என் மலர்
நீங்கள் தேடியது "Brothers"
- ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டுள்ளார்.
- வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
அரியானாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது 3 தங்கைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 19 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ராகுல் பாரதியின் தொலைபேசியை ஹேக் செய்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டது விசாரணையில் தெரியவந்தது.
வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். இந்த உரையாடலில், பணம் கொடுக்கவில்லை என்றால் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிடுவேன் என்று சாஹில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகுல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் குடும்பத்தினரின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- ஹாட்டி சமூகத்தில் "ஜோடிதரன்" அல்லது "திரௌபதி பிரதா" என்று இந்த பலதார மணம் அறியப்படுகிறது.
- பாரம்பரிய பஹாரி நாட்டுப்புற இசையுடன் நடனமாடி, மணமக்களை வாழ்த்தினர்.
இமாச்சல பிரதேசத்தின் சர்மூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ்-கிரி என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் ஹாட்டி சமூகத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு நடந்துள்ளது.
ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி என்ற சகோதரர்கள், அருகிலுள்ள குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணை, குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் முழு சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
ஹாட்டி சமூகத்தில் "ஜோடிதரன்" அல்லது "திரௌபதி பிரதா" என்று அறியப்படும் இந்த பலதார திருமண வழக்கம், பொதுவாக ரகசியமாகப் பின்பற்றப்பட்டாலும், இந்த திருமணம் ஊரார் அறிய பிரமாண்டமாக நடந்துள்ளது.
இந்த வழக்கம் குடும்ப ஒற்றுமையைப் பேணுவதற்கும், மூதாதையர் நிலத்தைப் பிரிப்பதைத் தடுப்பதற்கும், பெண்கள் விதவையாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் பின்பற்றப்படுகிறது.
சகோதரர்களில் ஒருவரான பிரதீப் ஜல் சக்தி துறையிலும், கபில் வெளிநாட்டிலும் பணிபுரிகின்றனர். இருவரும் தங்கள் முடிவை பரஸ்பரமானது என்றும், தங்கள் வரலாற்றைப் பற்றி பெருமைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மணமகள் சுனிதா, "இது எனது தேர்வு. நான் ஒருபோதும் வற்புறுத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில், அண்டை கிராமங்களைச் சேர்ந்த மக்களும் உறவினர்களும் பங்கேற்று, பாரம்பரிய பஹாரி நாட்டுப்புற இசையுடன் நடனமாடி, மணமக்களை வாழ்த்தினர்.
- தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த சகோதர்கள் 3 பேரும் தங்களது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீட்டிற்கு சென்றனர்.
- அப்போது அப்பகுதி சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மீது கற்களை வீசியுள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முகமது ஆரோன் (வயது 27). இவரது சகோதரர்கள் முகமதுஹசன் (30), உசேன் (32). சகோதர்கள் 3 பேரும் தங்களது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீட்டிற்கு சென்றனர்.
அப்போது அப்பகுதி சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மீது கற்களை வீசியுள்ளனர். இது குறித்து முகமது ஹசன், அவர்களிடம் சென்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக அவரது சகோதரர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது அந்த கும்பல், வாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்ட னர். அங்கிருந்தவ ர்கள் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட் அன்பரசி சப்-இன்ஸ்பெ க்டர்கள் வசந்த், சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.
- 200-க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.
நகர் மன்ற தலைவரும், தி.மு.க நகரச் செயலாளருமான மாரிமுத்து தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், நாகை மாவட்ட செயலாளருமான கவுதமன், நாகை தொகுதி மேலிட பார்வையாளர் நிரஞ்சன் துறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் அ.தி.மு.க முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், முன்னாள் மகளிர் அணி செயலாளர் அஞ்சம்மாள் பரமசிவம் மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
அவர்களை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்வதால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பாக உள்ளதால் உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கி வருவது தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த 1 மாதத்திற்கு முன்பு மாரியப்பனுக்கும், கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
- நேற்று மாலை கணேசன் கடையில் இருக்கும் போது, அங்கு வந்த மாரியப்பன், முருகன், முகேஷ் ஆகியோர் கணேசனை கம்பால் தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழக்காலனி, வடக்குத் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). இவர் அங்கு பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே ஜெ.ஜெ.நகரை சேர்ந்த முருகன் (37) ஹாலோபிளாக் செங்கல் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் (39), பறையன்குளம் மேலத்தெருவை சேர்ந்த முகேஷ் (22) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 1 மாதத்திற்கு முன்பு மாரியப்பனுக்கும், கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கணேசன் கடையில் இருக்கும் போது, அங்கு வந்த மாரியப்பன், முருகன், முகேஷ் ஆகியோர் கணேசனை கம்பால் தாக்கினர். இதனை தடுக்க வந்த அவரது சகோதரர் பிரகாஷையும் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் காயமடைந்த கணேசன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும், பிரகாஷ் களக்காடு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி, இதுதொடர்பாக மாரியப்பன், முகேஷை கைது செய்தனர். மேலும் முருகனை தேடி வருகின்றனர்.
- தேசிய அளவிலான மாடலிங் போட்டி ைஹதராபாத்தில் நடந்தது.
- வருகிற செப்டம்பர் 21-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார், டெய்லர். இவரது மனைவி ஜோதிமணி. இந்த தம்பதியரின் மூத்தமகன் உபநிஷாந்த். இளையமகன் திஷாந்த். சகோதரர்கள் இருவரும் மாடலிங் துறையில் சாதிக்கவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.
தேசிய அளவிலான மாடலிங் போட்டி ைஹதராபாத்தில் நடந்தது. இப்போட்டியில் 13 - 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உபநிஷாந்த், 8 - 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திஷாந்த் பங்கேற்றனர்.புதுமையான ஆண்கள் ஆடை ரகங்களை அணிந்து, பேஷன்ஷோவில் கேட்வாக் செய்தனர், நடனமாடினர்.அதன்பின் நேர்முகத்தேர்வில் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அவ்வகையில் தேசிய அளவிலான மாடலிங் போட்டியில் உபநிஷாந்த் முதலிடம், திஷாந்த் மூன்றாமிடம் பிடித்தனர்.இதனால் சர்வதேச அளவிலான மாடலிங் போட்டி வருகிற செப்டம்பர் 21-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் வாய்ப்பை உபநிஷாந்த், திஷாந்த் பெற்றுள்ளனர்.இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் டீன் சூப்பர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க விரைவில் தாய்லாந்து செல்கின்றனர்.சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ள மாடலிங் சகோதரர்களை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டினார்.
- தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது.
- விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. கிரிக்கெட் போட்டியில் 70 அணிகள் பங்கேற்றன. போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.
புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காஞ்சிபுரம் ரோஸ் பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை ரேசிங் காய்ஸ் அணிக்கு 2-ம் பரிசும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் வேலூர் ஆற்காடு யங்ஸ்டர்ஸ் அணிக்கு 3-ம் பரிசும், கோப்பையும் வழங்கினர்.
புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. துணைத் தலைவர் மலர்மன்னன் புதுவை 11 பிளாஸ்டர் அணிக்கு 4-ம் பரிசும், தொழிலதிபர் ஜெயக்குமார் புதுவை பாசிட்டிவ் எனர்ஜி அணிக்கு 5-ம் பரிசும் வழங்கினர்.
விழாவில் புதுவை பல்கலைக்கழகம் கம்யூனிட்டி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஸ்வரி, புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் இளையராஜா, ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞான சேகரன், தமிழ்ச்செல்வன், ஜான்சன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
- 3 பேரும் சமாதானமாகாததால், தனது அண்ணனையும், தம்பியையும் கிருஷ்ண வேணி கொலை செய்ய திட்டமிட்டார்.
- கிருஷ்ணவேணி, கடந்த டிசம்பர் 10-ந்தேதி கோபிகிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார்.
திருமலை:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் நகரிகல்லு யானாடி காலனியை சேர்ந்தவர் பவுலிராஜூ. இவர் அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கோபிகிருஷ்ணா, பொல்லப்பள்ளி மண்டலம், பந்தலமோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். மகள் கிருஷ்ணவேணி, இளைய மகன் துர்காராம கிருஷ்ணா ஆகியோரும் திருமணம் முடிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், பவுலி ராஜூன் 2 மகன் மற்றும் ஒரு மகள் ஆகிய மூவரும் தங்களது துணையுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர்களை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பவுலிராஜூ உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததால் பிள்ளைகள் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பவுலிராஜூ அரசு ஆசிரியர் என்பதாலும், அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய செட்டில்மெண்ட் பணம் யாருக்கு என 3 பேர் இடையே வாக்குவாதம் நடந்தது.
3 பேரும் சமாதானமாகாததால், தனது அண்ணனையும், தம்பியையும் கிருஷ்ண வேணி கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி கிருஷ்ணவேணி, கடந்த டிசம்பர் 10-ந்தேதி கோபிகிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார். அதன்பின்னர் தனது துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் அவரது தம்பியை நவம்பர் 26-ந்தேதி அன்று அங்குள்ள ஆற்று கால்வாள்ளி தள்ளி கொன்றார். இருவரது உடல்களும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இந்த கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணவேனி தனி ஆளாக கொலை செய்திருக்க முடியாது என்பதால் அவருடன் பழகி வந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள்
- திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும்
பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஓர் நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், "நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது" என்று தெரிவித்தார்.
- இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
- இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் தந்தையின் உடலை இரண்டாக வெட்டி தனித்தனியே இறுதிச்சடங்கை நடந்த மகன்கள் சண்டையிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது இளைய மகன் தேஷ்ராஜுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் வெளியூரில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக்கிழமை ) உயிரிழந்தார்.
இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார். மூத்த மகன் என்ற அடிப்படையில் தந்தையின் இறுதிச் சடங்களை தான்தான் செய்வேன் என தம்பியிடம் கிஷன் கூறினார். ஆனால் தம்பியோ தானே இறுதிச் சடங்கு செய்வேன் என அடம்பிடித்தார். இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.
ஏற்கனவே மதுபோதையில் வந்திருந்த அண்ணன் கிஷன், தந்தையின் உடலை வெட்டி அதில் பாதியை தான் இறுதிச் சடங்கு செய்ய தர வேண்டும் என்றும் மீதி பாதி உடலை வைத்து தம்பியை இறுதிச் சடங்கு செய்துகொள்ளுமாறும் தகராறு செய்யத்தொடங்கினார்.
சகோதரர்களின் சண்டையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இளைய மகன் தேஷ்ராஜ் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.
- அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
- இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார்
மகாராஷ்டிராவில், 300 ரூபாய் மதிப்புள்ள டி-சர்ட்டால் ஏற்பட்ட தகராறில், சகோதரர்கள் இருவர் தங்கள் நண்பரைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாக்பூரில் உள்ள சாந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
ஆனால் அது தனக்கு பொருந்தவில்லை என கூறி தனது நண்பன் சுபம் -இடம் நேற்று முன் தினம் [ஞாயிற்றுக்கிழமை] விற்க முயன்றுள்ளார். ஆனால் ரூ. 300 கொடுத்து அதை சுபம் வாங்க மறுத்துள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் டி-சர்ட்டுக்கான ரூ.300 பணத்தை அக்ஷய் மீது சுபம் தூக்கி வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய் மற்றும் அவரது அண்ணன் இருவரும் சேர்ந்து சுபம் உடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு சகோதரர்களும் குடிபோதையில் இருந்ததை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இருவருக்கும் குற்றப் பின்னணி இருப்பதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுபமின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சிலோன்காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), இவரது தம்பி சிவசக்தி (22). அண்ணன், தம்பி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கால்நடைகள் வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சிவசக்தி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிரபு வளர்த்து வரும் பூனை மீது சிவசக்தியின் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் சிவசக்தி மற்றும் மணிகண்டனை குத்தினார். இதில் காயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தன்னை மணிகண்டன் மற்றும் பிரபு தாக்கியதாக பிரபுவும் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






