என் மலர்

    விழுப்புரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.
    • மின்கசிவு பராமரிப்பு, ஆபத்தான மரக்கிளைகள் அகற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தலைமை யாசி ரியர்களுக்கு மாவட்ட கலெ க்டர் பழனி உத்தரவு. இதுகுறித்து அவர் கூறுகையில்:-

    விழுப்புரம் மாவட்ட த்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் ஜீன் 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட வைகள் தூய்மையாகவும், மின்கசிவு பராமரிப்பு, ஆபத்தான மரக்கிளைகள் அகற்ற வேண்டும். பள்ளியில் பழுதான கட்டிடத்தில் மாணவ ர்களை அமரச் செய்யாமல் கட்டாயம் தடுப்பு அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை செய்ய வேண்டும். 

    அனைத்து நிலை களிலும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை கண்காணிக்கு ம்பொருட்டு (சரிபார்ப்பு பட்டியலைக் கொண்டு) விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லரின் தலைமையில் 154 அலுவலர்களைக் கொண்ட குழுவினர் 1,492 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் வருகின்ற ஜுன்1-ம் தேதி முதல் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு முன் அனைத்துப் பள்ளித் தலைமை யாசிரியர்களும் மேற்கண்ட பராமரிப்பு பணிகளை முடித்து பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது.
    • ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தமிழரசி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- 

    திருவெண்ணை நல்லூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது. இதில், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம். தொடர்ந்து, பொது கலந்தாய்வு ஜூன் 5-ந் தேதி கணினி அறிவியல் கணிதம் இயற்பியல் வேதியல் தாவரவியல் விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் இந்த பாடப்பிரிவலுக்கு கட்டணம் 2740 ஆகும்.

    ஜூன் 6-ந் தேதி வணிகவியல் காலை 9.30 மணி அளவில் தொடங்கும் இதற்கு கட்டணம் ரூ.2,720 ஆகும். ஜூன் 7-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்தாய்வு நடைபெறும். இதற்கு கட்டணம் 2.720 ரூபாய் ஆகும். ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் இவற்றின் உண்மைச் சான்றிதழ் உடன் 2 பிரதிகள், ஜெராக்ஸ் 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும்.

    சேர்க்கைக்கான கட்ட ணத்தை அன்றே அலுவ லகத்தில் செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்த வர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், www.gasctvn.com என்ற இக்கல்லூரியின் இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் குறுஞ் செய்தி மற்றும் புலனம் (வாட்ஸ் அப்) வழியாக தகவல் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிய கல்லூரியை அணுகலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது.
    • பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிபாளையம் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் விவசாயிகள். வண்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் வசிப்ப வர்கள் தினந்தோறும் விளைநிலத்திற்கு செல்வது வழக்கம் அந்த பகுதி விநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் இல்லை. எனவே கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள். எனவே மரக்காணம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக அந்த பகுதியை சீரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
    • போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விமல் ஓட்டலுக்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து,ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமலின் மோட்டார் சைக்கிளை அந்த 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை சுற்றிவளைத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர்.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்துபோன விமலும், விமலின் அண்ணன் வினோத் இருவரும் புதுச்சேரி மாநிலம் ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்தவர்கள். 2019-ஆண்டு ரவுடி சோழன் குரூப்பிற்கும் மற்றொரு ரவுடி ஜனாகுரூப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்த வினோத்தை ஜனா குரூப்பினர் வெட்டிக் கொன்றது. இதனால் வினோத்தின் சாவிற்கு பழிக்குப்பழி தீர்ப்பதற்காக வினோத்தின் தம்பி விமல் ஜனாவை கொல்வேன் என்று அனிச்சகுப்பத்தில் உள்ள ஜனாவின் மாமாவிடம் சென்று கூறினார். உடனே ஜனாவின் மாமா இந்த செய்தியை ஜனாவிடம் கூறினார்.

    இதனால் ஜனா முதற்கட்டமாக விமலை தீர்த்துகட்ட வேண்டும் என முடிவெடித்து ஜனா குரூப்பை சேர்ந்த கீழபுத்துப்பட்டு செல்வராசு மகன் ஜனா (வயது 32), ரவி மகன் அரவிந்த் (22), புதுச்சேரி லாஸ்பேட்டை தண்டபாணி மகன் உதயகு மார் (26), நாகராஜ் மகன் கார்த்திகேயன் (32), பவழ நகர் சரவணன் மகன் லோகேஷ் (23), காலாப்பட்டு ஜில்பட் மகன் தாமஸ் (23), ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒரு வாரமாக விமல் எங்கெங்கு செல்கிறார் என்று நோட்டமிட்டு நேற்று விமலை சுற்றிவளைத்து கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

    மேலும் இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தனிப்படை அமைத்து அந்த 6 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் அவர்கள் ஆரோவில் அருகே உள்ள முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே முந்திரிதோப்பிற்கு விரைந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு பதுங்கி இருந்த ஜனா, அரவிந்த், உதயகுமார், கார்த்திகேயன், லோகேஷ், தாமசை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புற்று நோய் கதிரியக்க சிகிச்சை கருவியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
    • ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றால் புற்று நோயிலிருந்து எளிதாக குண மாகலாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகிறேன்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் சுற்றி உள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, டாஸ்மார்க் அருகே ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்ரன் (28), ராஜவேணி (32), பரிமளா (36) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டியில் ராமநத்தத்தில் இருந்து அரங்கூர் சென்ற போது திட்டக்குடி ராம நத்தம் நெடுஞ்சா லையில் உள்ள பெரங்கியம் அரங்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத, 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டியை ஓட்டி வந்த சிம்ரன் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயற்சித்தனர்.

    ஆனால் திருட முடியவி ல்லை இந்த வழிப்பறியில் ஸ்கூட்டியில் வந்த 3 பெண்களும் கீழே விழு ந்ததில், ராஜவேணி படுகா யம் அடைந்தார். மற்ற 2 பெண்கள் சிறு காயமும் ஏற்பட்டு ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராஜவேணி மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு வாரத்தில் மட்டும் திட்டக்குடி மற்றும் வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் பெண்கள் தனியாக ஸ்கூட்டியில் செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட காவல் துறையினர் விரைந்து இந்த வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விமலை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • பழிக்குபழியாக இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விமல் வழக்கம்போல் இன்று காலை ஓட்டலுக்கு வேலை செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த போது விமலின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது பின்னால் வந்த அந்த கும்பல் விமல் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை தாக்கி அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர். விமலுக்கு கழுத்து, தலை உள்ளிட்ட 10 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. வாலிபரை கத்தியால் குத்தி கொன்றதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது விமலை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 3 வாலிபர்களில் 2 பேர் வானூர் அருகே மாத்தூர் வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதாக கூறினர்.

    பொதுமக்கள் கூறிய வழியில் போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விமலை குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    விமல் மீது ஏற்கனவேகொலை வழக்கு உள்ளது. இதற்கு பழிக்குபழியாக இந்த கொலை நடந்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான முழுவிபரம் கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபர்களை பிடித்தால் தெரியவரும் என்று போலீசார் கூறினர். பட்டபகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் வாலிபரை சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மரக்காணத்தில் சம்பு வெளிதெருவில் வசிப்பவர் செல்லமேரி.
    • மகன் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போல வழக்கு பதிவு விசாரணை செய்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் சம்பு வெளிதெருவில் வசிப்பவர் ஜோசப் இவருடைய மனைவி செல்லத்மேரி (வயது 60). செல்லமேரி நீண்ட காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முதல் காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிைடக்கவில்லை. இதனால் மரக்காண போலீஸ் நிலையத்தில் அவருடைய மகன் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போல வழக்கு பதிவு விசாரணை செய்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரேக்கில் ஏற்பட்ட பலுதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்திலிருந்து நெய்வேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை வந்தது. இந்த பஸ்சை திண்டிவனம் அருகே சித்தனி பகுதியை சேர்ந்த சபரிநாதன் (வயது 31) டிரைவர் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிகொண்டு சென்னை-கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் பஸ் வந்தபோது பஸ் எதிரே மோட்டார் சைக்கிள், கார் வந்தது. அப்போது பஸ்சை மோட்டார் சைக்கிள், கார் மீது மோதாமல் இருக்க பஸ்சின் டிரைவர் சபரிநாதன் சடன் பிரேக் போட்டுள்ளார்.

    அப்போது பிரேக்கில் ஏற்பட்ட பலுதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது, பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். மேலும் 30 பயணிகள் காயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சாலை விபத்தில் காயமடைந்த பயணிகளை அமைச்சர் பொன்முடிடி நேரில் சென்று பார்வையிட்டார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரபாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்.
    • செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    செஞ்சிக்கோட்டையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார். நடிகர் மோகன்லால் கதாநாயகனாகவும் நடிகை சோனாலி குல்கர்னி கதாநாயகியாகவும் நடிக்கும் மலைக் கோட்டை வாலிபன் படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நாளை 29-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக செஞ்சி கோட்டையில் பொம்மைகளை கொண்டு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • சாராயம் விற்பனை செய்தவர்கள் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் ஜெயலலிதா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பகுதியில் சாராயம், அந்நிய மதுபானங்கள் விற்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால்கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு கட்டுப்பட்டு சாராயம் விற்க மாட்டேன் என பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளியனூர் போலீஸ் நிலையத்திலும் ஜெயலலிதா எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.கடந்த வாரம் அதே பகுதியில் சாராயம் குடித்து கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக போலீசார் சாராயம் விற்பனை செய்தவர்கள்மற்றும் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதையடுத்து ஜெயலலி தாவை இன்று காலை திடீரென போலீசார் கைது செய்ய வந்தனர். ஊராட்சி மன்ற தலைவரும் பொதுமக்களும் ஜெயலலிதா சாராயம் விற்பனை செய்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீஸ் நிலையத்திலும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாராயம் விற்க மாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை கைது செய்யக்கூடாது என 50-க்கும் மேற்பட்ட .பொது மக்கள் போலீசாரை மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால்,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவை விட்டால் தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் போலீசார் ஜெயலலிதாவை அங்கே விட்டு விட்டு சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print