search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manikkavasakar"

    • நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்
    • பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 3-வது வட்டம்என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனிவேல் (வயது 55). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் முதலாவது சுரங்கம் 1 ஏ பிரிவில் வேலை பார்த்து வந்தார். நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். 2-வது வட்டம் மாணிக்கவாசகர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் இறந்தார். விபத்தில் பலியான பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

    • சக்தியின் மேனியை பொன்னிறமாக்கியதால் பொன்முகலி என்று மணிகங்கைக்கு பெயர்.
    • கணநாதரை வழிபட்டு கல்யாண உற்சவம் செய்பவருக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

    அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தெய்வீக நால்வர் போன்று பிருங்கி முனிவரும் பிறப்புக்கு அப்பாற்பட்ட பரபிரும்மத்தை மட்டுமே வழிபடும் செம்மையான திருநெறியில் நிற்பவர். தோற்றம் அவதாரம் பிறப்பு போன்ற மாசு உள்ள ஜீவராசிகளான ஆண் தெய்வங்களையோ பெண் தெய்வங்களையோ எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் பூஜை செய்து வணங்காத செம்மையான மனம் கொண்டவர். தன்னை பூஜை செய்து வழிபடவில்லை என்பதற்காக பராசக்தி பிருங்கி முனிவருக்கு எலும்புக் கூடாகப் போகுமாறு சாபம் கொடுத்தாள்.

    ஒரு சிறந்த சிவபக்தையாக இருந்தும் சிவபக்தர்களின் அருமை பெருமைகளையும் சிவபக்தியின் மகிமையையும் உணர்ந்து கொள்ள முடியாத அஞ்ஞானத்தினால் ஒரு சிறந்த சிவனடியாரை துன்புறுத்திய தீவினையின் பலனை பராசக்தி அனுபவிக்க நேர்ந்தது. அம்மன் மேனி தெய்வத்தன்மையை இழந்து துர்நாற்றம் எடுக்கலாயிற்று.

    மீண்டும் நறுமணத்தையும், தெய்வத்தன்மையையும் பெறுவதற்காக பராசக்தி திருக்காளஹஸ்திக்கு வந்தாள். நல்வினை, தீவினை என்ற இருவினைகளுக்கும் அப்பாற்பட்ட ஈசனை நினைத்து தவம் புரிந்தாள்.

    ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு போவதும், வருவதும் இல்லாமல் எல்லா உலகங்களிலும் எல்லா இடங்களிலும் நிறைந்து மறந்து உள்ள காற்றுப்பெருமான் திருச்சடையிலிருந்து கங்கைநீரைத் தெளித்தருளினார். அந்த நீர்த்துளிகள் நதியாகப் பெருக்கு எடுத்து ஓடின.

    கங்கை நீர்த்துளிகள் நதியானதால் அந்த நதி மணிகங்கை என்று பெயர் பெற்றது. சக்திதேவி அந்த மணிமங்கையில் சிவநாமம், ஓதி நீராடியபோது அவள் மேனியின் துர்நாற்றம் நீங்கிப் பொன்னிறமும், தெய்வத்தன்மையும் பெற்றாள். சக்தியின் மேனியை பொன்னிறமாக்கியதால் பொன்முகலி என்று மணிகங்கைக்கு பெயர் உண்டாயிற்று.

    பொன்முகலியில் நீராடிய பராசக்தி வாயுலிங்க பரம்பொருளை பூஜை செய்து வழிபட்டாள். அம்மனின் ஆணவத்தையும், அஞ்ஞனத்தையும் நீக்கியருளிய காளத்தீஸ்வரர் பராசக்தியை மெய்ஞானப் பூங்கோதையாக்கி நறுமணம் வீசச்செய்தார். அம்மனுக்கு ஞானஒளி வழங்கியதால் பரமேஸ்வரனுக்கு ஞானப்பிரகாசம் என்று திருநாமம் உண்டானது.

    திருமுறை ஞானப்பிரகாசத்தை போற்றுகின்றது. பராசக்தியை நறுமணம் வீசும் ஞானப்பூங்கோதையாக்கி அருளியதையே பரமேஸ்வரன் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி....என்று தொடங்கும் பாடலில் எழுதிப் பாண்டியனிடமிருந்து பரிசில் பெறுவதற்காக தருமிக்குக் கொடுத்தருளினார்.

    காளத்தீஸ்வரரின் திருவருளால் மெஞ்ஞானமும், ஆணவமும் துர்நாற்றம் நீங்கி மெய்ஞானமும் பூவின் நறுமணமும் பெற்ற அம்மன் ஞானப்பூங்கோதை என்ற திருநாமத்துடன் தனிச் சன்னதியில் உள்ளாள். தனிக்கோவில் போன்று உள்ள இந்த பெரிய சன்னதி காளத்தீஸ்வரருக்கு பின்புறம் எதிர்திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது.

    கல்யாண உற்சவம்

    அம்மன் திருநாமம் வடமொழியில் ஞானப்பிரசுனாம்பா என்று வழங்கப்படுகின்றது. அம்மன் பிரதிஷ்டை செய்து பூஜை புரிந்த லிங்கங்கள் அம்மன் சன்னதியில் உள்ளன. அம்மனை தான பூங்கோதையாக்கி அருளிய கல்யாணசுந்தரர் எழுந்தருளியுள்ள கல்யாண மண்டபத்தில் திருக்கோயிலின் சிறந்த உற்சவங்களில் ஒன்றான கல்யாண உற்சவம் நடக்கின்றது.

    காளத்திக் கணநாதரை வழிபட்டு கல்யாண உற்சவம் நடத்துகின்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கின்றது. அம்மன் சன்னதிக்கு அருகே அக்கண்ணலிங்கம், நாதள்ளலிங்கம், காளத்தீசர் ஆகிய பல லிங்கங்கள் உள்ளன.

    ×