search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது
    X

    வாலிபரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது

    • வாலிபரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தப்பி ஓடிய ஹரிபாபு என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆத்திகுளம், அங்கையற்கண்ணி காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஸ்ரீ விஷ்ணு ராம் (வயது 24). இவரது தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அதற்கான இறுதிசடங்குகளை கே.புதூர், பாண்டியன் நகரை சேர்ந்த அந்தோணி (52) என்பவர் செய்தார்.

    பின்னர் அவர் பேசியதற்கு மேல் கூடுதலாக பணம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவருக்கும், ஸ்ரீ விஷ்ணு ராமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி தனது மகன்களுடன் சேர்ந்து விஷ்ணுராமை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் ஸ்ரீவிஷ்ணுராம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து அந்தோணி மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ், 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிபாபு என்பவரை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×