என் மலர்
திண்டுக்கல்
- குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது
- தமிழ்நாட்டில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்கிறார்.
- தி.மு.க. ஆட்சியில் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்கிறார்.
* தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? என்பது தான் சவால்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் டெல்லி தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் நிலை ஏற்படும்.
* ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் இ.பி.எஸ். தலைமையில் பா.ஜ.க. PROXY ஆட்சி நடைபெற்றது.
* தி.மு.க. ஆட்சியில் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இவ்வளவு கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதா?
* உண்மையான பக்தர்கள் தி.மு.க. அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
* மக்கள் எப்போதும் தி.மு.க. அரசின் பக்கம் தான் இருக்கிறார்கள். நாங்கள் தான் மீண்டும் வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி நிதியையும் குறைத்து விட்டது.
- இந்த திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி கிராமத்திற்கு கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வருகை தந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்து வந்தார். கல்வார்பட்டியில் ஜோதிமணி எம்.பி. பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் கிராமத்திற்கு என்ன செய்தீர்கள் என கேட்டவாறு ஒரு வாலிபர் அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனால் அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை விரட்டியடிக்க முயன்றனர். இருந்த போதும் அந்த வாலிபர் விடாமல் என்னை அடி.. என அவர்களிடம் தகராறு செய்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த வாலிபரை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். அதன்பின் அந்த வாலிபர் தெருவில் சென்ற நாயை தூக்கி கொஞ்சினார். அதன் பிறகுதான் அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.
அதன்பின் பொதுமக்களிடம் பேசிய ஜோதிமணி எம்.பி., காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி நிதியையும் குறைத்து விட்டது. இந்த திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மகாத்மா காந்தியின் பெயர் வைத்த காரணத்தினாலேயே மத்திய அரசு இத்திட்டத்தை முடக்கி உள்ளது என்றார்.
- தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.
- இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.
* அமித்ஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
* தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி அவதூறுகளை பரப்புகிறார்கள்.
* அமித் ஷாவா இல்லை அவதூறு ஷாவா என நினைக்கும் அளவிற்கு உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி உள்ளார்.
* இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.
* உள்துறை அமைச்சர் அமித் ஷா உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல.
* தமிழகத்தில் கலவரம் செய்துவிடலாம் என்ற எண்ணம் நான் இருக்கும் வரை நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
- சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
* ஓய்வு கால வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார் என கூறி உள்ளனர்.
* 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் பொங்கலை கொண்டாட ரூ.3000 தருவதாக அறிவித்துள்ளோம்.
* சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
* முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல் இது.
* 2019ம் ஆண்டு இ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது லேப் டாப் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.
* அ.தி.மு.க. ஆட்சியில் 55,000 லேப்டாப்களை வீணடித்து விட்டதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
* டெல், ஏசெர், எச்.பி. போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.
திண்டுக்கல்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திண்டுக்கல் சென்றார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற விழாவில் புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாற்று திறனாளி பயனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், வேளாண் கருவிகள், மகளிர் திட்டத்தின் மூலமாக 4 சக்கர வாகனங்கள், தாட்கோ மூலமாக 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 212 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.13 ஆயிரத்து 342 கோடியில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* திண்டுக்கல் என்பது புரட்சி, எழுச்சி, வீரத்தின் பெயர்.
* ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் நடமாடிய இடம் திண்டுக்கல்.
* தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திப்பதில் பெருமை.
* இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
* 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 1.79 கோடி மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டது.
* தி.மு.க. ஆட்சியில் கடந்த 4.5 ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
* இந்த விழா அரசு விழாவா? அல்லது மாநாடா? என்று வியப்பாக இருக்கிறது.
* கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.
* திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது.
- எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இன்றும் நாளையும் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் விடுபட்ட வாக்காளர்களையும், புதிய வாக்காளர்களையும் சேர்க்க நிர்வாகிகள் உதவ வேண்டும். பெயர் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர் உள்பட வீடு தோறும் சென்று தங்கள் பகுதியில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்களின் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது. அதன்பிறகு மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே 6,7,8 வாக்காளர் விண்ணப்ப படிவங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளின் படிதான் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026-ல் நல்லாட்சி மலர்கின்றபோது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
ஆனால் 100 நாள் வேலை திட்டத்தையே நிறுத்தி விடுவார்கள் என தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதில் தி.மு.க.வினர் வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொரு பூத்துகளின் மூலம் பி.எல்.ஓ.க்களை கொண்டு 300 வாக்குகளை சேர்த்து உள்ளனர். அதனை நீக்க வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் நம்பிக்கைக்கு உள்ளவர்களாக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பட்டியலை கட்சியினர் துண்டு பிரசுரங்களாக பிரசுரித்து மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கட்சியினர் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.
- ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
- விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வருடம் தோறும் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி மாரிச்சாமி (வயது55) தலைமையில் ராம்கி (35) மற்றும் 7 பேருடன் ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை அவர்கள் சின்னமனூர் அருகில் உள்ள கோட்டூர்-சீலையம்பட்டி சத்தியா கார்டன் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலப்பாடியூரை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணி அளவில் மற்றவர்கள் முன்னே சென்று விட மாரிச்சாமி, ராம்கி மட்டும் பின்னால் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் மீது அந்த வேன் பயங்கரமாக மோதியது. இதில் மாரிச்சாமி மற்றும் ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சின்னமனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், மோகன்தாஸ், காந்தி ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்பனாதேவி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். மகள் கல்லூரியிலும், மகன் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இதேபோல் விபத்தில் பலியான ராம்கி சலவை தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் 3-ம் வகுப்பும் மற்றொரு மகன் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மீது சபரிமலைக்கு சென்ற வேன் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
- மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்காக இருக்கும். அதன்படி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அரையாண்டு விடுமுறை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனிக்கு வந்தனர். பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும் பழனி அடிவார பகுதியில் கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தது.
கூட்டம் காரணமாக அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவில் செல்லவும், தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் படிப்பாதை வழியாக வரவும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதோடு கூட்டம் அலைகடலென இருந்ததால் பக்தர்கள் பகுதி, பகுதியாக அனுப்பப்பட்டனர்.
மேலும் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி மட்டுமின்றி திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவிலிலும் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு பழனியில் தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், குளத்துரோடு, கிரிவீதிகள், சன்னதிவீதி, பூங்காரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பஸ் நிலையம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. அதேபோல் பழனியில் தரிசனம் முடித்த பின்பு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்நிலையத்தில் குவிந்ததால் அங்கும் கூட்டம் இருந்தது.
- எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர்.
- பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
திண்டுக்கல்:
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் புதிதாக தங்கத்தகடுகள் பதிக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது கிலோ கணக்கில் தங்கநகை மாயமானது. இந்த வழக்கில் உன்னிகிருஷ்ண போற்றி என்பவர் முதல் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையிலும் சிலைகள் மாயமாகின. இதுதொடர்பாக கேரள மாநிலம் எஸ்.ஐ.டி. என்ற அமைப்பின் டி.ஒய்.எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் அப்போது பதவியில் இருந்த சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள் உட்பட பலர் சிக்கியுள்ளனர்.
இந்த நகை திருட்டு வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் சபரிமலை நம்பூதிரி, திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த மணி (எ) பாலசுப்பிரமணி உட்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பேரில் எஸ்.பி. சுரேஷ்பாபு தலைமையில் 4 பேர் கொண்ட போலீஸ் அதிகாரிகள் இன்று திண்டுக்கல் ராம்நகருக்கு வந்தனர். அவர்களுடன் திண்டுக்கல் போலீசாரும் விசாரணைக்கு சென்றனர். பாலசுப்பிரமணி நிதிநிறுவனம் மற்றும் தங்கநகை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பாலசுப்பிரமணிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் வைத்து கேரள போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நகை திருட்டு வழக்கில் திண்டுக்கல் வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பஞ்சுகள், மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உள்ளிட்டவைகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
- சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தனியார் விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல்வால்ட் கிராமத்தில் அமைந்திருக்கும் வீடுகள் போல வடிவமைக்கப்பட்டுள்ள ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 100 கிலோ மைதா, 15 கிலோ பிரவுன் சுகர், 15 லிட்டர் தேன், ஜிஞ்சர் 1 கிலோ பட்டர், 10 லிட்டர் கீரிம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கடந்த 5 தினங்களாக 4500 ஜிஞ்சர் பிஸ்கட்கள் உருவாக்கப்பட்டது.
3 நாட்கள் வேலைப்பாடுகளை கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல்வால்ட் கிராமத்தில் அமைந்திருக்கும் வீடுகளை போன்று ஜிஞ்சர் பிரட் ஹவுஸ்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்படும். அப்போது பனிப்பொழிவு வீட்டின் மீது படர்ந்து வெண்மையாக காணப்படும். அது போலவே ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சுகள், மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உள்ளிட்டவைகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் விடுதியில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் தற்போது வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு வரை விடுதியின் நுழைவு வாயில் மற்றும் ரெஸ்டாரண்ட் வளாகத்திலேயே சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக வைக்கப்படும் எனவும் விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் தொடரும் பனிப்பொழிவு மற்றும் மூடுபனிக்கு இடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் இங்கு நிலவும் ரம்யமான சீதோசனத்தை உற்சாகமாக கண்டு மகிழ்கின்றனர்.
- காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது
- அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி,
திண்டுக்கல்:
திண்டுக்கல் பொன்னகரம் துணை மின்நிலையத்தில் நாளை (23ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி,
அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலைய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ் கண்ணன் தெரிவித்துள்ளார்.






