என் மலர்
நீங்கள் தேடியது "இளைஞர்"
- அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரும் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி ஊழியராக மாறியுள்ளார்.
இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது அவர் சொந்தமாக கிளவுட் கிச்சன் உணவகம் தொடங்கும் கனவை கொண்டிருந்தார்.
இதற்காக, தான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் என்ன வகையான உணவுக்கு தேவை உள்ளது, நுகர்வோர் என்ன விலையில் அதை வாங்கத் தயாராக உள்ளனர், எந்தெந்த பகுதிகளில் ஆர்டர்கள் அதிகம் வருகின்றன என்பதைத் தானே கண்டுபிடிக்க விரும்பினார். இந்தக் கள ஆராய்ச்சிக்கு டெலிவரி ஊழியராக ஆனார்.
அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில நண்பர்கள் அவரை கேலி செய்தனர், மேலும் டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், அவர் பின்வாங்கவில்லை. தனது ஆராய்ச்சியின் மூலம், குறைந்த விலையில் அதிகம் விற்பனையாகும் 12 வகையான உணவுப் பொருட்களை அவர் அடையாளம் கண்டார்.
இந்த மாதிரியின் மூலம் 3-4 மாதங்களுக்குள் லாபம் ஈட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது நண்பர் அவர் குறித்து இவ்வாறு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
- ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டுள்ளார்.
- வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
அரியானாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது 3 தங்கைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 19 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ராகுல் பாரதியின் தொலைபேசியை ஹேக் செய்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டது விசாரணையில் தெரியவந்தது.
வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். இந்த உரையாடலில், பணம் கொடுக்கவில்லை என்றால் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிடுவேன் என்று சாஹில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகுல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் குடும்பத்தினரின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- 52 வயதான ராணி தனது வயதை மறைத்து Filter மூலம் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
- 52 வயதான ராணிக்கு 4 குழந்தைகள் இருப்பது அருணுக்கு தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அருண் (26) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
52 வயதான ராணி என்ற பெண் தனது வயதை மறைத்து Filter மூலம் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார்.
முதல்முறையாக ராணியை அருண் நேரில் சந்தித்தபோதே அவளுக்கு 52 வயது என்றும் 4 குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்த அருண், ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார்.
பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி வீசியுள்ளார்.
ராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் அருணை கைது செய்தனர். கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மத்திய பிரதேசத்தில் விஷப்பாம்பு ஒன்று இளைஞரை கடித்துள்ளது.
- அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு உயிரிழந்து போனது.
போபால்:
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பிடம் இருக்கும் விஷமே அதற்கு காரணம். விஷமுள்ள பாம்பு மனிதன் ஒருவனை தீண்டினால் அவனது உயிர் போய்விடும். இதனாலேயே, பாம்பைக் கண்டால் அனைவரும் அலறி ஓடி விடுகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் இளைஞரை கடித்த பாம்பு ஒன்று இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குட்சோடி கிராமத்தில் வசித்து வரும் சச்சின் நாக்பூரே (25), என்ற இளைஞர், தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, விஷப் பாம்பு அவரைக் கடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு இறந்து போனது.
பாம்புக் கடியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சச்சின் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது அரிதிலும் அரிதான நிகழ்வு என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனை கடித்து பாம்பு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
- இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- இம்தியாஸ் அகமதுவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது 2 பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குல்காமை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே (வயது 23). என்பவர் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்தாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இம்தியாஸ் அகமது மக்ரேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கு தான் உதவியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் அந்த இடத்தை காண்பிப்பதாக அவர் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து நேற்று இம்தியாஸ் அகமது மக்ரேவை போலீசார் மற்றும் ராணுவ படையினருடன், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற இம்தியாஸ் அகமது மக்ரே, வேஷா நதியில் குதித்துள்ளார். ஆனால் அவர் நீந்த முயற்சித்தும் முடியாமல் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இம்தியாஸ் அகமது மக்ரேவை பாதுகாப்பு படையினர் கொலை செய்து விட்டதாக மக்ரேவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதனை மறுத்த பாதுகாப்பு படையினர் இம்தியாஸ் அகமது மக்ரே ஆற்றில் குதித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
- முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம் ஒருவர் அத்துமீறியுள்ளார்.
- சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், அம்பத்தூர் அருகே டாஸ்மாக்கில் அந்த இளைஞர் ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடித்தனர்
ஜிபே எண் மூலம் நீலாங்கரையை சேர்ந்த சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சரத்பாபு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான சரத்பாபு, எழும்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் ஏற்கனவே கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
- தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தன்கோடு ஊராட்சி, வெள்ளிச்சந்தை ஊராட்சி போன்ற பகுதி களில் தி.மு.க. செயல்வீரர் கூட்டம் ஒன்றிய செய லாளர் சுரேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவர் நிஜாம், துணை செயலாளர் தாமஸ் கென்னடி, பொருளாளர் பெர்வின் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் இளையோர் களை ஊக்குவித்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய செய்ய பாடுபட வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டும் வேட்பாளர் வெற்றிபெற உழைக்க வேண்டும்.
வாக்குச்சாவடி முக வர்களை உடனே நியமிக்க வேண்டும், அரசின் சாதனைகளை விளக்கி தொடர் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இளைஞர் திறன் திருவிழா மாரிமுத்து எம்.எல்.ஏ. , மகளிர் திட்ட இயக்குநர்வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்புரை வழங்கினார்.
இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கனிஅமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அமுதாமனோகரன் மற்றும்தமயந்தி, பேருராட்சி செயலாளர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் கமல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
முடிவில் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர் ராதிகா நன்றி தெரிவித்தார்.
- மலைமீது தேடிய கிராமத்து இளைஞர்கள் பாறை இடுக்கில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர்.
- கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பொன்னடபட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் விஷ்ணு ராம் (வயது21). நேற்று மாலை இவர் தாயாரிடம் பிரான்மலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு மலை மேல் உள்ள கொடுங்குன்ற நாதரை தரிசனம் செய்ய தனியாக சென்றார். பொழுது சாய்ந்த நேரத்தில் பாதை தெரியாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற விஷ்ணுராம், அங்குள்ள பாறையில் வழுக்கி புதருக்குள் விழுந்தார்.
அங்கிருந்து தாயாருக்கு பாதை மாறி சென்றுவிட்டதாக செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினார். மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியது. குறுந்தகவலை பார்த்த தாயார் உடனடியாக பிரான்மலை ஊருக்குள் வந்து கிராம மக்களிடம் மகன் காணாமல் போன விவரத்தை கூறி அழுதார். இதையடுத்து பிரான்மலை, மற்றும் பாப்பாபட்டியை சேர்ந்த இளைஞர்கள் மலையில் ஏறி இரவு முழுவதும் வாலிபர் விஷ்ணுராமை தேடினர்.
அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாததால் இரவில் திரும்பி விட்டனர்.இன்று காலை மீண்டும் கிராமத்து இளைஞர்கள் மலைமீது தேடியபோது பாறை இடுக்கின் இடையே தலையில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர். பின்னர் அவரை பத்திரமாக மீட்டு மலையை விட்டு இறங்கினர். காயமடைந்த விஷ்ணுராமை உடனடியாக பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுமார் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையில் நேரம், காலம் பார்க்காமல் மாலையில் இருந்து இன்று காலை வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாப்பாபட்டி கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பிரான்மலை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
- குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
- அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தர விட்டது. இந்த நிலை யில் ராகுல்காந்திக்கு வழங்கிய தண்டனையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இரணியலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜேக்கப் (குளச்சல்), சட்ட மன்ற சக்தி வேல்(பத்மநாபபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த மெம்மோ ரயிலை மறித்த அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரணியல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப் பிரிவு ஏட்டு சுஜின் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
- மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
நாமக்கல்:
மோகனூர் தாலுகா, அரூர் பஞ்சாயத்து, ஈச்சங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44), விவசாயி. இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.
பின்னர் மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
அதைக்கண்டு ரங்கசாமி சத்தம் போடவே 2 பேர் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பஞ்சாயத்து, அக்கரையாம்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.
இவர், ஆடு மற்றும் கோழிகளைத் திருடி வள்ளிபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஐஸ் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்படும் மீன்களை விட கிராமத்து குளங்களில் அவ்வப்போது மீன்களை பிடித்து சமைப்பது கூடுதல் சுவை தருவதாகும்.
- பால் (பந்து) தூண்டில்கள் எனப்படும் இந்தவகை தூண்டில்களில் மீன்களுக்கு உணவாக சத்துமாவு, கோதுமைமாவு மற்றும் முட்டை கலந்த கலவையை பயன்படுத்துகிறோம்.
குடிமங்கலம்:
குடிமங்கலத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதி இளைஞர்கள் பயனுள்ள பொழுதுபோக்காக மீன்பிடித்து வருகின்றனர்.
அவர்கள் கைத்தூண்டில், நிலத் தூண்டில், வலை என பல விதங்களில் மீன்களைப்பிடித்து வருகிறார்கள். அதேநேரத்தில் மாவு உருண்டை தூண்டில் மூலம் நூதன முறையில் மீன் பிடிப்பது ரசிக்க வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ஐஸ் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்படும் மீன்களை விட கிராமத்து குளங்களில் அவ்வப்போது மீன்களை பிடித்து சமைப்பது கூடுதல் சுவை தருவதாகும். ஆனால் பெரும்பாலான கிராமத்து குளங்களில் மீன் பிடிக்கும் உரிமை ஏலம் விடப்படுவதால் குத்தகைதாரர்கள் தவிர மற்றவர்களை மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. ஒருசில சிறிய குளங்கள் மட்டுமே ஏலம் விடப்படாமல் உள்ளது. அந்த குளங்களில் மட்டுமே மீன் பிடிக்க முடிகிறது.
பொதுவாக தூண்டில்களில் மீன்களுக்கு இரையாக மண் புழுக்களை பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால் சமீப காலங்களாக ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் விளைநிலங்களில் மண் புழுக்களைப் பார்ப்பதே அரிதான விஷயமாக உள்ளது. அதனால் தூண்டில்களில் மீன்களுக்கு இரையாக கறிக்கடையிலிருந்து கோழி குடல்களை வாங்கி வந்து பயன்படுத்துகிறோம். இதுதவிர மாவு உருண்டை தூண்டில்களை பயன்படுத்தி விரைவாக மீன்களை பிடிக்க முடிகிறது. பால் (பந்து) தூண்டில்கள் எனப்படும் இந்தவகை தூண்டில்களில் மீன்களுக்கு உணவாக சத்துமாவு, கோதுமைமாவு மற்றும் முட்டை கலந்த கலவையை பயன்படுத்துகிறோம். ஒரு ஸ்பிரிங்கை சுற்றி மாவை உருண்டையாக வைத்து அதனுள் தூண்டில்களை புதைத்து வைக்கிறோம்.
மேலும் மாவு உருண்டை தூண்டில் நீருக்குள் மூழ்குவதற்காக ஒரு இரும்பு நட்டு அதற்கு மேலே சற்று இடைவெளியில் பிளாஸ்டிக் பந்து இணைத்து இந்த தூண்டிலை தயாரிக்கிறோம். இந்த தூண்டிலை கயிற்றுடன் இணைத்து ஒரு முனையை பிடித்துக்கொண்டு தூண்டிலை தண்ணீருக்குள் வீசி விட்டு காத்திருந்தால் மாவைத் தின்னும் மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும். இந்த முறையில் மீன்கள் அதிக அளவில் சிக்குகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.






