என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry drivers"

    • பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது.
    • பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள்.

    அமெரிக்காவில் இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி டிரைவர் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதையடுத்து வெளிநாடுகளை சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்தார்.

    பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது. பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி லாரி டிரைவர்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க லாரித் தொழிலில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் டிரைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கடலூர் மாவட்டம் எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய இடங்களில் லாரி ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    பைக்கில் கஞ்சா போதையில் வரும் சிறார்கள், லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன்களை பறித்து செல்வதாக கூறிய ஓட்டுநர்கள், ஜி-பே பாஸ்வேர்டையும் வாங்கி சென்று பணத்தை திருடுவதாக தெரிவித்தனர்.

    ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க, லாரி டிரைவர்கள் சாலை விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், லாரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். இதில் மண்டல போக்குவரத்து அலுவலர் கலந்து கொண்டார். போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க, லாரி டிரைவர்கள் சாலை விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். டிரைவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும். ஆர்.சி. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எடைக்கு குறைவாகவே லாரியில் பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர்கள் சாலைக்குரிய வேகத்தை கடைபிடித்து வாகனத்தை இயக்க வேண்டும்.

    சிமெண்டு ஆலை லாரிகள் கட்டாயமாக எந்த வாகனத்தையும் முந்தி செல்லக்கூடாது. அனைத்து சிமெண்டு ஆலை லாரிகளிலும் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வெண்டும். பள்ளி, கல்லூரிகள் உள்ள இடத்தில் கவனமாகவும், குறைவான வேகத்திலும் செல்ல வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமலும் வாகனத்தை இயக்கக்கூடாது. மது அருந்தி விட்டு, செல்போன் பேசிக்கொண்டு கட்டாயமாக வாகனத்தை இயக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு எங்கும் லாரியை நிறுத்தக்கூடாது, என்றார். முடிவில் லாரி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் சாலை விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை உருவாக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். 
    ×