நிற்க வைத்து வெள்ளை துணியை மேலே சாத்தி தீபாராதனை காட்டப்படும்.
ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவில் முதல் நாள் மாலை சுவாமி வீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடைபெறும்.
ஈசான மூலையில் சுவாமி அம்பாளை நிற்க வைத்து வெள்ளை துணியை மேலே சாத்தி தீபாராதனை காட்டப்படும்.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அன்று மாலை சிறப்பு நடன தரிசனம் முடிந்து நடராஜர் அம்பாள் ஊடல் நிகழ்ச்சி நடைபெறும்.
பெருமாள், நடராஜரின் ருத்ரதாண்டவத்தை சமாதானப்படுத்துவது ஐதீகம்.
பெருமாள், நடராஜர் இருக்கிற இடத்திற்கு எழுந்தருளி சென்று மரியாதை மற்றும் தீபாராதனை நடைபெறும்.
அப்போது ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடத்தப்படுவது சிறப்பு ஆகும்.
மாலையில் தயிர் பாலாடை உற்சவம் நடைபெறும். நடராஜர் முன்பு தயிர் சாதம் படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
3 நாட்கள் இந்த உற்சவம் நடைபெறும்.
இந்த விழாவில் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
- ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.
- சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.
ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.
சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.
இந்த மரம் எந்த வித இடையூறும் இல்லாமல் மேலோங்கி வளர்ந்து செல்லும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
வன்னி இலைகள் விநாய கருக்கும், முருகனுக்கும், சிவபூஜைக்கும், சனீஸ்வரருக்கும் உகந்த பச்சிலைகள் ஆகும்.
வன்னி மருத்துவ பயன்மிக்க ஒரு சிறந்த மூலிகையும் ஆகும்.
பொதுவாக சிவன் கோவில்களில் வில்வமரம் இருப்பதைத்தான் பார்க்க முடியும்.
இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.
வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும். நினைத்தாலும், கைகூப்பி தொழுதாலும், வலம் வந்தாலும் நம் பாவங்கள் விலகும் என விநாயகர் புராணம் சொல்கிறது.
வன்னி மரத்தின் அடியில் ஒரு முனிவர் தவம் இருந்து வந்தார் என்றும், அந்த மரத்தில் முனீஸ்வரர் குடி கொண்டுள்ளார் எனவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.
வன்னி மரத்தை வாரம்தோறும் சுற்றி வந்தால் பிரச்சி னைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
எல்லா பிணிகளையும் போக் கவல்ல மூலிகையாக திகழும் வன்னியை வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லா துயரங்களும் விலகி நன்மை கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
- பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது.
- சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.
கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்த நாளில் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும்.
இது புலிப்பாணி, அகத்தியர் சொன்ன நல்லநாள். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை.
பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது.
சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.
தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.
முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது.
ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.
அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.
- கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
- இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.
கோவிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கித்தான் இருக்கிறது.
இது எப்போதும் அடைத்துக் கிடக்கும். எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான்கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
உள்ளே நுழைந்ததும் விநாயகர் சந்நிதி உள்ளது.
தெற்கு வளாகத்தில் விசாலாட்சி விஸ்வநாதர் இருக்கிறார்கள். இவர்களை பாலசித்தரை ஐக்கியப்படுத்திய கோலத்தில் காணலாம்.
கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.
இங்கு உற்சவ மூர்த்திகள் மூன்று உண்டு. வெளியே தென் பக்கத்தில் ஒரு மடம் இருக்கிறது.
அதில் பால சித்தர் சிலையை காணலாம்.
இங்கு பிரம்மமோற்சவக் காலம் பங்குனி மாதம். தைப்பூசப் பெருவிழாவும் உண்டு.
பிரம்மோற்சவம் 5ஆம் நாளும் தைப்பூசத்திலும் முருகன், பெரிய தங்க மயில் வாகனத்தில் வீதி வலம் வருவார்.
இவை இரண்டும் பக்தர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
- மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது.
- அதற்கு காரணம் மயிலம் தலத்துக்கு சென்று வந்தால் உடனே திருமணம் கைகூடும், மற்றும் எடுத்தக்காரியம் உடனே வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.
மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது.
அதற்கு காரணம் மயிலம் தலத்துக்கு சென்று வந்தால் உடனே திருமணம் கைகூடும், மற்றும் எடுத்தக்காரியம் உடனே வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் திண்டிவனத்தை கடந்ததும் மயிலம் ஊரை அடையலாம்.
மயிலம் மெயின் பஜாரில் இருந்து பார்த்தாலே மயிலம் மலை முருகன் கோவில் தெரியும்.
திண்டிவனம் நெடுஞ்சாலையில் இருந்து திருப்பாதிரிபுலியூர் செல்லும் வழியில் சென்றால் மிக எளிதாக மயிலம் தலத்துக்கு செல்ல முடியும்.
மயிலம் அடிவாரத்தில் இருந்து குன்று நோக்கி வரும் சாலையில் வந்தால் கோவிலின் தெற்கு வாசல் வந்து சேருவோம்.
- அப்படி சென்றவர்கள், ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அந்த பல்லக்கை இறக்கி வைத்தனர்.
- அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.
ஆதியில் சமயபுரத்தாள், ஸ்ரீரங்கத்தில் இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
விஜயநகரப் பேரரசின் வலிமை குன்றியபோது பகைவரின் அத்துமீறிய தாக்குதலால் அம்பாளை இடமாற்றம் செய்ய நினைத்துள்ளனர் அன்றிருந்த அன்பர்கள்.
அதற்காக தேவியின் சிலையை பல்லக்கில் ஏற்றி மாற்று இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
அப்படி சென்றவர்கள், ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அந்த பல்லக்கை இறக்கி வைத்தனர்.
அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.
ஸ்ரீபாதம் தாங்கிகள் மீண்டும் பல்லக்கை அங்கிருந்து தூக்க முற்பட்டபோது அம்பாளின் திருமேனியை அசைக்கக்கூட இயலாமல் போனதாம்.
அதனால் அம்பாளை வணங்கி அங்கேயே குடியமர்த்தியதாகச் சொல்கின்றனர்.
- தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் த்வாபர யுகத்தில் அவதரித்தனர்.
- அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சமயபுரம் அம்பாளின் தோற்றம் குறித்து பல்வேறு புராதனக் குறிப்புகளும், செவிவழிச் செய்திகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன.
அவற்றுள் முக்கியமானவற்றை இங்கு காண்போம்.
தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் த்வாபர யுகத்தில் அவதரித்தனர்.
அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேவகிக்கு பிறக்கும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கமுடைய கம்சன், கடைசியாக அங்கு வந்த (யசோதையின் குழந்தை) பராசக்தியான இளம் குழந்தையைக் கொல்ல முற்பட்டான்.
அப்போது அவன் கரத்திலிருந்து விடுபட்ட பராசக்தி, தனது உண்மைத் தோற்றத்தை அவனுக்கு காட்டி மறைந்தாள்.
பின்னாளில் கண்ண பரமாத்மாவால் கம்சன் சம்ஹாரம் செய்யப்பட்டான்.
இத்தேவியே மகாமாரி என்னும் மாரியம்மனாக மக்களால் பூஜிக்கப்படுகிறாள்.
அநீதியையும் தீமைகளையும் அழித்து மக்களுடைய தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் அந்த அன்னை மகாமாயியே சமயபுரத்தில் அற்புத அம்மனாக காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டுள்ளாள்.
- புதுமனைப் புகுவிழா நடைபெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள்.
- அப்படி கோமாதா வருவது புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.
நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம்.
புது வீட்டுக்குள் வரும் பசு அங்கு வைத்து ஒரு வாய்ப்புல் தின்று அங்கேயே அது தன் கோமியத்தை இட வேண்டும்;
அந்தக் கோமியத்தில் மஞ்சள் பொடி கலந்து அந்தப் புதுமனையின் உள்ளும் புறமும் எங்கும் தெளிக்க வேண்டும் என்பதே.
புதுமனை புகு விழாவின் முக்கிய நிகழ்வாகும்.
இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் நோய், நொடியின்றி செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.
புதுமனைப் புகுவிழா நடைபெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள்.
அப்படி கோமாதா வருவது புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப் பலன் உண்டு.
பால் நீண்ட வாழ்வையும், தயிர் புத்ர விருத்தியையும், நெய் மோட்சத்தையும், பஞ்ச கவ்யம் ஆன்ம விருத்தியையும் தரும்.
பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
சிவனுக்கு அபிஷேகம் செய்து, அவனை அர்ச்சித்து, ஆராதித்தால் அவனது அருட்கடலில் மூழ்கித் திளைக்கும் பெரும் பேறு அடியவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
சிவனுக்கு மிக விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்ச கவ்வியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- கங்கா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற்பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது.
- தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.
உலகத்தைப் படைத்தபோது பிரம்மா பசுவையும் படைத்தார். அது மட்டுமின்றி பசுவின் உடலில் பதினான்கு உலகங்களையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் இடம் பெறச் செய்தார்.
எல்லாத் தேவர்களும் பசுவின் உடலில் இடம் பெற்றுவிட்ட நிலையில் கங்கா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற்பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது.
தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.
அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை ஏற்றுக்கொண்டனர்.
அதனால்தான் நாம், பசுவின் முன் பாகத்தையோ, முகத்தையோ தொட்டு நம்முடைய கண்களில் பக்தி உணர்வுடன் ஒற்றிக்கொள்வதோடு கோமாதா வழிபாட்டை முடித்து கொள்வதில்லை.
பசுவின் பின் பகுதியையும் தொட்டு இரண்டு கண்களிலும் பணிவுடன் ஒற்றிக்கொள்கிறோம்.
அதனால்தான் சாணத்துக்கும், கோமியத்துக்கும் அவ்வளவு மரியாதையும் மதிப்பும் உள்ளது.
பசு தரும் சாணத்தைத்தான் நாம் பெரும் புனிதப் பொருளாகக் கருதி அதிலிருந்து விபூதி தயாரித்து நம் உடம்பெங்கும் பூசி நோய்கள் அனைத்தையும் போக்கிக் கொள்கிறோம்.
அதுபோல பசுவிடம் இருந்து நாம் பெறும் கோமியமும் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.






