என் மலர்
நீங்கள் தேடியது "brothers"
- அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் பூதத்தான் 2020-ம் ஆண்டு 11-ம் வகுப்பும், சிவசண்முகம் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
- கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது மகன்கள் பூதத்தான் ( வயது 17), சிவ சண்முகம் ( 15).
அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் பூதத்தான் 2020-ம் ஆண்டு 11-ம் வகுப்பும், சிவசண்முகம் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்க ளும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் காரணம் கேட்டபோது சரியான தகவல் கூறவில்லை என தெரிகிறது.
போராட்டம்
இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அம்பையில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏறிநின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
தற்கொலை மிரட்டல்
இந்நிலையில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற சகோதரர்கள் அங்குள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தனர்.
தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வாசிவன் மற்றும் பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
- ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் :
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வி.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 43).இவரது சகோதரர் வெங்கடாசலம்(40). சகோதரர்கள் இணைந்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடமிருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் க.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
தற்போது வீடு கட்டுவதற்காக, இடத்தை அளவீடு செய்ய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். நிலத்தை அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டின் மையப்பகுதியில் அளவீடு செய்து இதுதான் உங்களது வீட்டுமனை இடம் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நிலத்தை முறையாக அளவீடு செய்து தரக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் மண்டல துணை தாசில்தாரிடம் மனு அளித்து தங்களது இடத்தை உரிய அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- வியாபாரியை கத்தியால் குத்திய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
- ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார்
மதுரை
ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் விமல் ஆனந்த் (வயது 30). இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் சோழவந்தானை சேர்ந்த நவீன் ரூ.10ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை விற்றார்.
இந்தநிலையில் அச்ச ம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன்கள் ஜெயபால்(22), கோபால் (26) ஆகியோர் விமல் ஆனந்தை தேடி வந்தனர்.
அவர்கள், சோழவந்தான் நவீன் விற்ற மோட்டார் சைக்கிள் எங்களுக்கு சொந்தமானது என்றுகூறி அதை தந்துவிடுமாறு கேட்டனர். அதற்கு விமல் ஆனந்த், "என்னிடம் அவர் ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார். அந்த பணத்தைப் பெற்றுத்தந்தால் மோட்டார் சைக்கிளை தருவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த 2 பேரும் விமல் ஆனந்தை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பி ஜெயபால்,கோபால் ஆகியோரை கைது செய்தனர்.
ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் செந்தில்(வயது 58). இவருடைய தம்பி ரவிச்சந்திரன்(56). இவர்கள் இருவரும் சேர்ந்து கோவை மாவட்டம் காரமடையில் பாலித்தீன் சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனம் தொடங்கினார்கள்.
இந்த நிறுவனத்தின் தேவைக்காக இருவரும் திருப்பூர் கொங்குநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 கோடி கடன் கேட்டனர்.
இதற்காக ஈரோட்டில் தங்கள் பெயரில் உள்ள 1¼ ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தின் ஆவணங்களை வங்கியில் அடமானமாக வைத்து கடந்த 2008-ம் ஆண்டு ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றனர். அதன்பிறகு கடனுக்கான தவணைத்தொகையை உரிய முறையில் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கடன் தொகையை செலுத்தாததால் அவர்களுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வங்கி அதிகாரிகள் பார்த்தபோது, அந்த ஆவணங்களில் குறிப்பிட்டபடி அங்கு நிலம் எதுவும் இல்லை. இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். செந்தில், ரவிச்சந்திரன் இருவரும் வங்கியில் அடமானம் வைத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதும், இருவரும் திட்டமிட்டே போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வங்கியின் உதவி பொது மேலாளர் ஜெகத்ரட்சகன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில், அவருடைய தம்பி ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, பீம நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் குப்பபோயன் (வயது 65).
இவர், அதே ஊரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் பூசாரியாகவும், தர்ம கர்த்தாவாகவும் இருந்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (50) குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
குப்பபோயன் கோவிலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து வருவதால் அவரை மாற்றக்கோரி குப்புசாமியும் (50) இவரது தம்பிகள் ஏழுமலை(45), மணிகண்டன் (40) ஆகியோர் நாமக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு பூசாரி குப்பபோயனுக்கு சாதகமாக வந்தது. இதனால் குப்புசாமியும், அவரது தம்பிகளும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அவர்களை அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், அவர்களுக்குள் முன்விரோதம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.
கடும் ஆத்திரத்தில் இருந்த குப்புசாமி மற்றும் அவரது தம்பிகள் ஏழுமலை, மணிகண்டன் ஆகியோர் அரிவாளுடன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குப்பபோயன் வீட்டிற்குள் புகுந்தனர்.
அவர்களை கண்டு குப்பபோயன், அதிர்ச்சி அடைந்தார். பல முறை கூறியபிறகும் கேட்கவில்லை. இனிமேல் உன்னை விட மாட்டோம் என்றபடி குப்பபோயனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க குப்பபோயன் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என அலறியபடி ஓடினார். ஆனால் அவரது தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.
பின்னர் குப்புசாமியும், அவரது தம்பிகளும் ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடியபடி ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள், ஊர் மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகிறார்கள். #tamilnews
உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த சகோதரர்கள் சாம்சிங், ஜெய்சிங். இவர்களது உறவு பெண் ஒருவர் சகோதரர்கள் இருவர் மீதும் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
2001-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சகோதரர்கள் இருவரும் தன்னை வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டுக்கு இழுத்து சென்றதாகவும், அங்கு வைத்து அவர்கள் கற்பழித்ததாகவும் புகாரில் கூறி இருந்தார்.
இரு வாலிபர்களும் எனது கைகளை கட்டிப்போட்டு விட்டு அவர்களின் தாயார், மனைவி, குழந்தைகள் முன்னிலையில் கற்பழித்தனர் என்றும் கூறி இருந்தார்.
இந்த வழக்கு முதலில் பரிதாபாத் முதன்மை கோர்ட்டில் நடந்தது. அதில், இருவரையும் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், அந்த பெண் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது மறுபடியும் விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோர்ட்டு விசாரணை நடத்தி 2011-ம் ஆண்டு சகோதரர்களில் சாம்சிங்குக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஜெய்சிங்குக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கியது.
ஐகோர்ட்டில் அப்பீல் செய்த போது அந்த கோர்ட்டும் கீழ் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தது. இதனால் 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் ரமணா, மோகன் சந்தான கவுடர் ஆகியோர் குற்றவாளிகள் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டனர்.
மேலும் அந்த பெண் போலியாக கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். இதை சரியாக விசாரிக்காமல் போலீசார் வழக்கு ஜோடித்துள்ளனர் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
சகோதரர்களில் ஒருவர் கோர்ட்டில் கூறும் போது, நான் அந்த பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தேன். மேலும் அந்த பெண் வேறு ஒரு வாலிபருடன் சுற்றினார். இதனால் அவரை தாக்கினேன். இந்த கோபத்தில் தான் எங்கள் இருவர் மீதும் கற்பழிப்பு புகார் கொடுத்துவிட்டார். ஆனால், நாங்கள் அவரை கற்பழிக்கவே இல்லை என்று சொன்னார்.
இதை நீதிபதிகள் ஏற்று கொண்டனர். இதுபற்றி நீதிபதிகள் கூறியதாவது:-
இரு வாலிபர்களும் தங்களது தாயார், மனைவி, குழந்தைகள் முன்னிலையில் தன்னை கற்பழித்ததாக அந்த பெண் கூறி இருக்கிறார். எந்தவொரு ஆணும் தங்களது மனைவி, தாயார், குழந்தைகள் முன்னிலையில் இன்னொரு பெண்ணை கற்பழிக்க வாய்ப்பு இல்லை.
அடுத்ததாக அந்த பெண் கற்பழிக்கப்பட்டதற்கான ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை. அவர் உடலில் காயம் ஏற்பட்டதாகவோ, வாலிபர்களின் உயிரணுக்கள் கிடைத்ததாகவோ, மற்ற அடையாளங்களோ இல்லை.
எனவே, இது கற்பழிப்பு அல்ல, அந்த பெண் போலியாக புகார் கொடுத்து இருக்கிறார். போலீசாரும் அதை மேற்கொண்டு ஜோடித்திருக்கிறார்கள். இருவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
ஆனால், இவர்களில் ஜெய்சிங் ஏற்கனவே 7 ஆண்டு ஜெயில் தண்டனையை முடித்து விடுதலையாகி விட்டார். சாம்சிங் 10 ஆண்டு ஜெயில் தண்டனையில் 7 ஆண்டை முடித்திருந்தார். அவரை உடனடியாக விடுவித்துள்ளனர்.
ஆனாலும், செய்யாத குற்றத்துக்காக அவர்கள் இருவரும் பல ஆண்டு ஜெயில் தண்டனையை அனுபவித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் எட்வர்டு இன்பராஜ் (வயது 60). விவசாயி. கதிர்நரசிங்கா புரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மாரியப்பன், வேல்முருகன் 2 பேரும் எட்வர்டு இன்பராஜிடம் தங்களுக்கு சொந்தமான 24 செண்ட் ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எட்வர்டு இன்பராஜ் குறிப்பிட்ட தொகை கொடுத்து நிலத்தை வாங்கினார். இதை பதிவு செய்வதற்காக தாலுகா அலுவலகம் சென்ற போது அந்த நிலம் வேறு ஒருவர் பெயரில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மாரியப்பன் மற்றும் வேல்முருகனிடம் இது குறித்து கேட்டார்.
அவர்கள் உங்கள் பணத்தை 3 மாதத்தில் திருப்பி கொடுத்து விடுகிறோம் என கூறியுள்ளனர்.
கெடு முடிந்த பின்பும் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் எட்வர்டு இன்பராஜ் மீண்டும் அவர்களிடம் பணம் கேட்டு சென்றார். ஆத்திரமடைந்த அண்ணன் தம்பி 2 பேரும் எட்வர்டு இன்பராஜை தகாத வார்த்தையால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி.உத்தரவின்படி ஆண்டிப்பட்டி போலீசார் வேல்முருகன் மற்றும் மாரியப்பன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.