search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூத்துக்குடியில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து

    தூத்துக்குடியில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி சிலோன்காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), இவரது தம்பி சிவசக்தி (22). அண்ணன், தம்பி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த  பிரபு என்பவருக்கும் கால்நடைகள் வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சிவசக்தி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிரபு வளர்த்து வரும் பூனை மீது சிவசக்தியின் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் சிவசக்தி மற்றும் மணிகண்டனை குத்தினார். இதில் காயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தன்னை மணிகண்டன் மற்றும் பிரபு தாக்கியதாக பிரபுவும் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×