search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry drivers"

    மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க, லாரி டிரைவர்கள் சாலை விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், லாரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். இதில் மண்டல போக்குவரத்து அலுவலர் கலந்து கொண்டார். போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க, லாரி டிரைவர்கள் சாலை விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். டிரைவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும். ஆர்.சி. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எடைக்கு குறைவாகவே லாரியில் பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர்கள் சாலைக்குரிய வேகத்தை கடைபிடித்து வாகனத்தை இயக்க வேண்டும்.

    சிமெண்டு ஆலை லாரிகள் கட்டாயமாக எந்த வாகனத்தையும் முந்தி செல்லக்கூடாது. அனைத்து சிமெண்டு ஆலை லாரிகளிலும் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வெண்டும். பள்ளி, கல்லூரிகள் உள்ள இடத்தில் கவனமாகவும், குறைவான வேகத்திலும் செல்ல வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமலும் வாகனத்தை இயக்கக்கூடாது. மது அருந்தி விட்டு, செல்போன் பேசிக்கொண்டு கட்டாயமாக வாகனத்தை இயக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு எங்கும் லாரியை நிறுத்தக்கூடாது, என்றார். முடிவில் லாரி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் சாலை விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை உருவாக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். 
    ×