search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பானி பூரி சாப்பிடவந்த வாலிபர்களை தாக்கி கொலை மிரட்டல்
    X

    கோப்பு படம்.

    பானி பூரி சாப்பிடவந்த வாலிபர்களை தாக்கி கொலை மிரட்டல்

    • மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான 3 ேபருடன் நாகப்பனூர் ரோடு வழியாக கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அடுத்த சேலிய மேடு சின்னப்பேட் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது22). டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களான 3 ேபருடன் நாகப்பனூர் ரோடு வழியாக கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.

    பிறகு கிருமாம்பாக்கத்தில் உள்ள பானி பூரி கடையில் சாப்பிடுவதற்காக வந்த போது கிருமாம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்குள் நீங்கள் எதற்கு வந்தீர்கள் என கேட்டு குடிபோதையில் கையாளும் கல்லாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் காய மடைந்த 4 பேரும் அருகில் உள்ளஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துரு, ராகுல், யாதேஷ், சுஜய் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×