search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attacked"

    • பஸ் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது பின் இருக்கையில் அரசு பஸ் டிரைவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • குடிபோதையில் இருந்த டிரைவர் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலை யத்தில் இன்று காலை நத்தம் ரேக்கில் காரைக்குடி செல்வதற்காக அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவராக செல்வம் என்பவரும், கண்டக்டராக குருசாமி என்பவரும் இருந்தனர். பஸ் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது பின் இருக்கையில் அரசு பஸ் டிரைவரான சரவணன் என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது கண்டெக்டர் குருசாமி பஸ் புறப்பட உள்ளதால் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் கண்டக்டர் குருசாமியை பயங்கரமாக தாக்கினார். மேலும் இதை தடுக்க வந்த பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சரவணன் தாக்கியதில் குருசாமியின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. உடனே அங்கிருந்த பணிமனை அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றார்.

    அப்போதும் ஆத்திரம் அடங்காமல் சரவணன் அவரை விரட்டிச் சென்று தாக்க முயன்றார். இதனால் பஸ்நிலையத்தில் பரபர ப்பான சூழல் உருவானது. இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு வந்து சரவணனை விசாரனைக்காக அழைத்துச் சென்றனர். அவர் குடிபோதையில் இருந்ததால் இந்த தாக்குதலில் ஈடுபட்ட தாக போலீசார் தெரி வித்தனர்.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி பைக்கை ஒரு கும்பல் பறித்து சென்றனர்.
    • புகாரின்பேரில் போலீசார் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் வட கரையை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது27). இவர் தேவதானப்பட்டி அருகே எழுவனம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து எழுவனம்பட்டி- செங்குளத்துப்பட்டி சாலையில் பன்றி பண்ைண அருகே வந்துகொண்டி ருந்தபோது ஒருவாலிபர் அவரை தடுத்து நிறுத்தினார். மேலும் பைக் சாவியை பறித்துக் கொண்டார்.

    இதனைத் ெதாடர்ந்து மேலும் 3 பேர் அவரை சுற்றி வளைத்து பணம் கேட்டு மிரட்டினர். அதில் ஒருவர் கத்தியை எடுத்து குத்த முயன்றதால் பயந்த சவுந்தரபாண்டியன் பைக்கை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் பைக்கை திருடிச் சென்றனர். தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் கண்ணன், மாதவன் ஆகியோரிடம் இது குறித்து எடுத்து கூறி 3 பேரும் பன்றி பண்ணை பகுதியில் வந்து பார்த்தனர். ஆனால் மிரட்டிய நபர்கள் அங்கு இல்லை. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் மற்றும் கும்பலை தேடி வருகின்ற னர்.

    • மன்னார்குடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
    • அந்த கும்பல் சரவணன் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் சிங்கப்பூரில் கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சிங்கப்பூரில் உள்ள அரசு கட்டிடங்களை கான்ட்ராக்ட் எடுத்து கட்டுமான பணிகளையும் சரவணன் செய்து வருகிறார். அங்கு மன்னார்குடியை சேர்ந்த குருநாதன் மகன் சரவணன் என்பவர் தமிழக வேலை ஆட்களை வைத்து சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பணி செய்து வருகிறார்.

    இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டத்தைச் சேர்ந்த சரவணன் மன்னார்குடியைச் சேர்ந்த சரவணனுக்கு சென்ட்ரிங் காண்ட்ராக்டர் வேலையை கொடுத்து வந்தார்.

    இந்நிலையில் மன்னார்குடி சரவணன் தமிழகத்திலிருந்து வேலைக்கு ஆட்கள் அதிகம் வந்திருப்பதால் சென்ட்ரிங் ஒப்பந்தத்துடன் கட்டிடத்தின் தரை அமைக்கும் பணியையும் அவரிடம் கேட்டு பணி செய்து வந்துள்ளார்.

    ஒரு அரசு கட்டிடம் கட்டுமானத்தில் மன்னார்குடியை சேர்ந்த சரவணன் தரம் இல்லாமல் பணியை செய்ததால் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சரவணனுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் தனக்கு ஆன நஷ்டத்தை வழங்க வேண்டுமென மன்னார்குடி சரவணனுக்கு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சரவணன் சிங்கப்பூர் வக்கீல் வழியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த சிங்கப்பூரில் இருக்கும் மன்னார்குடி சரவணன் தனது மைத்துனர் மகாதேவன் என்பவர் மூலம் ஒரு காரில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள சரவணன் வீட்டுக்கு 5 பேர் வந்தனர். அப்போது மகா தேவனுடன் வந்த ஒருவர் போலீஸ்காரர் எனக் கூறி சரவணன் வீட்டுக்குள் வந்து பேசி கொண்டு இருந்த போது மகாதேவன் மற்றும் போலீஸ்காரர் என கூறியவர் இருவரும் சேர்ந்து சரவணனை சரமாரியாக தாக்கினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி உமா மகேஸ்வரியையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர் அந்த கும்பல் சரவணன் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து க் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதனைப் பார்த்து சரவணனும் அவரது மனைவியும் வலி தாங்காமல் கதறிய பொழுது அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த கும்பலை விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டது. கும்பல் தாக்கியதில் சரவணனின் முகம், கை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. பின்னர் அவரையும் அவரது மனைவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தம்பதியை தாக்கிய சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மன்னார்குடி கும்பல் மீது வீடு புகுந்து தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தல், செல்போனை பறித்து செல்லுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மகாதேவன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

    • 2 குடும்பத்தில் இருக்கும் நடக்கும் பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    சென்னை வில்லிவாக்கம் ராஜா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் மகன் தினேஷ். இவருக்கும் காலப்பட்டு சாந்தி நகரை சேர்ந்த லோகநாதன் மகளுக்கும் திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தவுடன் தினேசின் மனைவி இறந்துவிட்டார். இதனால் தினேஷ் குடும்பத்திற்கும் லோகநாதன் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 2 குடும்பத்தில் இருக்கும் நடக்கும் பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இதற்கிடையில் கடந்த3 ஆண்டுகளாக குழந்தை லோகநாதன் பராமரிப்பில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தினேஷ் தனது நண்பர்களுடன் நேற்று காலாப்பட்டு வந்தார். அங்குள்ள முருகன் கோவில் வாசலில் லோகநாதன் குழந்தையை தூக்கி வர சொன்ன தினேஷ் சிறிது நேரம் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தார்.

    பின்னர் குழந்தையை தரச் சொல்லி லோகநாதன் கேட்கவே தினேசுக்கும் லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து குழந்தையை அங்கிருந்து தூக்கிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பாட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரனை நடத்தி தினேஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார்.
    • 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் நியூட்ரிசன் வேலை செய்து வருகிறார். நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன், மர்ம நபர் கூறிய ராயலூர் என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர். ராஜேந்திரன் வலியால் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ராஜேந்திரன் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான 3 ேபருடன் நாகப்பனூர் ரோடு வழியாக கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அடுத்த சேலிய மேடு சின்னப்பேட் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது22). டிரைவர். இவர்  மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான 3 ேபருடன் நாகப்பனூர் ரோடு வழியாக கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.

    பிறகு கிருமாம்பாக்கத்தில் உள்ள பானி பூரி கடையில் சாப்பிடுவதற்காக வந்த போது கிருமாம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்குள் நீங்கள் எதற்கு வந்தீர்கள் என கேட்டு குடிபோதையில் கையாளும் கல்லாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் காய மடைந்த 4 பேரும் அருகில் உள்ளஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பது தெரியவந்தது.
    • மின்தடை தொடர்பான பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாக தகவல்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவரை கடுமையாக தாக்கி செருப்பை நாக்கால் நக்க வைத்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    அந்த வீடியோவில் ஒரு நபர், மரக்கட்டிலில் அமர்ந்தபடி காலை நீட்ட, அவரது செருப்பை ஒரு வாலிபர் நாக்கால் நக்கி சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. அத்துடன், அந்த வாலிபர் காதை பிடித்துக்கொண்டு, தான் செய்தது தவறுதான் என கூறி தோப்புக் கரணம் போடுகிறார். இதேபோல் மற்றொரு வீடியோவில் அந்த நபர், வாலிபரின் கையை முறுக்கி கீழே தள்ளி கடுமையாக தாக்குவது பதிவாகியிருந்தது.

    இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் சோனாபத்ரா மாவட்டத்தில் நடந்துள்ளது. வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் மின்சாரத்துறையின் லைன்மேன் தேஜ்பாலி சிங் என்பதும், பாதிக்கப்பட்ட நபர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேஜ்பாலி சிங் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

    ராஜேந்திராவின் தாய் மாமன் வீட்டில் மின்தடை ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக பிரச்சனையில் லைன்மேன் ராஜேந்திராவை தாக்கியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஜன்னலை உடைத்து சூறையாடினர்.
    • 9 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது48). இவர் பா.ஜனதா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    பனைமரத்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தென்னரசு போலீசாருக்கு தகவல் அளித்தார் . இதன்காரணமாக அவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு எஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று தென்னரசு வீட்டுக்குள் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டு ஜன்னலை உடைத்து சூறையாடினர். இதனை தட்டிக்கேட்ட தென்னரசுவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த தென்னரசுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதீய ஜனதாவை சேர்ந்தவரை தாக்கிய பனைமரத்தூர் அகஸ்தியர் தோட்டத்தை சேர்ந்த அரவிந்த் (21), அவரது தம்பி கிஷோர் (19), காமராஜர் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (20), முனீஸ்வரன் தெருவை சேர்ந்த விஜயகுமார் (19), 17 வயது சிறுவன், தெலுங்குபாளையத்தை சேர்ந்த பத்மா (53), அம்பிகா (45), ரோகிணி (41), செல்வபுரத்தை சேர்ந்த நந்தினி (42) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வாலிபரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தப்பி ஓடிய ஹரிபாபு என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆத்திகுளம், அங்கையற்கண்ணி காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம் (வயது 24). இவரது தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அதற்கான இறுதிசடங்குகளை கே.புதூர், பாண்டியன் நகரை சேர்ந்த அந்தோணி (52) என்பவர் செய்தார்.

    பின்னர் அவர் பேசியதற்கு மேல் கூடுதலாக பணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவருக்கும், ஸ்ரீ விஷ்ணு ராமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி தனது மகன்களுடன் சேர்ந்து விஷ்ணுராமை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் ஸ்ரீவிஷ்ணுராம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து அந்தோணி மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ், 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிபாபு என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆடு விற்ற தகராறில் தாக்குதல்
    • களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் வேலவன்குடியிருப்பை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). விவசாயி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு சொந்தமான ஆடு, மேலதேவநல்லூரை சேர்ந்த ரத்தினபாண்டி வீட்டிற்கு சென்று விட்டது.

    ரத்தின பாண்டி அந்த ஆட்டை விற்பனை செய்து விட்டார்.

    இதையறிந்த ராம கிருஷ்ணன் அவரிடம் சென்று தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று ராமகிருஷ்ணன் மேலதேவநல்லூரில் உள்ள தனது வயலில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ரத்தினபாண்டி மற்றும் அவரது சகோதரர் அவதூறாக பேசி, மண்வெட்டி கனையால் தாக்கினர். கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    இதில் காயம் அடைந்த ராமகிருஷ்ணன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவையில் பிரியாணி கடையை சூறையாடி வியாபாரியை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையம் சுபாஷ்சந்திரபோஸ் வீதியை சேர்ந்தவர் வேலு(43). இவர் புதுவை காமராஜர் சாலையில் பல ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வேலு பிரியாணி கடையில் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு கடையில் வேலை பார்க்கும் மணி என்ற கணேசன், மோகன், புருசோத்தம்மன் மற்றும்  அவர்களது நண்பர்கள் சிலர் பிரியாணி கடைக்கு வந்தனர். அவர்கள் நாங்கள் பிறந்தநாள் விழா கொண்டாட உள்ளோம். 

    எனவே பிரியாணி வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு வேலு சிறிது நேரம்  பொறுத்திருங்கள். பிரியாணி தயார் செய்து பார்சல் கட்டி தருகிறேன் என்றார். ஆனால் அவர்கள் உடனடியாக எங்களுக்கு பிரியாணி வேண்டும் என்று வேலுவிடம் தகராறு செய்தனர். 

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மோகன் என்பவர் அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து வேலுவை தாக்கினார்.

    மேலும் மணி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவை குத்தி கொலை செய்து விடுவதாக  மிரட்டினார்.
    அதோடு அவர்களுடன் வந்தவர்கள் பிரியாணிக்கடையில் இருந்து தட்டுக்கள் மற்றும் அடுப்பை அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். நாற்காலிகளை தூக்கி வீசி பிரியாணிக் கடையை சூறையாடியதுடன் மீண்டும் வேலுவை தாக்கினர்.

    இதனால் வலி தாங்காமல் வேலு அலறவே பிரியாணிக்கடையில் இருந்தவர்களும் மற்ற கடைக்காரர்களும் திரண்டு வந்தனர்.  இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வேலு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாணிக் கடையை சூறையாடி வியாபாரியை தாக்கிய கும்பலை தேடி வருகிறார்கள்.
    தூத்துக்குடியில் அண்ணன்- தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி சிலோன்காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), இவரது தம்பி சிவசக்தி (22). அண்ணன், தம்பி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த  பிரபு என்பவருக்கும் கால்நடைகள் வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சிவசக்தி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிரபு வளர்த்து வரும் பூனை மீது சிவசக்தியின் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் சிவசக்தி மற்றும் மணிகண்டனை குத்தினார். இதில் காயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தன்னை மணிகண்டன் மற்றும் பிரபு தாக்கியதாக பிரபுவும் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×