என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    #WomensDay பெண்கள் தான் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும் -  ஸ்ரீகாந்தி
    X

    #WomensDay பெண்கள் தான் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும் - ஸ்ரீகாந்தி

    • சமுதாயத்தை, இந்த தமிழ்நாட்டை, ஏன் இந்த உலகத்தையே தாங்கி பிடிக்கும் மகாசக்திகள்.
    • துரோகங்கள் நம்மை சூழ்ந்தாலும் தர்மம் நம் பக்கம் இருக்கிறது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பேசியதாவது:-

    பெண்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே நிம்மதி இருக்கும், அன்பு இருக்கும். பாதுகாப்பு இருக்கும். நாம் வெறும் வீட்டை பராமரிக்கும் கைகள் மட்டுமல்ல. இந்த சமுதாயத்தை, இந்த தமிழ்நாட்டை, ஏன் இந்த உலகத்தையே தாங்கி பிடிக்கும் மகாசக்திகள்.

    அரசியலில் பெண்கள் பங்களிப்பு என்பது வெறும் வாக்களிப்பதோடு நின்று விடக்கூடாது. நீங்கள் தான் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.

    இன்று சிலர் பொய் பிம்பங்களை உருவாக்கி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறார்கள். ஆனால் உண்மையான உழைப்பும், தியாகமும் யாரிடம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    துரோகங்கள் நம்மை சூழ்ந்தாலும் தர்மம் நம் பக்கம் இருக்கிறது. பா.ம.க.வின் வெற்றியை பெண்களாகிய நாம் உறுதி செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×