என் மலர்
திண்டுக்கல்
- வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
- வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்க குதிரை என பல்வேறு வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம், பழனி நகரின் நான்கு ரத வீதி வழியாக வந்து, மீண்டும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- ஐ.பி.எல் இறுதிபோட்டி யில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
- கேப்டன்தோனி கோப்பையை கையில் வைத்திருப்பது போல் கேக் ஆர்டர் செய்து அதனை பைன் பாரஸ்ட் மரங்களுக்கு இடையே வெட்டி ஒருக்கொருவர் பகிர்ந்தளித்து கொண்டாடினர்.
கொடைக்கானல்:
ஐ.பி.எல் இறுதிபோட்டி யில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. இதனை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கொடை க்கானல் பைன்பாரஸ்ட் பகுதியில் சி.எஸ்.கே வெற்றியை கொண்டாட சுற்றுலா பயணிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கேப்டன்தோனி கோப்பையை கையில் வைத்திருப்பது போல் கேக் ஆர்டர் செய்து அதனை பைன் பாரஸ்ட் மரங்களுக்கு இடையே வெட்டி ஒருக்கொரு வர் பகிர்ந்த ளித்து கொண்டாடினர்.
இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
- இன்று காலை கடையை திறந்தபோது செல்போன் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- தனியாக உள்ள வீடுகளில் கொள்ளை யடிப்பது, நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையை சேர்ந்தவர் சங்கிலித்துரை. இவர் இடையகோட்டை பஸ்நிறுத்தம் அருகே செல்போன் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிச்சென்றார். நள்ளிரவு நேரத்தில் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிச்சென்றனர்.
இதன்மதிப்பு ரூ.1 லட்சம் என சங்கிலித்துரை தெரிவித்துள்ளார். இன்று காலை கடையை திறந்தபோது செல்போன் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி தலைமையில் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் செல்போ ன்களை திருடி ச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே கே.அத்திக்கோம்பையை சேர்ந்தவர் கணேசன். இவர் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வராணி தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்த ன்று 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1.76 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். ஒட்டன்சத்திரம் மற்றும் இடையகோட்டை பகுதியில் தனியாக உள்ள வீடுகளில் கொள்ளை யடிப்பது, நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபடவில்லை. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் நவபாஷாண முருகன் சிலையை வடிவமைத்த போகர் சித்தரின் சீடர் புலிப்பாணி சுவாமிகளின் பாரம்பரியத்தில் 13-வது போகர் ஆதீனமாக விளங்குபவர் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்.
இவர் கடந்த 28-ந் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்து சோழர் காலத்து செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடியை ஆசீர்வாதம் செய்தார். இதையடுத்து பழனிக்கு திரும்பிய புலிப்பாணி ஆதீனத்துக்கு திருஆவினன்குடி கோவில் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் சன்னதி வீதியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரத பிரதமருக்கு செங்கோல் வழங்கிய நிகழ்ச்சி மறக்க முடியாது. பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கியபோது பிரதமர் மிக எளிமையாக, சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
பாராளுமன்றம் கலைநயமிக்க கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ளது. எங்களை பிரதமர் அவரது வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்தார். பழனி மக்களின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பெருமை அனைத்தும் பழனி முருகனையே சேரும்.
பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார். நீதி தவறாத ஆட்சி நடைபெறும் இடத்தில்தான் செங்கோல் இருக்கும். பிரதமரை சந்தித்தபோது சித்தர் பீடங்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் கோடைவெயில் காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
- சுமார் 1 கோடிக்கும் மேலான பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் விதமாக கடந்த 26-ந்தேதி கோடைவிழா மலர் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கோடைவெயில் காரணமாக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனால் மலர் கண்காட்சி 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்றுவரை நடைபெற்ற மலர் கண்காட்சி நிறைவுபெற்றது. சுமார் 1 கோடிக்கும் மேலான பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகையால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே பலர் ஊர் திரும்ப தொடங்கி உள்ளனர். இதனால் கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 59 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வருவாய் ரூ.19 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு 65 ஆயிரத்து 971 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் மூலம் ரூ.20லட்சத்து 27 ஆயிரத்து 775 வசூல் ஆகி உள்ளது.
கடந்த ஆண்டை விட கூடுதல் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மேலும் வருவாயும் அதிகரித்துள்ளது என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- குறிஞ்சி ஆண்டவருக்கு பல லட்சம் மலர்களைக் கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- மலர்களால் முருகன் வடிவம் செய்யப்பட்டு இருந்தது.
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக 3 நாட்கள் நடைபெறும் கோடை விழா மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
கொடைக்கானலில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சியின் போது குறிஞ்சி ஆண்டவருக்கும் சிறப்பு மலர் வழிபாடு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு குறிஞ்சி ஆண்டவருக்கு பல லட்சம் மலர்களைக் கொண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு வண்ணங்கள் கொண்ட மலர்களை கொண்டு தோரணம், அலங்காரம் அமைக்கப்பட்டதுடன் மலர்களால் முருகன் வடிவமும் செய்யப்பட்டு இருந்தது.
இதில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு குறிஞ்சி ஆண்டவர் அலங்காரம் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
விதவிதமான மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் கோடை இன்டர்நேஷனல் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது 19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து தேர்ச்சி பெற்று வீட்டில் உள்ளார். இவரும் அடியனூத்து பகுதியைச் சேர்ந்த தாமஸ்ராஜ் (23) என்ற இறைச்சி கடை வியாபாரியும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விபரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் மகளை காணாமல் பல இடங்களில் தேடிய மாணவியின் பெற்றோர் இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் காதல் ஜோடி தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்கும்படி வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த திருமணத்தை மாணவியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து தனது பெற்றோர் வாங்கிக் கொடுத்த தோடு, மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட அனைத்து தங்க நகைகளையும் போலீசார் முன்னிலையில் கழற்றி தனது தாயிடம் கொடுத்து விட்டு எனக்கு பெற்றோர் வேண்டாம். காதல் கணவர்தான் வேண்டும் என எழுதிக் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவரது தாய் கண்ணீர் மல்க இனிமேல் தன் முகத்தில் விழிக்க வேண்டாம் என கூறி அங்கிருந்து சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை மற்றும் காதலனின் குடும்பத்தினரிடம் அவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ்வதற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டனர். இதனையடுத்து காதல் கணவருடன் மாணவி புறப்பட்டுச் சென்றார்.
- அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முருக பவனத்தில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணியை அமைச்சர் இ.பெரியசாமி, பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.
பாடநூல்களை பொறுத்தவரையில் தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைவருக்கும் அரசின் இலவச புத்தகங்கள் கிடைக்கும்.
தேனி மாவட்டத்தில் சுற்றி வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தனது பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. மேலும் இலவச பாட புத்தகங்களுடன் 11 கல்வி உபகரணங்களும் வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைப்பார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக 6ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தால் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திராவிட மொழி குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாறு பாடத்தை சேர்க்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று இதற்கான உத்தரவை வழங்குவார் என்றார்.
- அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.
- திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் முகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும்.
அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே கோவிலின் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்லும் பாதைகள் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தி வரும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்டம் அலைமோதியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே நேற்று கேரள மாநில பக்தர்கள் 10 பேர், 12 அடி நீள அலகு குத்தி வந்து கிரிவீதிகளில் வலம் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். பழனிக்கு கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி பகுதிகளில் கடும் நெரிசல் காணப்பட்டது. இதேபோல் சாமி தரிசனம் செய்த பிறகு பக்தர்கள், தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்ததால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- காரில் பயணம் செய்த செந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
- அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் கேரள பதிவெண் கொண்ட கார் வந்துகொண்டிருந்தது. அம்பிளிக்கை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
பின்னர் சாலையில் இருந்து கீழே இறங்கி விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த செந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன், வினோத், ஷோபனா, சுஷீலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கம்பத்தில் மோதியபோது மின்வினியோகம் துண்டிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.