என் மலர்
நீங்கள் தேடியது "pornographic"
- ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டுள்ளார்.
- வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
அரியானாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது 3 தங்கைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 19 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ராகுல் பாரதியின் தொலைபேசியை ஹேக் செய்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டது விசாரணையில் தெரியவந்தது.
வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். இந்த உரையாடலில், பணம் கொடுக்கவில்லை என்றால் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிடுவேன் என்று சாஹில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகுல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் குடும்பத்தினரின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது சர்வதேச அளவில் குற்றச்செயலாக கருதப்படுகிறது.
எனவே இவ்வாறு பகிர்பவர்கள் மீது அந்தந்த நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் அதையும் மீறி குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது தொடர் கதையாக உள்ளது.
இது சம்பந்தமாக சர்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் இந்தியாவிலும் இதேபோல குழந்தைகள் ஆபாச படங்களை பலர் பகிர்ந்தது தெரிய வந்தது.

அப்போது இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட 14 மாநிலங்களை சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சர்வதேச அளவில் நெட்வொர்க் அமைத்து சமூக வலைதளங்கள் மூலமாக அவர்கள், குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோரும் இந்த குரூப்பில் இணைந்து இருந்தனர். 100 நாடுகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு இணைந்திருந்தார்கள். அவர்களும் படங்களை பகிர்ந்ததுடன் இங்கிருந்தும் படங்கள், ஆபாச வீடியோக்கள், ஆடியோக்கள், டெக்ஸ்ட் தகவல்கள் ஆகியவற்றை பெற்றிருந்தனர்.
இதற்காக 50-க்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் குரூப்கள் மற்றும் பல்வேறு சமூக வலைதள குரூப்களை அவர்கள் அமைத்து இருந்தார்கள். இதன் மூலம் படங்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து 23 வழக்குகளை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்தனர்.
அதை தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் 77 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். உள்ளூர் போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஆபாச படம் அனுப்பிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 83 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி கூறியதாவது:-
சி.பி.ஐ. சோதனை நடத்திய இடங்களில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. அவர்கள் பயன்படுத்திய மின்னணு சாதனங்கள், லேப்டாப்புகள், மொபைல் போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறு வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதள குரூப்களை உருவாக்கி அதன் மூலமாக ஆபாச படங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
இதில் வெளிநாட்டினர் தான் அதிகம் பேர் உள்ளனர். இந்தியர்களும் அதில் இடம் பெற்று இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மூலமும் ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள் தவிர மேலும் பலரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. இதுவரை இந்தியா மற்றும் 100 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் இதில் பங்கெடுத்து இருக்கிறார்கள்.
வெளிநாட்டினரை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை கேட்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்திய இடங்களில் அடையாளம் காணப்பட்ட நபர்களிடம் மீண்டும் உங்களிடம் விசாரணை நடத்துவோம் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். கைப்பற்றப்பட்ட சாதனங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
அப்போது அவர்களும் கைது செய்யப்படுவார்கள். எனவே இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்துதான் அதிகமாக குழந்தைகள் ஆபாச படங்கள் பகிரப்பட்டது தெரிய வந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் கொஞ்சலாலுன், மாவ், சாந்தவ்லி, வாரணாசி, காசிபூர், சித்தார்த்தாநகர், மொராதாபாத், நொய்டா, ஜான்சி, காசியாபாத், முசாபர்நகர் ஆகிய 11 இடங்களில் இருந்து ஆபாச படத்தை அனுப்பி இருந்தனர். எனவே அந்த நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல குஜராத்தில் ஜூனாகர், பாவ்நகர், ஜாம்நகர், பஞ்சாபில் சங்க்ரூர், மலேர்கோட்லா, கோஷியாபூர், பாட்டியாலா, பீகார் மாநிலத்தில் பாட்னா, சிவான், அரியானாவில் யமுனா நகர், பானிபட், சிர்சா, ஹிசார், ஒடிசாவில் பாட்ராக், ஜஜாபூர், தேன்கனனால் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. ராஜஸ்தானில் ஆஜ்மீர், ஜெய்பூர், ஜுன்ஜூனா, நாகர் ஆகிய இடங்களிலும், மத்திய பிரதேசத்தில் குவாலியரிலும், மகாராஷ்டிரத்தில் ஜல்கா, சல்வாத், துலே ஆகிய இடங்களிலும், சத்தீஸ்கரில் கோர்வா என்ற இடத்திலும், இமாசல பிரதேசத்தில் சோலன் என்ற இடத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த படங்கள் எப்படி கிடைத்தன? யார், யாருக்கு இதில் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள். அப்போது பலர் இதில் சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல அந்தந்த நாடுகளிலும் விசாரணை நடைபெறும். எனவே உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் சிக்க உள்ளனர்.
இந்த கும்பலில் பாகிஸ்தான், கனடா, வங்காளதேசம், நைஜீரியா, இந்தோனேசியா, ஆஜர்பைஜான், அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, ஏமன், கானா, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிகமாக படங்கள் பகிரப்பட்டுள்ளன.
சி.பி.ஐ. போலீசார் 45 நாட்களுக்கு முன்பே விசாரணையை தொடங்கி விட்டார்கள். முழுமையான தகவல்களை சேகரித்ததற்கு பின்புதான் நேற்று சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
தற்போது ஆந்திராவை சேர்ந்த மோகனகிருஷ்ணா, ஒடிசாவை சேர்ந்த ஜூப்ளி நாயக் ஆகியோர் இதில் முக்கிய பங்காற்றியது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குழந்தைகள் ஆபாச படம் அனுப்பிய நியாஸ் அகமது மீர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஏராளமான குழந்தைகள் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரபிரதேசம் மாநிலம் சித்ரகூட்டில் ராம் பவன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் 50-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அது சம்பந்தமான வீடியோ படங்களை எடுத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல இந்தியாவில் குழந்தைகள் ஆபாச படங்கள் அனுப்பிய விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் பெரிய அளவில் குற்றம் நடந்து இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கோவை, திண்டுக்கல் ஆகிய 6 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் பலர் சிக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யார், யார்? என்பது குறித்து சில விவரங்கள் கிடைத்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் என்ற இடத்தில் சோதனை நடந்தது. அங்கு அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக உள்ள தங்கராஜா என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினார்கள். இவருக்கு 2 மகன்கள். அதில் ஒரு மகன் டெல்லியில் படித்து வந்தார்.
தங்கராஜா அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்து இருந்தார். அந்த போனில் இருந்துதான் குழந்தைகள் ஆபாச படங்கள் பகிரப்பட்டு இருந்தன.
இதுபற்றி சி.பி.ஐ. போலீசார் தங்கராஜா மற்றும் அவருடைய மகனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவர் ‘‘நான் பயன்படுத்திய செல்போன் ஏற்கனவே தொலைந்துவிட்டது. அதில் சிம்கார்டுகள் இருந்தன. அதை எடுத்த யாரோ அந்த போனை பயன்படுத்தி இவ்வாறு செய்து இருக்கிறார்கள். எனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று கூறினார்.
ஆனாலும் அவர் சொல்வது உண்மைதானா என்பதை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறிவிட்டு சென்றனர்.
அவர்கள் சொன்ன தகவல்களை தந்தை-மகன் இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் எழுதி வாங்கி இருக்கிறார்கள். சி.பி.ஐ. அதிகாரிகள் 11 மணி நேரம் அந்த வீட்டில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல சேலம் சன்னியாசிகுண்டில் உள்ள காட்டுமரங்குட்டையை சேர்ந்த தினேஷ் (வயது 25) என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
தினேஷ் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தபோது அவர் அங்கு இல்லை. எனவே குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.
வீட்டில் இருந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி எடுத்து சென்றார்கள். வீட்டில் 6 மணிநேரம் விசாரணை நடந்தது. தினேஷ் இங்கு வந்ததும் தகவல் தெரிவிக்கும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
தினேஷ் தனது செல்போனில் இருந்து இளம்பெண் ஒருவருக்கு ஆபாச தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன்பாளையம் பெட்டதாபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து இருக்கிறார்கள். அவரை பற்றிய முழுவிவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
திருவண்ணாமலையிலும் சி.பி.ஐ. போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கார்த்திகை திருவிழா நடைபெறுவதால் வேறு ஒருநாளில் வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
மற்ற இடங்களில் யார், யாரிடம் சோதனை நடந்தது? என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.






