search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காஞ்சிபுரம் ரோஸ் பிரதர்ஸ் அணிக்கு கோப்பை
    X

    கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.

    காஞ்சிபுரம் ரோஸ் பிரதர்ஸ் அணிக்கு கோப்பை

    • தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. கிரிக்கெட் போட்டியில் 70 அணிகள் பங்கேற்றன. போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

    புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காஞ்சிபுரம் ரோஸ் பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை ரேசிங் காய்ஸ் அணிக்கு 2-ம் பரிசும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் வேலூர் ஆற்காடு யங்ஸ்டர்ஸ் அணிக்கு 3-ம் பரிசும், கோப்பையும் வழங்கினர்.

    புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. துணைத் தலைவர் மலர்மன்னன் புதுவை 11 பிளாஸ்டர் அணிக்கு 4-ம் பரிசும், தொழிலதிபர் ஜெயக்குமார் புதுவை பாசிட்டிவ் எனர்ஜி அணிக்கு 5-ம் பரிசும் வழங்கினர்.

    விழாவில் புதுவை பல்கலைக்கழகம் கம்யூனிட்டி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஸ்வரி, புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் இளையராஜா, ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞான சேகரன், தமிழ்ச்செல்வன், ஜான்சன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×