என் மலர்
விழுப்புரம்
- கட்சி கொடியை அறிவித்துள்ள சசிகலா இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.
- இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாசின் வீட்டிற்கு சசிகலா நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென காரில் வந்தார். அங்கு டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் பேசினார். சுமார் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய சசிகலா, பின்னர் மீண்டும் காரில் ஏறி சென்றார்.
ஏற்கனவே கட்சி கொடியை அறிவித்துள்ள சசிகலா இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. மேலும் சசிகலாவும், டாக்டர் ராமதாசும் இன்னும் இதுவரை கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால் டாக்டர் ராமதாசோ, இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.
இத்தகைய சூழலில் டாக்டர் ராமதாசை சசிகலா 90 நிமிடங்கள் சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரின் சந்திப்பு குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சமுதாயத்தை, இந்த தமிழ்நாட்டை, ஏன் இந்த உலகத்தையே தாங்கி பிடிக்கும் மகாசக்திகள்.
- துரோகங்கள் நம்மை சூழ்ந்தாலும் தர்மம் நம் பக்கம் இருக்கிறது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பேசியதாவது:-
பெண்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே நிம்மதி இருக்கும், அன்பு இருக்கும். பாதுகாப்பு இருக்கும். நாம் வெறும் வீட்டை பராமரிக்கும் கைகள் மட்டுமல்ல. இந்த சமுதாயத்தை, இந்த தமிழ்நாட்டை, ஏன் இந்த உலகத்தையே தாங்கி பிடிக்கும் மகாசக்திகள்.
அரசியலில் பெண்கள் பங்களிப்பு என்பது வெறும் வாக்களிப்பதோடு நின்று விடக்கூடாது. நீங்கள் தான் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
இன்று சிலர் பொய் பிம்பங்களை உருவாக்கி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறார்கள். ஆனால் உண்மையான உழைப்பும், தியாகமும் யாரிடம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
துரோகங்கள் நம்மை சூழ்ந்தாலும் தர்மம் நம் பக்கம் இருக்கிறது. பா.ம.க.வின் வெற்றியை பெண்களாகிய நாம் உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- என்னுடைய ஆசை 15 ஆண்டுகள் பெண்களே முதலமைச்சராக வர வேண்டும்.
- மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
மகளிர் இந்த நாட்டை ஆள வேண்டும். மகளிரை இழிவுப்படுத்திய காலம் சென்று மகளிர் மேம்பாட்டுக்காக மகளிரே முன் வந்து திட்டங்களை தீட்ட வேண்டும். அப்படிப்பட்ட காலம் வர வேண்டும்.
என்னுடைய ஆசை 15 ஆண்டுகள் பெண்களே முதலமைச்சராக வர வேண்டும். 3 முறை பெண்களே முதலமைச்சராக வர வேண்டும். அதே போன்று சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும்.
அது நடக்குமா? சாத்தியமா? ஆண்கள் விடுவார்களா? சட்டம் இடம் கொடுக்குமா? என பல கேள்விக்குறிகள் மத்தியில் தான் மகளிர் சமூகம் வாழ்ந்து வருகிறது. மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்றார்.
நாளை சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் வரும் கட்சி தொடர்பான வழக்கு குறித்த கேள்விக்கு நல்லபடியாகவே நடக்கும் என்றார்.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர்.
- யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
திண்டிவனம்:
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டது. அன்புமணிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ் 3 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த 3 நாட்களும் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடன் பா.ம.க. கூட்டணியை உறுதி செய்ய முடியாத நிலையில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த.வெ.க. கூட்டணியில் ராமதாஸ் தரப்புக்கு 35 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தொகுதிகளில் போட்டியிட உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது. எனவே, கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் கூட்டணி ஏற்பட்டுள்ளது.
- அடுத்த 3 நாட்களில் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும்.
திண்டிவனம்:
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் பா.ம.க. தலைமை நிர்வாக குழு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கூட்டணி தொடர்பாக ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் ஒரு சிலர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறியிருந்தனர். இதனால் ராமதாஸ் குழப்பமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கூட்டணி தொடர்பாக பா.ம.க. இளைஞர், மகளிர், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடக பேரவை, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர்,மாநகர, நகர பகுதி நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்க ராமதாஸ் முடிவு செய்திருந்தார்.
அதற்கான கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை. விரைவில் முடிவு செய்து 3 நாட்களில் உறுதி செய்யப்படும். அடுத்த 3 நாட்களில் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.
- பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.
இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.
ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம்பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் நமது இலக்கை அடைவதற்கான வாகனம் அருகே வந்து விட்டது என கூறி இருந்தார்.
மேலும் பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார். ஆனால் நேற்று ராமதாஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று தைலாபுரம் வந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. யாருடன் கூட்டணி என முடிவெடுக்கவில்லை என்றார்.
இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.
இதற்கிடையே வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடக பேரவை, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அன்று கூட்டணி அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது.
- திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும்.
திண்டிவனம்:
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் தனித்தனி கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். 28-ந் தேதிக்குள் (இன்று) கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். அப்போது தான் எந்த வாகனத்தில் பயணிப்போம் என்பதை தெரிவிப்போம் என்றார்.
இதனால் அவர் இன்று கூட்டணி குறித்து அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ராமதாஸ் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் எப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளனர்.
- சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார்.
- திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் தொடர்ந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கூட்டணியில் சேருவோம் என அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். கடந்த சில தினங்களாக பா.ஜ.க. மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் டாக்டர் ராமதாசிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிர்வாக குழு கூட்டத்தை நடத்தி கூட்டணி சம்பந்தமாக கருத்து கேட்டார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் செல்லலாம் என கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சில உறுப்பினர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது. ஆனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்து விட்டது. அதில் தான் நாம் பயணிக்க போகிறோம். நாம் இலக்கை அடைந்து, லட்சியத்தை வெல்வோம் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று கூட்டணி குறித்து முடிவெடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள் மொழி, எம்.எம்.ஏ.க்கள் ஜி.கே .மணி, அருள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் நாளை கூட்டணி சம்பந்தமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறும் போது, சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார். அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்காமல் சென்றார்.
இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வருகிற 28-ந்தேதிக்குள் கூட்டணி சம்பந்தமாக அறிவிக்கப்படும் என்றார்.
அவரிடம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
- ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
- பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.
இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.
ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் நாளை ஆலோசனை நடத்தி முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடைபெறுகிறது.
அதில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
எனவே நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சி தங்களுக்கே சொந்தம் என இருவரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து உள்ளது. டாக்டர் ராமதாஸ் தி.மு.க. பக்கம் செல்வதா அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களுடன் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை ராமதாஸ் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
- விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அம்பேத்கர் மக்கள் கட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைப்பு, தலித் இளைஞர்களின் அரசியல் எழுச்சி மற்றும் ஒன்று சேர் மாநாடு, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதியளிப்பு விழா என நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் செஞ்சி தொகுதி மாவட்ட செயலாளர் அலுவலகம் திறப்பு விழா ஆகியவை செஞ்சி-விழுப்புரம் சாலையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டார். அவர் வக்கீல் மழைமேணிபாண்டியன் மற்றும் அவரது தலைமையில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது :-
அம்பேத்கர் மக்கள் கட்சி வேற எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்தது அவர்களின் அம்பேத்கர் கொள்கை பற்றை காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர்கள் புயலே அடித்தாலும் என்னை விட்டு போகாமல் இருப்பதே எனக்கு வியப்பை தருகிறது.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் வி.சி.க.வினர் அங்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் அதற்கு பிறகு தான் வி.சி.க. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அம்பேத்கர் பெயரில் கட்சி நடத்துவது அவரது கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளை பெயரளவிற்கு மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அங்கீகாரம் பெற்றது சாதாரணமான விஷயம் அல்ல. நடிகர் ரஜினிகாந்த் சொல்வது போல் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது போல் வி.சி.க. ஒரு எம்.எல்.ஏ.மற்றும் எம்.பி. பெற்றால் நூறு பேரை பெற்றதை போன்றது.
மேலும் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் விஜய் கூட்டணியில் சேர முடியாதா? என்றால் முடியும். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற கூடாது என்பதால் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். 5 சீட்டு 6 சீட்டுக்கு தி.மு.க.வுடன் இருக்கிறீர்கள் என்று நம்மை ஆத்திர மூட்டுவார்கள். இதற்கு எல்லாம் திருமாவளவன் அசைந்து கொடுக்கவில்லை. நாங்கள் கொள்கை கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜ.க. கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறது. அதற்கு அதிமுக கட்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி காவிய கொடியை ஏற்ற பார்க்கிறார்கள்.அதனால் தான் பல வழிகளில் பெரியாரை குறி வைத்து விமர்சனம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலித் தலைவர்கள் தேசிய அளவில் இருந்த போதும் அம்பேத்கரை முன்னிறுத்தினார் பெரியார். எதனால் சனாதான தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இருவரின் நோக்கமும் அதுதான். அம்பேத்கர் பேசினதை தான் பெரியார் பேசினார். திமுகவை பலவீனபடுத்தினால் அது பெரியார் அரசியலை பலவீனம் படுத்தும் அரசியல் ஆகும்.
பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் ஒருபோதும் அப்படி நெருக்கடி கொடுக்கவில்லை. எங்கள் கட்சி நலன் காரணமாக தான் பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டோம். அதற்கு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் சம்பவமும் அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தலித் அல்லாத கூட்டணி என்ற சோசியல் என்ஜினியரிங் தான் முக்கிய காரணம். எங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி இல்லை என்றாலும் அம்பேத்கர் கொள்கையை கடைபிடிக்கிறோம். அந்த வகையில் வேற கட்சியில் இணையாமல் அம்பேத்கர் மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்துள்ளதை வரவேற்கிறோம். தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்.அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாக இருக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. இது எடப்பாடிக்கு தலைமையில் இடியே விழுந்து போல் இருக்கும். உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியபோது அவருக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போல் இருக்கும்.இப்போது தே.மு.தி.க . தி.மு.க. உடன் கூட்டணியில் இணைந்தது எடப்பாடிக்கு உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருக்கும். விசில் காரங்க ஆட்சியில் பங்கு தர நாங்க ரெடி நீங்க ரெடியா என்று கேட்டார்கள். ஆட்சியில் பங்குக்கு நாங்க ரெடி அதை எங்களால் அமைத்துக் கொள்ள முடியும் ஆனால் உங்க கூட வர நாங்க ரெடி இல்லை என்று சொல்லி விட்டோம். விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை. அதே போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர கட்சிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.
- 5 வயதில் மகன் ஒருவர் உள்ளார்
- ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் துளசிராம் (36). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் மதுரை கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் மகன் உள்ளார். துளசிராம் பி.இ. படித்து விட்டு சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி பாண்டியம்மாள், கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்துள்ளார். வேலை இல்லாததாலும், மனைவி பிரிந்து சென்றதாலும் விரக்தியில் இருந்த துளசிராம் பாதரசம் வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்தி உள்ளார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






