என் மலர்
நீங்கள் தேடியது "வரலாறு"
- பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார்.
- மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.
மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான். முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.
மகிஷியை அழிப்பதற்காக ஐயப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர்களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.
பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.
மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.
குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.
இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.
மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான். புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான். காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பெற்று எழுந்தாள்.
ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய அய்யப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள். அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு ஐயப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள். 12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.
சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.
அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப்பட்டது.
இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.
- பெண்ணோ இல்லை சுவாமி, அடுப்பு சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்து இருக்கிறோம்
- ‘என்ன சித்தரே’ என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.
கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியில் இருந்து பிறந்தவர் தான் 'கோரக்கர்'.
மச்சேந்திரன்
ஒரு முறை சிவபெருமானும்- பார்வதி தேவியும் கடற்கரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது சிவபெருமான், பார்வதி தேவிக்கு மந்திர உபதேசம் செய்து கொண்டு இருந்தார். கடலுக்குள் இருந்த மீன்களுள் ஒன்று அந்த மந்திரத்தை கிரகிக்க சிவனின் அருளால் அந்த மந்திரம் மீனின் வயிற்றில் இருந்து மனிதனாக உருவெடுத்தது. சிவனின் அருளால் பிறந்த அவனுக்கு மச்சேந்திரன் என்ற பெயரும் ஏற்பட்டது.
திருநீறு
சித்தனாக விளங்கிய மச்சேந்திரன் ஒரு முறை அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஏன் அழுகிறாய்? என கேட்க அந்த பெண்ணோ குழந்தையின்மை காரணமாக தான் என்றாள். மலடியான அப்பெண்ணின் துன்பம் தீர்க்க மச்சேந்திரன், தாயே! இது திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய் என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்றுவிட்டார். இதனை கண்ட அவரது தோழி யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய் எனக்கூறி, அதனை வீசி எறிந்து விடு, என்றாள். தோழியின் பேச்சை கேட்டு பயந்து போன அந்த பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.
கோரக்கா...
சில ஆண்டுகள் கடந்தன. மீண்டும் மச்சேந்திரரை சந்திக்கும் வாய்ப்பு அந்த பெண்ணுக்கு கிடைத்தது. அவள் அழுது கொண்டே நடந்ததை கூறினாள். மேலும், இதுவரை தனக்கு குழந்தை இல்லை என்பதையும் கூறினாள். அவளது நிலைமையை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்காமல் சரி பெண்ணே, உன் வீட்டு அடுப்பு சாம்பலை எங்கே கொட்டுவீர்கள்? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா? என கேட்டார்.
அதற்கு அந்த பெண்ணோ இல்லை சுவாமி, அடுப்பு சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்து இருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்த சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது என்றாள். இதனை கேட்ட மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகம் இருக்கிறது எனக்கூறி கொண்டு எருக்குழிக்கு அருகே சென்று 'கோரக்கா.. கோரக்கா...' என குரல் கொடுத்தார்.
வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை...
'என்ன சித்தரே' என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா என்றார் சித்தர். அப்போது சாம்பலை கொடுத்த நாளில் இருந்து, இதுவரை 10 ஆண்டுகளை கடந்த நிலையில், 10 வயது சிறுவன் ஒருவன் தெய்வீக லட்சணங்களுடன் உள்ளிருந்து எழுந்து வெளியே வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர்.
சுவாமி! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமையை அறியாமல் அதனை வீசி எறிந்து, இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை நான் இழந்து விட்டேனே... எனக்கூறி கதறி அழுது கொண்டே மகனை அரவணைத்து கொண்டாள். ஆனால், அவளது மகன் அவளை உதறி தள்ளிவிட்டு தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாயே.
என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன் என்றான். இருப்பினும் என் தாய் என்ற முறையில் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.
சித்தி பெற்றார்
தான் செய்த தவறுக்கு வருந்திய அந்த தாயோ செய்வதறியாது வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின், கோரக்கர் மச்சேந்திர சித்தரின் மாணாக்கர் ஆனார். மச்சேந்திரரிடம் இலக்கணங்களோடு ஞானநெறியும் கற்று குருகுலவாசம் இருந்தவர். நாலா திசைகளிலும் அலைந்து சித்தி பெற்றார்.
- ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதலில் கோவில் ஏற்பட்டது.
- வைதீக ஆகமத்தின்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது.
அஹீந்த்ரன் என்றால் ஆதிசேஷன் என்று பொருள். இந்த ஊர் ஆதிசேஷனால் நிர்மானிக்கப்பட்டது ஆகும். அருகிலுள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாசலம் என்றும், ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட அவுசத மலையின் ஒரு பாகம் இதில் சேர்ந்திருப்பதால் அவுசதாசலமென்றும் பெயர் பெற்றது. கருடனால் கொண்டு வரப்பட்ட நதி பக்கத்தில் ஓடுகிறது. இந்த நதி கரும் நதியென்று பெயர் பெற்றது. ஆதி சேஷனால் நிர்மானிக் கப்பட்டது என்றும் கோவிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலில் உள்ள பிரதானமூர்த்தி தேவ நாதன். இவர் அச்சுதன், ஸ்திரமோதில், அநக ஜோதிஸ், மேவு ஜோதி, மூவராகிய மூர்த்தி, அடியவர்க்கு மெய்யன், தெய்வநாயகன், தாசஸத் தியன் போன்ற பல பெயர்களில் உள்ளவர், பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு, மார்க்கண்டேயர், ததிசி முனிவர் போன்ற பலரும் தவம்புரிந்து தரிசித்து வரம் பெற்ற தலமிது.
கோவிலில் பிரதானமாகிய தாயார்-அம்புருகவாசினி. இவர் ஹேமாப்ஜநாயகி, பார்கவி, தரங்கமுக நந்தினி, செங்கமலநாயகி போன்ற பல திருநாமங்கள் அமையப்பெற்றவள்.
பெருமாளும், தாயாரும் மகாவரப்பிரசாதி. பாடல் பெற்ற 108 வைணவதலங்களில் முக்கியமானது இத்தலம். இது திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது. வேதாந்த தேசிகன் இங்குள்ள அவுசதாசலத்தில் தவம்புரிந்து ஸ்ரீ ஹயக்ரீவனையும், கருடனையும் பிரத்யக்ஷமாகக் கண்டு வரம் பெற்றார்.
ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதலில் கோவில் ஏற்பட்டது. ஸ்ரீதேசிகன் இந்த ஊரில் சுமார் 40 ஆண்டு காலம் வசித்து வந்தார், அநேக நூல்களை இவ்வூரில் இயற்றினார். அவர் எழுந்தருளியிருந்த இடம் ஸ்ரீதேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு விளங்குகிறது. இக்கோவிலுக்குள் இருக்கும்ஸ்ரீ தேசிகன் திவ்ய மங்கள விக்ரகம் ஸ்ரீ தேசிகன் தன் திருக்கரங்களாலேயே செய்யப்பட்டதாகும். ஸ்ரீதேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணறு இன்றும் ஸ்ரீதேசிகன் திருமாளிகையில் உள்ளது.
வைதீக ஆகமத்தின்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது. வேதபாராயண அத்தியாயம் (திவ்யபிரபந்த) கோஷ்டிகள் இத்திவ்ய தேசத்தில் ஒரு கவுரவ கைங்கர்யமாகவே இன்றும் நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஸ்ரீ பெருமாளுக்கும், புரட்டாசி மாதம் ஸ்ரீ தேசிகனுக்கும் மிகவும் விமரிசையாக பிரம் மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
இந்த திருத்தலம்தமிழ் நாட்டில் கடலூர் திருப்பா திரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ தூரம் மேற்கில் அமைந்துள்ளது. வருடத்தில் 12 மாதங்களிலும், உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் திரளான பக்தர்கள் வந்து சேவித்து பயனடைந்து வருகிறார்கள்.
குறிப்பு : உற்சவ கைங்கர்யதாரர்கள் உற்சவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திருக்கோவில் அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து உற்சவத்திற்கான திட்டத்தினைபெற்றுச் செல்வதுடன், உற்சவ கைங்கர்யத்தினை காலத்தே வந்திருந்து நடத்தி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கைகட்டி வணங்கும் கருடன்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி முன்பு உள்ள கருடன் தேவநாதசுவாமிக்கு அதிக மரியாதை கொடுக்கும் விதமாக கை கட்டி நின்ற நிலையில் உள்ளார். பெரும்பாலான கோவில்களில் கருடன் கை கூப்பிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது இந்த கோவிலின் ஒரு மிக சிறப்புவாய்ந்த அம்சமாகும்.
- தொலைபேசி எண் 0452-2528311 அல்லது Email : drc8311mdurai@gmail.com போன்றவை மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்ப கத்தின் கிளை அலுவலகம் மதுரையில் இயங்கி வருகிறது. இங்கு அரசு துறைகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாது காக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொன்மையான மிகவும் பழமை வாய்ந்த கலை, பண்பாடு, நாகரீ கத்தை அடையாளமாகக் கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை தனிநபர், தனியார் நிறு வனங்கள். மடங்கள், சர்ச், மசூதி ஆகியோரிடம் பெற்று பாதுகாத்து வருகிறது.
தற்போது இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை தமிழக அரசு வழிகாட்டுதலின்படி இச்சமுதாயத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் வகையில் Computer / Internet Scanning / Digitization முறையில் பதிவு செய்து அதன் விவரங்களை அனைத்து ஊடகங்க ளுக்கும், புதுடெல்லி தேசிய ஆவணக்காப்பகத்திற்கும் தெரியப்படுத்த உள்ளது.
எனவே பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வர லாற்று ஆவணங்களை மாவட்ட கலெக்டர் அல்லது ஆராய்ச்சி அலுவலர், மாவட்ட ஆவணக்காப்பகம், எண். 9 பழைய இராமநாத புர மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி நகர், மதுரை-20 என்ற முகவரிக்கு வழங்க வேண்டும். மேலும் தொலைபேசி எண் 0452-2528311 அல்லது Email : drc8311mdurai@gmail.com போன்றவை மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் வரை பாரம்பரிய நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது.
- புராதன சின்னங்களின் வரலாற்றை பற்றி பொதுமக்கள் எளிய முறையில் அறிந்து கொள்ள முடியும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் இருந்து சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் பாரம்பரிய நடைபயணத்தை மாவட்ட கலெக்டர் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க உலக பாரம்பரிய வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் இருந்து தஞ்சாவூர்கோட்டை, தஞ்சாவூர் அகழி,வீணை தயாரித்தல், தேர் நிறுத்துமிடம், தஞ்சை நால்வர் இல்லம், கல்யாணசுந்தரம் மேல்நி லைப்பள்ளி, தானிய களஞ்சியம், சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் வரை பாரம்பரிய நடைபயணம் தொடங்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாநகரில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாத்து, மேம்படுத்தி அதன் பெருமைகளை அனைவருக்கும் அறியும் செய்யும் வண்ணம் பாரம்பரிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பாரம்பரிய நடை பயணத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தின் புராதன சின்னங்களின் வரலாற்றைப் பற்றி பொதுமக்கள் எளிய முறையில் அறிந்து கொள்ள முடியும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா வழிகாட்டி செல்வம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
- அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதாக வரலாறுகள் கூறுகின்றன.
சீர்காழி:
சீர்காழி அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர்.
வைணவ பெரியார்களில் முக்கியமானவராக கருதப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது.
மேலும் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் இந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
திருமண தோஷம் இருப்பவர்கள் இங்கு மாலை மாற்றி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் பங்குனி பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதனை ஒட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வார் முன்னிலையில் பட்டாச்சாரி யார்கள் கொடி ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அன்பரசன், திருவிழா கமிட்டி செயலாளர் ரகுநாதன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
- பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் வரலாற்றை அறிந்து வியந்தனர்.
- சிவாச்சாரி யார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது.
அலங்காநல்லூர்
தமிழ் கடவுள் முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மலை மேல் இருக்கிறது. மேலும் மலையின் மீது ராக்காயி அம்மன் கோவில், மலை அடிவாரத்தில் பதினெட் டாம்படி கருப்பணசாமி, கள்ளழகர் கோவில் இருக்கி றது.
இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக் தர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்ற னர். இந்த நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 சுற்றுலா பயணிகள், அழகர்கோவிலுக்கு வந்த னர். அவர்கள் முருகப்பெரு மானின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலுக்கு சென்றனர். அப்போது மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும், சிவாச்சாரி யார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விபூதி பூசிக் கொண்டனர். மேலும் அவர்கள் கோவில் வெளி மற்றும் உள் பிரகாரத்தையும், சஷ்டி மண்டபத்தையும் பார்த்து அங்குள்ள உற்சவர் சுவாமியை வணங்கினர். மேலும் சுவற்றில் வரையப் பட்டுள்ள ஓவியங்களையும் பார்த்து, அவற்றின் வர லாற்றை அறிந்து வியந்தனர்.
முன்னதாக ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகளை கோவில் துணை ஆணையர் ராமசாமி வரவேற்றார். அவருடன் திருக்கோவில் பணியாளர்கள் உடனிருந்த னர்.
- கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள்.
- முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடி மரமண்டபம், பிரகாரம், தேர்மண்டபம். கலையரங்கம் போன்ற அமைப்புக்களுடன் காணப்படுகிறது.
கருவறையில் முதன்மைத் தெய்வமான முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரமுடன் இணைந்து காணப்படுகிறாள். அம்மன், சுவாமி இருவரின் சுயம்புவாகத் தோன்றிய பாறை வடிவங்களும் அவற்றின் பின்புறம் பீடத்தின் மேல் இருவரின் உருவச் சிலைகளும் அமைந்துள்ளன.
கருவறையினை அடுத்து அர்த்தமண்டபமும் அதன் இருபுறமும் வழிபாட்டுக்குரிய பொருட்கள் வைக்கும் அறைகள் இரண்டும் அமைந்துள்ளன.
அர்த்த மண்டபத்தினை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபம் கம்பித் தடுப்பால் இருபிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல்பிரிவில் பேச்சியம்மனும் கருப்பசாமியும் இரண்டாவது பிரிவில் பைரவரும் காணப்படுகின்றனர்.
மகாமண்டபத்தை அடுத்துக் கொடிமர மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் மூன்று அடி உயரத்தில் பலிபீடமும் அதன் பின்புறம் கொடிமரமும் உள்ளன. பலிபீடத்தின் முன்பு சிம்மவாகனம் ஒன்று கருவறையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அருகில் ஐந்து அடி உயரச் சூலம் ஒன்று தரையில் பதிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் மகா வல்லப விநாயகரும் வாயிலின் இருபுறங்களிலும் இரு பூதத்தார்களும் உள்ளனர்.
கொடிமர மண்டபத்தின் நடுவில் பலிபீடத்தை அடுத்து முப்பத்திரண்டு அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் பொதியப்பட்டுக் காட்சியளிக்கிறது. அடிப்பாகச் செப்புத் தகட்டில் வடபுறம் அம்மனும் சுவாமியும் தென்புறம் சூலமும் கீழ்ப்புறம் விநாயகரும் மேற்குப் பகுதியில் பாலசுப்பிரமணியரும் உருவங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளனர்.
கொடிமரம் சந்தனமரத்தால் ஆனது. இது பதினெட்டுப் பாகங்களைக் கொண்டது. பதினெட்டு ஆகமங்கள் என்பதன் அடையாளமாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
முத்தாரம்மன் கோவிலைச் சுற்றிலும் பிரகார மண்டபம் பல தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் முன்பக்கம் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கோவில் மண்டபங்களின் கிழக்கு, தெற்கு, மேற்குச் சுவர்களில் அர்த்தநாரீசுவரர், மீனாட்சியம்மன், துர்க்கை அம்மன் ஆகியோரின் புடை சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்பிரகார மண்டபத்தில் அழகிய தெய்வங்களின் ஓவியங்களும் துர்க்கையம்மன், மீனாட்சியம்மன் சிலைகளும் உள்ளன. இம்மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகருக்கெனத் தனிச் சந்நிதி உள்ளது.
கருவறையின் மேல் சிறிய விமானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது முப்பத்தைந்து அடி உயரமாகும். இதில் அம்மன், சுவாமி சிற்பங்களும் காவல் தெய்வங்கள், சிம்மம் ஆகியவற்றின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் உச்சியில் மூன்று கும்பங்கள் உள்ளன.
கோவில் முன்மண்டபத்தின் மேலே சிறிய மூன்று கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் அம்மன், சுவாமி உருவங்கள், மகிசாசுரமர்த்தினி, முருகன், விநாயகர், காவல் தெய்வங்கள், காளி, யானை, சிம்மன் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
முத்தாரம்மன் கோவிலுக்கு வடபுறம் சிறிது தொலைவில் மேற்கு நோக்கிய வண்ணம் தேர்மண்டபம் தேர் ஒன்று உள்ளது. விழா நாட்களில் அம்மன் இந்தத் தேரில் வீதி உலா வருகிறாள். இத்தேர் தவிர, சூரனைச் சுமந்து செல்வதற்குரிய சப்பரம் ஒன்றும் உள்ளது.
தேர் விலை உயர்ந்த தோதகத்தி மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இரு குதிரைகள் தேரினை இழுத்துச் செல்லும் தோற்றத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சாரதியாகப் பிரம்மனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறமும் இரு மங்கையர் உருவங்கள் கவரி வீசுவது போன்று அமைக்கப்பட்டுள்ளன. அழகிய சிறிய தூண்களும் சிறிய கோபுர அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளன.
முத்தாரம்மன் கோவிலின் மேற்கில் கிழக்கு நோக்கிய வண்ணம் கலையரங்கம் ஒன்று உள்ளது. இதனைக் கட்டிய நன்கொடையாளரின் பெயரால் 'சௌந்திர பாண்டிய நாடார் கலையரங்கம்' என்று இது வழங்கப்படுகிறது. இக்கலையரங்கில் கோவில் விழாக்களின் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருவிளக்குப் பூசையும் தசரா விழாவில் சூரனை வதம் செய்த பிறகு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன. தவிர பொதுமக்கள் திருமணம், சடங்கு, பிறந்தநாள் விழாப் போன்ற தம் இல்ல நிகழ்ச்சிகளை இக்கலையரங்கில் குறைந்த வாடகையில் நடத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
முத்தாரம்மன் கோவிலுக்குக் கீழ்ப்புறம் மேற்கு நோக்கி வண்ணம் பெரிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பல தூண்களுடன் கூடிய இம்மண்டபத்தின் உட்சுவரில் பார்வதியின் திருக்கல்யாணக் காட்சி அழகிய ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இது திருமண மண்டபமாகவும் ஒவ்வொரு மாதப் பவுர்ணமியன்றும் திருவிளக்குப்பூசை நடத்துவதற்குரிய இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தசரா விழாவின் போது சூரனைச் சம்ஹாரம் செய்வதற்காக முத்தாரம்மன் இம்மண்டபத்திலிருந்தே புறப்பட்டுச் செல்கிறாள்.
கோவிலுக்கு வரும் மேற்குத்திசைச் சாலையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தோரண வாயில் ஒன்று காணப்படுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைப்பு முழுமையாக ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது.
உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான்.சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான். பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள்.
இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டுதான் 10ம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்காரம் செய்யும்போது கீழேவிழும் அசுரனின் தலையை துர்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துகிறாள்.
அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழியாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்சு கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும்போது காளியம்மனாக உருவெடுத்தாள்.
இங்கு 8 வகை காளி அம்மன்கள் குடியிருப்பது சிறப்பு அம்சமாகும்.
1) கருங்காளி, 2) பத்ரகாளி, 3) சந்தியம்மன், 4) அங்காளம்மன், 5) தட்டத்தி அம்மன், 6) பரமேஸ்வரி, 7) வீராகாளி, 8) அறம் வளர்த்த நாயகி அம்மன்
இதில் வீராகாளியம்மன் மட்டும் ஊருக்கு வெளியே ஆலயம் அமைந்துள்ளது.
இப்படி பல வகையிலும் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் தசரா திருவிழாவை கான மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.
- பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார்.
- இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார்.
அய்யப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.
காலவ மகிஷியின் மகளான லீலாவதி, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.
பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.
காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான் இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்குகிறாள்.
சதி திட்டம் தீட்டப்படுகிறது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.
பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யப்பனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள்.
அய்யப்பன் தான் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.
இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்டராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டுகிறார். ராஜசேகர மன்னன் கலங்குகிறான்.
பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான். பரசுராமர் அங்கு அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகினியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதிவடிவில் அருள்பாலிக்கிறார்.
+2
- தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.
- ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.
திருச்சி:
திருச்சியின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதி பலிக்கும் வகையில் மலை க்கோட்டை அருகே பட்டர்வொர்ட் சாலையில் பாரம்பரிய பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நடப்பு மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.
ஒரு காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட 1.27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பூங்கா, ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. தற்போதும் அந்த தொழுவத்தின் வளைவு இடிக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இது பூங்கவின் முக்கிய நுழை வாயிலாக பயன்படுத்தப்படுகிறது.
பூங்காவின் கட்டுமான பணிகள் கடந்த 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் சிலைகள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2020 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்ட தேதிக்கு அப்பால் இத்தி ட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் ஓவியங்கள், சிலைகள் மற்றும் நகரின் பழமையான வரலாற்றை அறியும் பலகை கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள், கரிகால் சோழன் மற்றும் ராஜ ராஜா சோழன் உட்பட நாட்டை ஆண்ட முன்னாள் மன்னர்களின் சிலைகளும் இதில் இடம்பெறுகிறது.
கல்லால் செதுக்கப்பட்ட வளைவு நுழைவாயில், குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த உடற்பயிற்சி கூடம், நடைப்பாதை, பல்வேறு வகைகளைக் கொண்ட பெரிய மூலிகைத் தோட்டம் மருத்துவ தாவரங்கள் மற்றும் ரோஜாக்கள், இயற்கையை ரசித்தல் மற்றும் நீரூற்றுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தக்கூடிய ஒரு ஆம்பிதியேட்டர் ஆகியவை புரதான பூங்காவின் சிறப்பம்சங்களாகும். பூங்காவில் ஓய்வறைகள், குடிநீர் வசதி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் இடம், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களும் இடம் பெறுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, அறிவியல் பூங்காக்களை போன்று இந்த வரலாற்றை சொல்லும் புரதான பூங்கா மாணவர்களின் அறிவுப்பசி போக்க உதவும் என்றார்.
- தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள்.
- அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.
இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷி வரவேற்று ஆசி கூற ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டி லட்சுமணன் ஆஞ்சநேயர் ஆகியோர் தங்கினர். அப்போது அங்கு திரிகால ஞானியான நாரதர் வந்து சேர்ந்தார். நாரதரை வணங்கி ஸ்ரீராமருக்கு ஆசி கூறிய நாரதர் ராமா முக்கியமான விஷயமாகவே உன்னை சந்திக்க வந்தேன். இலங்கை யுத்தம் முடிந்தாலும் அது இன்னமும் முற்றுப் பெறவில்லை. உனது வில்லுக்கு இன்னமும் வேலை உள்ளது என்று கூற திகைத்த ஸ்ரீராமர் 'நாரத மகரிஷியே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? விளக்கமாக கூறுங்கள் என்று வேண்டினார்.
ராமா! ராவணன் அழிந்தாலும் அரக்கர்கள் வாரிசுகள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்கு பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். இரக்த பிந்து இரக்த ராட்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். இவர்கள் தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள். பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும். எனவே இவர்களை நீ உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்' என நாரதர் கூறினார்.
மகரிஷியே நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் இப்போது நான் அயோத்தி செல்வதில் தாமதிக்க இயலாது. குறிப்பிட்ட நாளில் நான் அயோத்தி செல்லாவிடில் தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டுவிடுவான் என ராமர் கூற 'அப்படியானால் சரி உனக்கு பதில் தம்பி லட்சுமணனை அனுப்பு என நாரதர் கூற அவன் என் நிழல் ஆயிற்றே என்னை விட்டு பிரியமாட்டான் என்று சபதம் செய்துள்ளானே என்ற ராமர் கண்களில் அனுமார் பட அனுமாரை அழைத்தார் 'அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.
அரக்கர்களின் ஆணிவேரை அழிக்கும் யுத்தமல்லவா? தேவர்கள் வாழ்த்தினர். திருமால் சங்கு சக்கரத்வீயும தனது அவதாரமான ஸ்ரீஹயக்கிரீவா ஸ்ரீநரசிம்மா ஸ்ரீவராஹர் ஸ்ரீகருடன் ஆகிய அவதாரத்தையும் வழங்க பிரம்மா பிரம்மா கபாலத்தை வழங்க தேவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தந்திட ஆஞ்சநேயர் 10 கரங்களுடன் காட்சி தந்தார். விரைவாக செல்ல கருடன் தனது சிறகுகளை தந்தான். அனுமார் புறப்படும் நேரம் சிவபெருமான் வந்து சேர்ந்தார். 10 கரங்கள் 10 கரத்திலும் ஆயுதங்கள். எதை தருவது? பார்த்தார் சிவன் தன் நெற்றிக்கண்ணையே தந்துவிட்டார். மூன்று கண்கள் 10 கரங்களுடன் புறப்பட்ட வீர தீரம் நிறைந்த ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் வாழ்வில் வளங்கள் பல பெற்று வாழலாம்.
1. ஹயக்ரீவர் - எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர். அவருடைய அம்சமாக சகல விதமான ஞானத்தையும் பெற்ற அறிவாளி ஹனுமான். அவருடைய சிறந்த ஞானத்தை ராமனே வியந்து பாராட்டுகிறான். இவன் ருக்வேதம். யஜுர் வேதம்; சாம வேதம் இவற்றைப் பரிபூரணமாக அறிந்தவன். இலக்கணங்களை நன்றாகக் கற்றவன். இவன் பேச்சில் குறைபாடு ஒன்றுமே இல்லை. மிக விஸ்தாரமாகவும் மிகவும் சுருக்கமாகப் பேசி அளவோடு நிதானமாக மதுரமான குரலில் வார்த்தைகளை பேசும் ஆற்றல் அனுமானிடம் உள்ளது.
2. வராஹர் - மஹாவிஷ்ணுவின் வாராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று பூமி தேவியைக் கண்டுபிடித்து இரண்யாஷணியிடமிருந்து தேவியை மீட்டார். ஹனுமானும் யாரும் செல்ல முடியாத இலங்கைக்குச் சென்று சீதையை கண்டுபிடித்து ராவணனிடமிருந்து மீட்பதற்கு உதவினார்.
3. நரசிம்மர் - தம்முடைய பக்தனான பிரகலாதனுக்கு தீங்கு விளைவித்த இரண்யனை ஆக்ரோஷத்துடன் சம்ஹாரம் செய்தார். இங்கே தம்முடைய தெய்வமான சீதாதேவிக்கு தீங்கு விளைந்ததற்காக மாருதி ராவணனுடைய சேனை சேனாதிபதிகளை மந்திரிக்குமாரர்கள் முதலானோரை வதம் செய்து இலங்கையையும் எரியச் செய்தார்.
4. கருடன் - பஷிகளுக்கெல்லாம் தலைவனாக கருடன் போற்றப்படுகிறார். பஷிராஜன் என்றே அவருக்குப் பெயர். ஆகாயத்தில் எல்லா உலகங்களாலும் எங்கும் பறக்கும்; வல்லமை படைத்தவர். அவருடைய அம்சமாக அவருடைய சக்தியால்தான் அனுமான் பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார். மீண்டும் கருடனைப் போலவே ஆகாய மார்க்கமாக கடலைக் கடந்து ராமனிடம் வந்து சேர்ந்தார்.
இப்படி நால்வருடைய அம்சமும் சக்தியும் கொண்டவர் ஹனுமான். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த நால்வரோடு ஹனுமானையும் சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று விசேசமாக கொண்டாடுகிறோம.; ஈரேழுலோகங்கள் தோன்றி அழிந்து போனாலும் நீ மட்டும் இன்று போல் என்றும் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று பன்முறை வாக்கு சாதுர்யம் பெற்றவர்.






