என் மலர்
நீங்கள் தேடியது "attacked"
- ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம் எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.
பைக்கில் கஞ்சா போதையில் வரும் சிறார்கள், லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன்களை பறித்து செல்வதாக கூறிய ஓட்டுநர்கள், ஜி-பே பாஸ்வேர்டையும் வாங்கி சென்று பணத்தை திருடுவதாக தெரிவித்தனர்.
ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரில் சென்ற என்ஜினீயரை கும்பல் பட்டா கத்தியால் தாக்கியது.
- மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). மஸ்கட் நாட்டில் பொறியாளராக உள்ளார்.
இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமார் ஆண்டுக்கு 2 முறை மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு இவர் மதுரை வந்திருந்தார். மகனை பள்ளியில் விடுவதற்காக, செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சர்வேயர் காலனிக்கு வந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் கும்பல் பட்டாக்கத்திகளுடன் அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்தவரை உறவினர்கள் மீட்டு, மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் கூறுகையில், "எனக்கும் சகோதரர் நவநீதகிருஷ்ணனுக்கும் முன் விரோதம் உள்ளது. அவர் என்னை ஆள் வைத்து தாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் செந்தில்குமாருடன் தொடர்பு உடைய சிலரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாரின் மனைவி சிலரிடம் ரகசியமாக பேசி வருவது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி கடத்தி தாக்கப்பட்டார்
- காரில் மர்மநபர்கள் துாக்கி சென்றனர்.
கரூர்:
கரூர் அருகே கோதூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). இவர் கரூர் மாவட்ட அ.தி.மு.க., ஐ.டி. விங்க் (தகவல் தொழில்நுட்ப அணி) இணை செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு, 8.00 மணியளவில் கரூர்-ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரு காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சிவராஜை சராமரியாக தாக்கி குண்டுக்கட்டாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.இதுபற்றிய தகவலறிந்த அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சக்திவேல், சேரன் பழனிசாமி, சுரேஷ், தினேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, பாசறை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் கரூர், கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் முனியப்பன் கோவில் அருகே கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடத்தப்பட்ட நபர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். கடத்திய நபர்கள் அவரை வேறொரு இடத்தில் விட்டு விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் சிவராஜை, ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் மறியலில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க.வினர் அங்கு விரைந்து சென்றனர்.தன்னை தி.மு.க.வினர் கடத்தி சென்று, சரமாரியாக தாக்கியதாக சிவராஜ் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் போலீசாரிடம் கடத்திய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.போலீசார் பேசிக்கொண்டு இருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. பிறகு ஏ.டி.எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. தேவராஜ் உள்ளிட்ட போலீசார் சிவராஜை தாக்கியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக கரூர்-ஈரோடு, கரூர்-கோவை சாலைகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுயைமான குளிரில் பலர் பாதிக்கப்பட்டனர். கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் திருவிகா மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் தேர்தல் முடிந்த பின்னர் அவரை விடுவித்தனர். அவரும் தன்னை தி.மு.க.வினர் கடத்திச் சென்றதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகியை கடத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 23 வயது மாணவி. தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடையை சேர்ந்தவர் 23 வயது மாணவி. இவர் நவஇந்தியாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவி பள்ளியில் படிக்கும் போது வாலிபர் ஒருவருட ன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் வாலிபரின் நடவடிக்கைகள் மாணவிக்கு பிடிக்காமல் போனது. இதனால் அவர் வாலிபரை காதலிப்பதை நிறுத்தினார். மேலும் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு ராமநாதபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் வந்தார்.
அவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று அவரிடம் பேச முயன்றார். ஆனால் மாணவி பேசாமல் நடந்து சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகள் பேசி மாணவியை தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து மாணவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குற்றவாளிகள் மீது போலீசார் மென்மையான போக்கை கையாண்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர்.
- பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக சென்றபோது அங்குள்ள ஊழியருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நபர் தனது ஆதரவாளர்களுடன் வந்து சுற்றுலா வந்த டெல்லி குடும்பத்தினரை சரமாரியாக தாக்கி உள்ளனர். வாள் மற்றும் கத்திகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை அடையாளம் கண்டு கைது செயதுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே குற்றவாளிகள் மீது போலீசார் மென்மையான போக்கை கையாண்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தாக்குதல் வழக்கு வேறு ஒரு அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரிசார்ட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சிகரமானது மற்றும் சகித்துக்கொள்ளமுடியாதது என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.
மதுரை
மதுரை நரியம்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 53), விவசாயி. இதே பகுதியில் கணேஷ்குமார் (31) என்பவரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நரியம்பட்டி கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது. அப்போது பணம் விவகாரம் தொடர்பாக சுகுமாறன்- கணேஷ்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சுகுமாறன் நரியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து கணேஷ்குமார் கல்லால் சுகுமாறனை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதுதொடர்பாக சுகுமாறன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.
- தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாக ஹமித் கான் கூறி உள்ளார்.
- எதிர்தரப்பில் பெண்ணின் தந்தை பீர்பால் கான் என்பவர் மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் ஹமித் கான் என்ற வாலிபரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் கும்பலாக வந்து கடத்திச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவரது மூக்கையும் அறுத்துள்ளனர். திருமணத்தை ஏற்காததால் மனைவியின் குடும்பத்தினர் இந்த கொடூர தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹமித் கான், கெகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னையும் தன் மனைவி ரஜியாவையும் வீட்டில் இருந்து ஒரு வாகனத்தில் கடத்தி சென்றதாகவும், பின்னர் தன்னை மட்டும் வேறு வாகனத்தில் கடத்திச் சென்று நாகவுர் மாவட்டம் மரோத் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகில் வைத்து கடுமையாக தாக்கி தனது மூக்கை அறுத்ததாகவும் ஹமித் கான் கூறி உள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறி உள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஜியாவின் தந்தை பீர்பால் கான் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் எதிர்தரப்பில் பீர்பால் கான் தன் மகளை காணவில்லை என்று மரோத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக போலீசாரிடம் விசாரணையின்போது கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
- வாலிபரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
- தப்பி ஓடிய ஹரிபாபு என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஆத்திகுளம், அங்கையற்கண்ணி காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம் (வயது 24). இவரது தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அதற்கான இறுதிசடங்குகளை கே.புதூர், பாண்டியன் நகரை சேர்ந்த அந்தோணி (52) என்பவர் செய்தார்.
பின்னர் அவர் பேசியதற்கு மேல் கூடுதலாக பணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவருக்கும், ஸ்ரீ விஷ்ணு ராமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி தனது மகன்களுடன் சேர்ந்து விஷ்ணுராமை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் ஸ்ரீவிஷ்ணுராம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து அந்தோணி மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ், 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிபாபு என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.
- வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஜன்னலை உடைத்து சூறையாடினர்.
- 9 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது48). இவர் பா.ஜனதா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பனைமரத்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தென்னரசு போலீசாருக்கு தகவல் அளித்தார் . இதன்காரணமாக அவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு எஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று தென்னரசு வீட்டுக்குள் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டு ஜன்னலை உடைத்து சூறையாடினர். இதனை தட்டிக்கேட்ட தென்னரசுவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த தென்னரசுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதீய ஜனதாவை சேர்ந்தவரை தாக்கிய பனைமரத்தூர் அகஸ்தியர் தோட்டத்தை சேர்ந்த அரவிந்த் (21), அவரது தம்பி கிஷோர் (19), காமராஜர் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (20), முனீஸ்வரன் தெருவை சேர்ந்த விஜயகுமார் (19), 17 வயது சிறுவன், தெலுங்குபாளையத்தை சேர்ந்த பத்மா (53), அம்பிகா (45), ரோகிணி (41), செல்வபுரத்தை சேர்ந்த நந்தினி (42) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பது தெரியவந்தது.
- மின்தடை தொடர்பான பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாக தகவல்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவரை கடுமையாக தாக்கி செருப்பை நாக்கால் நக்க வைத்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில் ஒரு நபர், மரக்கட்டிலில் அமர்ந்தபடி காலை நீட்ட, அவரது செருப்பை ஒரு வாலிபர் நாக்கால் நக்கி சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. அத்துடன், அந்த வாலிபர் காதை பிடித்துக்கொண்டு, தான் செய்தது தவறுதான் என கூறி தோப்புக் கரணம் போடுகிறார். இதேபோல் மற்றொரு வீடியோவில் அந்த நபர், வாலிபரின் கையை முறுக்கி கீழே தள்ளி கடுமையாக தாக்குவது பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் சோனாபத்ரா மாவட்டத்தில் நடந்துள்ளது. வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் மின்சாரத்துறையின் லைன்மேன் தேஜ்பாலி சிங் என்பதும், பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேஜ்பாலி சிங் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
ராஜேந்திராவின் தாய் மாமன் வீட்டில் மின்தடை ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான 3 ேபருடன் நாகப்பனூர் ரோடு வழியாக கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த சேலிய மேடு சின்னப்பேட் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது22). டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான 3 ேபருடன் நாகப்பனூர் ரோடு வழியாக கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.
பிறகு கிருமாம்பாக்கத்தில் உள்ள பானி பூரி கடையில் சாப்பிடுவதற்காக வந்த போது கிருமாம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்குள் நீங்கள் எதற்கு வந்தீர்கள் என கேட்டு குடிபோதையில் கையாளும் கல்லாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் காய மடைந்த 4 பேரும் அருகில் உள்ளஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
- ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார்.
- 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் நியூட்ரிசன் வேலை செய்து வருகிறார். நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன், மர்ம நபர் கூறிய ராயலூர் என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர். ராஜேந்திரன் வலியால் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ராஜேந்திரன் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






