search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் சொன்ன பாரதீய ஜனதா அலுவலக ஊழியர் மீது வீடு புகுந்து தாக்குதல்
    X

    கோவையில் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் சொன்ன பாரதீய ஜனதா அலுவலக ஊழியர் மீது வீடு புகுந்து தாக்குதல்

    • வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஜன்னலை உடைத்து சூறையாடினர்.
    • 9 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது48). இவர் பா.ஜனதா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    பனைமரத்தூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தென்னரசு போலீசாருக்கு தகவல் அளித்தார் . இதன்காரணமாக அவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு எஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று தென்னரசு வீட்டுக்குள் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டு ஜன்னலை உடைத்து சூறையாடினர். இதனை தட்டிக்கேட்ட தென்னரசுவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த தென்னரசுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதீய ஜனதாவை சேர்ந்தவரை தாக்கிய பனைமரத்தூர் அகஸ்தியர் தோட்டத்தை சேர்ந்த அரவிந்த் (21), அவரது தம்பி கிஷோர் (19), காமராஜர் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (20), முனீஸ்வரன் தெருவை சேர்ந்த விஜயகுமார் (19), 17 வயது சிறுவன், தெலுங்குபாளையத்தை சேர்ந்த பத்மா (53), அம்பிகா (45), ரோகிணி (41), செல்வபுரத்தை சேர்ந்த நந்தினி (42) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×