என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி டிரைவர்கள்"

    • பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது.
    • பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள்.

    அமெரிக்காவில் இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி டிரைவர் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதையடுத்து வெளிநாடுகளை சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்தார்.

    பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது. பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி லாரி டிரைவர்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க லாரித் தொழிலில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் டிரைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடையாளம் தெரியாத வாலிபர்கள் திடீரென்று லாரிக்குள் ஏறி மணிமாறன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
    • 3 மோட்டார் சைக்கிள் வந்த 9 வாலிபர்கள் காளிமுத்துவை வழிமறித்தனர்.

    கடலூர்:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனம் செல்வதற்கு அனுமதித்தனர்.

    இதனை தொடர்ந்து தினந்தோறும் 24 மணி நேரமும் ஏராளமான லாரி, பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆலஞ்சேரியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 34) லாரி டிரைவர். இவர் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறைக்கு எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தார் .

    நள்ளிரவு நேரத்தில் தூக்கம் வந்ததால் கடலூர் அடுத்த பெரியப்பட்டு பகுதியில் லாரியை ஓரமாக நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் திடீரென்று லாரிக்குள் ஏறி மணிமாறன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

    தூக்கத்தில் இருந்த மணிமாறனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தார். அக்கும்பல் செல்போன், பணம் மற்றும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என மணிமாறனை மிரட்டினர். அப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறிய போது திடீரென்று சரமாரியாக மணிமாறன் தலை மற்றும் உடலில் மர்ம நபர்கள் வெட்டினார்கள். இதில் மணிமாறன் அலறி துடித்து கத்திக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வாகனங்கள் வந்தவுடன் மர்மகும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.

    பின்னர் மற்ற வாகனத்தில் இருந்தவர்கள் மணிமாறனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ஒதவந்தான்குடியை சேர்ந்தவர் பிரபு (வயது 45). நேற்று மாலை திண்டிவனத்தில் இருந்து சீர்காழிக்கு எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது பெரியப்பட்டு பகுதியில் அவரும் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் லாரிக்குள் ஏறி பிரபுவிடம் இருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி கொண்டு இறங்கியபோது சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு உடனடியாக எழுந்து பார்த்தபோது அவசர அவசரமாக இறங்கி சாலையில் ஓடும்போது அவ்வழியாக வந்த மற்றொரு லாரி டிரைவர் இவர்களை பார்த்து லாரி மூலம் துரத்தினர்.

    அப்போது அதிலிருந்து ஒரு வாலிபர் தன்னிடம் இருந்து கத்தியை எடுத்து வெட்ட மீண்டும் வந்தபோது லாரி டிரைவர் விரட்டியதால் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். ஆனால் இவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து பிரபு அவசர அவசரமாக அங்கிருந்து லாரி மூலம் தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் காளிமுத்து(50). இவர் தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள் வந்த 9 வாலிபர்கள் காளிமுத்துவை வழிமறித்தனர். பின்னர் அவரிடமிருந்து செல்போன், 100 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொண்டிருந்தபோது அதிலிருந்து ஒரு வாலிபர் சரமாரியாக காளிமுத்து தலை மற்றும் உடலில் வெட்டினார்.

    இதில் மயக்கம் அடைந்த காளிமுத்து சாலையில் விழுந்தார். அப்போது ஒரு வாலிபர் சதீஷ் என்ற பெயரை அழைத்து இவரை விடக்கூடாது என கூறிய நிலையில் அவ்வழியாக வந்த வாகனங்களை பார்த்து அங்கிருந்து தப்பித்து சென்றனர். 3 பேரையும் கத்தியால் வெட்டிய கும்பல் கடும் போதையில் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் மணிமாறன் மற்றும் காளிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் ஒரே இரவில் போதை ஆசாமிகள் டிரைவர்களை சரமாரியாக வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இன்றி தற்போது விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலை புதிதாக அமைக்கப்பட்டு தற்போது ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் மாலை முதல் காலை வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு போதை கும்பலை பிடித்து திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலையில் லாரி டிரைவர்களை வெட்டி பணம் பறித்த சம்பவத்தால் மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

    • மர்ம நபர்கள் லாரி டிரைவர்களை கத்தி முனையில் மிரட்டியும் தாக்கியும் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
    • கடந்த இரண்டு வருடமாக சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் லோடு ஏற்றி செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியை சுற்றியுள்ள அத்திப்பட்டு, வல்லூர், கொண்டக்கரை, காட்டுப் பள்ளி, வடசென்னை, உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும், அனல் மின் நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, இந்தியன் ஆயில் நிறுவனம், துறைமுகம், நிலக்கரி முனையம் தனியார் தொழிற் சாலைகள், நிறுவனங்கள் உள்ளன.

    இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணலி சாலை, வண்டலூர் சாலை, பொன்னேரி சாலை, எண்ணூர் கடற்கரை சாலை வழியாக பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலைகளில், நீண்ட தூரத்தில் இருந்து வரும் கனரக வாகனங்களை சாலையின் ஓரத்தில் டிரைவர்கள் நிறுத்தி சமையல் செய்து சாப்பிட்டும், ஓய்வெடுத்தும் செல்வது வழக்கம். இவ்வாறு சாலையின் ஓரத்தில் நிற்கும் லாரிகளை குறிவைத்து மர்ம நபர்கள் லாரி டிரைவர்களை கத்தி முனையில் மிரட்டியும் தாக்கியும் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் அத்திப்பட்டு நிலக்கரி முனையத்தில், லோடுமேன் ஆக வேலை செய்து வரும் எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் இரவு வேலை முடித்துவிட்டு நடந்து வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்றதால் பாலசந்தரை கொள்ளை கும்பல் கத்தியால் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர் இதனால் மீஞ்சூரை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வந்து செல்லவே லாரிடிரைவர்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறும்போது, மீஞ்சூரை சுற்றி உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை குறிவைத்து அடிக்கடி நடைபெறும் கொள்ளை சம்பவத்தால் லாரி டிரைவர்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. காமராஜர் துறை முக சாலையில் இருந்து, நிலக்கரி முனையத்திற்கு 1.5 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை பயன்படுத்தி லாரிகள் சென்று வருகின்றன.

    கடந்த இரண்டு வருடமாக சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் லோடு ஏற்றி செல்ல முடியாமல் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை என்றனர்.

    ×