search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் சகோதரர்களை வாளால் வெட்டிய கும்பல்
    X

    தூத்துக்குடியில் சகோதரர்களை வாளால் வெட்டிய கும்பல்

    • தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த சகோதர்கள் 3 பேரும் தங்களது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீட்டிற்கு சென்றனர்.
    • அப்போது அப்பகுதி சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மீது கற்களை வீசியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முகமது ஆரோன் (வயது 27). இவரது சகோதரர்கள் முகமதுஹசன் (30), உசேன் (32). சகோதர்கள் 3 பேரும் தங்களது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது அப்பகுதி சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மீது கற்களை வீசியுள்ளனர். இது குறித்து முகமது ஹசன், அவர்களிடம் சென்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக அவரது சகோதரர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது அந்த கும்பல், வாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்ட னர். அங்கிருந்தவ ர்கள் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட் அன்பரசி சப்-இன்ஸ்பெ க்டர்கள் வசந்த், சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×